கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந்தேதி யன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின்
தீவிர பக்தரான திரு.கே.எஸ். மணி அவர்களின் புதல்வி ஸ்ரீமதியின் திருமணம்
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது .
திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.சதானந்தன் (இலங்கையை சார்ந்தவர் -தற்போது கனடாவில் வசித்து வருகிறார் ) தனது நண்பர்களுடன்
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் . திரு.சதானந்தன் , திரு.கே.எஸ். மணி அவர்களின் நீண்டகால நண்பர் . மாற்று முகாமில் பதிவிட்டு வரும் திரு.சிவாஎன்கிற சிவானந்தனின் சகோதரர் ஆவார் .மற்றும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, திரு.எம்.எஸ். மணியன், திரு.ஆர். லோகநாதன் (ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி ), திரு.வி.ராஜா, நெல்லை திரு.தம்பாச்சாரி, திரு.ஜி.வெங்கடேச பெருமாள் ஆகியோர் திருமண நாளில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர் .
முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எண்ணற்ற எம். ஜி.ஆர். பக்தர்கள்
கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
பின்னர் திரு.சதானந்தன் அவர்களுடன் இலங்கையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்பட வரலாற்று சாதனைகள், வரலாறு காணாத மக்கள் கூட்டம் மக்கள் திலகத்திற்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சிகள் போன்றவை பற்றி கேட்டு
தெரிந்து கொண்டேன் . .அவருடன் சுமார் ஒரு மணி நேரம் கலந்து உரையாடியதில் பல முக்கிய தகவல்களை தெரிவித்தார் . முக்கியமாக மாற்று முகாமில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றியும், அவரது திரைப்பட வசூல் சாதனைகள் பற்றிய பொய் செய்திகளையும் , அவதூறான பதிவுகளை பற்றியும் பல நண்பர்கள் தன்னிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார் . தனது சகோதரர் சிவானந்தனுடன் இதுபற்றி அவ்வப்போது வாக்கு வாதங்கள் நடைபெற்றதாகவும் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் வலம் வந்தபோது ) ஒரு கட்டத்தில் அது பிரயோஜனம் இல்லை என்று முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார் . இலங்கையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் இருந்தவரையில் அவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்றும் உறுதியாகவும்,ஆணித்தரமாகவும் பதிலளித்தார் . மேலும், மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், அந்த செய்திகளை புறக்கணிக்குமாறும் கேட்டுக் கொண்டார் .திரு.சதானந்தன் தனது வாட்ஸ் அப் எண்ணை எனக்கு அளித்துள்ளார். அதில் மக்கள் தலைவர் .எம்.ஜி.ஆரின் அரசியல் மற்றும் திரைப்பட மறுவெளியீடு, டிஜிட்டல் வெளியீடு மற்றும் இதர செய்திகளை உடனுக்குடன் அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார் .
திரு.சதானந்தன் அவர்களின் வெளிநாட்டு பயணம் வெற்றியடையவும் , மீண்டும் இந்தியாவுக்கு வரும்போது சந்திப்போம் என்றும் வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றேன் .
செய்தி, மற்றும் புகைப்படங்கள் தாமதமாக பதிவிடுவதற்கு வருந்துகிறேன் .
திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
ஆர். லோகநாதன் .
Bookmarks