-
14th March 2019, 09:54 AM
#2421
Junior Member
Diamond Hubber
கோவை மாநகரில் வானவில் வரலாற்றுநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது. பிறந்தநாள் விழா வரும் 24.3.2019 ஞாயிறு கிளஸ்டர் திரைப்படக்கல்லூரி (ஹோப்ஸ்) மணீஷ் தியேட்டர் அருகில் காலை.9.மணி.முதல் இரவு. 7.மணி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது முடிந்தவர்கள் நேரிலும். வேலைப்பளுவால் வரமுடியாத நண்பர்கள் மனதாரவும் இதயபூர்வமாகவும் விழா மாபெரும் வெற்றிபெற வாழ்த்துங்கள் என்று விழாக்குழுவினர் சார்பாக வேண்டிக்கேட்டுக் கொள்கின்றேன் வாழ்கநட்பு ஓங்குக ஒற்றுமை நன்றி மதுரை.எஸ் குமார்........ Thanks wa.,
-
14th March 2019 09:54 AM
# ADS
Circuit advertisement
-
14th March 2019, 10:00 AM
#2422
Junior Member
Diamond Hubber
கோவை- ஈஷா ஆன்மீக மையத்தில் "மஹா சிவராத்திரி" வைபவத்தில் பாடிய பாடல் மக்கள் திலகம் காவியத்தின் "ஆயிரத்தில் ஒருவன்"... அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்...... காவிய பாடல்......
-
14th March 2019, 10:01 AM
#2423
Junior Member
Diamond Hubber
அமரா எம்.ஜி.ஆர்
உயிர் வாழ்கிறவர்களும், ஜீவனைக் கொடுப்பவர்களும், அவருடைய ஞானத்தினாலும், உட்பார்வையினாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு பயன் தருகிறார்கள்.
எம்.ஜி.ஆர். ஜீவனைக் கொடுக்கும் பிரிவை சார்ந்தவர். எம்.ஜி.ஆர் மனிதகுலத்தின் இதயத்திலும் மனதிலும் உயிருடன் இருக்க முடியும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு நபர் வாழ்க்கையில் உயர்ந்தவராகவும், மரணத்திற்குப் பிறகும் கூட உயிருடன் இருக்கமுடியும் என்று எங்களுக்குக் கற்பித்தார்.
எம்.ஜி.ஆர். மக்களோடு உணவு உண்ணுதல், கலந்துரையாடுதல் /அவர்களுடன் சமமானவராக பணிபுரிதல் என்று தான் விரும்புவதை செய்தார்.
எம்.ஜி.ஆர் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள்/இந்திய நாட்டின் பிரதமர்கள் இதயங்களையும் தனது நெறிவழியால் வென்றார். அவர் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை ஒரு எளிய முறையிலேயே தீர்த்து வைத்தார் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்காக தனது முயற்சிகளையும் சக்தியையும் அர்ப்பணித்தார்.
அவரது மதி நுட்பம் மற்றும் அவரது பெருந்தன்மையால் ஈர்க்கப்பட்ட இதயங்களை கவர்ந்தார். இந்த அனுபவத்தின் ஞானத்தின் மூலம் இவையெல்லாம் அவரை அடைந்தன.
எம்.ஜி.ஆர் எதையும் எதிர்பார்த்து கொடுக்கவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் பொதுமக்களுக்கு வழங்கிய நன்கொடை அவர் எல்லோருக்கும் தெரிந்து வழங்கியதை விட மிக மிக அதிகமாக இருந்தது. எதை செய்தாலும் நேர்மையுடன் செய்தார்.
எம்.ஜி.ஆர் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார். அவரது மறக்க முடியாத மாண்பு மூலம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் பயணத்தை தொடர அவரை ஒரு "திசைகாட்டியாக/கலங்கரை விளக்கமாக" பயன்படுத்துகின்றனர்.
எம்.ஜி.ஆர் ஒருபோதும் இறந்து போவதில்லை [நிழலிலும் நிஜத்திலும் ]. ஒரு நல்ல வாழ்வை வாழ்ந்தவர் என்றும் இறக்க மாட்டார்........ Thanks wa.,
-
14th March 2019, 05:39 PM
#2424
Junior Member
Diamond Hubber
அத்தியாயம் - 2
ஒரு நடிகன் நாடாள முடியுமா??? இதுதான் அன்றைய கேள்வி!
முடியும் என்று புரட்சித்தலைவர் நிரூபித்தார் [ அவரால் மட்டுமே முடிந்தது], அதற்கு அடிப்படை காரணங்கள் பல உள்ளது. இரண்டாவதாக :
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
புரட்சித்தலைவர் முதலமைச்சர், கழக நிறுவனர் என்று அனைத்து பொறுப்புகளையும் தற்காலிகமாகவே கருதினார், அந்த "பதவிகள் தான் முக்கியமென்று அதற்கு பின்னால் ஓடவில்லை!!! ".
அவர் செய்த சமூகசேவை சாதனைகள் ஆகியவற்றில் அவரது உண்மையான மதிப்பு உள்ளது. தனது பணியில் கடினமாக உழைத்தார் அதன் விளைவு அவரது சாதனைகள் மற்றும் அவரது பெயரை என்றும் நிலைத்து நிற்க செய்தது.
புரட்சித்தலைவர் தனக்கு பதவி தான் முக்கியம் என்ற "அபிலாஷைகள் என்றும் இல்லாததால் தான்" தீர்க்கதரிசியாக பல "உயர்ந்த தீர்மானங்களை" நிறைவேற்ற தயங்கவில்லை........... Courtesy: fb., Friends...
-
14th March 2019, 11:45 PM
#2425
Junior Member
Diamond Hubber
#மக்களின் #முதல்வர்
தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல், ஒரு பொதுக்கூட்டத்திற்காக மதுரை சென்று திரும்பும் வழியில் அருகே உள்ள சோழவந்தான் கிராமத்திற்கு வந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்...
அப்போது, சற்று தொலைவில் வயலில் நாற்று நட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்மணியைப் பார்த்து அதிர்ச்சியற்ற மக்கள்திலகம், கடகடவென்று வரப்பில் நடந்து அப்பெண்மணிக்கு அருகே செல்கிறார்...
எம்ஜிஆரைப் பார்த்து பிரமித்த அப்பெண்மணி அதிர்ச்சியுற்று நிற்க...!!!
எம்ஜிஆர் கண்களில் நீருடன் கேட்கிறார்... "என்னம்மா இது? உங்களுக்கா இந்த நிலை ? இந்த வயசான காலத்துல ஏன் இப்படி கூலி வேலை செஞ்சு கஷ்டப்படறீங்க.??? ...
அந்த வயதான தாய் பொங்கிவரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தன் குடும்ப நிலையைக் கூறியதும் அப்பெண்மணியின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார்..."அம்மா! உங்க மகன் நானிருக்கும் போது, இப்படி நீங்க கஷ்டப்படலாமா!!! இதுக்கு சீக்கிரமே ஒரு வழி செய்யறேன்..." ன்னு கிளம்பிட்டார்.
அப்பெண்மணி வேறு யாருமல்ல...
நான்கு முறை காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த பொன்னம்மாள் தான் அவர்...
அடுத்த சிறிது நாட்களிலேயே
"#எம்எல்ஏக்களுக்கு #ஓய்வூதிய #திட்டம்" வழங்க அரசாணை பிறப்பித்தார்.
கட்சிப் பாகுபாடின்றி
மக்களின் குறைகளை தான் நேரடியாகவே சென்றறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் #மக்கள்திலகம் #ஒருவரே.............. Thanks wa.,
-
15th March 2019, 11:12 PM
#2426
Junior Member
Diamond Hubber
கலையுலக சக்கரவர்த்தி நடிகமாமன்னன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தயாரிப்பில் 1958 ம் ஆண்டு வெளியாகி சரித்திரம் படைத்த நாடோடி மன்னன் காவியத்திற்கு பின் 1969 ம் ஆண்டு தயாரித்து மேலை நாட்டு படங்களுக்கு சவால் விட்ட இராண்டாவது படைப்பு வண்ணப்படைப்பு எம்.ஜி.யார் பிக்சர்ஸின் அடிமைப்பெண் (1969./2019) திரைப்படத்தின் 50 வது (பொன் விழா) ஆண்டு. வருகின்ற 2019 மே மாதம் 5 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00.மணி வரை நடைப்பெறகிறது. இந்நிகழ்ச்சி சென்னை தி.நகர் (.பாண்டி பஜார்) பகுதியில் நடைப்பெறும். விழாவில்.. அடிமைப்பெண் காவிய பொன்விழா மலர் வெளியிடப்படுகிறது. நிகழ்ச்சியில் முக்கியபிரமுகர்கள் மற்றும் புரட்சித்தலைவரின் அபிமானிகள் கலந்துக் கொள்கிறார்கள். விழா அமைப்பு ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ். நன்றி! உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,..........
-
15th March 2019, 11:13 PM
#2427
Junior Member
Diamond Hubber
இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியுடன்.... புரட்சித்தலைவரின் 102 வது மனிதநேய விழா. மக்கள்திலகத்தின் தயாரிப்பில் வெளியான அடிமைப்பெண் திரைப்படத்தின் 50வது பொன் விழா.ஆண்டு! (1969/2019) நாள் : 21.04.2019, ஞாயிற்றுக்கிழமை இடம்: சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கம்.( கவிஞர் கண்ணதாசன் சிலை , ஜி.என்.செட்டி ரோடு). நேரம்:.மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை . நிகழ்ச்சிகள்:. பொன்விழா மலர் வெளியீடு, பாடல்கள் , கவிதை கவியரங்கம் இன்னிசை நிகழ்ச்சி, மக்கள்திலகத்தின் பாடல்களை இடைவிடாது இசைப்பவர்கள்...... ஸ்ரீதர் நவராக்ஸ் குழுவினர்கள். விழாஅமைப்பு:. பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் . நற்பணி சங்கம் ஒத்துழைப்பு:. ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ்... தலைவரின் பக்தர்கள் அபிமானிகள் அன்புடன் வருகை தந்து சிறப்பிக்கவும்!...... Thanks wa.,
-
15th March 2019, 11:14 PM
#2428
Junior Member
Diamond Hubber
சார் வணக்கம்! தலைவரின் சாதனை படைப்பான இரண்டாவது தயாரிப்பு அடிமைப்பெண் படத்திற்கு 50 ஆண்டு பொன்விழா சாதனை மலர் வெளியிடப் போகிறேன். ஆகையால் தாங்கள் வாழ்த்து செய்தி தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி !.உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
-
15th March 2019, 11:16 PM
#2429
Junior Member
Diamond Hubber
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி!!
அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி!!
நம் தலைவரின் வழி வந்த ஒரே கொடி!!
அதுதான் நம் தலைவரின் அஇஅதிமுக வெற்றிக்கொடி!!..... Thanks wa sharing...
-
17th March 2019, 09:33 AM
#2430
Junior Member
Diamond Hubber
வணக்கம்,
மனிதநேய அறக்கட்டளை நிறுவனர்
திரு. சைதை ச துரைசாமி
அவர்களின் சிறப்பு நேர்காணல்
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் பேசும் தலைமை நிகழ்ச்சியில்
வரும் ஞாயிறு
(17/03/19) காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும்
அதன் மறு ஒளிபரப்பு அன்று இரவு 10 மணிக்கு
ஒளிபரப்பாகும்
நன்றி.
www.ns7.tv என்ற இணையதளத்தில் நேரலையிலும் ஒளிபரப்பாகும் ......... Thanks wa.,
Bookmarks