-
9th September 2019, 01:43 PM
#11
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகத்தின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு 30:09:2018 அன்று 52 வார தொடர் அன்னதான நிகழ்ச்சியினை ஒரு புள்ளியிலிருந்து துவக்கினோம். ஐயனின் ஆசிர்வாதத்தால் இன்று பொன்விழா வாரத்தை எட்டியிருக்கிறது இந்த சமூகப்பணி.
ஓரிரு வாரங்கள் நடக்கும்...
நாலு வாரங்கள் நடந்தாலே பெரிய விஷயம்...
கூட்டு முயற்சி பலன் தராது...
ஒவ்வொரு வாரமும் யாரைப் பிடிப்பது......
என்று எந்தவொரு கேள்விக்கும் இடங்கொடுக்காமல், எந்த வேகத்தில் புறப்பட்டோமோ அதே வேகத்தில் ஐம்பதாம் வாரம்வரை பயணித்திருக்கிறது இந்தக்குழு.
இந்தப் பெரும் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய நடிகர்திலகத்தின் அத்தனை ரசிகர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றி.
தமிழகத்தில் எந்தவொரு ரசிகக் கூட்டமும் செயல்படுத்தியிராத அரும்பணி இது.
தொடர்ந்து ஐம்பது வாரங்களும் நிகழ்ச்சியின் நேர்த்தி குறையாமல், உணவின் சுவை குறையாமல், ஆதரவளித்த நெஞ்சங்களின் கூட்டம் குறையாமல் நடந்திட்ட இச்சேவைக்கு முதன்மைக் காரணம் குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் அமைப்பாளர் திரு.பி.கணேசன் என்றால் மிகையாகாது. பொன்விழா வார நிகழ்ச்சி முடிந்தகையோடு இதோ அடுத்த ஐம்பது வாரங்களுக்கான அன்னதான அறிவிப்பையும் அவர் வெளிப்படுத்திவிட்டார்.
அடுத்த 52 வாரங்களுக்கான தொடர் அன்னதான நிகழ்ச்சி ஞாயிறு மட்டுமன்றி சனிக்கிழமையும் சேர்த்து வாரம் இருமுறை நடைபெறும் என்று அவர் கூறியபோது மனம் துள்ளலில் லயிப்பது வியப்பில்லை.
திலகத்தின் ரசிகர்களின் எண்ணமும், ஆசைகளும் ஒரு நதியினைப்போல... அதை வெறும் சங்குக்குள்ளேயெல்லாம் அடங்கி விடாது.. அடக்கவும் முடியாது என்பது உறுதி.
நிற்க.
இன்றைய தொடர் அன்னதானத்தின் பொன்விழா வார உபயதாரராக பங்களிப்புச் செய்தவர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த திரு. ஸ்ரீதர் அவர்கள்...
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு குழுவின் சார்பாக திரு.K.S.நரசிம்மன் அவர்கள் ஐயனின் நூல்களும் நினைவுக் குறிப்பேடும் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு திரு.ML.கான், திரு.R.S.சிவா, திரு.ஏழுமலை, திரு. R. குமார், திரு. பாண்டியன், திரு. பாலாஜி, திரு.S.ராமஜெயம், திரு.E.நந்தகுமார், திரு. காமராஜ், திரு. பூவராகன், திரு.சுகுமார், திரு. MM.சக்திவேல், திரு.காந்தி ( ஒரகடம்) உள்ளிட்ட சென்னைவாழ் சிகர மன்றத்தின் இதயங்கள் பலரும் கலந்து கொண்டனர். அனைவர்க்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி...
வருகின்ற அக்டோபர் முதல்தேதி நடைபெறவுள்ள ஆயிரம் பேருக்கு அன்னதான நிகழ்ச்சிக்குத் தன் பங்களிப்பாக ஆயிரம் ரூபாயினை இன்றைய நிகழ்ச்சியில் அமைப்பாளர் கணேசனிடம் வழங்கிச் சிறப்பித்தார் மயிலை உலகமாமன்னன் சிவாஜி மன்றத் தலைவரான திரு. காமராஜ் அவர்கள். அவருக்கு எம் நன்றி.
நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு...
அன்புடன்... வான்நிலா விஜயகுமாரன்
Thanks வான்நிலா விஜயகுமாரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th September 2019 01:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks