-
27th January 2019, 02:33 PM
#11
Senior Member
Devoted Hubber
நடிப்பில் எப்படி கண்ணியம் காத்தாரோ அதே கண்ணியத்தை அரசியலிலும் செய்தவர் சிவாஜி.அரசியலில் வென்றவர்கள், அதாவது ஏதோ ஒரு புரியாத ஈர்ப்பால் மக்கள் அதிகளவு வாக்களித்து வெற்றி பெற்றவர்கள் தங்களது கண்ணியத்தை காத்தார்களா என்றால் வாக்களித்த மக்கள் கூட மறுக்கும் நிலைதான் அதிகம் தமிழ்நாட்டில்.
தான் சார்ந்த கட்சிக்கு தன் புகழை கொடையாக கொடுத்தவர் சிவாஜி. ஏதும் விரும்பாமலேயே.
ஒரு சம்பவம்.
நடிகர்திலகத்தின் முகமடித்த போஸ்டர்களில் சாணத்தை வீசி அழகு பார்த்தனர் விரும்பத்தகாதவர்கள்.பத்திரிக்கையா...ளர் இது பற்றி நடிகர்திலகத்திடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்,
"சாணம் நல்ல உரம் தானே, நன்றாக வளரலாம் தானே ".
இந்த பதில் ஞானிகள், யோகிகள், சித்தர்கள், ஏதும் விரும்பாத நிலை கொண்டவர்கள், போன்றவர்களிடம் தான் இருந்துதான் வரும்.
அவர் கல்லடி பட்ட மரமல்ல, காலம் முழுவதும் பட்டுக் கொண்டே இருந்த மரம் .
மற்றுமொன்று ..
விலகிய கட்சியின் மேல் கொண்ட கோபத்தால் அதன் தலைவரை ஒழிக கோஷம் போட்டரொருவர் அய்யனின் பாசப் பிள்ளை.அதை கண்டித்து கண்ணியத்தை கற்றுக் கொடுத்த தலைவன் சிவாஜி.நாற்பதாண்டுகளில் எந்த தலைவனிடம் இதை காண முடிந்தது?
இது போன்று ஏராளம் உண்டு.
அதை சொல்லுங்கள் .
நன்றி செந்தில்வேல் செல்வராஜ்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th January 2019 02:33 PM
# ADS
Circuit advertisement
Bookmarks