Page 139 of 149 FirstFirst ... 3989129137138139140141 ... LastLast
Results 1,381 to 1,390 of 1487

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu

  1. #1381
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,162
    Post Thanks / Like
    முன்னம் பார்த்த முகங்களா இவை
    முதிர்ச்சியின் அடையாளம் எத்தனை
    மூப்பின் தப்பாத பல அறிகுறிகள்
    மூக்குக்கண்ணாடி நரைத்த தலை
    மறைந்துவிட்டனவே கொடியிடைகள்
    மறக்கவில்லை நளின நடை உடை
    மனம் திறந்த கள்ளமில்லா கதைகள்
    மடைதிறந்த வெள்ளமாய் வார்த்தைகள்
    மலரும் நினைவுகளில் அருவிக்குளியல்
    மாதங்கள் போலாயின வருடங்கள்
    மாயையாய் திரும்பிய பள்ளிநாட்கள்
    மணந்தது நாற்பத்தியெட்டாண்டாகியும்
    மறுபடியும் தோழியர் சந்தித்தபோது
    மீண்டுமொரு வசந்தம் அன்று பூத்தது
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1382
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    Quote Originally Posted by pavalamani pragasam
    தாயே உன் தலையில் அணிய தொப்பிகள் எத்தனை
    தாரமானாய் கணவனானான் உன் முதல் குழந்தை
    பதவி உயர்வுகள் பல பெற்றபின்னும் வளர்கிறாய்
    தோழியாய் தாதியாய் ஆசானாய் ஆலோசகனாய்
    ஆலமரமாய் நீ குடை விரிக்கிறாய் அந்நிழலிலே
    சுற்றம் மொத்தமும் அங்கே சுகமாய் சுவாசிக்குதே
    Quote Originally Posted by pavalamani pragasam
    முன்னம் பார்த்த முகங்களா இவை
    முதிர்ச்சியின் அடையாளம் எத்தனை
    மூப்பின் தப்பாத பல அறிகுறிகள்
    மூக்குக்கண்ணாடி நரைத்த தலை
    மறைந்துவிட்டனவே கொடியிடைகள்
    மறக்கவில்லை நளின நடை உடை
    மனம் திறந்த கள்ளமில்லா கதைகள்
    மடைதிறந்த வெள்ளமாய் வார்த்தைகள்
    மலரும் நினைவுகளில் அருவிக்குளியல்
    மாதங்கள் போலாயின வருடங்கள்
    மாயையாய் திரும்பிய பள்ளிநாட்கள்
    மணந்தது நாற்பத்தியெட்டாண்டாகியும்
    மறுபடியும் தோழியர் சந்தித்தபோது
    மீண்டுமொரு வசந்தம் அன்று பூத்தது
    வசந்தம் அன்று பூத்தது ஐயா ஒன் பிஞ்சுப் பருவத்திலே
    வசமே உந்தன் கையில் வாய்ப்பு பல கொண்டதனால்
    அசந்தே ஒரு நொடியும் இங்கங்கே திசை மாறாதெ வளர்த்தாரே
    ஒசந்தே இன்னெக்கு நீ தலெ நிமிந்து ஒன்னே பெத்தவங்களாலே

    பெத்தவங்க ஒன்னே வளர்க்கவும் நல்லா தெரிஞ்சவங்க
    மத்தவங்களை போலேயோ அதுக்கும் மேலேயோ நீ ஒசர
    பெத்துப்புட்டா மட்டும் போதுமா பேரு சொல்ல புள்ளையின்னு
    செத்துப்பொழச்சேனும் பொறுப்பா வளர்த்தாத் தான் நீ மனிசன்

    மனிசனாவே வாழத்தெரியாதே நாட்டு சனம் எத்தனையோ இங்கே
    குனிஞ்சே குந்திக்கிட்டு தாழ்ந்தே தானே தன்னை அடிமை போலெ
    இனிதா வாழப்பல வாய்ப்புக்கள் பல இருந்தும் மிருகமா வாழறவங்க
    கனியான வாழ்நாளே தானே கெடுத்துக்கிட்டு தன் குஞ்சையும் செறகு பிச்சு

    பிச்சு-ஒதறி வாழ்வெ பாழ் செஞ்ச பூமாலே கொரங்கா ஐயா அந்த பெத்தவங்க.?
    அச்சு பிச்சுன்னு அடிச்சு பயமுறுத்தி பள்ளிக்கு அனுப்பாமே படிக்கவும் விடாமே
    பிச்சைக்கார புள்ளே கூலியா எடுபிடி இன்னெக்கு கதி பாரு தப்பு யாரு மேலே.?
    இச்சைப்படி ஒசத்தி வளத்தவங்க ஒன்னே பெத்தவங்க புள்ளே சுவாசிக்கிறே சுகமே

    .

  4. #1383
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,162
    Post Thanks / Like
    சுகமே தனிமை
    கையில் புதினம்
    கொறிக்க பக்கோடா
    குடிக்கத் தேனீர்
    பின்னணியில் இசை
    பதமான வானிலை
    பதறாத சூழ்நிலை
    ஓய்வும் சொர்க்கம்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #1384
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .

    Quote Originally Posted by pavalamani pragasam
    சுகமே தனிமை
    கையில் புதினம்
    கொறிக்க பக்கோடா
    குடிக்கத் தேனீர்
    பின்னணியில் இசை
    பதமான வானிலை
    பதறாத சூழ்நிலை
    ஓய்வும் சொர்க்கம்


    - எளிய நடை சந்தக் கவிதை.



    - சொர்க்கமே எங்கே.? எங்கே.?



    - (யாப்பு-இலக்கண வரம்புக்கு உட்பட்டது அல்ல}


    சொர்க்கமே எங்கே எங்கே என்று ஏங்கியே அலைந்து மனித
    வர்க்கமே எளிதாய் சுகமே புவியினில் தீங்கு இல்லா வாழ்வு;
    தர்க்கமே செய்வர் பலவாய் காரணம் மூலாதாரம் நாடித் தேடி:
    சொர்க்கம் கிட்டுமோ, உழைக்காது சோம்பி ஓய்ந்து கிடந்தால்.?

    ஓய்வினால் சொர்க்கம் என்பார், மெய்-வருத்தம் சிறிதும் இல்லா!
    தேய்ந்து உடல், ஈட்டம் எதற்கு கல்வி தொழில் வாட்டம் தானோ.?
    காய்க்கும் கனி-மரமோ எளிதாய் எட்டிப் பறிக்கப் பாரில் பணமோ.?
    மாய்க்கும் படுக்கை கிடந்தால் அலுங்காது பக்கோடா கொறித்தே.!

    கொறி சிறு-தீனி அடிக்கடி ஏதோ சொர்க்கமோ கொழுக்கத் தடித்தால்.?
    வெறியரே ஏதேதோ போதை பானம் குடித்துக் கெட்டுத் தானே வீணே
    அறிவிழந்து நோயே கொள்வார் சுகமோ ஆரோக்கியம் அற்றால்.?
    சிரித்தே புவி வாழும் கலை அறியார் பிறர் நகைக்கத் தாழும் நோயர்!

    நோயரே மனதொடு அறிவு உடல் உறவு பல வேசி மங்கையர் தாசி!
    காயமே புத்தகமோ புரட்டப் பூவையர்.? புதினம் இழி மிருக காமம்;
    பேயரே ஏ.சி. வீட்டுச்-சிறை, பேரிடி-இசை தனை மறந்த பேயாட்டமே!
    மாய மயக்கும் புவி ஆளலாமோ, வாங்கலாமோ எதுவும் பணத்தால்.?

    பணத்தால் மட்டும் புவியில் கிட்டுமோ சுக சொர்க்கம்? அல்ல போலி:
    ரணமாக்கும் பணம் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சே, நிம்மதி அற்றே:
    குணம் தரும் சுகம் சொர்க்கம் தலை நிமிர் ராஜ-வாழ்வு புவிப் பயன்:
    பணம் மிதமிஞ்சிக் கொண்டால் காவல்-பூதமாய் அடிமையாக்கி ஆளும!்

    ஆளலாம் பணமும் துணையாய் பண்பு வழுவா புவி வளமும் ஈட்டி,
    ஏளன நிலை துயர் துன்பம் கேடு நீக்கி, குடிசை-ஏழ்மை தாழ்வே இல்லா;
    மாள வகையற வரம்புறு தண்ணீர் பணத்தில் புறம் மிதந்து நீந்த இன்பம்!
    தாளவே மாட்டா செல்வம் தண்ணீரை உள்-விட்டால் போக்கும் உயிரே.!

    உயிர் உயர் பிறவி மனிதா புவி ஆளப்பிறந்தாய் சொர்க்கமே இங்கே காண;
    பயிர் வாழ்வு, உந்தன் பணிப்பங்கொடு பகவன் பங்கும் அருளே நாடி:
    துயில் இன்றி ஐம்பொறி இயற்கை இறைவன் ஓயா உழைப்பே வாழ்க்கை.!
    கையிலே உன் புவி-சொர்க்கம் திண்ணம்: வேண்டாம் மாடி-வீட்டு ஏழ்மை.!!!
    .
    .
    .

  6. #1385
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,162
    Post Thanks / Like
    ஏழ்மையறியா இந்திரலோகம் படைத்தேன்
    தங்கக்காசு அங்கே கொட்டுது மழையாய்
    மாடி வீடுகள் கேளிக்கைகள் பூங்காக்கள்
    காய்த்துத் தொங்கும் கனிமரங்கள் காணீர்
    எத்தனை பூக்கள் தாவரங்கள் குளிர்ச்சியாய்
    வழுக்கும் தார் சாலைகள் மாநகரந்தன்னிலே
    எந்நேரமும் மக்கள் கூட்டமாய் நடமாட
    அவர்களையெல்லாம் அன்பாய் நான் வரவேற்க
    உற்சாகம் பெருக மேலும் மேலும் வளர்கிறது
    கற்பனை கலந்து உருவாகும் அழகோவியமாய்
    காலம் போவது தெரியாமல் மூழ்கினேன்
    பொய்யுலகின் பொழுதுபோக்குகள் அற்புதம்
    இணையத்தில் விளையாடும் சிறுமியானேன்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. #1386
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    -
    .


    ஏழையர் அல்லோம் நாமே மானிட-சால்பே ஏணியாய்ப் பிடித்து உயர்வோம் ..........
    .

  8. #1387
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,162
    Post Thanks / Like

    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  9. #1388
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .

    Quote Originally Posted by pavalamani pragasam


    நாட் தட் வே என்பதே உமது கருத்தானால் அம்மையே பவளமணியே
    ஹேட்ஸ் ஆஃப் உமக்கு கூறுவேன் கூறுங்கள் சிறியேன் என் தவறு?
    ஹாட் எவரும் என்மேல் கொள்ள வேண்டாம் நாம் அனைவர் கூடியே
    சாட் பட் வே வெட்டியாய் இங்கு கூடவில்லை தமிழ்-மேடை கூடி மாந்த
    லேட் ஆகாது நற்கருத்து இந்த மேடை நோக்கம் நம் அனைவர் வாழ் நலமே
    வாட் தட் வே என்று உமக்குத் தோன்றுவதோ அவ்வாறே தொடர்வீரே
    ஹேட் என்னை வேண்டாம் மொழியுங்கள் தாயே உம் விருப்பம் போல்.

    .

  10. #1389
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,162
    Post Thanks / Like
    கடைசியாக பதிவு செய்யப்பட்ட கவிதையின் கடைசி வார்த்தையில் அடுத்த கவிதை துவங்கவேண்டியதுதானே முறை? அதற்கு முன்பு பதிவு செய்த கவிதையை தொடர தவறிவிட்டால் அதை நிவர்த்தி செய்ய கருத்துக்கூறும் திரி கை கொடுக்குமே? தொடர்பை காப்பாற்றவேண்டியதுதான் முக்கியம்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #1390
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    ,

    Quote Originally Posted by pavalamani pragasam
    கடைசியாக பதிவு செய்யப்பட்ட கவிதையின் கடைசி வார்த்தையில் அடுத்த கவிதை துவங்கவேண்டியதுதானே முறை? அதற்கு முன்பு பதிவு செய்த கவிதையை தொடர தவறிவிட்டால் அதை நிவர்த்தி செய்ய கருத்துக்கூறும் திரி கை கொடுக்குமே? தொடர்பை காப்பாற்றவேண்டியதுதான் முக்கியம்!

    அன்பர்ந்த பவளமணியாரே

    நான் செய்ததில் தவறு ஏதும் இல்லை. இருப்பினும் உங்களையும் குறைப்படவிடாது மகிழ்விப்பதே எனது நோக்கம்.

    எனவே இதோ திருத்தி வழங்கி-விட்டேன். திருப்தி தானே.?

    அன்புடன்,
    சுதாமா


    ஆதலால் காதல் செய்வீர் ஆண்டவனையே.!!!



    Quote Originally Posted by Shakthiprabha
    சொத்து சுகமெல்லாம் போன பின்பும்
    சொந்தமென்று எதை கொண்டு செல்வேன்?- நல்
    வித்து விளைத்திடும் சிந்தனையும்
    பரந்தாமன் மேல் நான் கொண்ட காதலுமே!

    (Sudhaama: எனது கவிதைகள் யாவும் யாப்பு-இலக்கண வரம்புக்கு உட்பட்டது அல்ல)

    Quote Originally Posted by Sudhaama
    பணத்தால் மட்டும் புவியில் கிட்டுமோ. சுக சொர்க்கம்? அல்ல போலி
    ரணமாக்கும் பணம்; அளவுக்கு மிஞ்சினால் நஞ்சே நிம்மதி அற்றே
    குணம் தரும் சுகம் சொர்க்கம் தலை நிமிர் ராஜ-வாழ்வு தரணி பயன்
    பணம் மிதமிஞ்சி கொண்டால் காவல்-பூதமாய் அடிமையாக்கி ஆளும்

    ஆளலாம் பணமும் துணையாய் பண்பு வழுவா புவி வளமும் ஈட்ட
    ஏளன நிலை துயர் துன்பம் கேடு நீக்கி குடிசை-ஏழ்மை தாழ்வு இல்லா
    மாள வகையற வரம்புறு தண்ணீர் பணத்தில் புறம் மிதந்து நீந்த இன்பம்
    தாளவே மாட்டா செல்வம் தண்ணீரை உள்-விட்டால் போக்கும் உயிரே.

    உயிர் உயர் பிறவி மனிதா புவி ஆளப்பிறந்தாய் சுக-போகம் இங்கே காண
    பயிர் விளைச்சல் உந்தன் பணிப்பங்கொடு பகவன் பங்கும் அருளே நாடி
    துயில் இன்றி ஐம்பொறி இயற்கை இறைவன் ஓயா உழைப்பே வாழ்க்கை
    கையிலே உன் புவி-சொர்க்கம் திண்ணம்: வேண்டாம் மாடி-வீட்டு ஏழ்மை
    Quote Originally Posted by pavalamani pragasam
    ஏழ்மையறியா இந்திரலோகம் படைத்தேன்
    தங்கக்காசு அங்கே கொட்டுது மழையாய்
    மாடி வீடுகள் கேளிக்கைகள் பூங்காக்கள்
    காய்த்துத் தொங்கும் கனிமரங்கள் காணீர்
    எத்தனை பூக்கள் தாவரங்கள் குளிர்ச்சியாய்
    வழுக்கும் தார் சாலைகள் மாநகரந்தன்னிலே
    எந்நேரமும் மக்கள் கூட்டமாய் நடமாட
    அவர்களையெல்லாம் அன்பாய் நான் வரவேற்க
    உற்சாகம் பெருக மேலும் மேலும் வளர்கிறது
    கற்பனை கலந்து உருவாகும் அழகோவியமாய்
    காலம் போவது தெரியாமல் மூழ்கினேன்
    பொய்யுலகின் பொழுதுபோக்குகள் அற்புதம்
    இணையத்தில் விளையாடும் சிறுமியானேன்

    ஆனேனே ஏழையாக வாழத்-தெரியாது வைய-நெறி அறிய முயலாதே
    தேனே போல் நல்-வாய்ப்பு கொண்ட புவிப்பிறவி உன்னத மானிடனாய்
    வானே உறைந்து மறைந்து ஆளும் இறைவா, தாழ்த்திக்கொண்டோமே
    கோனே புவியோர் இரு வகை குடிசைவீட்டு ஏழை, மாடிவீட்டு ஏழை.

    ஏழையர் அல்லோம் நாமே மானிட-சால்பே ஏணியாய்ப் பிடித்து உயர்வோம்
    வாழையடி வாழையாக நம் முன்னோர் பொழிந்த செல்வ வாழ்-நெறி வழியே
    தாழையாய் தமிழ்-மணமே தரணி மாந்தர்க்கே ஒப்புயர் வாழ்-வழி காட்ட வல்ல
    பேழைக்-கருத்து உமது கோலப்பொடி சிதறல் ரத்தினத்-திரட்டுப் பொலிவால்

    வால்-ஆட்டும் தீமை வாழ்க்கை விளையாட்டுச் சவால்கள் எதிர் வெல்லறி
    வால் உண்மை புரிந்தே வளமை கொள வகை தெரிந்தே, தமிழ் தரு தெளி
    வால்-கவி சொல்-அந்தாதியால் வானில் மட்டுமே வானூர்தி-வாலின் பின்
    வால் பிடித்தே திரியவோ.? தரணி கருத்துப்-பூங்கா தமிழ் உலா விடுத்தே.!

    விடுத்துச் செல்வதே நமது புவி ஆட்சி சொத்து சுகம் சொந்த பந்தம்
    எடுத்துச்-செல்வது நற்புகழ் புண்ணியம் பாவம் மட்டுமே ஈட்டம் உலகில்
    கொடுத்த இயற்கை கோ இறைவனுக்கு நன்றி மறவா காதல் செய்தால்
    தொடுத்த இன்பமே இப்பிறவி இம்மை சொர்க்கம் இங்கே திண்ணம்.!!!

    .
    .

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2
    By pavalamani pragasam in forum Poems / kavidhaigaL
    Replies: 1900
    Last Post: 19th May 2021, 09:19 AM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •