-
5th August 2019, 05:54 AM
#3241
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2019 05:54 AM
# ADS
Circuit advertisement
-
5th August 2019, 06:01 AM
#3242
Senior Member
Devoted Hubber
இது ஒப்பீடு இல்லை
செய்தியை தெரிந்து கொள்ள மட்டுமே,
திரையுலக வரலாற்றில் கட் அவுட் வைக்கும் வழக்கம் 1957 ல் வெளியான நடிகர் திலகத்தின் வணங்காமுடி திரைப்படத்திலிருந்துதான் என்பது நமக்கு தெரியும்,
அதற்கு முன் அத்தனை தீவிரமான ரசிகர்களை எந்த நடிகர்களும் பெறவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்,
... பிற்காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 80 அடிக்கும் உயரமான கட் அவுட் வைக்க உத்தேசித்தார்களாம், ஆனால் ரஜினி உடனடியாக அதில் தலையிட்டு ஏற்கனவே நடிகர் திலகத்திற்கு வைக்கப்பட்ட கட் அவுட் தான் இது நாள் வரையிலும் சாதனை என்பதனால் வணங்காமுடி கட் அவுட்டின் உயரத்தை விட தனக்கு உயரமான கட் அவுட் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டதால் கட் அவுட் ரசிக குழுவினரும் என்பது அடி உயரத்தில் மட்டுமே வைத்து மகிழ்ந்தார்களாம்,
நோ நெகடிவ் கமெண்ட்ஸ் ப்ளீஸ்,
Thanks Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2019, 07:02 AM
#3243
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th August 2019, 06:20 PM
#3244
Senior Member
Devoted Hubber
என்னால் சிவாஜி போல் நடிக்க முடியாது" - இவரா இப்படிச் சொன்னார்!?
By Vikatan Correspondent
October 01, 2016 at 5:56 PM
இன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள். சிவாஜி என்றால் நடிப்பு, நடிப்பு என்றால் சிவாஜி. சிவாஜியின் மிகப் பெரிய பலமே, அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு முன்மாதிரியும் கிடையாது பின் மாதிரியும் கிடையாது. சிவாஜியைப் பற்றி திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு காலகட்டங்களில் சொன்னவைகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக...
ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ
'என்னைப் போல் சிவாஜி நடிப்பார்- ஆனால், என்னால்தான் சிவாஜியைப்போல் நடிக்க முடியாது!
எம்.கே.தியாகராஜ பாகவதர்
'அம்மா' என்கிற ஒற்றை வார்த்தையை உச்சரித்ததில் திரைஅரங்கையே கை தட்டவைத்தவர் சிவாஜி ஒருவர்தான்.
நடிகர் சிவகுமார்
சிவாஜியின் மிகப்பெரிய சொத்து, அவரது ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்.
நடிகர் வி.கே. ராமசாமி
சிவாஜிக்கும் எனக்குமான நட்பு 1945-ல் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் மதுரை பாலகான சபாவிலிருந்த போதே நாடகங்களில் நடிக்கும் போதே சிவாஜி ஏற்காத பாத்திரமில்லை. பெண் வேடமிட்டு கதாநாயகியாக ஒரு நாடகம் முழுவதும் அசத்துவார். மறுநாள் ராஜாவாக கம்பீரமாக நடை போடுவார். இந்த காலகட்டத்தில் 'இழந்த காதல்' என்ற நாடகத்தில், ஜெகதீஷ் என்ற வில்லன் பாத்திரமும், 'கள்வர் தலைவன்' நாடகத்தில் விஷ வைத்தியனாக நடித்ததும் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தன.
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள், 'பராசக்தி'யை படமாக எடுக்கும் போது குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டுமென பெரிதும் முயற்சி செய்து , திண்டுக்கல்லில் நாடகமொன்றில் நடித்துக்கொண்டிருந்தவரை அழைத்து வந்து ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் முன் நிறுத்தினார்.
பராசக்தியின் படப்பிடிப்பு ஏ.வி.எம்மில் நடக்க ஆரம்பித்தபோதே சினிமா உலகில் அவரது நடிப்பைப்பற்றி ஒரே பேச்சாக இருந்தது. மற்ற ஃப்ளோர்களில் நடித்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் பெருந்திரளாக வேடிக்கைப் பார்க்கக்கூடி விடுவார்கள்.
ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அப்போதைய சவுண்ட் என்ஜினீயராக இருந்த ஜீவா நானும் எத்தனையோ நடிகர்களின் குரல்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறேன், இவரது நடிப்பும் குரலும் சிம்ம கர்ஜனையாக இருக்கிறது என்று மனந்திறந்து பாராட்டினார். 1952 தீபாவளியன்று வெளியான பராசக்தியின் வசனகள் கிளப்பிய வேட்டுச்சத்தம் திரை உலகில் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நடிகர் நம்பியார்
உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.
யயாதி மகாராஜா, இந்திரலோகத்திலிருக்கும் தேவர்கள் போல் இளமையாகவே வாழ விரும்பினார். அதற்கு அவரது பிள்ளைகளில் எவராவது தனது இளமையைத் தந்தால் அவர் இளைமையுடன் வாழலாமென ரிஷி ஒருவர் வரம் தந்தார். ஆனால் எந்தப் பிள்ளையும் தங்களது இளமியைத்தர முன் வர வில்லை. அவர் பெற்ற பிள்ளைகளில் அரூபியாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். (கிட்டத்தட்ட தெய்வ மகன் கதை போல் இருக்கிறதே)அந்தப்பிள்ளை தனது இளைமையை தன் தந்தைக்கு தந்ததாக புராணக் கதையொன்று உண்டு. யயாதியின் நிலையில் சிவாஜி இருந்திருந்தால், நான் என் இளமையைத் தந்திருப்பேன்.
நடிகை மனோரமா
சிவாஜியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல நேரம் தவறாமையும்தான். அத்தனை பெரிய நடிகர் ஷூட்டிங்கில் எவரையும் காக்க வைத்ததில்லை. எந்த இயக்குனரின் படமாக இருந்தாலும், ஒரு புதுமுக நடிகரைப் போல் முழு ஒத்துழைப்பையும் தருவார். வாத்தியாரைப்போல் சொல்லித் தரவேண்டியவர் மாணவனைப்போல் கற்றுக்கொள்வார். அவருடன் பல படங்களில் நடித்திருந்தாலும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர் அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம்.
நடிகை சௌகார்ஜானகி
சிவாஜி ஒரு பிறவிக் கலைஞர். அவருடன் பணிபுரிந்த அந்தக்கால நாட்களை நினைத்தால் மனதுக்குள் எப்போதும் சிலிர்ப்பான அனுபவம்தான். அவரது தொழில்பக்தியையும் காலந்தவறாமையையும் வேறு எவரிடமும் நம்மால் பார்க்க முடியாது. திரையுலகின் தந்தை தாதாசாஹேப் ஆயுள் முழுவதும் சினிமா நன்றாக வளரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரை பிரிட்டிஷ் அரசாங்கம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதேப் போல் நமது அரசாங்கமும் சிவாஜியைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காலதாமதமாகவே தாதா சாஹேப் விருதை வழங்கியது.
கவிஞர் கண்ணதாசன்
எதை எழுதுவது, எதை விடுவது ? இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால் நியாயமாக இருக்கும் ? கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ? சிவாஜி ஒரு மலை, சிவாஜி ஒரு கடல்.
கண்களின் கூர்மையைச் சொல்வேனா ? அல்லது கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ? ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக் காட்டும்உன்னத நடிப்பைச் சொல்வேனா ? அவரைப்போல் இதுவரை ஒருவர் பிறந்த தில்லை; இனி பிறப்பார் என்பதற்கும் உறுதி இல்லை ! இது உண்மை. உலகறிந்ததே !
கவிஞர் வைரமுத்து
‘பராசக்தி‘ வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். நீங்கள் விருட்சமாய் வளர வளர நான் விதையாய் முளைத்திருக்கிறேன். உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டுந்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன். ‘மனோகரா‘ பார்த்துவிட்டு அந்த உணர்ச்சியில் சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து சங்கிலிக்குப் பதிலாக தாம்புக் கயிற்றால் என்னைப் பிணைத்து இருவரை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு புளிய மரத்தைப் புருஷோத்தமனாக்கி என்னை வசனம் பேச வைத்தவர் நீங்களல்லவா…? கட்டபொம்மன்‘ பார்த்துவிட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா…? உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. இந்தியா சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதிமுக்கிய பங்கிருக்கிறது. நீங்கள் நடித்ததால் பல தமிழ்ப் படங்கள் உலகத் தரம் பெற்றன !
எழுத்தாளர் சுஜாதா
ராஜராஜ சோழன், சிவாஜி கணேசனாக நடித்த,''ராஜராஜ சோழன்" படம் பார்த்தேன்! (தமிழ்நாடு பாட நூல் நிறுவன 3 -ம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் ராஜராஜ சோழன் பாடத்தில் சிவாஜிசாரின் படமே இடம் பெற்றிருந்தது).
வியாட்நாம் வீடு சுந்தரம்
இந்திய சிறந்த நடிகர்களுக்கான விருது, இந்தியாவின் சிறந்த நடிகருக்கு வழங்கப்படவே இல்லை. இப்படி பல தரப்பட்ட பாராட்டுக்கள் இருந்தாலும், சிவாஜி நடிப்பை 'ஓவர் ஆக்ஸன்' என்று சொல்லும் சில விமர்சனச் சேவல்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிவாஜி ஷப்ட்டிலாக நடித்த (அண்டர் ஆக்ட்) அநேகப் படங்களை இந்த வகையினர்,ரொம்ப சௌகரியமாகக் கண்டு கொள்ளமாட்டார்கள். தங்கள் வாதத்துக்குத் துணையாக எம்.ஆர். ராதா, ரங்கராவ், நாகேஷ், சந்திரபாபு, டி.எஸ். பாலையா, எஸ்.வி.சுப்பையா ஆகியோர் நடிப்பைத் துணைக்கழைத்துக் கொள்வார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரங்கராவ்தானுண்டு, ஒரு சந்திரபாபுதானுண்டு. ஆனால், சிவாஜிக்குள் இவர்கள் எல்லோருமே உண்டு.
கதிரேசன்
thanks Nadigarthilagaththin nanthavana pookkal
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2019, 06:24 PM
#3245
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2019, 06:33 PM
#3246
Senior Member
Devoted Hubber
#சிவாஜி -ஓர் #பெருந்தன்மையாளன்
இமயம் கண்டேன்….
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்… சுகங்கள்
... இப்பாடலை எஸ்.பி.பி., சுசீலா பாடியிருந்தனர். பனி போர்த்திய இமயமலைச் சிகரங்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான டூயட் பாடல். இப்படம் வெளியானபோது இந்தப்பாடலும் ரொம்பவே பாப்புலர்.
தான் உச்ச நடிகராக இருந்த காலத்திலேயே இது போல எத்தனை அருமையான டூயட் பாடல்களைத் தன்னுடைய படத்தில், அடுத்த நாயகர்களுக்கும் துணை நடிகர்களுக்கும் விட்டுக் கொடுத்திருக்கிறார்!....நடிகர் திலகம் !
1.இன்பம் பொங்கும் வெண்ணிலா – கட்டபொம்மன்
2.காற்று வெளியிடை கண்ணம்மா – கப்பலோட்டிய தமிழன்
3.காலங்களில் அவள் வசந்தம் – பாவமன்னிப்பு
4.யார் யார் யார் அவள் யாரோ – பாசமலர்
5.அன்று ஊமைப் பெண்ணல்லோ – பார்த்தால் பசி தீரும்
6.இதழ் மொட்டு விரிந்திட – பந்தபாசம்
7.பண்ணோடு பிறந்தது ராகம் – விடிவெள்ளி
8.வாராதிருப்பானோ – பச்சை விளக்கு
9.கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா – பச்சை விளக்கு
10.கட்ட வட்ட பாறையிலே – பழனி
11.உள்ளத்துக்குள்ளே ஓளிந்திருப்பது – பழனி
12.கண்ணிரண்டும் மின்ன மின்ன – ஆண்டவன் கட்டளை
13.இரவு முடிந்துவிடும் – அன்புக்கரங்கள்
14.காத்திருந்த கண்களே – மோட்டார் சுந்தரம் பிள்ளை
15.செந்தூர் முருகன் கோயிலிலே – சாந்தி
16.மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் – பார் மகளே பார்
17.ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் – ஊட்டி வரை உறவு
18.என் கேள்விக்கென்ன பதில் – உயர்ந்த மனிதன்
19.எங்க வீட்டு தங்க தேரில் – அருணோதயம்
20.சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் – குலமா குணமா
21.முள்ளில்லா ரோஜா – மூன்று தெய்வங்கள்
22.என்ன சொல்ல என்ன சொல்ல – பாபு
23.யாருக்கு இங்கு கல்யாண ஊர்வலமோ – வாணி ராணி
24.முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே – வாணி ராணி
25.பூவிழி வாசலில் யாரடி வந்தது – தீபம்
26.அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி -அந்தமான் காதலி
27.அழகி ஒருத்தி இளநி விக்கிறா – பைலட் பிரேம்நாத்
28.செவ்வானமே பொன்மேகமே – நல்லதொரு குடும்பம்
29.தேவதை ஒரு தேவதை – பட்டாக்கத்தி பைரவன்
30.ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா – மக்களை பெற்ற மகராசி
31.குழலும் யாழும் உன்னிசைதானோ – கோடிஸ்வரன்
32.ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான் – பலே பாண்டியா
33.கண்ணான கண்ணனுக்கு அவசரமா – ஆலய மணி
இதை குறிப்பிடக்காரணம், இவர் காலத்தில் இருந்த “மற்ற சில” நாயகர்கள், தங்கள் படத்தில் எத்தனை டூயட் பாடல் இருந்தாலும் அனைத்தையும் தானே பாடித் தீர்த்தார்களே தவிர மற்றவர்களுக்கு கொடுப்பதில்லை.
பழம்பெரும் இயக்குனர் ப.நீ. தன்னுடைய கடைசிக் காலத்தில் ஒரு உண்மையைப் போட்டு உடைத்துவிட்டுப் போனார். எழுபதுகளில், தான் இயக்கிய ஒரு குதிரை வண்டிக்காரர் பற்றிய வண்ணப் படத்தில் இரண்டாம் நிலை நாயகனாக நடித்த ஒரு நவரசமான திலகத்துக்கு ஒரு டூயட் பாடல் கொடுத்து விட்டதற்காக, அதில் நடித்த பெரிய நடிகர் இவருடன் சண்டை போட்டாராம். ‘விடுங்கண்ணே நீங்க எவ்வளவோ டூயட் பாடியிருக்கீங்க. அப்படியிருக்க ‘கண்ணுக்கு தெரியாத’ ஒரே ஒரு பாடலால் என்ன வந்துவிடப்போகிறது’ என்று அவரை சமாதானம் செய்தார்களாம்).
ஆர்வி: இயக்குனர் ப. நீலகண்டன், திரைப்படம் என் அண்ணன்,, இரண்டாம் கதாநாயகன் முத்துராமன், முத்துராமனின் ஜோடி விஜயநிர்மலா,
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்
ஒரு முறையா இரு முறையா
என்னைக் கேட்கச் சொல்லும்..
நன்றி: சாரதா அவர்கள்
நடிகர் திலகத்தின் தன் நடிப்புத் திறமை மீது நம்பிக்கையும சக கலைஞர்களின் வளர்ச்சியை கருதும் பெருந்தன்மையையும
என்னவென்று சொல்வது..
சிவாஜி #உயர்ந்த #மனிதன் #தானே !
thanks Nadigarthilagaththin nanthavana pookkal
......................................
Vasu Devan
தலைவர் டோன்ட் கேர் கேஸ் ஆறு. தன்னந்தனிக் காட்டு ராஜா.. எதைப் பத்தியும் சிங்கம் கவலையே படாது. நீ பாட்டு குடுத்தா என்ன... குடுக்காட்டி என்ன... வேற யாருக்கும் குடுக்கிறியா... குடுத்துக்கோ.. ஐ டோன்ட் மைன்ட்... பாட்டே படத்தில இல்லியா... ஓகே... அந்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரைக்கும் எதுக்கும் அசராத நடிப்பு சக்ரவர்த்தி எதை நம்பியும் இல்ல... எதுக்கு பயப்படணும். எதுக்கு பொறாமப் படணும். வளர்ந்தவங்க எல்லாமே இவர் படத்தாலதானே வளர்ந்தாங்க. மோட்டார் ல பாட்டே இவருக்கு இல்ல. அந்த நாள்ல பாட்டே இல்ல.
அன்பளிப்புல 'மாதுளம்... பழத்துக்குப் பெயர் மாதுளம்' அப்படின்னு ஜெய்சங்கருக்கும் அலேக் நிர்மலாவுக்கும் பாட்டு ஒண்ணு இருக்கும். போய் வழி மறிச்சாரா...
'மெல்ல மெல்ல என்னைத் தொட்டு' ட்டியே செல்லம்.
Last edited by sivaa; 5th August 2019 at 06:37 PM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2019, 07:10 PM
#3247
Senior Member
Devoted Hubber
நேற்று நியூஸ் 7 சேனலில் ஒளி பரப்பான மறைந்த நகைச்சுவை நடிகர் கே.பி.சந்திரபாபு அவர்களை பற்றிய செய்தி தொகுப்பில் பல நடந்த உண்மைகளை நேரிடையாக எடுத்துச் சொன்னார்கள்,
எம்ஜிஆர் ஐ வைத்து "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் தயாரித்தப் போது 3000 அடிகள் வரை வளர்ந்த பின் எம்ஜிஆர் பணப்பிரட்சனை செய்ததால் தனது கிரீன்வேஸ் சாலை பங்களாவை அடமானம் வைத்து பணம் கொடுத்தும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற எம்ஜிஆர் ஒத்துழைப்பு கிடைக்காததால் கோபமடைந்த சந்திரபாபு. அதுவரை முடித்து வைத்து இருந்த பிளிம் ரோ...லையும் தீயிட்டு கொளுத்தி மீள முடியாத கடன் சுமையால் சிக்கி போதைக்கு அடிமையாகி விட்டார் என குறிப்பிட்டதோடு,..
கடைசி காலங்களில் நடிகர் திலகம் சிவாஜி உதவியதையும் ராஜா,நீதி என பட வாய்ப்புகள் கொடுத்தார் எனவும்
கே.பி.சந்திரபாபு அவர்கள் இறந்த போது நடிகர் திலகம் வெளி ஊரில் ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இருந்ததாகவும் உடனடியாக அந்த விழாவை ரத்து செய்து விட்டு சென்னை வந்து சந்திரபாபு அவர்களது உடலை நடிகர் சங்கம் கட்டிடத்தில் வைத்து பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு வழி வகுத்து பெருமை படுத்தி தி.நகரிலிருந்து ஜெமினி பாலம் வழியாக சாந்தோம் சர்ச் வரையிலான இறுதி யாத்திரையை உடனிருந்தே நடத்தினார் என்ற முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டார்கள்,
இனி வரும் காலங்களில் ஊடகங்கள் உண்மை செய்திகளை கொடுப்பார்கள் என நம்பலாம்,
இதற்கு முன் நடிகர் திரு ராஜேஷ் அவர்கள் நடிகர் திலகம் தேர்தலில் தோற்றதற்கு பின்னால் இருந்த உண்மைகளை டிவி நிகழ்ச்சியில் எடுத்துச் சொல்லி இருந்தார் அதாவது "நடிகர் திலகம் அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர் க்கு கொடுத்து இருந்த வாக்குறுதியால் அதைக் காப்பற்ற வேண்டி தெரிந்தே தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தார்" என புரியும் படி எடுத்துச் சொல்லி இருந்தார்,
பின்னர் சில நாட்கள் கழித்து சென்னையில் ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமியில் அதை நினைவு படுத்தும் போது " இது போன்ற எத்தனையோ நிகழ்வுகள் இருக்கிறது முன்னரெல்லாம் " நாம் அதை குறிப்பிட்டு பேசும்போது எல்லாம் அரசியல்வாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்து விடும் அதனால் எதையும் எடுத்துச் சொல்லுவதை பல வருடங்களுக்கு மேலாக விட்டு விட்டேன்,
ஆனால் தற்போது எந்த எதிர்ப்பும் வரவில்லை
உண்மையை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார்கள் என நினைக்கிறேன் இனி நாம் தொடரலாம்,
இவ்வாறு கூறி இருந்தார்,
புகைப்பட இணைப்பு :- மதுரையில் நடைபெற்ற வசந்த மாளிகையின் 50 வது நாள் வெற்றி விழா ஊர்வலத்தில்,
Thanks Sekar
..........................
சந்திர பாபுவின் இறுதிச்சடங்கு செலவை நம் ஐயாவே ஏற்றுக் கொண்டார் ..
................
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2019, 07:18 PM
#3248
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2019, 07:19 PM
#3249
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2019, 07:21 PM
#3250
Senior Member
Devoted Hubber
Manokara 100 Days
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks