Page 328 of 401 FirstFirst ... 228278318326327328329330338378 ... LastLast
Results 3,271 to 3,280 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #3271
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3272
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    திரு ராகவெந்திரா அவர்கள் 10,000 பதிவுகள் எட்டியதையிட்டு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
    மேலும் பல ஆயிரம் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3273
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    தனி ஒருவன்

    #சிவாஜி -#தனி #பாணி
    இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்;
    அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், ...நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.
    இவரது பாணி நடிப்பு – வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 -களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி, 60 – களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் நட்சத்திரமாகிவிட்டார்.
    அவரது ‘இமேஜூ’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள், ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர், ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’ களுக்கும் இதுவே இலக்கணம்.
    எம்.ஜி.ஆர் – ரஜனியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமலஹாசனுககு ஹாலிவுட் கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.
    இணையத்தில் இருந்து தொகுத்து உங்கள் இதயத்திற்கு �� ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்






    Thanks ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ் (Facebook)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3274
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நடிகர் திலகம் ரசிகன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா
    ************************************************** *************************************************
    உண்மையை உரைக்கும் ஒரு உண்மை ரசிகனின் மனநிலை.
    ************************************************** *****************************************
    எப்படி உலகத்தின் தலைசிறந்த ஒப்பற்ற நடிகர் என்ற பெருமை நம் நடிகர் திலகத்திற்கு இருக்கிறதோ அந்த அளவிற்குப் பெருமை அவரது ரசிகர்களுக்கும் இருக்கிறது.
    உலகப் புகழ் பெற்ற நூற்றுக்கணக்கான நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய மனம் கவர்ந்த கலைஞன் மேல் தன்னுடைய உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்களே என்றால் அதற்கு மாற்றுக் கருத்து என்று ஒன்று உண்டோ!
    தன்னுடைய நடிகர்களை கொண்டாடும் ரசிகர்களுக்கு மத்தியில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். அவர்கள் தங்கள் கலைஞனை நடிகனாகவே பார்ப்பதில்லை. தெய்வாமாகத்தானே கொண்டாடுகிறார்கள! அவர் உயிருடன் இருக்கும்போது 'எங்கள் அண்ணன்' என்று மார்தட்டியவர்கள் அவர் இறந்தபிறகு 'எங்கள் தெய்வம்' என்றல்லவோ அவரை தினம் தினம் வழிபடுகிறார்கள்!
    மற்ற நடிகர்களுக்கு இந்த பெருமை இருக்கலாம். அது சில தீவிர ரசிகர்களுக்கே பொருந்தும். ஆனால் இங்கு அப்படியா?... இங்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் அவரது திருஉருவப் படத்தை பூஜை அறையில் வைத்துதானே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வழிபடுகிறான்! இந்தப் பெருமை நம் ரசிகர்களுக்கு மட்டும்தானே!
    அதுவும் சில ஆண்டுகளாக முகநூலில் மற்ற இணையதளங்களில் 'யூடியூப்' கமெண்ட்களில் பார்த்தீர்களானால் நம் தலைவரை 'தெய்வம்' என்றே நமது அத்தனை ரசிகர்களும் குறிப்பிடுகிறார்கள். அவரது பெயரைக் கேட்டாலே இறைஉணர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். உணர்வுமயமாகி இதயத்தின் இறைவனாக கொண்டாடுகிறார்கள். இந்த பாக்கியம் எத்தனை நடிகர்களுக்கு கிடைக்கும்?
    தியேட்டர்களில் இப்போதும் அவர் படங்கள் வெளிவரும்போது 'தெய்வம் சிவாஜி' என்ற கோஷங்கள்தான் முதலில் விண்ணைப் பிளக்கின்றன? எத்தனை பேர் தங்களுடைய மனம் கவர்ந்த நாயகர்களை தெய்வம் ...தெய்வம் ... தெய்வம் ... என்று கொண்டாடுகிறார்கள் சொல்லுங்கள்?
    தங்களுடைய ஹீரோ அறிமுகப்படலத்தின்போது, பாழாய்ப்போன 'பஞ்ச்' விடும்போது, வில்லன்களை பறந்து தாக்கும்போது மட்டும்தானே அவர்களுக்கு கைதட்டல்?
    ஆனால் நடிகர் திலகத்திற்கு அப்படியா?
    1952 'பராசக்தி' முதலே அவர் நின்றால், நடந்தால், அசைந்தால், சிரித்தால், அழுதால், தும்மினால், இருமினால், கண்ணசைத்தால் வசனம் பேசினால், வசனம் பேசாமல் இருந்தாலும் படங்கள் முழுக்க கைத்தட்டல்களும் ஆரவாரங்களும்தானே! இல்லையென்று எவரும் மறுக்க முடியுமா? உலகில் இப்படி ஒவ்வொரு அசைவிற்கும் இப்படி கைதட்டல்களை பாராட்டுக்களையும் அள்ளிக் குவிக்கும் வேறு ஒரே ஒரு நடிகரைக் காட்டி விடுங்கள் பார்க்கலாம்.
    எத்தனை நடிகர்களுடைய ரசிகர்கள் ஊர்விட்டு ஊர் போய் தங்களது அபிமான நடிகர்களின் படங்களை பார்ப்பீர்கள்? எத்தனை தடவை பார்த்து இருக்கிறீர்கள்? எத்தனை ரசிகர்கள் தங்கள் பிரிய நடிகர் நடித்த படங்களை மாநிலம் தாண்டி போய் பார்த்திருப்பீர்கள்? எந்த நடிகரின் ரசிகர்கள் கன்னியாகுமரியிலிருந்து வேன் அல்லது பஸ் வைத்து சென்னை வந்து தங்களது அபிமான நடிகரின் படங்களைப் பல தடவை பார்த்துவிட்டு சென்றிருக்கிறீர்கள்? அப்படியே வந்தாலும் உங்களைக் கூட்டிவர ஒரு அரசியல் இயக்கமோ அல்லது பணக்கார கூட்டமோ, அந்த நடிகரின் உதவியோ, வேறு பொருளாதார வசதிகளோ இருக்கிறது. உங்களுக்கு உதவி செய்ய பல்வேறு நபர்கள் இருக்கிறார்கள்.
    ஆனால் எங்கள் தலைவர் ரசிகர்கள் அப்படியா? ஒரு வாரம் மூட்டை தூக்கி உழைத்து, அந்த உழைப்புக் காசை, நடிகர் திலகத்திற்காக, தங்களின் தெய்வத்திற்காக, அவர் படம் பார்ப்பதற்காக ஆனந்தமாக, உளப்பூர்வமாக ஆத்ம திருப்தியுடன் வரும் எத்தனை தீவிர பக்தர்களை நாம் கண்டிருக்கிறோம்! கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்தக் காசில் அல்லவோ தங்கள் தெய்வத்தை தரிசிக்க ஊர்விட்டு ஊர் தாண்டி வருகிறார்கள்!
    யார் தயவும் இல்லாமல் தங்களால் இயன்ற பொருட்களை திரட்டி நடிகர் திலகம் பெயரால் நற்பணி செய்கிறார்கள்.
    இது ரசிப்புக் கூட்டம். வெறித்தனமான கூட்டம். ஆனால் நிதானம் தவறாத கூட்டம் . அவர் காட்டிய வழியில் பயணிக்கும் கூட்டம். தன்னுடைய தலைவனுக்கு ஒன்று என்றால் பதறும் கூட்டம். கதறும் கூட்டம். மற்றவர்கள் போல சிதறும் கூட்டம் அல்ல.
    இந்த ரசிகத் தோட்டம் அனைத்தும் அவருக்கே சொந்தம் என்று மார்தட்டும் நெஞ்சை நிமிர்த்திடும் 'சிவாஜி என்ற சுயநலக் கூட்டம்'. ஆனால் சுயநலமில்லாக் கூட்டம்.
    உலகில் நடிகர் திலகத்தின் ரசிகனை வேறு எந்த ஒரு நடிகரின் ரசிகனும், எவரும் விஞ்ச முடியாது.
    இது படம் பார்த்து விட்டு தங்கள் நடிகனை மறந்துவிடும் கூட்டமல்ல. ஒவ்வொரு வினாடியும் அவரை நினைத்து உருகும் கூட்டம்.
    நிற்கும்போதும், நடக்கும்போதும், குளிக்கும்போதும், பிரயாணங்களின் போதும், சாப்பிடும்போதும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அந்த தெய்வத்தைப் பற்றியே சதா சர்வகாலமும் சிந்தனை செய்யும் கூட்டம்.
    மனைவி, மக்களிடம் குடும்ப உறவுகளிடம் சிவாஜி ரசிகர்கள் பேசிக்கொண்டிருந்தாலும், கடைகளுக்கு சென்று வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போதும் கூட நடிகர் திலகத்தின் நினைப்பே அவரது ஒவ்வொரு ரசிகனின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும். உண்மையா இல்லையா? டூ வீலரில் பயணிக்கும்போது கூட அவரது படங்களின் காட்சிகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். நிஜமா இல்லையா? அவரது பெயரை உதடுகள் ஜெபம் செய்தவாறே இருக்கும். உண்மையா இல்லையா? அவரது பாடல்களை வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் என்பது சத்தியமா இல்லையா?
    எத்தனை டிவி சானல்கள் இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்களோ பாடல்களோ மட்டும்தானே அவரது ரசிகர்களால் வீடுகளில் பார்த்துக் கொண்டிருக்கப்படும்.
    ஒரு ஆண்டனியோ, ஒரு அருணோ, ஒரு 'பிரஸ்டிஜ்' பத்மநாபனோ, ஒரு பாரிஸ்டரோ, ஒரு சௌத்ரியோ, ஒரு ஆனந்தோ, ஒரு கர்ணனோ, ஒரு கட்டபொம்மனோ, ஒரு கப்பலோட்டிய தமிழனோ, ஒரு குருவோ, ஒரு சங்கரோ, ஒரு கண்ணனோ, ஒரு ராஜசேகரனோ, ஒரு தேவரோ
    ....இப்படி பல்வகையான கேர்கடர்கள் எந்த நேரமும் சிவாஜி ரசிகர்கள் நெஞ்சில் ஓடியவண்ணமே இருப்பார்கள் . எத்தனை நடிகர்களின் ரசிகர்கள் இப்படி இருபத்திநாலு மணிநேரமும் தங்கள் அபிமான நடிகர்களின் கேரக்டர்களை இப்படி அனுதினமும் எண்ணி எண்ணி ரசிக்கிறார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.
    இது நடிகர் திலகத்தின் அனைத்து ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்தமாகப் பொருந்தும். ஒருவர்கூட இதற்கு விதிவிலக்கு கிடையாது. ஏனென்றால் அவர்கள் நடிகர்திலகத்தின் அன்புச் சங்கிலியால் இறுகப் பிணைக்கப்பட்டவர்கள். ஒருவரும் அதிலிருந்து விலகாதவர்கள்.
    பிறந்ததிலிருந்து ஒரே ஒரே நடிகன்... ஒரே தலைவன்... ஒரே அண்ணன்... ஒரே தெய்வம் என்று கட்சி மற்றும் காட்சி மாறாத உண்மை விசுவாசிகள். உண்மை உடன்பிறப்புக்கள். உண்மைத் தம்பிகள். உன்னத ரசிகர்கள்.
    நடிப்பின் மகான் என்ற ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும் அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடுகிறார்களா? அதையும் மீறித்தான் நடிகர்திலகம் எங்கள் எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கிறார்.
    நடிப்பு ஒன்றின் மட்டுமாலா அவரை நாங்கள் பூஜிக்கிறோம்?...அல்ல அல்ல...அதையும் தாண்டி....ஒரு மிகச் சிறந்த குடும்பத் தலைவராக அவரை ஒவ்வொரு ரசிகனும் ஏற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு பாசமான சொந்த அண்ணனாக அவரை வணங்குகிறான். ஒரு மனித நேயம் மிக்க மனிதராக அவரை நேசிக்கிறான். ஏழைகளுக்கு வலது கரம் கொடுப்பதை இடது கரம் அறியாமல் தர்மம் செய்த கர்ணனாக அவரை மனதில் இருத்தி, தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான்.
    தொழில் நேர்மையைக் கடைபிடித்த வழிகாட்டியாக குருவாக அவரை ஏற்றுக் கொள்கிறான். அவருடைய நேரந்தவராமையை முன் உதாரணமாகக் கொண்டு அவர் வழி நடக்க முயற்சி செய்கிறான். ஒரு பாசமிகு தந்தையாக அவரை மனதில் நிறுத்திக் கொள்கிறான். ஒரு நேசமிகு அண்ணனாக அவர் வழியைத் தொடர்கிறான். அவர் பாணியைப் பின்பற்றுகிறான். இப்போது கடவுளின் பக்தனாக பூஜை செய்கிறான்.
    யார் மனமும் புண்படாத அவரது கேலியான நையாண்டித்தனத்தை அனைத்து சிவாஜி ரசிகர்களிடமும் நான் காணலாம். படங்களில் அவர் கோலோச்சிய கேரக்டர்களில் ஒவ்வொரு ரசிகனும் தன்னை நுழைத்துக் கொண்டு அவராகவே ஆகிறான்.
    வாழ்வியல் உதாரண புருஷராக அவரை ஏற்றுக்கொண்டு அவர்வழி நடக்க முயல்கிறான்.
    இப்போது சொல்லுங்கள்...உலகின் வேறு எந்த நடிகருக்கு இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்? எந்த நடிகன் இப்படி ஒவ்வொரு ரசிகன் மனதிலும் அவன் உறக்கத்திலும் கூட, கனவிலும் கூட அவனை ஆள்கிறான்?
    அது ஒரே ஒரு தெய்வம்.... நம் இதய தெய்வத்தால் மட்டுமே சாத்தியம்
    ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் உயிர் மூச்சும் நடிகர் திலகம் என்ற மாபெரும் சக்திகொண்ட, மாபெரும் உண்மையான ரசிகனை தொண்டனாய்க் கொண்ட, நம் நடிகர் திலகம் ஐயன் அவர்களை மட்டும்தானே இந்தப் பெருமை சாரும்?
    அதனால்தான் எவரிடமும் சேராமல் தனித்து ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் 'நான் தலைவரின் ரசிகன்' என்று மார்தட்டி இறுமாப்புக் கொள்கிறான்.
    அந்த மாபெரும் பெருமையையும் பாக்கியத்தையும் அளித்த இறைவன் அல்லவோ நமது மகான்!

    நன்றி வாசு தேவன் (முகநூல்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3275
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3276
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3277
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3278
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3279
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like


    96 ம் நாள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3280
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    வசந்த மாளிகை
    நாளை 08/08/19 சென்னை ஆல்பட் தியேட்டரில் 50 நாளைக் கடக்க இருக்கிறது,
    நாளைய காட்சி அரங்கு நிறைந்து விட்டது
    Houseful
    ... அஜீத் நடிப்பில் நேர் கொண்ட பார்வை நாளை ரிலீஸாகிறது
    அஜித் படமும் நாளை ஹவுஸ்புல்
    வசந்த மாளிகை புதிய படங்களைப் போலவே வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது,
    எதிரிகளுக்கு அடி வயிறு எரிகின்ற நிலை,
    புதியதாக ரிலிஸான நேர் கொண்ட பார்வை படத்தின் டிரெய்லரை YouTube ல் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வரை பார்த்து இருக்கிறார்கள்,
    ஆனால் பாருங்கள் 54 ஆண்டுகளுக்கு முன் வந்த திருவிளையாடல் படத்தின் பகுதி காட்சியை மட்டுமே ஒரு கோடியே 30 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்து இருக்கிறார்கள்,







    Thanks Sekar (Facebook)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •