-
12th December 2018, 07:17 PM
#551
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் உயரிய, இயல்பான நடிப்பாற்றலில் உருவாகி மகத்தான வெற்றி பெற்ற "பெற்றால்தான் பிள்ளையா" சென்னை மாநகரில் 3 (மூன்று) திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த நாளிதழ் விளம்பரம் இங்கே திரியிலும் ஆவண பதிவு வந்தது சகோதரே...
-
12th December 2018 07:17 PM
# ADS
Circuit advertisement
-
12th December 2018, 07:20 PM
#552
Junior Member
Diamond Hubber
இயற்றியவர் - செங்கை திரு தென்கோவன் .
வாழ்த்து மடல்
பூவிதழ் சிவப்பில் துள்ளும்
பூவையர் கோபியர் நெஞ்சில்
மேனிய மாயவன் தன்னை
மீதினில் சிறக்க எண்ணி
ஓவியர் மாதரர் அன்பில்
உரிமையில் திளைக்க வேண்டி
காவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .
தீந்தமிழ் மொழியின் இன்பத்
தென்னக ஏழைகள் நெஞ்சம்
ஏந்திடும் சுமைகள் எல்லாம்
எம்ஜி யார் பெருமை அன்றோ ?
மாந்தருள் மனித தெய்வம்
மாசில்லா மக்கள் திலகம்
வேந்தர்க்கு வேந்தராகும்
வெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''
என்ற கலைப்பட திரையில் தோன்றி
விண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல
இன்பப் பண்ணின் இசையை மீட்டி
பாரெல்லாம் போற்றி பாடி
மண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க ....... Thanks Friends...
-
12th December 2018, 07:22 PM
#553
Junior Member
Diamond Hubber
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
அவரின் தன்னம்பிக்கை
திறமைக்கு மீண்டும் ஒரு உதாரணம்
பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.
மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர் அடுக்கு மொழி வசனங்கள் பற்றி சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று மனோரமா சொன்னார். ஒருமுறை 1950களில் தி.நகர் வாணிமஹாலில் ஒரு கூட்டம். மனோரமா தன் தாயாருடன் உள்ளே நுழைகிறார்.” எங்க அண்ண்ன் பேசிக்கிட்டிருந்தாரு. வெண்கலக்குரல். கணீர்னு எங்க அண்ணன் குரலுப்பா. அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு காவல்காரன் படத்தில் “ பா(ர்த்)தேன் சுசிலா பா(ர்த்)தேன் இந்த ’றெண்டுகன்னால’ பாதேன்” என்று விகாரமாய் என் காதுல விழுந்தப்ப அப்படி அழுதேன்யா. அப்படி அழுதேன்.” என்றார்.
. குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவ்ருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது. சிவந்தமண் பிரமாதமான பரபரப்புடன் வெளியான நேரத்தில் சத்தமே இல்லாமல் வெளியான நம் நாடு பெரிய வெற்றி பெற்றது.
பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால் முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.
ஐம்பது, அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.
இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும், போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி 🙏.......... Thanks Friends...........
-
13th December 2018, 03:24 AM
#554
Junior Member
Platinum Hubber
நண்பர் திரு.சுகாராம் அவர்களே,
தங்களின் கருத்து உண்மைதான் . தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி .பெற்றால்தான் பிள்ளையா 100 வது நாள் விளம்பரத்தில் 3 அரங்குகள் இடம் பெற்றுள்ளன .சென்னை ஸ்டார், மகாராணி, உமா . புகைப்படத்தை மறுபதிவு செய்யக்கூடாது என்பதால் 100நாள் விளம்பர பதிவை போடவில்லை .
-
13th December 2018, 03:24 AM
#555
Junior Member
Platinum Hubber
நக்கீரன் வார இதழ் -12/12/18
எஸ். பூவேந்தராசு,
சின்ன தாராபுரம்
கேள்வி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக சொல்லப்படும் வருமான வரித்துறை மிரட்டல்கள் , அரசியல் வசனம் பேசும் இன்றைய தமிழ் நடிகர்களுக்கு கிடையாதா ?
மாவலி பதில்கள் :
எம்.ஜி.ஆர். ஒரு அரசியல் இயக்கத்தில் 20ஆண்டுகள் பங்கேற்று தனக்கென செல்வாக்கை பெற்றிருந்தவர் . சினிமாவில் அவர் டம்மி கத்தியை பயன்படுத்தினாலும் அரசியல் களத்தில் அவர் கையில் வாக்கு எனும் "வாள் " இருந்தது என்பது மத்திய அரசுக்கு தெரியும் . தற்போது வீரவசனம் பேசும் பலரும் அட்டைக்கத்திகள்தான் .ஆனால் அவற்றை ஊடகங்கள் மூலம் சாணை பிடிக்க பெருமுயற்சி எடுக்கப்படுகிறது . மிரட்டல்களின் தன்மையும் மாறியிருக்கிறது
-
13th December 2018, 03:51 AM
#556
Junior Member
Platinum Hubber
.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான "ஒரு தாய் மக்கள் " வெளியான நாள் 09/12/1971. 47 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
நல்ல தலைப்பு. நல்ல திரைக்கதை .சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் பிரிந்து வெவ்வேறு இடத்தில வளர்ந்து இறுதியில் ஒன்று சேர்வது தான் மூலக்கதை . மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி. இன்னிசையில் ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் - டி.எம்.எஸ். மற்றும் சுசீலா பாடல்கள் , பாடினாள் ஒரு பாட்டு - போட்டி பாடல் , இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும் - சமுதாயப்பாடல், கண்ணன் எந்தன் காதலன் - காதல் பாடல்கள்
தேனாக இனித்தன . எளிமையான ஆட்டோ மெக்கானிக் வேடத்தை கச்சிதமாக கையாண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார் . குடியினால் விளையும் கெடுதலை நடிகர் முத்துராமனிடம் நாசுக்காக சொல்லி அறிவுறுத்தும் காட்சி அருமை. சண்டை காட்சிகளில் விறுவிறுப்பு, சுறுசுறுப்பு இருந்தது .
தன்மீது சுமத்தப்பட்ட பழியை எதிர்நோக்கி , பல சோதனைகளுக்கு பின்னர்
தெளிவுபடுத்தி, காதல் பிரச்னையில் தொல்லைகள் தந்து , குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற முத்துராமனை அடித்து திருத்தி, நல்வழிப்படுத்தி
,காதலியின் கரம் பிடித்து பெற்ற தாயிடம் இரு பிள்ளைகளும் இறுதியில் ஒன்று சேர்வது தான் கதை . அனைத்து நல்ல அம்சங்களும் இருந்தும், நீண்ட கால தயாரிப்பில் இருந்ததால் வெளியான பின்பு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை .
இருப்பினும் மறுவெளியீடுகளில் அவ்வப்போது திரைக்கு விஜயம் செய்கிறது .
கடைசியாக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலம் சுற்றுலா சென்று விட்டு நண்பர்களுடன் மதுரை நியூ டீலக்சில் ஞாயிறு மாலை காட்சி பார்த்து, ரசித்து மகிழ்ந்தேன் என்பது சுவையான சம்பவம் .
-
14th December 2018, 01:09 AM
#557
Junior Member
Diamond Hubber
-
14th December 2018, 02:28 AM
#558
Junior Member
Platinum Hubber
-
14th December 2018, 04:26 AM
#559
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் பதிவுகள் பல நம் தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற மனமார வேண்டுகிறோம்...
-
15th December 2018, 02:40 AM
#560
Junior Member
Platinum Hubber
தமிழ் இந்து -14/12/18
1981ம் வருடம் சித்ராலயா கோபுவின் மனைவி கமலா சடகோபன் எழுதிய "படிகள் " என்ற நாவலை தமிழ் வளர்ச்சி துறை சிறந்த நாவலாக அறிவித்தது .வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர். திருமதி கமலாவுக்கு பரிசளித்தார் .
Bookmarks