Page 260 of 401 FirstFirst ... 160210250258259260261262270310360 ... LastLast
Results 2,591 to 2,600 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #2591
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2592
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஊரெங்கும் வான் மழை...! அரங்கமெலாம் வசூல்மழை.....!!


    நன்றி வான்நிலா.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2593
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2594
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2595
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    காலத்தால் அழியாத காவிய சினிமா இந்த "வசந்த மாளிகை"

  7. #2596
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தமிழகமெங்கும் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் வசந்தமாளிகை திரைப்படத்தை...
    நல்ல முறையில் டிஜிட்டலில் மாற்றி,
    இன்றைய பதுப்படங்களுக்கு இணையாக
    ஒலி மற்றும் ஒளி அமைத்து,
    ... மகத்தான வெற்றிக்கு வித்திட்ட ராமு அவர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜியின் அன்பு இதயங்கள் சார்பில் ந்ன்றியை காணிக்கையாக்குகிறோம்.
    திரையரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு இவரின் உழைப்பே காரணம்.
    ராமு அவர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி இருந்தாலும், வசந்தமாளிகை தான் அவரின் உழைப்புக்கான முழு வெற்றியை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ராமு அவர்கள் மேலும் நடிகர்திலகத்தின் பல படங்களை டிஜிட்டல் செய்து,
    உலகங்கும் புகழ்பெற வாழ்த்துகிறோம்.



    நன்றி Sunder Rajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2597
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தமிழகம் மட்டுமல்ல....

    இந்தியா மட்டுமல்ல...

    உலகமே வியந்து பார்க்கும் ...

    உன்னத கலைஞன்

    நடிகர்திலகம் மட்டுமே....

    உலகமக்கள் மட்டுமல்ல
    உலக தலைவர்கள் கொண்டாடும்

    ஒரே கலைஞர்
    மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் மட்டுமே...

    ஆஸ்திரேலிய துாதர்
    நமது நடிகர்திலகத்தின் வசந்தமாளிகை திரைப்படத்தை பெரியதிரையில் பார்த்து மகிழ்ந்துள்ளார்.



    நன்றி Sunder Rajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2598
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    (ஆயிரக்கணக்கான பார்வைகளில் இது ஒரு சிறு பார்வை.)
    வசந்தமாளிகை...
    காலத்தால் அழிக்க முடியாத காவியப்படம்.
    தமிழ்த்திரை உலகில் இதனை மிஞ்சியோ அல்லது இதற்கு இணையாகவோ இன்று வரை ஒரு படம் வரவுமில்லை...இனி என்றும் வரப்போவதும் இல்லை...
    இந்தப்படத்தில் நடிகர்திலகம், இளைய ஜமீன்தார், சின்னதுரை, ஆனந்த் ஆகவும் அவரது இதயநாயகி 'லத்தா'வாக வாணிஸ்ரீயும் அற்புதமாக வாழ்ந்ததைப் பற்றியும், கவியரசரின் அதி அற்புதமான பாடல்களைப் பற்றியும், KVM இன் இனிமையான இசையமைப்பைப் பற்றியும், பாலமுருகனின் மனதைத் தொட்ட அருமையான வசனங்களைப் பற்றியும், ஒளிப்பதிவு மேதை A.வின்சென்ட் அவர்களின் அற்புதமான, கண்ணுக்கு இனிமையான, வண்ண ஒளிப்பதிவைப் பற்றியும், படத்தின் பிரம்மாண்டத்தைப் பற்றியும் இதுவரை ஏகப்பட்ட பேர், எண்ணற்ற பதிவுகளை, இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ விதமாகச் செய்திருக்கின்றனர்...
    அவை எதைப்பற்றியும் இங்கு சிறிதளவும் சுட்டிக் காட்டப் போவதில்லை.
    இந்தப் பதிவின் பார்வையே வேறு... அது போகப் போகத் தெரியும். ஏன் இந்தப்படம் காதல் படங்களில் ஒரு காவியமாகப் போற்றப்படுகின்றது என்பது புரியும்.
    அதற்கு முன்னர், கதையின் நாயகன் பற்றியும் கதை அமைப்புப் பற்றியும் சில வரிகள்...
    ஆனந்த்... எங்கெங்கு தம் குடும்பத்தின் சொத்துக்கள் இருக்கின்றன என்பதே தெரியாத அளவுக்கு மிகவும் வசதி மிக்க ஒரு பணக்கார ஜமீன் பரம்பரையின் இளைய ஜமீன். இளைஞன். அழகன்.. கட்டழகன்..
    குடும்பத்தின் கட்டுப்பாடு எதுவும் இன்றி, கேட்பார் யாருமின்றி, மனம் போன போக்கில் சந்தோச வாழ்க்கை வாழ்பவன்.
    ஒரே ஒரு நாளைக்கு மட்டுமே பல கட்டுக்கள் பணம் செலவழித்துக் குடிக்கும் அளவு பணத்தை மதிக்காமல் செலவழிப்பவன். தன் பிறந்த நாள் விழாவின் மாலை நேரக் கொண்டாட்டத்துக்கு மட்டும் பல லட்சங்கள் செலவழித்து வெளி நாட்டு மது வகைகளாகப் பலருக்கும் கொட்டிக் கொடுப்பவன்.
    அவன் கண்ணசைவுக்கும், அவனது காசுக்கும் காத்திருக்கும் காரிகைகள் ஏராளம்...சமுதாயத்தில் யாரைப்பற்றியும் கவலை இன்றிப் பல பெண்களுடன் ஒரே நேரத்தில் கும்மாளம் அடிப்பவன்.. குடித்து விட்டுத் தூக்கி எறியும் காலி மது பாட்டில்களும், அவனிடம் வரும் பெண்களும் அவனுக்கு ஒன்றுதான்.
    இந்த நிலையில்தான் தற்செயல் நிகழ்வாக ஆனந்தின் காரியதரிசியாக அவன் வாழ்வில் வருகிறாள் லதா. ஏழ்மை நிலையிலும் தன்மானத்துடன் வாழும் குணம் கொண்ட குணவதியான அவள், தன் கட்டுப்பாடான, அதே வேளையில் பண்பான நடவடிக்கைகளின் மூலம், மெல்ல மெல்ல ஆனந்தின் கெட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து அவனை நல்வழியில் திருப்புகிறாள்...அதன் மூலம் அவன் மனதிலும் இடம் பிடிக்கிறாள்..
    இது வரை எல்லாமும் எல்லாரும் அறிந்ததே..
    இனி சற்று வேறு பார்வை பார்ப்போம்.
    எப்படிப்பட்ட காமாந்தகார இளைஞன் அவன்..!!
    எவ்வளவு பெண்களுடன் தொடர்பு அவனுக்கு..!!
    அப்படிப்பட்ட ஒருவனின் மனதில், சந்தர்ப்ப வசத்தால் வந்த ஒரு ஏழைப்பெண்ணை அவன் எப்படி எல்லாம் அடிமைப்படுத்தி இருக்க வேண்டும் ?
    அதுதான் இல்லை..
    இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம் அவன் அவளைத் தொடக்கூட இல்லை..
    ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா..?
    மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடி, இரவு நேரத்தில், தனிமையில், உணர்ச்சி மேலிட இருவரும் ஒரே அறையில் இருக்கும்படியான சந்தர்ப்பம் நேர்ந்தபோது கூட... அவன் அவளைத் தொடவில்லை..
    தன் இதயத்தில் உள்ள காதலியின் திரு உருவத்தை லத்தாவுக்குத் தெரியப் படுத்துவதற்காக அவளை, அவளுக்காகவே கட்டிய அந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று, அவள் உண்மை உணர்ந்து, ஓடி வந்து அந்தக் காதலை ஏற்றுக் கொண்ட போது கூட, ஆனந்த் அவளைத் தொடவில்லை என்பதுதான் மிகவும் அற்புதமான விசயம்.
    உன்னிப்பாகப் பார்த்தால், முதலில் ஆனந்தைக் கட்டி இறுக அணைத்துக் கொண்டது கூட லத்தா தான். அப்போதும் கூட ஆனந்தின் கைகள் லத்தாவை அணைக்காமல் முதலில் விலகித்தான் இருக்கும்..பின்னர்தான் அவளை ஆனந்த் அணைத்துக் கொள்வான்..
    எல்லை மீறிய கெட்ட நடிவடிக்கைகள் கொண்ட ஒருவன், தான் உண்மையாக நேசித்த ஒரு தேவதையைத் தொடக் கூடத் தயங்கியபோதே உத்தமமான காதல் அங்கு உயர்ந்து நிற்கிறது...
    அவர்கள் இருவரின் அந்த அணைப்பு, கிட்டத்தட்ட இரண்டு நிமிட நேரம் நீடிக்கும்.
    அதன் பின்னர் "மயக்கமென்ன.." பாடலின் போது மிகவும் கண்ணியமான தொடுதல்...பூங்காவிலும்... பின்னர், மதில் சுவர் மேலும்..பாடல் முழுவதும்.. அதுநாள் வரை தமிழ்த்திரை உலகம் கண்டிராத ஸ்லோ மோசன் காட்சியில் அவர்களின் அந்தப் பாடலும் காட்சியமைப்பும் காதலர்களின் அன்பின் உச்சம்.
    தன் காதலை வெளிப்படுத்திய போதும், உடனே தொடர்ந்த மயக்கமென்ன பாடலின் போதும், ஆக மொத்தம் சுமார் ஆறு நிமிட நேரம் மட்டுமே இருவரும் காதலுடன் தொட்டுக் கொண்டது... அவ்வளவுதான் மாபெரும் காதல் படமான இப்படத்தில் காதலர் இருவரும் காதலுடன் தொட்டுக் கொண்டது....
    இதைத் தவிர இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளும் சந்தர்ப்பமே படத்தில் இல்லையா ?
    ஏன் இல்லை ? நிறைய இருந்தன.
    முதன் முதலில், விமானத்தில் குடிபோதையில் ஆனந்த் தடுமாறியபோது, விமானப் பணிப் பெண்ணான லதா அவரைக் கைத்தாங்கலாக அவனுடைய இருக்கைக்கு அழைத்துச் செல்கிறாள். அப்போது அவள் ஆனந்தைத் தொட்டது ஒரு பணிப்பெண்ணின் கடமையின் போது ஏற்பட்ட தொடுதல்.
    பின்னர் ஒரு முறை லத்தா ஆனந்தைத் தொட்டது, ஆனந்த் குடிப்பதைத் தடுக்க மதுக்கோப்பையுடன் இருந்த அவன் கைகளைப் பற்றித் தடுத்த போது.
    ஆனந்த் லத்தாவைத் தொட்டது, மது பாட்டிலால் அவள் மண்டையை உடைத்து, தலையில் கட்டுப்போட்டு, முன்பு தனக்காக உயிர் நீத்த அன்பு ஆயாவின் படத்தை அவளுக்குக் காட்ட அவள் கையை ஆவேசத்துடன் பிடித்து இழுத்துக் கொண்டு போன போது...அது ஆயாவின் மறைவு தன் வாழ்வில் எப்பேற்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியது என்று காட்டுவதற்காக...
    அதன்பிறகு...சிறு வயதில் ஆயாவுக்கு ஏற்பட்ட கொடுமையான நிகழ்வைச் சொல்லி முடித்து, இனித் தன் உயிர் இருக்கும் வரை மதுவைத் தொட மாட்டேன் என்று லத்தாவின் கையில் அடித்துச் சத்தியம் செய்த போது அவள் கையை ஆனந்த் தொட்டது...
    அதோடு இடைவேளை...
    பின்னர் தொட்டது, லத்தா பெரியதுரை விஜயகுமாரால் திருட்டுப்பட்டம் சூட்டப்பட்டபோது, தக்க சமயத்தில் அங்கு வந்து அந்த சங்கடத்தில் இருந்த லத்தாவைக் காப்பாற்றி, ஆறுதலாக அவளது தோளைத் தொட்டபடி அழைத்துப் போன போது...அது ஆறுதலான தொடுதல்.
    இறுதியாக ஆனந்த் லத்தாவைத் தொட்டது மிகவும் உணர்ச்சி பூர்வமானது.. இன்னொருவரின் மனைவியாகப் போகும் லத்தாவை, திருமண மண்டபத்தின் பின்பகுதிக்குத் தங்கை அழைத்து வர, ஆசி வேண்டிக் காலில் நமஸ்கரித்த லத்தாவைக் கையால் தொடாமல், ஆனந்தின் கண்ணீர்த்துளிகள் அவள் மேல் விழுந்து ஆசிர்வதிப்பது... பின்னர் அவளது தலைக்கேசத்தின் மேல் மென்மையாகத் தொட்டு ஆசி கூறுவது...
    எப்படிப்பட்ட நடத்தை கொண்டிருந்த ஒரு மனிதனிடம் எப்படிப்பட்ட ஒரு உயர்ந்த மாற்றத்தைக் காதல் என்னும் ஒரு சமாச்சாரம் ஏற்படுத்தி விட்டது ?
    கிள்ளுக் கீரையாக அவன் எண்ணியிருந்த அதே பெண்மையை மிக உயர்ந்த மலைச்சிகரத்துக்கு ஏற்றி வைத்த பெருமையும் அதே ஆனந்தைத்தான் சாரும்.. தனக்கே உரியவளாக ஒருத்தி வரும்போது, அவளைத் தொடக்கூடத் தயங்கும் அளவு உயர்ந்தவனாக உத்தமனாக ஆனந்த் மாறியது ..காதலின் உன்னதத்தால்.
    காதல் என்பது, வெறும் உடல் ரீதியானது அல்ல.. உள்ளங்கள் ஒன்றாகச் சங்கமிக்கும் உத்தமமான ஒரு தெய்வீக விசயம்.. காதலுக்காக.. அதன் புனிதத்துக்காகத் தன் உயிரையும் தரத் தயாரான ஒரு உண்மையான காதலனை உலகுக்குக் காட்டிய படம் இது...
    இதனால்தான் மற்ற அனைத்துக் காதல் படங்களையும் விட இது உயர்ந்து தனித்து நிற்கிறது...
    அதனால்தான் ஆனந்தும், லத்தாவும் நம் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    நன்றி.
    நாகராஜன் வெள்ளியங்கிரி.






    நன்றி நாகராஜன் வெள்ளியங்கிரி.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2599
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2600
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes sivaa liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •