Page 155 of 401 FirstFirst ... 55105145153154155156157165205255 ... LastLast
Results 1,541 to 1,550 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #1541
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று (21/02/19) இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்,
    To Night 10 pm jeya movie,

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1542
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கட்சி அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தெற்கு போக் ரோடு வழியாக காரில் சென்று கொண்டிருந்த மேற்கு வங்க முதல்வரிடம் காரில் அருகில் அமர்ந்திருந்தவர் இதுதான் நடிகர் சிவாஜிகணேசனின் வீடு என்று சொல்ல, உடனே வண்டியை நிறுத்துமாறு உத்திரவிடுகிறார். முன்னாலும் பின்னாலும் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி இறங்கி ஓடி வருகிறார்கள். அவர்களிடம் நான் சிவாஜியை சந்திக்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூற , நிகழ்ச்சி நிரலில் இல்லாத இடத்துக்கு எப்படி போக முடியும் என்று ச...ொல்ல அதெல்லாம் எனக்குத் தெரியாது இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் அவர் தான் பிறந்த நாட்டிற்க்கும், மாநிலத்திற்கும் உலக அளவில் புகழ் தேடித் தந்த அவரை காண இப்போது விட்டால் எனக்கு இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று கூற, அன்னை இல்லம் நோக்கி அதிகாரிகள் பறந்தனர். அய்யனும் அன்று இல்லத்தில் இருந்தார்.விஷயத்தை சொன்னதும் அன்னை இல்லம் பரபரப்பானது. ஜோதிபாசுவை வரவேற்க அய்யன் இல்லத்தின் வாசலுக்கு விரைந்தார். வாசலிலே காரை நிறுத்தி, இறங்கி நடந்தே வந்தார் மேற்கு வங்க முதல்வர். அவரை அன்னை இல்லத்து உறவுகள் சகல மரியாதைகளோடு உள்ளே அழைத்துச் சென்றனர்.அய்யனோடு சுமார் இருபது நிமிடங்களுக்கு மேல் அளவளாவிக் கொண்டிருந்தார் முதல்வர்.கட்சிக்கார்கள் அய்யன் கட்சி அலுவலகம் கட்ட செய்த பண உதவியை சொல்ல முதல்வரும் அய்யனும் நெகிழ்ந்து போனார்கள். விடை பெறும் நேரத்தில் முதல்வர் ஜோதிபாசு அய்யனை தன்னோடு அலுவலக திறப்பு விழாவிற்கு வரும்படி வேண்டினார். அய்யனும் அவரோடு சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது கூடுதல் தகவல். எல்லோருக்கும் நல்லவர் நம்மவர். அவர் போல் ஓர் உயர்ந்த மனிதனை காண்போமா பாரினிலே. வாழ்க அய்யன் புகழ். நடிகர் திலகத்தின் பண்பும் பெருமையையும் அறிந்த பல தலைவர்கள் அன்னை இல்லம் வந்து சந்தித்தது உண்டு....அது போல் அவரை வரவழைத்து பார்த்து மகிழ்ந்த ஞானிகளும் அமெரிக்க அதிபர் கென்னடி போல் உலகத் தலைவர்களும் உண்டு.இவர் காலத்தில் வாழ்ந்த இந்தியத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் பெரும்பாலோரை சந்தித்த மாபெரும் கலைஞர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்....



    நன்றி லக்ஸ்மணன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1543
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    .தந்தையாக பாசம் புலர்த்திய அற்புத மாணிக்கம் என் அய்யன்
    ------------------------------------------------------------------------------------------------------------------
    1988, ஜனவரி 15ம் நாள் காலையும் நீயே,மலையும்நீயே என்ற திரைப்படம் திரு.சுந்தரராஜன் (இயக்குனர்)அவர்களால் இயக்கப்பட்டு வெளி இடப்பட்டது. அந்த திரைப்படத்தில் திரு.விஜயகாந்த் ,திரு.பிரபு அவர்கள் சேர்ந்தது நடித்திருந்தார்கள்.படமும் சுமாராக இருந்தது.
    இந்த திரை பட படப்பிடிபில் சண்டை காட்சியின் போது திரு. விஜயகாந்த் அவர்களுக்கு தவறுதலாக கழுத்தில் கொண்டடி பட்டு,தமிழகம் முழுவதும் அன்று பரபரப்பாக இருந்தது. விஜகாந்த் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க படுகின்றார்கள்.
    மருத்துவமனையில் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. இந்த செய்தி அய்யனின் காதுகளில் சொல்லப்படுகின்றது. இந்த வேளையில் அய்யன் அமெரிக்கா செல்வதற்க்காக தயாராகி கொண்டிருக்கின்றார்கள்.பதறிய அய்யன் அமெரிக்க பயணத்தை தள்ளி வைத்து விட்டு மருத்துவ மனைக்கு விரைந்து வருகின்றார்கள்.
    விஜய் அவர்களுக்கு சுய நினைவு இல்லை.சிகிச்சை முடிந்து விஜய் அவர்கள் தனது சுய நினைவு திரும்பும் வரை ஐயன் மருத்துவமனையில் அமர்ந்து இருந்தார்கள். இந்த வேளையில் நடந்த சம்பவத்தை அய்யன் கேட்டு தெரிந்து கொள்கின்றார்கள் பதறிக்கொண்டிருந்த அய்யனிடம் விஜய் அவர்கள் சுய நினைவுக்கு வந்த விவரம் சொல்ல படுகின்றது.பதட்டத்துடன் இருந்த அய்யன் விரைந்து விஜயின் பக்கத்தில் சென்று தலைதனை தடவி கொடுத்து ஒரு தந்தையைப்போல் ஐயா விஜி எப்படி இருக்கின்றாய்? வலி எப்படி உள்ளது? என்று கண்ணீர் மல்க கேட்க்கின்றார்கள்.
    பிறகு மருத்துவரிடம் சென்று விஜயின் உடலம் நலம் என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டு அய்யன் நிம்மதி அடைகின்றார்கள். திரும்பி வந்த அய்யன் விஜய் அவர்களின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஒரு பாசமுள்ள தந்தையாக, தம்பி விஜி, நம் போன்ற நடிகர்கள் மலர் போன்றவர்கள். மலர் மீது காற்று சிறிது அதிகமாக வீசி விட்டால் மலரின் இதழ் உதிர்ந்து விடும். மலரின் அழகும் போய் விடும். நடிகர்களும் அதுபோலவே.
    சண்டை காட்சிகளில் எப்போதும் நாம் டூப்பைத்தான் அனுமதிக்க வேண்டும். நாம் ஒருபோதும் இதுபோன்ற சண்டை காட்சிகளில் சிரத்தை எடுக்கவே கூடாது. அதை செய்வதற்கு சண்டையில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அதை செய்து கொள்வார்கள். இப்பொது இறைவன் அருளால் உனக்கு பயப்படும் படியாக ஏதும் ஏற்படவில்லை. ஏதாவது நடந்திருந்தால் நினைக்கவே சங்கடமாக உள்ளது.
    இந்த வேளையில் உன் உயிர் போயிருந்தால் அது வேறு. உன் உடலுக்கு வேறு எதாவது அவயங்கள் நஷ்டமாகி இருந்தால் என்ன ஆயிருக்கும்? உன்னால் நடிக்கவே முடியாமல் போய் இருக்குமே. உன்னால் நடிக்காமல் வீட்டில் இருக்கத்தான் முடியுமா? ஆக , நாம் நம்மை மலர் என்று எண்ணி காற்றும் கொள்ளாமல், அழகும் குலையாமல் நமது உடம்பை நாம் தான் கவனமாக பாதுகாக்க வேண்டும்.
    நான் அமெரிக்கா செல்ல இருக்கின்றேன். உனக்கு என்ன தேவை என்றாலும் தம்பி பிரபுவை கேள். அவன் அனைத்து உதவிகளையும் செய்து தருவான் என்று கைகளை பிடித்து கணீர் மல்க தான் பெற்ற பிள்ளையிடம் சொல்வதையே தான் பெறாத விஜய்யிடம் அய்யன் கூறி விட்டு பிரபுவிடம் வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும்படி உத்தரவு பிறப்பித்து செல்கின்றார்கள் அய்யன் அவரகள்.
    அன்றய காலங்களில் அமெரிக்கா செல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. பலமணி நேர பயணம் அன்றய காலங்களில் .இவ்வாறு இருந்தும் கூட என் சாதியில் பிறந்த ( திரைப்பட துறை சாதியில் ) என் மகனுக்கு விபத்து நடந்து விட்டது. என் பயணம் பெரிதல்ல, என் பிள்ளையின் நலமே பெரிது என்று எண்ணி தனது பயணத்தை ரத்து செய்து தந்தைபோல் பாசம் கொண்டு ஓடி சென்று அறிவுரை கூறும் பண்பு, திரை உலகத்தில் என்றும் எவருக்கும் இருந்ததில்லை.
    இங்கு ஒன்றை சொல்லிட விரும்புகின்றேன். இப்போதைய சில நடிகர்கள் அன்றய நடிகர்களின் ரசிகர்கள் என்று மார்தட்டி கூவி நடக்கின்றர்கள். அவர்களிடம் போய் தங்களின் நடிகரின் விழா எடுக்கின்றோம் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்போமேயானால் அவர்களின் பதில், உடல் நெளிந்து , இந்த நேரத்தில் ஒரு படத்தில் நடித்தால் பணம் கிடைக்கும் என்று சொல்லி நழுவி விடுவார்கள்.இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டதுண்டு. இதுபோன்ற அனுபவம் வேறு பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
    நடிகர்கள் என்றாலே வருவாய் இருக்கின்றதா? என்று பார்ப்பவர்கள்தான் 100க்கு 99.99 சதவீதத்தினர்கள். எனவேதான் நடிகர்கள், கொள்கை இன்றி பணத்திற்காக அழைக்கின்ற அரசியல் கட்சிக்கு வாக்குகள் கேட்க்கின்றனர்.பணத்திற்காக கொள்கை இன்றி வாழும் திரையுலகத்தில், ஏழையாக பிறந்து,நடிகனாக வளர்ந்து, உயர்ந்து ,புகழ் பல பெற்ற போதும் தான் ஒரு மனிதன் என்ற உயர் எண்ணம் மாறாதவர் அய்யன் அவர்கள்.
    என்னை வாழ வைக்கும் திரை உலகத்தில் என் பிள்ளைக்கு ஒரு ஆபத்து என்று கேட்ட உடன் உடல் பதறி ஓடோடி வந்து தந்தைபோல் வேஷமில்லா பாசம் காட்டும் ஒரே உத்தம புத்திரன் அய்யன் மட்டுமே. மருத்துவ மனையில் இருப்பவர்களை பார்க்க செல்லும்போது ஒரு பூ கொத்தை கொடுத்து விட்டு நலம் விசாரிக்கும் திரை உலகில், என் திரை உலக சாதியில் பிறந்த விஜியை தன் மகன் என்ற உயர்ந்த உள்ளதோடு பார்க்க சென்ற அய்யனின் வரிசையில் எவரும் இல்லை என்பதே உலக உண்மை.
    தானும் வாழ்ந்து, மற்றவர்களும் வாழ வேண்டும். தானும் மகிந்து அடுத்தவர்களுக்கு மகிழ வேண்டும், தானும் உயர்ந்து ஏனையோரும் உயர வேண்டும் என்ற மாசற்ற எண்ணம் என் ஐயனுக்கே சொந்தம். எனவேதான் எங்களின் மனதில் உயர்ந்த உத்தமனாக, ராஜராஜ ராஜாவாக, தங்கையின் தங்கப்பதக்கமாக,ஞானஒளியாக வீற்றிருக்கின்றாயோ எண்களின் பாசமலரே.
    இதுபோல் தான் மலையாள நடிகர் ஜெயன் அவர்கள் படப்பிடிப்பில் விபத்தில் இறந்த போது, அவரது சொந்தங்கள் கேட்டு கொண்டபடி காவல்துறையினரிடம் பேசி ஜெயன் அவர்களின் உடலை வெட்டி கூறு போடாமல் (postmortem) அனுப்பி வைக்க உதவிய நாயகன் நமது அய்யன்.
    இதுபோற்று கோடிகள் சொல்வேன். வாழ்நாள் என்றும் உன் புகழ்பாடும் பக்தன்
    .












    நன்றி செல்வராஜ் பெர்னாண்டஸ்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1544
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1545
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று முதல் ஆலங்குடி (திருச்சி மாவட்டம் ) V.C.சினிமாஸ் குதூகல ஆரம்பம். இதன் தொடக்கமாக நடிகர் திலகத்தின் "கர்ணனை" த்தான் திரையிட வேண்டும் என எண்ணி
    திரையிடுகின...்றார். இந்த நல்ல உள்ளம் கொண்ட திரையரங்கு உரிமையாளர் பெயர் "V. C. கணேசன்". நமது நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர். இந்த இனியவரை, இவர் செய்யலை நாமும் போற்றி வாழ்த்துவோம்.இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் உள்ளவரை நடிகர் திலகத்தின் புகழ் என்றும் ஓங்கும் ... .வாழ்த்துக்கள்.....


    நன்றி திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ((21-2-2019)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1546
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1547
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அய்யனின் மணிமண்டபத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு வழங்கிவரும் தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள பத்து பக்க மடிப்பேடு ரசிகர்கள் பார்வைக்காக ...



    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1548
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1549
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1550
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •