Page 327 of 401 FirstFirst ... 227277317325326327328329337377 ... LastLast
Results 3,261 to 3,270 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #3261
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    உண்மை தான் சார்

    நடிகர் திலகம் அவர்களுக்கு எதிராக எத்தனை எத்தனை பொய்கள், புரட்டுகள்.

    காலம் நிர்தாட்சன்யம் இல்லாதது சார்.
    உண்மை யை வெகு காலம் மறைக்க முடியாது சார்.
    உங்கள் பதிவுகளை பார்க்கும் போது உங்கள் மனம் அடையும் வேதனை புரிகிறது சார்.

    நல்ல பதிவிற்கு நன்றி சார் நன்றி


    .........................
    எண்ணங்களை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சார்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3262
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    அதே புத்தகத்தில் தேடிப்பாருங்கள் *எதாவது ஒரு ஓரத்தில் *நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், நீரும் நெருப்பும் போன்ற படங்கள் *வெள்ளி விழா ஓடி வசூல் புரட்சி செய்த படங்கள் என்று எழுதியிருப்பான்.

    .................
    எழுதி இருக்கிறான் சார்,
    ஏற்கனவே தந்தியில் தொடராக வந்த போது நமது நண்பர்கள் சுட்டிக் காட்டி கண்டித்து இருந்தார்கள்
    ஆனால் எழுத்தாளர் பற்றி குறிப்பிடாமல் தந்தியை
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3263
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நம் திலகம் #காம்போதிராகம் போன்றவர் யாராலும் வெல்லவோ அழிக்கவோ முடியாது. நயவஞ்சக நாய்கள் சொன்னால் நம் திலகத்தின் புகழை அழிக்க முடியாது சேகர் சார்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3264
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    காசுக்கு பிணம் தின்னிகள்!

    சிவாஜி மகா பெரிய ஆல விருக்ஷம்!

    அதில் பினந்தின்னிகளும்
    தங்கி பறந்திருக்கின்றன!

    விடுக கவலையை!.......................

    குறுட்டு நாய்கள் நம்ம தலைவரின் வரலாறு தெரியாமல் கண்டபடி எழுதி தொலைக்கிறானங்க செருப்பாலே அடிக்கனும் சார்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3265
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    தினத்தந்தி காசுக்காக எதையும் செய்யும் சமூகத்துரோகிகள் பத்திரிகை.அதை வாங்குவதை நிறுத்துங்கள்.தமிழில் வரும் எல்லா பத்திரிகைகளும்அப்படித்தான்.


    ................
    அது மட்டுமில்லை.தன் ஊழியர்களுக்கே ஒழுங்காக சம்பளம் கொடுக்காத ஆதித்தன் நாகர்கோவில் பாராளுமன்ற தேர்தலில் பெருந்தலைவரை தோற்கடிக்க பெட்டி பெட்டியாய் பணத்தை அள்ளி வீசினான்.மக்கள் இந்த பிறவிகளை விரட்டி அடித்தனர்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3266
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    எம்ஜிஆர் ரசிகர்கள் இப்போது அரசியல் வாதிகள். ஆனால் சிவாஜியின் ரசிகர்கள் இன்றும் ரசிகர்களே. அதனால் தான் கர்ணன், வசந்த மாளிகை மிகப்பெரிய வெற்றி பெற்று கொண்டு இருக்கிறது.

    ................
    நிதர்சனமான கருத்து சார்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3267
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3268
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3269
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தை பற்றி ....
    பிரிட்டிஷ்காரர்களுக்கு இந்தியர்களின் வீரம் பற்றி பாடம் புகட்டிய வீரன் கட்டபொம்மனாக அவர் நடித்ததை புரிந்துகொள்ள தமிழ் தெரிந்திருக்க வேண...்டும் என்ற அவசியமில்லை. கூர்மையான வசனம் கத்தியை விட ஆழமாகப் பாயும் என்பதை உணர்த்திய அற்புதமான நடிகர் சிவாஜி.
    சொன்னவர் வாஜ்பாயி..
    சிவாஜி நாடக மேடையில் வளர்ந்தவர். முதல் வரிசையில் இரருந்து கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பவர் வரையில் மேடையில் நடிப்பதை பார்க்க, கேட்க, குரலும், முகபாவங்களும் கூடுதலாக இருந்தால் தான் சரியாக இருக்கும். சிவாஜியின் நாடகங்களைப் பார்க்கிறபோது கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பவனையும் ஈர்த்து பரவசம் கொள்ளவைக்கும்.
    சொன்னவர் எழுத்தாளர் அசோகமித்திரன்.
    எண்பதுகளில் குளோசப் கதை சொல்லும் உத்தி போன்றவை மாறிய பிறகு, அவருடைய நடிப்பு உத்திகள் தான் பின்னால் வந்தவர் களுக்கு கையேடாக இருந்தது. சிவாஜி மெதட் ஆக்டிங் என்ற ஒரு தனி அத்தியாத்தை உருவாக்கிய மேதை அவர்.
    சொன்னவர் மம்முட்டி.
    அவன் நாவின்
    ஸ்பரிசம் பட்டபின்தான்
    தமிழ்ச்சொற்கள்
    பூப்படைந்தன
    நாவினால் மட்டுமல்ல
    மற்ற அங்கங்களிலும்
    பேச முடியும் என்பதைக்
    காட்டிய அதிசயம் அவன்.
    திருமாலுக்கு கூட
    பத்து அவதாரம் தான்
    ஆனால் அவனோ நமக்காக
    எத்தனை அவதாரம் எடுத்தான்
    அதுவும் ஒரே பிறவியில் .
    சொன்னவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
    ஒரு குறிப்பிட்ட காட்சியில் வசனம் பேசி முடித்து விட்டு சிவாஜியின் கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் என்பதாக காட்சி. ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல மூன்றாம் டேக்கில்தான் அந்த காட்சி ஓகே ஆனது. காரணம் என்ன?
    சிவாஜியின் கண்ணில் இருந்த பார்வையின் ஆழத்தை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை இதனால் காட்சியில் நான் பேச வேண்டிய வசனங்களை சரியாக பேசி விட்டாலும் அதன் பின் சிவாஜியை நேருக்கு நேர் பார்த்து காட்சியை என்னால் முடிக்க முடியவில்லை. எனக்கு ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்ட சிவாஜி என்னிடம் என்ன விஷயம்? என்று கேட்டார். நான் பிரச்சனையைச் சொன்னேன் அப்புறம் சிவாஜி தன் பார்வையில் சற்று மாற்றத்தைக் கொண்டுவர நான் அவரை நேருக்கு நேர் பார்க்க காட்சி ஓகே ஆனது, என்கிறார் நடிகர் நாசர் .(தேவர் மகன் )
    ஒரு நாளைக்கு மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு இறக்கை கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்த நேரம்.
    தூக்கம் கிடையாது .ஓய்வொழிச்சல் இல்லை. இரவு முழுக்க நீதி படத்தின் சூட்டிங்கில் இருந்தவர் ,அதிகாலை வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு புறப்பட்டபோது இருமல் ,வாந்தி ,இரத்தம் வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது .பரிசோதித்த டாக்டர் உடனடியாக சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்கள் என்றார். சூட்டிங்கை கேன்சல் பண்ண முடியாது வேண்டுமானால் ஊசி போட்டு விட்டு விடுங்கள். மருத்து மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு தொடர்ந்து நடிக்கிறேன் ,என்று அவர் நடிக்க சென்றுவிட்டார்.
    சொன்னவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
    முதியவர்களும் கதாநாயகர்களாக இருக்கமுடியும். இளைஞர்களாக ஒப்பனை செய்து கொண்டு ஓடிப்பிடித்து டூயட் பாடித்தான் படத்தை ஓட்ட முடியும் என்பதல்ல .ஒரு முதியவரே- கதை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு பிரேமுக்கு பிரேம் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் முக பாவத்தின் முலமே உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் உள்ளங்களை உருக்க முடியும் நிகழ்த்த முடியும் -கொள்ளை கொள்ள முடியும் என்று நிரூபித்து ,நடிப்பின் இன்னொரு தளத்தை எட்டி புதிய பரிணாமம் ஒன்றனையும் படைத்து காட்டியவர் சிவாஜி.
    சொன்னவர் சின்னக்குத்தூசி
    உடம்பு சரியில்லாத சிவாஜியைப் பார்க்க சென்றிருந்தேன். அப்போது அருகில் இருந்த மகள் சாந்தியிடம் நான் முதன் முதலாக பேசியதே இவர் பெயரைதான் என்றார் அது இப்போதும் என் நினைவில் உள்ளது .மக்களைப்பெற்ற மகராசி படத்துக்காக கால்ஷீட் வாங்குவதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது மாடியில் நின்று கொண்டிருந்த சிவாஜி மகள் சாந்திக்கு இரண்டு அல்லது மூன்று வயதிருக்கும். அவள் வீ.கே.ஆர் ,
    ஏபி என் எங்களின் இனிசியலை சொல்லி அழைத்தாள். அதுவரை பேசாமல் இருந்த சிறுமி சாந்தி முதன்முதலாக சொன்ன வார்த்தைகள்தான் இவை .
    சிவாஜிக்கு எவரையும் கவர்ந்திழுக்கும் முக வசீகரம் உண்டு எந்த மொழியில் பேசினாலும் பட்டெனப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு.அதே போல் தர்ம சிந்தனை மிகுந்தவர்.
    சொன்னவர் விகே ராமசாமி.
    சிவாஜியின் பஞ்சாயத்து ...
    ஓய்வாக வீட்டில் இருக்கும் சமயங்களில் சுற்றம் மற்றும் நண்பர்கள் குடும்ப பிரச்சனைகளுக்கு அவர் பஞ்சாயத்து பண்ணி வைக்கிற விதமே அலாதிதான்.
    கணவன் மனைவிக்குள் தகராறு என்று வந்தால் முதலில் கணவனை அழைத்து தனியாக அழைப்பாராம். டேய்! பொண்டாட்டி ஏதாவது கேட்டால் எடுத்த எடுப்பிலே முடியாது என்று சொல்லாதே! சரி, செய்கிறேன் என்று சொல்லு! அப்புறம் முடிந்ததை செய் என்பாராம்.
    பிறகு மனைவியை அழைத்து அம்மா ஊர்ல ஆயிரம் அயோக்கியனுக இருக்கிறான். உன் புருஷன் தங்கக்கட்டி! தெரிஞ்சோ தெரியாமலோ அவன் தப்பு பண்ணியிருந்தாலும் அவனை போட்டு பாடா படுத்தாதே."பேசாம வீட்டை விட்டு ஓடிப் போயிறலாமானு இருக்கு "அப்படின்னு உன் புருஷன் புலம்புகிறான் . அவன் போயிட்டா அப்புறம் சண்டை போட உனக்கு யாரு இருக்கா என்பாராம்.
    பிறகு இருவரையும் ஒன்றாக வைத்து சமாதானம் செய்து தம்பதி சிரிக்கச் சிரிக்க கிளம்பி போவதை ரசிப்பாராம்.
    வணக்கம்!

    Thanks Sekar (N T Pages only)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3270
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like



    நண்பர்களே, இந்த பத்தாயிரம் என்கிற முத்திரை எண், மனதில் பேருவகை அளிக்கிறது. நடிகர் திலகம் என்கிற மாமேதைக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்


    மய்யம் இணைய தளத்தில் நமது நடிகர் திலகம் ரசிக நண்பர்களில் இந்த முத்திரை எண்ணை அடையும் முதல் ரசிகனாக அமைந்ததில் மனம் நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் என் பதிவுகளைப் பார்வையிட்டு, பதிலளித்து, ஊக்கப்படுத்தி ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் மய்யம் நிர்வாகிகளுக்கும் மாடரேட்டர்களுக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பத்தாயிரமாவது பதிப்பாக Definition of Style தொடரின் அடுத்த பகுதியாக இரு மலர்கள் படப்பாடலைப் பற்றிய கருத்துரை இடம் பெறுகிறது. படித்துப் பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

    Definition of Style 59


    பாடல் – மன்னிக்க வேண்டுகிறேன்
    படம் – இருமலர்கள் (1967)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    வரிகள் – கவிஞர் வாலி
    குரல்கள் – பாடகர் திலகம் டி.எம்.எஸ்., இசையரசி பி.சுசீலா


    மேலே இந்த விவரத்தைப் பார்த்தவுடனேயே உங்கள் உள்ளம் துள்ள ஆரம்பித்திருக்கும். குதூகலத்தில் ஈடுபட்டிருக்கும் என்பது திண்ணம். அந்த அளவிற்கு ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் ஒவ்வொரு ஃப்ரேமும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி இணையின் ஒவ்வொரு நுணுக்கமான காதல் பரிபாஷையும் ரசித்து ரசித்து ஊறிப்போயிருக்கும். இதற்கான காரணங்களில் ஒன்று இந்தப் படத்தின் கருவிசை. சுந்தர் உமா பாத்திரங்கள் தொடர்பான காட்சிகளிலெல்லாம் இந்த இசை இடம் பெறும். மெல்லிசை மன்னர் என்கிற மாமேதை நடிகர் திலகம் படங்களில் பணியாற்றும் போது அவரும் ஒரு சிவாஜி ரசிகராகி விடுகிறார் போலும். அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஒரு அம்சத்தை Focus செய்து அதையே கதைக்கு Theme Music எனப்படும் கருவிசையாக உருவகம் செய்கிறார்.

    பாடல் துவங்கும் போது பாடலின் வரிகளை விட்டு விட்டு, பின்னணியில் ஒலிக்கும் பாடலின் லயத்தை (Rhythm) கவனித்தால் அப்படியே படத்தின் கருவிசை தொடர்ந்து ஒலிப்பது போல் ஒரு பிரமை உண்டாகும். Yes, this tune is based on this theme music only. அந்த கருவிசையை ஆதாரமாக வைத்தே இந்தப் பாடலின் ட்யூனை உருவாக்கியிருக்கிறார் மெல்லிசை மன்னர்.

    பாடலின் வரிகளில் கவிஞர் வாலி, எந்த அளவிற்கு இந்தப் படத்தில் Involve ஆகியிருக்கிறார் என்பது புலப்படும். மலர்கள் ஒன்று சேரும், மாலையாக மாறும் நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும் என்ற வரி ஒரு உதாரணம். பாடல் முழுக்க அந்த காதலர்களின் ஆசையும் எதிர்பார்ப்பும் புலப்படுகின்றனவே அன்றி, அவர்கள் இணைந்து வாழக்கூடிய சாத்தியத்தை இசையும் கூறவில்லை, வரியும் கூறவில்லை. காரணம் கதைப்படி அவர்களின் காதல் தோல்வியில் முடிகிறது.

    இப்போது இந்த அடிப்படையில் பாடலைக் கேளுங்கள். பாடல் முழுதுமே ஒரு விதமான சோகம் Undercurrent ஆக ஓடிக்கொண்டே இருக்கும். அந்த சோகம் தான் இந்தப் பாடலின் பெரும் வெற்றிக்குக் காரணம். இதில் இந்த சோகத்தைக் கொண்டு வந்ததன் மூலம் பின்னால் இந்தக் காதல் என்னவாகும் என்பதைக் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்கள்.

    இவர்கள் இருவரும் இவ்வளவு மெனக்கெட்டு அதை பாடுபவர் கோட்டை விட்டால் என்னாகும். சொல்ல வந்த கருத்து சரியான முறையில் சொல்லப்படாமல் போய் விடும். இங்கு தான் பாடகர் திலகமும் இசையரசியும் தங்களுடைய தனித்துவத்தை நிரூபிக்கிறார்கள். இசை, வரிகள், பாடகர்கள் மூவரும் ஒருங்கிணைந்து பாடலை அளித்து விட்டார்கள். இனி அந்த காதலர்களை திரையில் காண வேண்டுமே.

    ஒவ்வொரு ஃப்ரேமிலும் இந்த பாடலில் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் தங்களுடைய மேதைமையை நிரூபித்திருக்கிறார்கள். பாடல் வரிகளும் இசையும் குரல்களும் பின்னால் வருவதை முன்கூட்டியே சொன்னாலும் காதலர்களுக்கு அது தெரியாது. தங்களுடைய காதல் தோல்வியுறப்போகிறது என்பதை அறியமாட்டார்கள். ஆழமான காதல், ஆசை நிறைந்த எதிர்பார்ப்பு, உற்சாகமான மனநிலை, இதையெல்லாம் அந்தப் பாத்திரங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

    முதலில் இயக்குநர் ஏ.சி.திருலோக்சந்தர் அவர்களுக்கும் ஒளிப்பதிவாளர் தம்பு அவர்களுக்கும் நன்றி கூறி விட்டு காட்சிக்கு வருவோம்.

    பாடல் துவக்கத்தில் ட்ரம்பெட் ஓசை கேட்கும் போது அங்கேயே ஆரம்பிக்கிறது இவர்களின் கைங்கரியம். சரியாக அந்த ட்ரம்பெட் ஒலிக்கும் போது அட்டகாசமான நடையுடன் வசீகரமான புன்னகையுடன் நடிகர் திலகத்தின் மிட் க்ளோஸப்.. சிரித்துக்கொண்டே பத்மினியை வா என கையால் சைகை காட்டும் போதே ரசிகர்கள் Flat. இப்போது மன்னரின் கைவண்ணத்தில் க்ரூப் வயலின்கள் ஒலிக்க இருவரும் ஓடியாடும் அட்டகாசம். பொதுவாக பரபரப்பான சூழ்நிலையிலோ, அல்லது வேகமாக ஓடும் போதோ அல்லது வேறு பதட்டமான சூழ்நிலியலோ இந்த Group violin பயன்படுத்துவார் எம்.எஸ்.வி. அந்த இயக்குநர்களிடம் காட்சியமைப்பு, லொகேஷன் போன்றவற்றை முழுதும் கேட்டு அதற்கேற்ப இவர் இசையமைப்பார், அவர்களும் அதன் தன்மையைப் புரிந்து கொண்டு படமெடுப்பார்கள். அதில் இந்தப் பாடலும் அடங்கும். சற்றே முதிர்ச்சியான தோற்றம் எட்டிப்பார்த்தாலும் தன் உடல் மொழியாலும் சுறுசுறுப்பாலும் அதை மறக்கடித்து நடிகர் திலகத்தின் இளமைத்துடிப்பான நடிப்பிற்கு நன்கு ஒத்துழைப்பு தருவார் பத்மினி.

    மன்னிக்க வேண்டுகிறேன் பல்லவியை பத்மினி பாடும் போது சிரித்துக்கொண்டே திரும்புவது, முன்னே அழகாக நடந்து வருவது, விரலை உதட்டில் கடித்தவாறே புன்னகைப்பது, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே நடப்பது, குனிந்து மரியாதை செய்வது, பின் இருவரும் அருகருகே நின்று ஒருவரை ஒருவர் பார்த்தவாறும் பாடியும் காதலைப் பரிமாறுவது, மன்னிக்க வேண்டுகிறேன் என்று கைகூப்புவதும், உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன் வரியின் போது விரலை கழுத்தில் வைப்பதும் அந்த காதலனின் மன ஓட்டத்தைத் தத்ரூபமாக பிரதிபலிக்கிறா3ர் நடிகர் திலகம்.

    ஒவ்வொரு ஃப்ரேமும் நெஞ்சையள்ளும் இப்பாடலை என்னாளும் மறக்க முடியாது. உமா சுந்தர் என்கிற இரு காதலர்களை காவிய நாயகர்கள் ரேஞ்சுக்கு கொண்டு சென்ற பெருமை நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி பத்மினி இணைக்கே சாரும்.

    நடிகர் திலகம் மற்ரும் மெல்லிசை மன்னர் என்ற மாமேதைகளின் பங்களிப்பில் இரு மலர்களும் இன்றும் அமோகமாக மணம் வீசுகின்றன. இசை பற்றி தனியாக முனைவர் ஆய்வேடே எழுதும் அளவிற்கு ஏராளமான நுணுக்கங்களைத் தெளித்திருக்கிறார் மன்னர்.

    இந்தப் படத்தின் தீம் மியூஸிக் நம் நெஞ்சுக்குள் ஊடுருவி மனதைப் பிசையும். அதற்காகவே பல முறை இப்படத்தைப் பார்க்கலாம். சில சமயம் கண்களை மூடிக்கொண்டு தியேட்டரில் இந்த இசையை மட்டும் கேட்டதும் உண்டு. அப்போதெல்லாம் டி.வி. கிடையாது. இரவுக்காட்சிகளில் இது போன்ற இசையை தியேட்டரின் வெளியே நின்று காற்றாட கேட்டு ரசிப்பது மறக்க முடியாத அனுபவம்.

    அதே போல எப்போதெல்லாம் மனம் சஞ்சலப்படுகிறதோ அப்போது இரு மலர்கள் படத்தின் Theme Music கேட்டால் உடனே அத்தனை கவலைகளும் மறந்து விடுவதோடு மனம் அந்த இசையோடு சஞ்சாரிக்க ஆரம்பித்து விடும். The use of chorus as harmony at the apt place enlivens the composition and inherits a feel to the soul.

    Another important aspect about this title music. பொதுவாக மெல்லிசை மன்னரின் டைட்டில் இசையில் படத்திற்கு தீம் மியூஸிக் உருவாக்கியிருந்தாரானால் அதை கோடிட்டுக் காட்டி, முக்கியமான பாடலின் ஓரிரு வரிகளையோ அல்லது பின்னணி இசையையோ கூட இணைத்து ஒரு கலவையாக கொடுப்பார். ஆனால் இந்த படத்தின் டைட்டில் இசை முழுக்க முழுக்க தீம் மியூஸிக்கை மட்டுமே கொண்டிருக்கிறது. இது மிகவும் அபூர்வமானதாகும்.

    இரு மலர்கள் படத்தின் Theme Music. முதலில் இது இசைக்கப்படும் இடம், மலையுச்சியில் சுந்தர் விழப் போக உமா அவரைக் காப்பாற்றும் போது. இப்போதாவது எனக்கு அந்த மலரைத் தருவாயா என சுந்தர் கேட்கும் போது, மலர் என்ன, என்னையே நான் தருகிறேன் என்கிற கட்டத்தில் தான் முதன் முதலாக இந்த இசை ஆரம்பிக்கிறது. சுந்தர் உமா என்று அழைக்கும் போது மிகச்சரியாக மன்னர் இந்த் இசையை ஆரம்பிக்கிறார். இதைத் தொடர்ந்து சுந்தர் விடுதியிக்குள் நுழைந்து தன் அறையில் இருக்கும் போது எதிரில் உமா அவரைப் பார்க்க, இருவரும் கீழே இறங்கி வந்து நேருக்கு நேர் பார்த்து நிற்கும் வரை Continuous ஆக இந்த இசை ஒலிக்கும். இதுவே பிரதானமானதாகும். இதற்குப்பிறகு மன்னிக்க வேண்டுகிறேன் பாடலின் ஆரம்பத்தில் இந்த இசையின் லயம் பயன்படுத்தப்பட்டிருக்கும். மெட்டிலும் அது எதிரொலிக்கும். அதற்குப் பிரகு சுந்தர் உமா சந்திக்கும் இடங்களில் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இந்த இசையை வாசித்திருப்பார்கள்.

    சாதாரணமாக ஒரு படத்தில், கதையின் போக்கில், காதலை நன்கு ஆழமாக சித்தரித்து மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டத்தில் அந்த காதல் தோல்வியுற்றதும்,. கிட்டத்தட்ட படம் முடிந்து விடும் உணர்வை ஏற்படுத்தி சுவாரஸ்யம் போகும் அளவிற்கெல்லாம் நிகழ்வதுண்டு. ஆனால் இரு மலர்கள் is not such a run of the mill movie. It deserves to be placed in the Top Ten of NT movies. காதல் தோல்விக்குப் பிறகும் அந்தப் படம் இறுதி வரைக்கும் உணர்வுகளோடு கலந்துரையாடுகிறதென்றால், கதையில் உள்ள வலுவே காரணம். உரையாடல்களும் ஆழமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். அந்தக் காதல் தோல்வியில் எதார்த்தமிருக்கும். கோபங்களில் பரஸ்பரம் நியாயம் இருக்கும். காட்சிகளில் செயற்கையாக திணிக்கப்படும் அம்சங்கள் கிடையாது. Reality at its core. கதைக்களம் ஒரே இடத்தில் நிலைபெற்றிருப்பதால், காதலர்கள் மீண்டும் சந்திப்பதில் திடுக்கிடும் திருப்பமோ, திணிப்போ இருக்காது. அதுவும் Natural ஆக இருக்கும். இன்னும் எவ்வளவோ சிறப்பம்சங்கள். இரு மலர்கள் belongs to a genre of those movies which are complete in all aspects and respects

    நெஞ்சை நெகிழ வைக்கும் இசையைத் தந்த மெல்லிசை மன்னரை நினைத்தாலே கண்கள் குளமாகின்றன. நெஞ்சம் கனக்கின்றது. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் நடிகர் திலகம் மெல்லிசை மன்னர் கூட்டணி.



    Last edited by RAGHAVENDRA; 6th August 2019 at 08:26 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •