-
12th December 2018, 03:08 AM
#541
Junior Member
Diamond Hubber
உலகத் திரைப்பட வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்து என்றென்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் ஒருவர் வாழ்கிறார் என்றால் உலக வரலாற்றில் அவர் மக்கள் திலகம் ஒருவரே. இயற்கையான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் .ஆஸ்கர் விருதை விட, மக்கள் தந்த விருது ”மக்கள் திலகம் எம்ஜிஆர் ”- இது ஒன்று போதுமே.
எம்ஜிஆர் படங்களையும், அவரது ரசிகர்களையும் ஒரு கால கட்டத்தில் தரமின்றி சில பத்திரிகைகள் விமர்சனம் செய்தார்கள். அடிமட்ட மக்கள் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்று ஏளனமாக பார்த்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களைப் பற்றி கவலை படாமல் தன்னுடைய தொழிலில், அரசியலில், பொது வாழ்வில் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி மாபெரும் வெற்றிகளைக் குவித்தார். வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா தரப்பு மக்களின் ஆதரவை பெற்றார்.
1957 முதல் 1984 வரை நடந்த பல தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் – உழைப்பு – திரைப்பட தாக்கம் மறக்க முடியாதது . அண்ணாவை ஆட்சியில் அமர்த்தினார். பின்னர் கருணாநிதியை ஆட்சியில் அமர வைத்தார் . 1977ல் தானே முதல்வரானார். இந்த விந்தை உலகில் யாருக்கு சாத்தியம்? அவருக்குப் பிறகும் அவருடைய பெயர் – இரட்டை இலை சின்னம் மூலம் 4 முறை எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது – மக்கள் திலகம் எம்ஜிஆர் வலிமை அன்றோ ?
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகி 41 ஆண்டுகள் கடந்த பின்னாலும் இன்றும் அவருடைய எல்லா படங்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் புகழ் பாடும் பல புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளது . எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடை பெற்று வருகிறது. மக்கள் திலகம் ஒரு சகாப்தம். சாதனையின் சிகரம் -திரை உலகின் சரித்திரம்..... Thanks Friends...
-
12th December 2018 03:08 AM
# ADS
Circuit advertisement
-
12th December 2018, 03:35 AM
#542
Junior Member
Platinum Hubber
-
12th December 2018, 03:37 AM
#543
Junior Member
Platinum Hubber
-
12th December 2018, 03:42 AM
#544
Junior Member
Platinum Hubber
-
12th December 2018, 03:46 AM
#545
Junior Member
Platinum Hubber
-
12th December 2018, 03:49 AM
#546
Junior Member
Platinum Hubber
-
12th December 2018, 03:52 AM
#547
Junior Member
Platinum Hubber
-
12th December 2018, 10:53 AM
#548
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் மற்றும் பாடல்களும்
****************************
சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றாக தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.
நாடோடி:
---------------
படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அதை தர முடியும்.
நம்நாடு:
-----------
எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.
தாயைக் காத்த தனயன்:
--------------------------------------
பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.
ஆயிரத்தில் ஒருவன்:
----------------------------------
யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.
விவசாயி:
------------------
நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.
கணவன்:
------------------
சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.
---------------------------------------------------------------------------
சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போய் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..
வேட்டைக்காரன்
----------------------------
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
நாளை நமதே
-------------------------
நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே
நம்நாடு
--------------
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.
உலகம் சுற்றும் வாலிபன்
------------------------------------------
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.
திருடாதே
-------------------
திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!
மன்னாதி மன்னன்
----------------------------
அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..
படகோட்டி
--------------------
: கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.
இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற
கூட்டம் உண்டு.
K.venkatesan.9884105567... Thanks Friends...
-
12th December 2018, 04:35 PM
#549
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.உன்னத நடிப்பில் உருவான "பெற்றால்தான் பிள்ளையா "வெளியான நாள் 09/12/1966. 52 ஆண்டுகள் நிறைவு [பெற்றுள்ளது .
தலைப்புக்கேற்ற திரைக்கதை, நடிப்பு , பாடல்கள், வசனம் , நகைச்சுவை அனைத்தும் அம்சமாக பொருந்திய படம். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இயல்பாகவும், இயற்கையாகவும் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து
ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார் .எனக்கு மிகவும் பிடித்த படம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு என் தங்கை படத்திற்க்கு அடுத்து பெற்றால்தான் பிள்ளையா மிகவும் பிடித்த படம் .
திரைக்கதைக்கு ஏற்ப வசனகர்த்தா ஆரூர்தாஸ் அருமையாக வசனம் எழுதியிருந்தார் . பாடல்கள் அத்தனையும் தேன்சொட்டு . சமுதாய கருத்துமிக்க பாடலாக நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, தாலாட்டு பாடலாக, கண்ணன் பிறந்தான், பிள்ளை பாசத்திற்காக செல்லக்கிளியே மெல்ல பேசு காதல்பாடலாக சக்கரை கட்டி ராஜாத்தி பாடல்கள் மெல்லிசை மன்னரின் இனிய இசையில்
மிக பிரபலம் . பி.சுசீலாவின் குரலில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, செல்லக்கிளியே மெல்ல பேசு பாடல்கள் மீண்டும் எதிரொலித்தன .
இந்த படத்தில் டைட்டில் இசையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இனிமை .
டைட்டிலில் ஆரம்பித்த மக்கள் திலகம் எம். ஜி.ஆரின் வித்தியாசமான நடை படத்தின் இறுதி வரை நீடித்தது . கோயிலில் பிள்ளையை கண்டெடுக்கும்போது டி.எஸ். பாலையாவுடன் உரையாடல், பிள்ளையை வளர்க்கும்போது நடத்தும் உரையாடல்கள் , வழக்கு மன்றத்தில் பிள்ளைக்காகவும், பாசத்திற்காகவும் ,
வாதாடும் காட்சிகள் , பிள்ளையை இழந்து பைத்தியமாக அலையும் காட்சிகள் ,
இறுதி கட்டத்தில் நம்பியாருடன் மோதும் காட்சிகள் இப்படி பல உதாரணங்கள்
சொல்லும் அளவிற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன் நடிப்பாற்றலை அபாரமாக வெளிப்படுத்தியது ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது .
நடிகர்கள் அசோகன், நம்பியார், எம்.ஆர். ராதா, தங்கவேலு, நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோர் தங்களது பங்களிப்பில் சிறப்பாக
நடித்திருந்ததால் , வெற்றிப்படமாக அமைந்தது .
ஜனவரி 1967ல் பரபரப்பான சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக இருந்த சமயத்தில், நடிகர் எம்.ஆர். ராதா ,ராமாவரம் தோட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை துப்பாக்கியால் சுட்டு,தானும் தற்கொலைக்கு முயன்று , இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூட
இந்த படத்தின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு பக்கம் மருத்துவமனைக்கு அருகில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீரும் கம்பலையுமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததோடு, மறு பக்கம் ,பெற்றால்தான் பிள்ளையா திரைப்படத்தின் வெற்றி ஓட்டத்திற்கு துணையாக ரசிகர்கள் பேராதரவு அளித்தனர் . இதன் விளைவாக சென்னை ஸ்டார், மகாராணி அரங்குகளில் 100 நாட்களும், நூர்ஜஹானில் 84 நாட்களும், உமா அரங்கில் 80 நாட்களும் நிறைவு செய்தது .
-
12th December 2018, 04:49 PM
#550
Junior Member
Platinum Hubber
Bookmarks