-
12th August 2018, 08:20 PM
#11
Senior Member
Seasoned Hubber
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
கையென்றே செங்காந்தழ் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்... பொய் கொஞ்சம்...
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்...
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா... கொஞ்சம் தா...
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்...
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்...ஆ
மெய் தொட்டும்..ஆ
சாமத்தில் தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன நயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது...
__________________________________________
வரிகள்: கங்கை அமரன் / இசை: இளையராஜா
-
12th August 2018 08:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks