-
15th April 2019, 05:26 PM
#11
Senior Member
Devoted Hubber
என்றும் ஒன்றே செய்யுங்கள்...
ஒன்றும் நன்றே செய்யுங்கள்...
நன்றும் இன்றே செய்யுங்கள்...
நீங்கள் எதிலும் வெல்லுங்கள்... "
என்று கவிஞரின் எண்ணத்தைத் தன் திரைப்பாடலின் மூலம் ரசிகர்களுக்கு அறிவுரையாய் சொல்லி வாழ்த்துதல் வழங்கிய, அய்யன் நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளினை முன்னிட்டு, 52 வார தொடர் அன்னதானம் நடத்திவரும் திரு.பி.கணேசன் அவர்களின் தலைமையிலான குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் 29 வது வார நிகழ்ச்சி இன்று மதியம் அன்னையில்லத்து பிள்ளையார் கோயிலில் இனிதே நடந்தேறியது....
இன்றைய நிகழ்ச்சியின் உபயதாரர்களாக பங்களிப்புச் செய்தவர்கள் சூளைப் பகுதியைச் சேர்ந்த திரு. ஏழுமலை ( ஆட்டோ) , திரு. சீனிவாசன் ( கணபதி ஹோட்டல்) , திரு. அசோக் ( பாலாஜி ஸ்வீட் ஸ்டால் ) மற்றும்
திரு. மெக்கானிக் பாண்டியன் ஆகியோர்.
இன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்து, உபயதாரர்களுக்கு நடிகர்திலகத்தின் நூல்களும், நினைவுச் சான்றிதழ்களும் வழங்கி, அன்னதானத்தைத் துவக்கி வைத்துச் சிறப்பு செய்தவர் நடிகர்திலகத்தின் மூத்தப் புதல்வர் திரு.தளபதி ராம்குமார் அவர்கள்.
அன்னாருடன், 'ISCUF ' அமைப்பைச் சார்ந்த திரு. தங்கப்பன் அவர்களும்,
சம்பூர்ண ராமாயணம் படத் தயாரிப்பாளர் திரு. வேணு அவர்களின் துணைவியார் திருமதி. கனகா வேணுகோபால் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு, சென்னை நகர 'சிகர' மன்றத்தின் இதயங்களான திரு. RS.சிவா, திரு. சங்கர் மற்றும் அவரது துணைவியார் திருமதி ரமணி சங்கர், திரு. TVS. ஜானி, திரு. குமார், திரு. ராமஜெயம், திரு. காமராஜ், திரு. பாலாஜி & பாலாஜி, திரு. தீனன், திரு. அம்பத்தூர் வெங்கடேசன், திரு. KS. நரசிம்மன், திரு. வீயார், திரு. சுகுமார், திரு. OS.லிங்கம், திரு. பூவராகன், திரு. கோவா ராஜேந்திரன், திரு. சுப்பிரமணியன், திரு. நந்தகுமார், திரு. சித்தார்த்தன், திரு. தங்கமாரியப்பன், பூந்தமல்லி பகுதி 'சிகர' மன்றத்தின் இதயங்கள் திரு. தாயுமானவன், திரு. தாமோதரன், திரு. மோகன், திரு. பசுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்புடன் நடந்திட உதவினர். ( பெயர் விடுபட்டோர் அன்பால் மன்னிக்கவும்)
வாரந்தோறும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் ஊக்கத்தை அளித்துவரும் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இன்றைய அன்னதான நிகழ்ச்சியின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்காக...
அன்புடன், வான்நிலா விஜயகுமாரன்.
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th April 2019 05:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks