-
24th April 2019, 09:36 AM
#11
Junior Member
Diamond Hubber
மறுபக்க நாணயம்??
----------------------------------------
என் நெஞ்சைத் தொட்டப் பதிவுகளில் இதுவும் ஒன்று!!
அது அன்னமிட்டக் கை படப்பிடிப்பு!
கோவைக்கு அருகில் பவானி ஆற்றுக்குப் பக்கத்தில் மூன்று நாட்கள் ஷூட்டிங்!!
அன்று ,,அந்த இடத்தில் மூன்றாம் நாள் படப்பிடிப்பு!!
ஜெ வோ அடிக்கடி டேக் வாங்குகிறார்?
படப்பிடிப்புக் குழு அனைவருக்கும்,,குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு ஏக திகைப்பு?
காரணம்??
அரசியலில் நடிக்கத் தெரியாத ஜெ??--ஷூட்டிங்கில் வெளுத்து வாங்குவார்!!
காட்சியை உள் வாங்கி,,ஒரே டேக்கில் ஓகே செய்வதில்,,இவர் இன்னொரு சாவித்திரி!
மதியம் உணவு இடைவேளைக்குப் பின் முக்கிய ஷாட் ஒன்றில் நடிக்கவேண்டிய --
மிஸ் ஜெயலலிதா மிஸ் ஆகிறார்??
எங்கு போனார் என்று எல்லோரும் தேட,,ஏக டென்ஷனில் எம்.ஜி.ஆர்?
அரை மணி நேரம் கழிந்து அவசரமாக வந்து சேர்ந்தவரிடம் விபரம் கேட்கிறார் எம்.ஜி.ஆர்!
இவர் முதல் நாள்,,தம் காரில் படப்பிடிப்பு இடத்துக்கு வந்தபோது அவசரத்தில் இவரது புத்தகங்கள் சிதறி, கீழே விழுந்திருக்கிறது?
இவ்ரது காருக்குப் பக்கத்தில் இள நீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு மாணவர்,,அந்தப் புத்தகங்களை பொறுக்கி எடுத்து ஜெ விடம் கொடுக்க--
ஜெ வின் மனதில் சன்னமான ஒரு திடுக்கிடல்?
அந்த மாணவருக்கு ஒரு கால் ஊனம்?
அடுத்த வருடம் பொதுத் தேர்வுக்குப் பணம் இல்லாத நிலையில்,,தம் உறவினர் வீட்டில் தங்கி இள நீர் வியாபாரம் செய்ய வந்திருக்கிறார்??
அந்த மாணவரும்,,அன்று தான்,,தன் சொந்த ஊருக்குக் கிளம்புகிறார்?
அவரது படிப்புக்கு உதவி செய்யும் சிந்தையிலேயே ஷூட்டிங்கில்,,தம் கவனத்தை சிதறவிட்ட ஜெ,,மதியத்துக்கு மேல் அந்தக் கடைக்குச் சென்று அந்த மாணவனுக்கு உதவிவிட்டு வந்திருக்கிறார்??
பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட எம்.ஜி.ஆர்,,ஜெ விடம் கேட்கிறார்?
ஏன் அம்மு-- நீ செஞ்சுட்டு வந்த காரியம் ரொம்ப நல்ல காரியம் தான்! இருந்தாலும் அந்த மாணவனை இங்கே வரச் சொல்லியிருந்தால் இன்னும் அதிகமாக உதவியிருக்கலாமே??
இப்படி எவருக்கும் தெரியாமல் உதவி செய்துவிட்டு வந்திருக்கிறாயே??
நீங்க சொல்லறது சரி தான்!! ஆனால் அந்த மாணவனை இங்கே வரச் செய்தால்,,அவன் கடையை யார் கவனிப்பார்கள்? மேலும்,,--ஊனம் உள்ள ஒருவரை இங்கே வரவழைத்துக் கொடுப்பதற்கு பதிலாக நாமே சென்று கொடுப்போம் என்று தான் நான் போனேன்!! இவ்வளவு என்னிடம் பேசும் நீங்கள்,,எத்தனை இடங்களில் சத்தமில்லாமல் உதவியிருக்கிறீர்கள்?
உங்களுக்கு ஒரு நீதி! எங்களுக்கு ஒரு நீதியா??
ஜெ வின் மனித நேயம் கூடிய இந்தப் பதிலால் நெகிழ்ந்து போய்--ஜெ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தாராம் எம்.ஜி.ஆர்??
எம்.ஜி.ஆர் கொண்ட நெகிழ்ச்சி நமக்கும் தானே தோழமைகளே???........... Courtesy: fb.,
-
24th April 2019 09:36 AM
# ADS
Circuit advertisement
Bookmarks