-
16th April 2019, 10:42 PM
#11
Junior Member
Diamond Hubber
கர்ம வீரருக்கு பெரியார் அரணாக இருந்து வழிகாட்டினார். நேரு மத்தியில் இருந்து திட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்தினார். எதிரியாக இருந்தவர் அரசியலில் அறநெறி போற்றிய அருந்தமிழ்மகன் அறிஞர் பெருமகன் அண்ணா. ஏறத்தாழ கர்மவீரருக்கு நிகரான தூய்மை காத்த உத்தமர். குறுக்கு வழியில் முதுகில் குத்தும் காலை வாரும் எதிர்ப்பு அரசியல் அண்ணா அவர்களிடம் இல்லை. போதாக்குறைக்கு தேசத்தலைவராக இருந்து பிரதமர்களைத் தேர்வு செய்யும் பெரும்பதவி. அதனால் அனைத்து வளங்களும் கண்ணசைவில் கிடைக்கும். தமிழகத் திட்டங்களுக்குக் கேட்டுப் பெறுகின்ற இடத்தில் இல்லை. எடுத்துக்கொள்ளும் இடத்தில் இருந்தார். இந்திரா போன்றோர் வளர்ச்சி பெறாமல் அரசியல் அரிச்சுவடு கற்றுக்கொண்டு அடங்கி இருந்த காலம். மாநிலத்தில் மத்தியில் ஒரே கட்சி ஆட்சி. எதிர்ப்புகள் இல்லை. மூறிஞர் ராஜாஜி கூட அப்போது பெரியஅளவில் எதிரி இல்லை. அண்ணா அவர்கள் கட்சியை சிறுகச் சிறுக வளர்த்து வந்த நிலை. பெரும்பாலும் காங்கிரசின் தூய்மையான விடுதலைப் போராளிகளே பதவியில் இருந்த நிலை. எதிராக இத்தனை கட்சிகள் கிடையாது. இன்னபிற காரணங்களால் நல்லாட்சி தந்தார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கியதிலிருந்து நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போடும் நிலை. திரைப்படங்களைக் கூட சுதந்திரமாக வெளியிட இயலாத நெருக்கடியில் கலைஞர் ஆட்சியிலிருந்த காலம். சினிமா விளம்பரம் கூட செய்ய இயலாத நிலையில் சோதனைகளில் வளர்த்தவர். எம்.பி. தேர்தலில் ஒரு தோல்விக்கே ஆட்சிக் கலைப்பு. அரிசியைக்கூட உண்ணாவிரதமிருந்து வாங்கும் நிலை. மத்தியில் இந்திரா அவர்கள் மாநிலத்தில் கலைஞர் எதிர்ப்பு. கொண்டு வரும் திட்டங்களை சீராக செயல்படுத்த மத்திய உதவி கிடைக்குமா என்ன? பல நூறு போராட்டங்கள் வேறு. நிதியில்லா நிலையிலும் ஏழை எளியோர்க்கு நலிவில்லா ஆட்சி. காமராஜ் அண்ணாச்சி காளைமாடு என்னாச்சு? பாழாய்ப்போன காங்கிரசே பருப்பு விலை என்னாச்சு? விழுந்து போன காங்கிரசே உளுந்து விலை என்னாச்சு? என்று பட்டினிச் சாவின் விளிம்பில் வயிறு காய்ந்து கொதித்த மக்கள். அப்படியொரு நிலை எம்ஜிஆர் ஆட்சியில் அத்தியாவசியப் பண்டங்கள் விலை உயர்வால் கேட்கப்பட்டதா? உணவுப்பஞ்சம் காங்கிரசு ஆட்சியில் இருந்தது. எம்ஜிஆர் ஆட்சியில் இருந்ததா? அரிசி போன்ற அவசியப் பொருள் இன்று இலவசம் எனில் கர்மவீரர் காரணமில்லை. எம்ஜிஆர் காரணம். அணைகள் கட்டினார். பள்ளிகள் கட்டினார். தொலை நோக்குத்திட்டங்கள் தந்தார். இல்லையெனச் சொல்லவில்லை. மத்திய அரசு ஆதரவில்லாமலா? எம்ஜிஆருக்கு இருந்த நெருக்கடிகள் அவருக்கு இருந்தனவா? ஏழைகளுக்கு பொற்காலம் என்பதால் 32 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்தும் இன்னும் மக்கள் நெஞ்சங்களில் வாழ்வது எம்ஜிஆர். அரசியல் பிழைப்பிற்கு பதவிக்கு கர்மவீரரைச் சொல்லுங்கள். அடிமட்ட மக்கள் பசியின்றி பிழைத்ததற்கு எம்ஜிஆரைச் சொல்லுங்கள்.............. Thanks wa.,. .
-
16th April 2019 10:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks