Page 15 of 401 FirstFirst ... 513141516172565115 ... LastLast
Results 141 to 150 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #141
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #142
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #143
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #144
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #145
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #146
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #147
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #148
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #149
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் மீண்டும் அவசர அலுவல் காரணமாக ஒரு மாத விடுமுறை. பதிவுகள் இடுவது சிரமம் .பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய நண்பர்கள் தொடர்ந்து பதிவுகளை மேற்கொண்டு இத்திரியை தொய்வின்றி கொண்டு செல்லுங்கள் நன்றி.

  11. #150
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    கால் கடிக்கும்
    குறும்பு மீன்கள்...

    மூக்குப் பிடித்து
    நீருக்குள் போக,
    மங்கலாக உணர்கிற
    நிசப்தமான தண்ணீர் உலகம்...

    குளித்த பின் நேரும்
    அவஸ்தையும், சுகமுமான
    காது வலி...

    இப்படி
    ஒரு ஊரணிக் குளியல்
    மனதுக்குத் தந்த
    பேரானந்தத்தை
    நித்தமும் எங்களுக்குத் தந்தவை
    உங்கள் படங்கள்தானே அய்யா ?
    ---------

    அடி பிறழாமல்
    மனப்பாடச் செய்யுள் ஒப்பித்து
    கைதட்டல் பின்னணியில்
    நான் பரிசுகள் வாங்கியதற்கு
    ஆதாரம்
    உங்கள் அழகு தமிழ்தானே அய்யா?
    -------

    சின்ன வயசில்
    விவசாய ஆபிஸ் வாசலில்
    சினிமாப் பாத்திரங்களாய் மாறி
    விளையாடியிருக்கிறோம்.

    விளக்குமாற்றுக் குச்சி
    வாளாக மாறிய போது
    பார்த்திபனாக மாறியதுதான்
    அதிகம்.

    நண்பர்களிருவர்
    இருபுறமும் கைபற்றிக் கொள்ள,
    மானசீகச் சங்கிலிகள்
    நெஞ்சோடு பிணைக்க,
    மார் விரித்து
    வசனம் பேசும் போதெல்லாம்
    மனோகரனாக மாறியதுதான்
    அதிகம்.

    ( விளையாட்டு போதுமென்று
    சாப்பிட அழைக்கும்
    அன்னையர்கள்
    பத்மாவதிகளாய் இருந்தாலும்
    அன்று எங்களுக்கு
    வசந்தசேனைகளாய்
    தெரிந்தது வேறு விஷயம்.)

    விளையாட்டுக்குக் கூட
    மறக்கக் கூடாதென்று
    எங்கள் விளையாட்டில் கூட
    நீங்கள்தானே அய்யா?
    -------

    "உங்கள் படங்கள்
    பார்க்கும் போது மட்டும் தான்
    தின்னக் கொண்டு போன
    கடலைகளை
    தின்ன மறந்து
    திரும்பக் கொண்டு வந்தோம்"
    என்பார் கவிப்பேரரசு வைரமுத்து.

    உங்கள் படங்கள்
    முடியும் தருவாயில் தான்
    'கடலை வாங்க வேண்டும்'
    என்று நினைத்திருந்ததே
    நினைவுக்கு வந்தது
    எனக்கெல்லாம்.

    உங்களைத் தவிர மற்றதெல்லாம்
    மறக்கடித்தது
    உங்கள் கலைதானே அய்யா?
    --------

    அப்பாவோ, அம்மாவோ
    திட்டியோ,அடித்தோ
    சிறு வயதில் அழுத போது,
    சினிமாவில்
    நீங்கள் அழுவது போல்
    இருக்கிறதா என்று
    கண்ணாடி பார்ப்பேன்.

    இல்லை என்று புரிய வரும்.

    அதற்கே ஒரு அழுகை வரும்.

    அந்த அழுகைக்குக் காரணம்
    நீங்கள்தானே அய்யா?
    ---------

    மறுநாள் பரீட்சையென்று
    பாடப் புத்தகம் எடுத்தால்
    ஏழரை மணிக்கே
    தூக்கம் கேட்கும் கண்கள்...
    உங்கள் படமென்றால்
    இரவுக் காட்சி நேரத்தில் கூட
    குண்டு பல்பு போல் ஒளிர்ந்த
    அதிசயத்திற்குக் காரணம்
    நீங்கள்தானே அய்யா?
    ---------

    கோயில்களுக்குப் போனால்
    " அம்பிகையே ஈஸ்வரியே"...
    "தெய்வம் இருப்பது எங்கே?"...

    சுதந்திர தின விழாவில் நின்றால்
    " இந்திய நாடு என் வீடு"...

    பள்ளி விழாக்களென்றால்
    " தங்கங்களே.. நாளைத் தலைவர்களே!"...

    பாரதி விழாவென்றால்
    " சிந்து நதியின் மிசை நிலவினிலே..."

    எந்நேரமும்
    உதடுகள் உற்சாகமாக உச்சரிக்கும்
    பாடல்கள் அத்தனையும்
    உங்களுடையவை.

    இசையாகவும் மாறி
    எங்கள் இதயம் நிரம்பியவர்
    நீங்கள்தானே அய்யா ?
    ---------

    கலை காக்க
    காலையில் கிளம்புகையில்
    "அம்மா" என்றழைத்து
    அன்பான அன்னை கையால்
    மோர் வாங்கிக் குடித்து விட்டுக்
    கிளம்புவீர்களாம்.

    உயிரான அன்னை
    உயிர் துறந்த பின்னும் கூட
    வெளிக் கிளம்புகையில்
    அன்னை இருந்த இடம் நோக்கி
    "அம்மா" என்று அழைத்து விட்டுப்
    போவீர்களாம்.

    உன்னதமான உயிர்கள்
    மரணப்படுவதில்லை.
    அவைகள்
    உயிர்ப்புடனே இருக்கின்றன.

    என்றும்
    உயிர்ப்புடனே இருக்கும்.
    ---------

    உயிருடன் இல்லை என்றாலும்
    "அம்மா" என்றழைத்து
    நீங்கள் கலை காக்கப்
    புறப்பட்டீர்கள்.

    உயிருடன் இல்லை என்றாலும்
    " அய்யா" என்றழைத்து
    நாங்கள்
    உங்கள் புகழ் காக்கப்
    புறப்பட்டோம்.
    ---------
    உங்களைப் போன்ற
    உன்னதமான உயிர்களுக்கு...
    பிறப்பு மட்டும் தானே அய்யா !

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •