Page 47 of 401 FirstFirst ... 3745464748495797147 ... LastLast
Results 461 to 470 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #461
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #462
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #463
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் மாநகரில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடித்த " நாடோடி மன்னன் "7 அரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது
    சேலம் கீதாலயா, கௌரி மற்றும் 5 அரங்குகள் .


    தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .

  5. #464
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #465
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    ஓவியங்கள் : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்

  7. #466
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய தலைமுறை வார இதழ் -12/4/18





  8. #467
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #468
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்னேரி வி.வி.எம்.அரங்கில் தற்போது வெற்றிநடை போடுகிறது
    புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "நாடோடி மன்னன் "



    தகவல் உதவி : திரு.யுகேஷ்பாபு , சென்னை.

  10. #469
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like


    2 வாரம் முன்னாடி புரட்சித் தலவர் நடித்த நாடோடி மன்னன் படம் மீண்டும் வெளியீடு செய்யப்பட்டது. இப்போதும் பல ஊர்களில் 25வது நாள் நோக்கி நடோடி மன்னன் வெற்றி நடைபோடுகிறது. 2 வாரம் முன்னாடி இந்தப் படம் வெளியீடு செய்யப்பட்ட சமயத்திலே தமிழ்நாடு பல ஊர்களில்

    நாடோடி மன்னன்

    எங்க வீட்டுப் பிள்ளை

    ரிக்சாக்காரன்

    ஆயிரத்தில் ஒருவன்

    காவல்காரன்

    தர்மம் தலைகாக்கும்

    போன்ற புரட்ச்சித் தலைவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பல ஊர்களில் 100க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடியது. இது பற்றி பேப்பரில் நாடோடி மன்னன் மீண்டும் வெளியீடு படத்துடன் செய்தி வந்தது.

    ஒரு நடிகர் இறந்து போய் 30 வருசம் கழித்து அவருடைய வெவ்வேறு படங்கள் தமிழ்நாடு பூராவிலும் வெவ்வேற ஊர்களில் 100 தியேட்டர்களில் ஓடினதாக சரித்திரம் இல்லை.

    இந்த பெருமை புரட்சித் தலைவருக்கு மட்டுமே உள்ளது.

    செத்த நடிகர்களை விடுங்கள். இப்போது பிரபாலமாக உள்ள எந்த நடிகரின் பல படங்கள் தமிழகத்தில் 100 தியேட்டர்களில் ஓடவில்லை.

    இப்ப திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடக்கிறது. அதனால, புதுப்படங்கள் ரிலீஸ் ஆகவில்ல. அதனால்தான் எம்.ஜி.ஆர். படங்கள் திரையிடப்படுகிறது. அதனால்தான் 100 தியேட்டரில் அவர் படம் ஓடுகிறது என்று கூட சில முட்டாப் பசங்க சொல்லுவான்கள்.

    அப்பிடியே வச்சுக்கிட்டாலும் அப்பவும் புரட்சித் தலைவர் படங்கள்தானே 100 தியேட்டர்களில் ஓடுகிறது.

    வேறு எந்த நடிகரின் படங்கள் இப்பிடி தமிழ்நாடு பூரா 100 தியேட்டரில் ஓடுகிறது.

    மறுபிடியும் தெளிவாக சொல்கிறன். 100 தியேட்டர்களில் புரட்சித் தலைவர் படம் ஓடுகிறது என்பது நாடோடி மன்னன் படம் மட்டுமே 100 தியேட்டரில் ஓடுகிறது என்று சொல்லவில்லை.

    நாடோடி மன்னன் படம் உள்பட புரட்சித் தலைவரின் பல படங்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 2 வாரம் முன்னால் ஓடியது.

    இத சன் நியூஸ் டிவி சினிமா செய்தியிலும் சொன்னார்கள்.

    100க்கும் மேல தியேட்டரில் எம்.ஜி.ஆர். படம் ஓடியது என்று டிவியில் சொன்னத்துக்கு என்ன ஆதாரம் என்று போறாமை பிடிச்சவர்கள் கேட்பார்கள். நான் பார்த்தேன். ஆனால் ஆதாரம் இல்லை. திடீரென்று சொன்னதால் செல்போனில் வீடியா எடுக்க முடியவில்லை.

    ஆனால் பல ஊர்களில் புரட்சித் தலைவர் நடிச்ச பல படங்கள் 100க்கும் மேற்பட்ட தியேட்டரில் ஓடிய செய்தி பேப்பரில் வந்தது. அந்த ஆதார பேப்பர் செய்தி மேலே உள்ள பதிவைப் பாருங்கள்.

    இந்தப் பெருமை புரட்சித் தலைவருக்கே உள்ளது.



    திருப்பி ஜாடமாடையா ஒரு நடிகர் படங்களை வசூல் குறைந்துவிடும் என்பதற்காக இடைவெளி விட்டுத்தான் வெளியிடுவார் என்றெல்லாம் சிலர் பதிவு போடுகிறார்கள். புரட்சித் தலைவரை மறைமுகமாக விமர்சிக்கின்றார்கள்.

    1968-ம் வருசம் ரகசிய போலீஸ் 115 பட விளம்பரத்திலேயே புரட்சித் தலைவரை வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடிக்கும் என்று விளம்பரம் கொடுத்தார்கள். நம் திரியிலயே உள்ளது.

    சமீபத்திலே ஏ.சி. சண்முகம் நடத்தும் கல்லூரியில் புரட்சித் தலைவர் சிலை திறப்பு விழாவிலே பேசின நடிகர் ரஜினி காந்த் அரசியல்லயும் சினிமாவிலயும் போட்டியாளர்களை எம்.ஜி.ஆர். தோற்கடித்தார். சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து சாதன படைத்தார் என்று கல்லூரி மாணவர்களிடம் பேசினார்.

    நம்ப திரியிலும் அதைப் பதிவு போட்டோம். ஒரு நடிகரின் ரசிகர்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கித்தான் பொய் சொல்வீர்கள்?


    நீங்கள் என்னவோ உங்கள் நடிகரைப் பற்றி சொல்லிக் கொண்டு உங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்ளுங்கள்.


    புரட்சித் தலைவரை தாக்கிப் பேசாதீர்கள். முகநூல்களில் பொய்யான தகவல்களை பதிவு போடாதீர்களடா போறாமை பிடிச்ச அறிவுகெட்டவன்களா.

    உசரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. புரட்சித் தலைவர் பருந்து. மற்ற நடிகன்கள் ஊர்க்குருவிங்கள்.

  11. #470
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    எம்ஜிஆரின் '' நாடோடி மன்னன் .''

    60 ஆண்டுகளாக தமிழ் திரை உலகை கலக்கி வரும் எம்ஜிஆரின் '' நாடோடி மன்னன் .''

    அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எம்ஜிஆரின் நாடோடி மன்னன் அன்றைய திரை உலகில் மாபெரும் வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியது

    சினிமா ஸ்டிரைக் நடந்து வரும் நேரத்தில் தியேட்டர்காரர்களுக்கு கொஞ்சமாவது வருமானத்தை தந்து கொண்டிருப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரது படங்கள்தான் இப்போது தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடோடி மன்னன் திரையிடப்பட்டுள்ளது. அதனை பார்க்க எம்.ஜி.ஆர் ரசிகர்களுடன், இன்றைய இளைஞர்களும் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அறிந்து கொள்வதற்காக நாடோடி மன்னன் படம் குறித்து ஒரு சின்ன பிளாஷ்பேக்...

    M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி, நடித்து பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படமான ‘நாடோடி மன்னன்’.

    ‘மலைக்கள்ளன்', ‘அலிபாபாவும் 40 திருடர்களும்', ‘மதுரை வீரன்', ‘தாய்க்குப் பின் தாரம்' என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் ‘நாடோடி மன்னன்’ படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும் கொடுத்தார்.

    ‘‘நான் சொந்தத்தில் ‘நாடோடி மன்னன்’ படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், ‘நாடோடி மன்னன்’ ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

    ‘நாடோடி மன்னன்’ படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு ‘இஃப் ஐ வேர் கிங்’ என்ற படத்தைப் பார்த்தார். இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அதன் விளைவுதான் ‘நாடோடி மன்னன்.’

    படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார். சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன் வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரம் மாண்டத்துக்கு மட்டுமல்ல; படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான சம்பளமும் வழங்கப்பட்டது.

    படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப் பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் ‘ஓவல்டின்’ என்ற பானம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் ‘ஓவல்டின்’ குடித்ததே அப்போதுதான்.

    படம் முடிந்த பிறகு ‘‘வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி’’ என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர்.

    மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது ‘நாடோடி மன்னன்’. 19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது ‘நாடோடி மன்னன்’.

    மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார்.

    இந்தக் கூட்டத்தில்தான், ‘‘மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்’’ என்று அண்ணா பேசினார்.

    ‘நாடோடி மன்னன்’ பற்றி குறிப்பிடும் போது நடிகை பானுமதி பற்றி சொல்லி யாக வேண்டும். நடிப்பு, தயாரிப்பு, இசை, இயக்கம் என்ற பன்முகத்திறமை கொண்டவர் பானுமதி. ‘மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’ என்று ஏற்கெனவே வெற்றி பெற்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கு பானுமதியே ஜோடி. ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவரையே நாயகியாக நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார்.

    பானுமதி அந்தக் காலத்திலேயே சுதந்திரமாக செயல்படும் நடிகை. எம்.ஜி.ஆரும் அப்படியே. தான் விரும்பு கிறபடி காட்சிகள் வரும்வரை எம்.ஜி.ஆர். விடமாட்டார். அதனால்தான் இன்றும் அவர் படங்களை ரசிக்க முடிகிறது. எம்.ஜி.ஆர். மீண்டும் மீண்டும் காட்சி களை எடுப்பது பானுமதிக்கு பிடிக்கவில்லை. ‘‘எடுத்த காட்சிகளையே எத்தனை முறை எடுப்பீங்க?’’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டார்.

    சக நடிகையின் ஒத்துழைப்பு இப்படி இருக்கும்போது கோபம் வந்தாலும், எம்.ஜி.ஆர். அமைதியாகவே பதில் சொன்னார், ‘‘படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி, இயக்குநரும் நான்தான். என் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடிங்க. இல்லைன்னா விட்டுடுங்க.’’ இதைத் தொடர்ந்து, படத்தில் இருந்து விலகிக் கொண்டார் பானுமதி. பிறகு, அவர் இறப்பது போல காட்சிகள் மாற்றப்பட்டு நடிகை சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

    கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரின் திறமையை எம்.ஜி.ஆர். மதிப்பார். படத்தில் இருந்து பாதியில் விலகினாலும் சென்னையில் நடந்த வெற்றி விழாவுக்கு பானுமதியையும் பெருந்தன்மையுடன் அழைத்து, அவருக் கும் விருது வழங்கினார் எம்.ஜி.ஆர்.

    அதன் பின்னரும், எம்.ஜி.ஆர். - பானுமதி நடிப்பில் ‘ராஜா தேசிங்கு’, ‘கலை அரசி’, ‘காஞ்சித் தலைவன்’ ஆகிய படங்கள் வெளியாயின.

    பன்முகத் திறமை மிக்க பானுமதிக்கு தமிழக அரசின் சார்பில் அதுவரை ‘கலைமாமணி’ பட்டம் வழங்கப்படாததை அறிந்த எம்.ஜி.ஆர், தான் முதல்வராக இருந்தபோது ‘கலைமாமணி’ விருதை பானுமதிக்கு வழங்கி கவுரவித்தார்.

    எம்.ஜி.ஆர். நல்ல இசை ஞானம் உடை யவர். ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பின் போது ஒருநாள், இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுடன் பாடல் களுக்கான இசையமைப்பு பற்றி எம்.ஜி.ஆர். ஆலோசித்துக் கொண்டிருந் தார். அப்போது, ‘‘நீங்கள் இசையமைப் பில் எல்லாம் தலையிட வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார் பானுமதி. இசை பற்றி எம்.ஜி.ஆருக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்காது என்ற எண்ணம் பானுமதிக்கு.

    எம்.ஜி.ஆருக்கு நினைவாற்றல் அபா ரம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எதை யும் மறக்க மாட்டார். பானுமதி கேட்ட கேள்விக்கு, 27 ஆண்டுகளுக்குப் பின் முதல்வராக இருந்தபோது செயல்வடி வில் அவருக்கு பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.

    தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பானுமதியை எம்.ஜி.ஆர். நியமித்தார். பின்னர், அந்த பதவியின் அந்தஸ்து மேம்படுத்தப்பட்டு இயக்குநர் மற்றும் முதல்வராக பானுமதி பதவி வகித்தார்.



    தைரியத்தோடும் புதுமையோடும் தயாரித்த நாடோடி மன்னன் படம் விளம்பரத்தில் கூட திரைவானில் ஓர் உதய சூரியன் என்றே வெளியிட்டு தாம் சார்ந்த அறிஞர் அண்ணாவின் கழகத்திற்கு வலு சேர்த்தவர் . மண்ணில் வாழும்வரை மன்னாதி மன்னனாகவே மக்களின் மனம் நிறைந்தவர் .மங்கா புகழ் கொண்டவர்.



    மக்களாட்சியை பற்றி அனைத்து மக்களுக்கும் புரியும் வண்ணம், தெளிவாக, எக்காலத்தும் நினைவில் நிற்கும்படி தனது படத்தின் மூலம் சொன்னவரும் சொன்னபடி செய்தவரும் என்பதாலே அவர் மக்கள் திலகம் !





    எம்ஜிஆரின் பொதுவான பலங்கள் என்று பார்த்தால் பாட்டுகள்; அருமையான தயாரிப்பு; சண்டைக் காட்சிகள், குறிப்பாக கத்தி சண்டை காட்சிகள், சிலம்ப சண்டை காட்சிகள்; அழகான ஹீரோயின்கள். சில சமயம் நல்ல பொழுதுபோக்கு கதை, நல்ல நகைச்சுவை அமைந்துவிடும். இந்த படத்தில் மிக பிரமாதமான பாட்டுகள்; காசை தண்ணீர் போல செலவழித்து எடுக்கப்பட்ட படம்; அவருக்கு இணையாக திரையில் சண்டை போடக்கூடிய நம்பியார், வீரப்பா என்று இரண்டு வில்லன்கள்; பானுமதி, சரோஜா தேவி என்று இரண்டு ஹீரோயின்கள்; நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை, வசனம். எம்ஜிஆர் பானுமதி ஜெயிலில் சந்திக்கும் காட்சியே கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கும்.

    1958-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்த படம். அவரே இயக்கம். எம்ஜிஆர், பானுமதி, சரோஜா தேவி, சந்திரபாபு, வீரப்பா, நம்பியார், சக்ரபாணி, ஜி. சகுந்தலா (மந்திரி குமாரியில் எம்ஜிஆருக்கு ஜோடி; இதில் சந்திரபாபுவுக்கு ஜோடி!) என்று ஒரு நட்சத்திரக் கூட்டம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. எல்லா பாட்டும் பட்டுக்கோட்டையா என்று தெரியவில்லை, ஆனால் பட்டுக்கோட்டை நிறைய பாட்டுகளை எழுதி இருக்கிறார்.

    கதை தெரியாதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குறைவு. Prisoner of Zenda கதைதான் inspiration . நாடோடி எம்ஜிஆர் ஜெயிலில் தூங்காதே தம்பி என்று பாட்டு பாடுகிறார். பானுமதியின் குரல் மட்டுமே கேட்கும். பானுமதி தான் கிழவி என்று சொல்லி அவரை ஏமாற்றுகிறார். பிறகு இருவரும் ஒன்றாக செல்ல சம்மதமா, உமக்கு சம்மதமா என்று பானுமதி பாட்டிலேயே கேட்டு அடுத்த நாட்டுக்கு செல்கிறார்கள். அங்கே வாரிசு பிரச்சினை. மன்னன் எம்ஜிஆர்தான் வாரிசு என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ராஜகுரு வீரப்பா, சதிகார சக்ரபாணி, பிரபு பிங்கலன் (நம்பியார்) யாருக்கும் இது பிடிக்கவில்லை. சதி நடக்கிறது. மன்னன் எம்ஜிஆரும் நாடோடியும் சந்திக்கிறார்கள். மன்னன் எம்ஜிஆர் மயக்கம் அடைகிறார். நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நாடோடி எம்ஜிஆர் மன்னனாக பதவி ஏற்கிறார். காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்று பாடும் பானுமதி மனம் குளிர புதிய சட்டங்களை கொண்டு வருகிறார். மன்னன் எம்ஜிஆரை வீரப்பா தன் தீவுக்கு கடத்தி சென்று விடுகிறார். நடுவில் பானுமதி இறந்துவிட, ஹீரோயின் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக வீரப்பாவின் தீவுக்குப் போய், மானத் தேடி மச்சான் வரப் போறான் என்று பாடும் சரோஜா தேவியை பார்த்து, காதலித்து, சண்டை போட்டு, மன்னனை மீட்டு, சுபம்!

    வசனங்கள் அருமை. வீரப்பா கேட்பார் – சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல! எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது! வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் – ரத்னா, அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை!

    படம் எம்ஜிஆருடையது. படத்தில் அவர் பூராவும் வியாபித்திருக்கிறார். மிச்ச எல்லாருமே டம்மிதான் – பானுமதி மட்டும் கொஞ்சம் ஈடு கொடுக்கிறார். வீரப்பாவுக்கு அவ்வப்போது அவரது ட்ரேட்மார்க் சிரிப்பு, சண்டை போடுங்கள், போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு அது கை வந்த கலை. நம்பியாருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசியில் அவர் எம்ஜிஆருடம் கடற்கரையில் மோதும் சண்டை பிரமாதம். சந்திரபாபு . இரண்டு பாட்டு பாடிவிட்டு போகிறார். விகடன் அவர் முட்டை தின்று கோழியை துப்பும் காட்சியை சிலாகிக்கிறது. சரோஜா தேவிக்கு சும்மா கொஞ்சம் வெட்கப்பட்டு, சிரித்து, பாம்பைக் கண்டு பயந்து எம்ஜிஆர் மேல் ஒட்டிக்கொண்டு, ரவிக்கையை கழற்றி முதுகை காட்டி (அப்போதுதான் அவர் காணாமல் போன இளவரசி என்று மச்சத்தை பார்த்து எம்ஜிஆர் கண்டுபிடிக்க முடியும்.) கடைசியில் எம்ஜிஆர் அவரை மீட்க வரும்போது வீர மாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே என்று பாடினால் போதும். எம்ஜிஆரை தான் கிழவி என்று சொல்லி கலாய்ப்பதாகட்டும், காடு விளைஞ்சென்ன மச்சான் என்று கேட்பதாகட்டும், நன்றாக ஈடு கொடுத்து நடிக்கிறார். அவர் சரோஜா தேவி போல சம்பிரதாயமான தமிழ் ஹீரோயின் இல்லை, பாம்பு வந்தால் எம்ஜிஆர்தான் பயந்து அவர் மேல் ஒட்டிக்கொள்ள வேண்டும். பார்வையிலேயே தைரியத்தை காட்டுகிறார். ஸ்டீரியோடைப் நாயகியாக அவர் இல்லாமல் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

    எம்ஜிஆருக்கு அடுத்தபடி படத்தை வியாபிப்பவர் சுப்பையா நாயுடு. என்ன மணி மணியான பாட்டுகள்!

    காடு விளைஞ்சென்ன மச்சான்தான் படத்தில் டாப். என்ன அருமையான வரிகள்! சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாம பாடுபட்டு என்று ஆரம்பிக்கும்போதே களை கட்டிவிடுகிறது. நாட்டுப்புற மெட்டின் இனிமையே தனிதான். பட்டுக்கோட்டை கலக்குகிறார்!

    மானைத் தேடி மச்சான் வரப் போறான் கலக்கலான இன்னொரு பாட்டு. Feet tapping number!

    தூங்காதே தம்பி தூங்காதே புகழ் பெற்ற பாட்டு. நல்ல வரிகள். பட்டுக்கோட்டை புகுந்து விளையாடுகிறார். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் – அருமை!

    அவ்வளவாக தெரியாத இன்னொரு பாட்டு சம்மதமா உமக்கு சம்மதமா. பானுமதி மிக அருமையாக பாடி இருப்பார்.

    சீர்காழியின் குரல் எம்ஜிஆருக்கு உழைப்பை பெறுவதிலா பாட்டில் மிக நன்றாக பொருந்தி இருக்கும். அது என்ன மாயமோ தெரியவில்லை.

    கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஹை பிச்சில் (லீலாவா?) பாடும்போது அம்மாடி, பாத்தும்மா என்றுஒரு பயம் வரும்!

    சந்திரபாபுவுக்கு தடுக்காதே என்னை தடுக்காதே என்று ஒரு பாட்டு.

    படத்தின் மூன்றாவது ஹீரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். மனிதர் பிரமாத ஃபார்மில் இருந்திருக்கிறார்.



    எம்ஜிஆர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவழித்திருக்கிறார். மாளிகைகள், தீவு, கழுகு குகை, இடிந்து விழும் பாலம், குகையில் தண்ணீர் நிரம்பும் காட்சி என்று மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். செலவழிந்த பணத்தைப் பற்றி “ஓடினால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி” என்று சொன்னாராம். படம் ஓடிவிட்டது. அவரும் தமிழ் நாட்டுக்கே மன்னர் ஆகிவிட்டார்.



    நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்! அடுத்த இன்ஸ்டால்மென்டில் என் விமர்சனம்.

    முனுசாமி – மாணிக்கம்

    மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

    முனு: எதுக்கடா?

    மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

    முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

    மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

    முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

    மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

    முனு: ரொம்பப் பெரிய படமாமே?

    மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

    முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

    மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

    முனு: கத்திச் சண்டை உண்டா?

    மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

    முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

    மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

    முனு: காமிக் இருக்குதா?

    மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

    முனு: என்ன தம்பி சொல்றே?

    மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!



    எம்ஜிஆரின் நாடோடி மன்னன், ரிக்ஷாகாரன் படத்தையும் சில திரையரங்குகள் ஓரிரு காட்சிகள் திரையிட்டுள்ளன. அதில் ஆல்பர்ட்டில் நாடோடி மன்னனுக்கு நல்ல வசூல். இப்போதும் இரண்டு ஷோ ஓட்டுகிறார்கள்.

    நாடோடி மன்னன் ' வெற்றி குறித்து எம்.ஜி.ஆர் :
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,
    படம் எடுக்கப்படுகிறதே யாருக்காக?…
    பட உரிமையாளரின் இரும்புப்பெட்டியை நிரப்ப…நட்சத்திரங்கள் பணம் சேர்க்க….
    சிலர் புகழ்பெற…..இப்படிப் பதில் வரும் சிலரிடமிருந்து,
    மக்களுக்கு வாழ்வின் இலட்சியத்தை எடுத்துக்காட்ட,
    மக்களை ஒன்றுபடுத்த,
    நாட்டுப்பற்றை உண்டாக்க ? அதிகப்படுத்த, இல்லாத சுதந்திரத்தைப் பெற, காப்பாற்ற!
    இப்படிப் பதில் கூறுவார்கள் இலட்சியப்பற்றுடைய மக்கள் கலைஞர்கள்.
    இப்படிப் பேசும் கலைஞர்களைக் கேலி பேசுவோர்களும் உண்டு…..
    ?இது ஜனநாயக உலகம். யாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கின்றனவோ அவர்கள்தான் நாட்டை ஆளுவார்கள். நமது நாடு ஏழைகள் நிறைந்த நாடு, எழுதப்படிக்கத் தெரியதாவர்களைப் பெரும்பான்யினராகக் கொண்டது நமது நாடு….
    இவ்வாறு விளக்கம் தருகிறார்கள் பெரும் பெரும் தேசத் தலைகள் எல்லாம்.
    இலட்சக்கணக்கான ரூபாய்களுக்குச் சொந்தக்காரரான ஒரு படமுதலாளி, முதலாளி ஒழியவேண்டும், முதலாளிகள் ஏழைத் தொழிலாளியின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை போன்றவர்கள். என்றெல்லாம் நம்புகிற ஒரு எழுத்தாளரையோ, ஏழை முதலாளி என்பது வேறு நாட்டிலும் கூட இருக்கிறது, நாடு விடுதலை பெற்றாலன்றி, இன உணர்ச்சி தோன்றி ஒன்றுபட்டாலன்றி, பகுத்தறிவு ஏற்பட்டு, சமுதாயச் சீர் கேடு ஒழிந்தாலன்றி, சமூகத்திற்கோ, ஏழைகளுக்கோ விமோசனமில்லை? என்ற கொள்கையைக் கொண்ட ஒரு எழுத்தாளரையோ அழைத்துப் பணம் கொடுத்து அவரவர் கொள்கைக்கேற்ப கதை, வசனம், பாடல்கள் அமைத்துப் படம் எடுத்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
    அந்தப்படத்தை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து, அதிலே சொல்லப்படும் கருத்தைப் புரிந்து, அதன்படி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று நினைத்தால் அந்த மக்களுடைய ஓட்டுக்கள், அவர்கள் ஆசைப்படும் ஆட்சியை ஏற்படுத்த யார் விரும்புகிறார்களோ அவர்களுத்தான் கிடைக்கும். அப்படிப் பெரும்பான்மையான ஓட்டுக்கள் பெற்று ஆட்சி பீடத்திலே அமருகிறவர்களுடைய திட்டப்படி சட்டம் கொண்டு வந்தால் லட்சக் கணக்காகப் பணம் சேர்த்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியா செய்யும்.
    இதை உணராதவர்கள் தான் பணத்தைப் பெருக்கப் பட முதலாளிகள் ஏதேதோ கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் என்ன நினைத்துப் படம் எடுத்து வெளியிட்டாலும் பலன் மக்களுக்கு ? குறிப்பாக ஏழைகளுக்கு நன்மை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வகையில் நாடோடி மன்னன் அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் கிடைத்தப் பல வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் லாபமடைந்திருக்கலாம். ஆனால் நாடோடியின்….(என்னுடைய) ஆசை நிறைவேறுகிறது. மக்களுக்கு எதைச் சொல்ல விருப்பமோ அதைச் சொல்லிவிட்டேன்.
    மக்களுடைய எண்ணத்தைச் சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை நாடோடி மன்னன் மூலம் மக்கள் சொல்லுகிறார்கள். ஆகவே எல்லாத் தரப்பினரின் எல்லா மக்களின் எண்ணத்தை நாடு முழுவதும் சொல்ல வைத்த மக்களின் வெற்றிதான் இது என்று குன்றேறிச் சொல்லலாம். மக்களுக்குப் பிடிக்காவிடில் வெற்றி பெற்றிருக்காது. (படம் பல நாட்கள் ஓடியிருக்காது.) ஆகவே மக்களின் எண்ணம் மன்னனின் வாயிலாக ஒலிக்கப்பட்டது என்று பொருள். மக்களின் குரல் ஏகோபித்துப் பாராட்டப்படுகிறது என்றால் இது யாருக்கு வெற்றி என்ற கேள்விக்கு, மக்களின் வெற்றி நமது நாட்டின் வெற்றி! நமது இனத்தின் வெற்றி! இன்பத் திராவிடத்தின் வெற்றி….என்று பெருமையோடு தலை நிமிர்ந்து கூறி, மக்கள் வாழ்க ! மக்களுக்காக வாழும் மக்கள் கலைஞர்கள் வாழ்க எனத் துணிந்து கூறுகிறேன்.
    வணக்கம், வாழ்க திராவிடம் !
    நன்றி !
    கல்கியின் ஆகச்சிறந்த புதினங்களில் ஒன்றான 'பொன்னியி்ன் செல்வன்' வாசகர்களிடையெ பெற்றிருந்த வரவேற்பு எம்ஜி.ஆரை பெரிதும் ஈர்த்தது. கல்கியின் உரைநடை வீச்சும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளும் அதன் வர்ணனைகளும் நிரம்பி காணப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் 50களில் புராண இதிகாச கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர் என்று கருதப்பட்ட எம்.ஜி. ஆருக்கு பெரும் ஆசையை மனதில் வித்திட்டதில் ஆச்சரியமில்லை. இதற்கென கல்கியின் குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெறப்பட்டது. நாடோடி மன்னன் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற சில மாதங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி. ஆர். தனது வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பொன்னியின் செல்வன் வெளிவரும் என செல்லும் இடங்களில் எல்லாம் பெருமிதமாக சொன்னார். பொன்னியின் செல்வன் படமானால் அது தனக்கு நாடோடி மன்னனுக்கு ஈடான நிரந்தர புகழை ஈட்டித்தரும் என்பதில் ஐயமின்றி இருந்த எம்.ஜி. ஆர், 'நாடோடி மன்னன்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு 'பொன்னியின் செல்வன்' என்று தான் பொறுப்பாசிரியராக இருந்த 'நடிகன் குரல்' (1959 டிசம்பர் மாத இதழில் ) இதுபற்றிய தகவலை வெளியிட்டார். அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தேர்வும் நடந்தது. சிறுசிறு கதாபாத்திரத்திற்கும் கூட தேர்ந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்தார். வழக்கமான தனது படங்களில் பயன்படுத்துபவர்களை தவிர்த்து புதிய கலைஞர்களை இதில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டார். 'பொன்னியின் செல்வன்' கதையில் இருவேடங்களில் எம்.ஜி.ஆரே ஏற்று நடிக்க முடிவெடுத்தார். நாவலின் முக்கிய கதாநாயகி கதாபாத்திரத்திற்கு அவர் தேர்ந்தெடுத்தது தமது குடும்பநண்பரும் பழம்பெரும் இயக்குனருமான கே. சுப்ரமணியம் அவர்களின் மகள் பத்மா சுப்ரமணியத்தை. நடனக்கலைஞரான அவர் நடித்தால் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக பேசப்படும் என்பது எம். ஜி. ஆரின் எண்ணம். பகீரத முயற்சியில் இதற்கான அனுமதியை அவரது தந்தையிடம் இருந்து பெற்ற எம்.ஜி. ஆரால் அவரது மகளிடம் திட்டம் பலிக்கவில்லை. திரைப்படத்தில் நடிப்பதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் எம். ஜி. ஆரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேசமயம் நாடோடிமன்னன் வெற்றியினால் தொடர்ந்து படங்களில் புக் ஆகி இடைவிடாமல் நடித்துக்கொண்டிருந்ததால் எம்.ஜி.ஆரின் கவனமும் பொன்னியின் செல்வனிலிருந்து விலகியது. என்றாலும் தனது மனதில் கதாபாத்திரங்ளையும் காட்சியமைப்புகளையும் செதுக்கியவாறு இருந்தார். மற்ற படங்களின் அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது பொன்னியின் செல்வனுக்கும் லோகேஷன்களை பார்த்து குறித்துக்கொண்டார். இருப்பினும் அது காகித வடிவிலேயே இருந்தது. '1964 ல் ஆகஸ்ட் 2ந்தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் “படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கின்றன. அதை கலரில் எடுக்கப் போகிறேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதும்படி கேட்கப் போகிறேன்!” எனகூறியிருந்தார். அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார்.

    ஆனால் பொன்னியின் செல்வன் படத்தயாரிப்புக்கு குறிப்பிட்ட சில வருடங்களாவது தேவைப்படும் என்ற நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துவந்த எம்.ஜி.ஆரால் படத் தயாரிப்பில் ஈடுபடமுடியவில்லை.
    பொன்னியின் செல்வன் கதையில் ஏராளமான கதாபாத்திரங்களும், சம்பவங்களும் உள்ளன. எனவே, படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை எடுத்து முடித்த பின்னரும், பொன்னியின் செல்வன் படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்படவில்லை.எம். ஜி. ஆரைப்பற்றி அவ்வப்போது நிலவி வந்த சில தகவல்களும் இந்த படத்தினை தள்ளிப்போட்டது என்பார்கள்.

    பொதுவாக எம்.ஜி. ஆர் வெளிப்படங்களிலேயே தான் திருப்தியடைந்த பின்னரே அது வெளியாக அனுமதிப்பார். அப்படிப்பட்டவர் தன் சொந்தப்படத்தினை அதுவும் அவரது கனவுப்படத்தை வெளியிட எத்தனை வருடங்கள் எடுத்துக்கொள்வாரோ என்று பிரபல நடிகர்களிடம் ஒரு பேச்சு எழுந்ததாக சொல்வார்கள். பணம் கணிசமாக கிடைக்கும் என்றாலும் ஒரு திரைப்படத்திற்காக நீண்ட நாட்களை செலவிட அவர்கள் தயாரில்லை. முக்கிய கதாபாத்திரத்திற்கு தான் தேர்வு செய்த பத்மா சுப்ரமணியம்தான் நடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த எம். ஜி. ஆர் 70 களில் பத்மா இருந்த ஒரு மேடையில் “பத்மா சம்மதித்து நடித்து கொடுத்தால் ஒரு மாதத்தில் படத்தை வெளியிடுவேன்” என்றும் கூறிப்பார்த்தார். ஆனாலும் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த பத்மா சுப்ரமணியம் அதற்கு மசியவில்லை. இப்படி பல காரணங்களால் எம். ஜி. ஆர் பொன்னியின் செல்வனை கைவிட வேண்யடிதானதாக திரையுலகில் சொல்வர். ஆனாலும் எம்.ஜி. ஆரின் மனதில் இருந்து பொன்னியின் செல்வனை விலக்க முடியவில்லை. தான் பொது இடங்களில் தான் சந்திக்கும் திறமையான கலைஞர்களிடம்“ என் படத்தில் இந்த கேரக்டரில் நடிக்கறியா என தொடர்ந்து கேட்டபடி இருந்தார். நடிகர் சிவகுமாரின் 100-வது படவிழாவில் (1978ம் ஆண்டு) பேசிய எம்.ஜி.ஆர். 'பொன்னியின் செல்வனை படமாக எடுக்க நான் முயற்சித்தபோது, சோழ இளவரசனாக சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன்’ என்று பேசினார். இப்படி வந்தியத்தேவன், எம்.ஜி.ஆரை விரட்டிக்கொண்டே இருந்தான். ஆனால், காலம் கைகூடவில்லை! முதல்வரான பின்னும் பொன்னியின் செல்வனை அவர் மனதில் இருந்து கழற்றிஎறிந்திட முடியவில்லை. கல்கியின் ஆகச்சிறந்த புதினங்களில் ஒன்றான


    கலவையாக குலேபகாவலி, சக்கரவர்த்தித் திருமகள், ஜெனோவா, மலைக்கள்ளன்னு
    எம்.ஜி.ஆர். படமா கொஞ்சம் பாட்டு கொஞ்சம் காட்சிகள் அப்படி ஓட்டி ஓட்டிப்
    பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது, அந்தக் காலம் அந்தக் காலம்தான்.
    பி.எஸ்.சரோஜா, பானுமதி, அஞ்சலிதேவி, டி.ஆர்.ராஜகுமாரி என அனைத்து
    முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்திருக்கிறார். வழமையான எம்.ஜி.ஆர்.பாணிகள்
    இல்லாமல் கதாநாயகத்தன்மையை முன்னிறுத்தி, அதாவது, அவர் மீது அரசியல்,
    மாஸ் ஹீரோ, புரட்சி நடிகர் போன்ற நிழல்களெல்லாம் விழுவதற்கு முன்னும்,
    தன்னுடைய படங்களில் சிறப்பாகவே இயங்கியிருகிறார். டெக்னிகலான
    கத்திச்சண்டைகள், அவரையும் ட்ரில் வாங்கியிருக்கும் நடனக் காட்சிகள்,
    அளவான ரொமன்ஸ், எல்லாம் நன்றாக இருந்தது. கதாநாயக உருவாக்கம் என்பது
    எல்லா படங்களிலும் அடிப்படை.

    அந்த கதாயக உருவாக்கம் அதுவாக கதைகளில் அமைந்ததென்றே சொல்லவேண்டும்.
    அரசியல் ஈடுபாட்டிற்கு முந்தைய எம்.ஜி.ஆரென்றால் வசூலுக்கு மினிமம்
    கியாரண்டி என்னும் அளவில் இருந்த கதாநாயக நடிகர் என்பது எனது பார்வை.
    அரசியலுக்குப் பின்னரே அவருக்கான கதைகள் அவருடைய பொதுவாழ்வையும்
    பிரதிபலித்தன. இந்த அடிப்படையில் பார்த்தால் பின்னாளில் அவருக்கென்று
    கதைகள் உருவாக முன்னாளில் அதுவாக கதைகள் அமைந்திருக்கின்றன.


    SALEM - ALANKAR - NADODIMANNAN 2013

    சேலம் டவுன் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள அலங்கார் தியேட்டரில் நாடோடி மன்னன் படம் மீண்டும் ரிலீசானது. 18.8.2013 ஞாயிறு மாலை சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், குறவன், குறத்தி நடனம், எம்.ஜி.ஆரின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் அழகுபடுத்தி காட்சிக்கு வைத்தது, எம்.ஜி.ஆர் வேடமணிந்தவர்களின் உலா என பிரமாண்ட முறையில் நாடோடி மன்னன் ரிலீசைக் கொண்டாடினர். படம் திரையிட்டு திரையில் எம்.ஜி.ஆர். தோன்றியதும் அவருக்கு தேங்காய் உடைத்து சுற்றி போட்டனர்.





    எம்.ஜி.ஆர் ரசிகர்களுடன் அதிமுக சேலம் மாநகர் மாவட்டச் செயலர் செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன் மற்றும் மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் இந்த, விழாவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் நெத்திமேடு முத்து செய்திருந்தார்.

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்த படத்தைக்காண ஆவலுடன் வந்திருந்தனர். படத்தில் எம்.ஜி.ஆர் வந்தவுடன் காசுகளை வாரி இறைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    ARTICLE FROM NET APRIL 2018
    ******************************

    சேலம் மாவட்ட எம்.ஜி.ஆர் மனிதநேய மன்றம் சார்பில் எஸ்.ஜெயப்பிரகாஷ், டி.குப்புசாமி, ஆர். கணேஷ், சிவராமகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர். ஞாயிறு மாலை காட்சியில் மட்டும் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளது புதிய படங்களுக்கு கூட இந்த வசூல் கிடைப்பதில்லை. 2011ல் இதே அரங்கில் வெளிவந்த 'வேட்டைக்காரன்' படத்திற்கு பின் 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடும் என்று எதிர்பார்க்கப்படும் 'நாடோடி மன்னன்' முதல் வாரத்தில் மட்டும் 1.10 லட்சத்திற்கு மேல் வசூலைப் பெற்றுள்ளது.


    நேற்று அருண்மொழியும் அஜிதனும் நானும் நாகர்கோயில் கார்த்திகை திரையரங்கு சென்று எம்.ஜி.ஆர் நடித்து இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தைப் பார்த்தோம். நான் அந்தப்படத்தை முதல்முறையாகப்பார்த்தது 1972 ல். நான் ஐந்தாம் வகுப்பு மாணவன் அப்போது. அன்று கண்ட காட்சிகள் பலவும் நினைவில் அப்படியே நீடிக்கின்றன.

    அன்றெல்லாம் நாடோடி மன்னன் வெளியாவதென்பது ஒரு திருவிழா போல. வருடாந்தரத் திருவிழா. பலரும் பத்துப்பதினைந்து தடவைப் பார்த்திருப்பார்கள். ஆனால் அரங்கில் கூட்டம் நெரிபடும். படம் முழுக்க ரசிகர்களின் எதிர்வினை இருக்கும். வசனங்கள் வருவதற்குமுன்னரே அவற்றுக்கான கைத்தட்டல்கள் தொடங்கிவிடும். பாட்டுக்குரிய சந்தர்ப்பம் வருவதற்குள்ளே அரங்கு பாடத்தொடங்கிவிடும்.

    மீண்டும் நாடோடி மன்னன் படத்தைப்பார்த்தது 1980ல், பட்டப்படிப்பு படிக்கையில். அப்போது நான் மலையாளப்படங்களின் ரசிகனாகிவிட்டிருந்தேன். படம் பிடிக்கவில்லை. கேலிசெய்தபடி பார்த்தது நினைவிருக்கிறது. இப்போது நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட பிரதி என போட்டிருந்தனர். சரி, போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பினோம். அரங்கில் நூறுபார்வையாளர்கள். பெரும்பாலானவர்கள் வயதானவர்கள்.

    படம் தொடங்கும்வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வேடிக்கைபார்க்கும் மனநிலைதான். ஆனால் பல ஆச்சரியங்கள் இருந்தன. மூன்றரை மணிநேரம் ஓடியபடம் கொஞ்சம் கூட சலிப்பேற்படுத்தவில்லை. தொடர்ந்து பார்க்கவைத்தது படத்தின் சரளமான, விரைவான திரைக்கதை. எம்.என்.ராஜம்- எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் தவிர எங்குமே தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற மெலோடிராமா இல்லை என்பது படத்தை ரசிக்கவைத்த முக்கியமான அம்சம்.

    இம்முறை, சினிமாவுக்குள் வந்துவிட்டபின் அறிந்தவற்றுடன் பார்க்கையில் உணர்ந்த சில விஷயங்களை குறிப்புட்டுச் சொல்லவேண்டும். சினிமா என்னும் விசேஷமான காட்சிக் கலைக்குரிய தனிநடிப்பை அறிந்த நடிகர் எம்.ஜி.ஆர். அவருடைய இந்தத்திறன் தமிழில் மதிப்பிடப்படவே இல்லை. அவர் ‘நடிக்கத்தெரியாதவர்’ என்றே திரும்பத்திரும்ப சொல்லப்பட்டுவருகிறது. அவருடைய ரசிகர்களுக்குக்கூட அவர் நடிகர் என்னும் எண்ணம் இல்லை.

    இப்படத்தில் எம்ஜிஆர், எம்.ஜி.சக்ரபாணி, பானுமதி மூவரும்தான் மிக இயல்பாக நடித்திருந்தனர். பிறரும் இயக்குநரால் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு நடிக்கவைக்கப்பட்டிருந்தமையால் உறுத்தவில்லை. ஆனால் அப்போதுகூட பிறருடைய நாடகத்தனமான நடிப்புக்கு நடுவே இம்மூவரும் தனித்துத் தெரிந்தனர்.

    சினிமாவுக்குத்தேவை ‘நடிப்பு’ [acting] அல்ல ‘நடப்பு’ [behaving] தான் என்பது மிகத்தெளிவாக எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கிறது. அவருடைய அந்த மூக்குறிஞ்சும் ஸ்டைல் செயற்கைதான், ஸ்டைல் எதுவானாலும் செயற்கையே, ஆனால் அதையே அளந்துதான் செய்திருக்கிறார். மிக இயல்பான சிரிப்பு. அச்சுமொழி வசனத்தைக்கூட இயல்பாகவே சொல்கிறார். அவை வசனமென்றே தெரியாதபடி. உணர்ச்சிவசப்படுகிறார், உணர்ச்சிகளைக் ’காட்ட’வில்லை காதல்காட்சியில் காமிரா இருக்கும் உணர்வே இல்லாமல் அக்காட்சிக்குள் இருக்கிறார்.

    எம்.ஜி.ஆரின் தலைமுறையில் சினிமாவை அவரளவுக்கு எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றே எனக்குப்படுகிறது. நாடகபாணி நடிப்பு சினிமா பார்க்கும் அனுபவத்தை பெரிய வதையாக ஆக்கக்கூடியது. இன்றுகூட சினிமா நடிகர்களிடமிருந்து நடிப்பை இல்லாமலாக்க ரத்தம் சிந்துகிறார்கள் இயக்குநர்கள். எம்.ஜி.ஆர் என்னும் நடிகரை நம் விமர்சகர்கள் மறுமதிப்பீடு செய்யவேண்டும்.

    ஓர் இயக்குநராக காட்சிகளை ஒருங்கமைத்திருக்கும் விதமும், தொடர்ந்து எல்லா படச்சட்டங்களிலும் சிக்கலான காட்சியசைவுகள் ஊடும்பாவுமாக இயல்பாக அசைவமைக்கப்பட்டிருக்கும் விதமும், தொலைதூரப் பின்னணியில்கூட இயல்பான நடிப்பும், சண்டைக்காட்சிகளில் எல்லா சட்டகங்களும் கொப்பளித்துக்கொண்டே இருப்பதும் எம்.ஜி.ஆர் அவருடைய படங்களை இயக்கிய இயக்குநர்களில் ஸ்ரீதருக்கு மட்டுமே நிகரானவர் என்பதைக் காட்டுகின்றன.

    அனேகமாக எல்லா துணை நடிகர்களிடமும் அளவான நடிப்பை வாங்கியிருக்கிறார். எல்லா காட்சிகளையும் மிகச்சரியான நீளத்தில் அமைத்திருக்கிறார். பெரும்பாலானவற்றை மிகக்குறைவான வசனங்களுடம் பெரும்பாலும் காட்சிவழியாகவே உணர்த்தியிருக்கிறார். உதாரணம் எம்.என்.நம்பியார் தன்னைப்பற்றி கண்ணாடியில் பார்த்து சொல்லிக்கொள்வதும், அதே கண்ணாடியில் எம்ஜிஆரின் படம் தெரிவதும்.

    நான் இப்படி ஒரு திரையனுபவமாக இந்தப்படம் இருக்கும் என நினைக்கவேயில்லை. இது தழுவல்படம்தான். அலக்ஸாண்டர் டூமாவின் மேன் இன் த அயர்ன் மாஸ்க் வெவ்வேறு வடிவில் உலக வணிகசினிமாவில் வந்தபடியே இருந்திருக்கிறது. ஹாலிவுட் படங்களை நகல்செய்தே பெரும்பாலும் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அரண்மனை, உடையலங்காரம் எல்லாமே ஹாலிவுட் பாணி. நம்மூர் வரலாற்றுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இது ஒரு பொழுதுபோக்கு மிகைபுனைவு, அவ்வளவுதான். அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு வணிகரீதியான எல்லா நுட்பங்களையும் உணர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது படம்.

    உதாரணமாக இடைவேளைக்குப்பின் படம் ஒரு தீவுக்குச் சென்றுவிடுகிறது. இன்னொரு படமாகவே ஆகிவிடுகிறது. மிகநீளமான இந்தப்படம் முதல்பகுதியின் களத்திற்குள்ளேயே இருந்திருந்தால் அரண்மனைச்சதியை மட்டுமே காட்டிச் சலிப்பூட்டியிருக்கும் என வணிகத்திரைக்கதையை அறிந்தவர்கள் சொல்லமுடியும். மேன் இன் தி அயன் மாஸ்க் திரைவடிவங்களில் பலவற்றில் அந்தச் சலிப்பு உண்டு. உண்மையில் மூலநாவலிலேயே அந்தச்சலிப்பு உண்டு, த்ரீ மஸ்கிட்டீர்ஸ் போல சுவாரசியமான நாவல் அல்ல அது.

    காட்சிகளைச் சுருக்கமாகவே அமைப்பது, தேவையற்ற குளோஸப்களை வைக்காமலிருப்பது, வெவ்வேறு காமிராக்கோணங்கள் வழியாக எப்போதும் காட்சியின் பிரம்மாண்டத்தை நினைவூட்டியபடியே இருப்பது [பல காட்சிகளில் பார்வையாளன் பொருட்களுக்கு இப்பாலிருந்து பார்க்கிறான். நிகழ்வுகள் ஆடம்பரப்பொருட்களினூடாக ஒழுகிச்செல்கின்றன] என ஒரு வணிகப்பட இயக்குநராக ஏறத்தாழ எல்லா நுட்பங்களையும் எம்ஜிஆர் அறிந்திருக்கிறார். அனைத்துக்கும் மேலாக இந்த சினிமாவில் அவர் அழகாக இருக்கிறார். அவருடைய சிரிப்பில் வெளிப்படும் அந்தச் சிறுவன் உற்சாகமானவன். அவர் போரிடுகிறார், எவரையும் வெட்டுவதே இல்லை. ஏன் அவர் அவ்வளவு விரும்பப்பட்டார் என்பதைக் காட்டுகிறது இந்தப்படம்.

    உண்மையில் தமிழ் சினிமாவில் நாம் இன்று வெறுக்கும் பல விஷயங்கள் மேலும் பத்தாண்டுகளுக்குப்பின் உருவாகி வந்தவை என நினைக்கிறேன். மிகையான நாடகத்தன நடிப்பு, செயற்கையான வசன உச்சரிப்பு, கண்களை உறுத்தும் காமிராக்கோணங்கள் போன்றவை. இந்தப்படத்தில் காமிரா இருப்பதே தெரியவில்லை. தனியாகக் கவனித்தால் சீரான நிதானமான காமிரா நகர்வை உணரமுடிகிறது. இன்றைய சினிமாக்களை என்னால் பலசமயம் பார்க்கவே முடிவதில்லை. ஒரு ரோலர்கோஸ்டரில் ஏறி இறங்கி சுழன்றபடி கீழே நிகழ்வதைப் பார்ப்பதுபோலிருக்கிறது இன்றைய காமிரா ஓட்டமும் வெட்டிவெட்டிச் செல்லும் படத்தொகுப்பும்.

    வீட்டுக்குத்திரும்பும்போது மீண்டும் மீண்டும் வியப்புடன் பேசிக்கொண்டே வந்தேன். மூன்றரை மணிநேரம் ஒருநிமிடம்கூட சலிக்காமல் இந்தப்படத்தை பார்த்திருக்கிறேன். மிகப்பெரும்பாலான சமீபகாலப் படங்களில் நான் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் நன்றாகத் தூங்கிவிடுவேன். திரும்பவரும்போது அருண்மொழியிடம் சுருக்கமாகக் கதையைக் கேட்டுத்தெரிந்துகொள்வேன்.

    வணிகசினிமா என்பது கேளிக்கை. ஆனால் அது சமூகத்தின் அரசியல் விழைவுகள், சமூகமாற்றம் சார்ந்த கனவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கும். ஏனென்றால் அது பார்வையாளனை கவர்ந்து உள்ளே அமரவைக்கவேண்டும். இப்படத்தில் ஜனநாயகம், பொதுவுடைமை சார்ந்த ஆரம்ப பாடங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதம் கவனத்திற்குரியது. அன்று தமிழகத்தில் பலபகுதிகளில் ஜனநாயகம் வந்தபின்னரும் மன்னராட்சியும் ஜமீன்தாராட்சியும் மறைமுகமாக நீடித்தது.அன்று படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னராட்சியில் பிறந்தவர்கள். புரட்சி பற்றிப் பேசுகிறது படம், கூடவே அது வன்முறையற்ற புரட்சி என்று சொல்கிறது. இப்படி என்னென்ன கருத்துருக்களை, காட்சிக்குறியீடுகளை இது பயன்படுத்தியிருக்கிறது என எவரேனும் விரிவாக ஆராயலாம்.

    கேளிக்கை வடிவங்கள் எப்போதும் வெளியே இருந்து வரும் கேளிக்கைவடிவங்கள் உள்ளூர் வடிவங்களுடன் கலந்து, ரசிகர்களின் விருப்பங்களுக்கும் மனநிலைக்கும் ஏற்ப நுட்பமாக மாற்றிக்கொண்டு மெல்லமெல்ல உருவாகி வருபவை. வணிகசினிமா என்ற கலைவடிவம் ஹாலிவுட் சினிமாவுக்கும் உள்ளூர் இசைநாடகங்களுக்கும் நடுவே திரண்டுவந்த ஒன்று. அது மெல்லமெல்ல உருவாகிவந்த விதத்தை ஆராயும் எவரும் நாடோடி மன்னன் ஒரு பெரும் திருப்புமுனை, ஒரு சாதனை என்றே மதிப்பிடுவார்கள் என நினைக்கிறேன்.
    ARTICLES FROM SRIMGR.COM -2006
    *******************************
    Nadodi Mannan Revisted Part I

    MGR’s one of the Block Buster movies Nadodi Mannan was re-released in Chennai last year. I have given some insight about the story, characters and also about the reaction of MGR fans.

    Here is the reaction of MGR fans captured by the camera for the movie Nadodi Mannan.



    Date : 4.8.2006
    Time : 5 pm
    Venue : Bharath Theatre, Chennai

    As usual various MGR Fan clubs started to show their respect and faith in MGR. Garlanding the Big Cut outs, pouring Milk and Giving Sweet Pongal.

    Involved Fan clubs:
    (1) Kalai Venthan MGR Trust – R.Loganathan and S.S.Perumal
    (2) Ponmanachemmal Sri MGR Bakthargal – Yukesh Babu and Sathya
    (3) Makkal Thilagam MGR Pothunala Mandram – Raj and Baskar
    (4) Ponmanachemmal MGR Bakthargal – M.K.Venkat, B.Unni Krishnan, D.Kumar, G.Raja, S.Velu and others

    They placed dozens of Stars, placards and paper cuttings – see the photos below.

    Most of the fans were ecstatic when milk was poured over MGR. Some showed “V” sign. Note a fan out stretching both hands, feelings that he has seen God.

    After the main function crackers are fired engulfing the whole area with smoke. All these functions takes place in middle of the busy Road. Watch the traffic!






    This is my experiment with 18 lakhs. This was said by MGR in 1958 after stupendous success of the Movie Nadodi Mannan. How humble he is. The movie was a revolutionary in tamil cinema. It had showed the movie world a new way of story telling a new way of film making, a new way of editing, a new way of techniques in double action scenes so on and so forth.

    I have taken some of the instances said by MGR in “Yaruku Vetri” way back in 1958, most of writing in video format. MGR’s education level is so poor but his writing skills is awesome when I read the Special edition by MGR Pictures. How well he knew and how clear his ideas are for instances the technical side, story side, dialogue side, music side, cinematography side, costume side, editing side and how he knew which actors to do which part etc. MGR is multi faceted that was proved if you watch Nadodi Mannan. We cannot put MGR into a position of mere actor alone.

    When he talks about the story part he says that I am not blind sided that Nadodi Mannan does not have any minus points and I am not that stupid, but I can say that it does not have more minus points. See how humbly he uses the words. MGR further goes into how the story was developed in the year 1937-38 he was in the shooting of Maya Machindra, in Calcutta (Kolkatta) one day he went with his friends to watch a Hollywood movie “If I were King” acted by Ronald Colman, one of the scene the Hero says If I become a King … but MGR did not follow what the dialogues his mind was revolving around the words If I become a King. That is the day when Nadodi Mannan was seeded in his mind, it developed slowly when the time was ripe, MGR went on to produce the movie. Why did he produce then? Because he said it is an experiment so I did not want other producers to loose money if the film fails.

    The Seed for Nadodi Mannan

    First the movie was named Uthamaputhiran with MGR and Nadigar Thilagam with same movie title. MGR then re christened the name into Nadodi Mannan with a hint on it is remake of Prisoner of Zenda at first. In the shooting of Alibaba actress Bhanumathy questioned MGR that she was also producing the same movie with the same story. She asked MGR to discontinue the movie, but MGR said politely that this story only had the King’s character from the movie but the others are different. And that he has nurtured the story for years and he has the idea to direct also. She was hesitant at first, then after some days, Bhanumathy told that she has stopped the movie that you can now take the movie as you wish, MGR thanked her whole heartedly. (Can any one in the calibre of MGR can tell the truth like this).

    Here is the Intro for most important characters of the movie, starting with M.N.Nambiyar who is also has the right to become King, if you watched whole movie you will understand that MGR has given costly costumes to Nambiyar in this movie, and also that Nambiyar is good looking. Watch for the line of Nambiyar in this clip. Followed by most memorable song “Thoongathey thambi thoongathey” written by Pattukottai Kalyana Sundaram. Followed by the clip showing the camera angle the creativity of MGR and Ramu (Camera Man) imagining the point of view of Bhanumathy through the ventilator shaft. A great achievement of those days for camera angle.

    v
    The intro of King MGR in a Chariot, look closely the intricate details of the chariot, it looks very royal. How much did MGR has spent for this chariot alone.

    Double Action Scenes:

    This is a video clip for the for the technical brilliance of MGR for the movie “Nadodi Mannan” the first conversation scene of King and the Wanderer and other scenes. Those days double action scenes are done by mask shot, that is covering half side of the film and shooting with one character and re shooting the other half of the film with other character. The character and as well the Director and Camera man should know the scene very well and they should have a good memory, the lighting plays a major role also. See editing technique of three individual shots in 2 seconds first shot King MGR walking from the left, next medium long shot showing King MGR, Wanderer MGR and the two ministers third shot both of them all these in 2 seconds. The editor was first Arumugam, he resigned from the project then came Perumal he was upto the editor for Black and white portion, he was unable to work for the remaining portions, and the assistant editors also withdrew from the project the colour portion was completed by Jambu, and he asked MGR not to mention his name in the title card. (This was said by the Director, Producer MGR)

    When King and Wanderer starts the conversation about the kingdom and the condition of the poor people the dialogues shifts from the ability of the king and commons, both MGR will be sitting in arms distance, left side was King, right was Wanderer, camera was on the side of Wanderer now then the camera pans to the left for the conversation part of King. The movement part is small or tiny for the camera, you cannot see any jerk as we know both the characters are MGR. Such is the work of the camera man Ramu. Watch the eye movement of Wanderer when King speaks his condition and his plans.

    Video clip:

    The conversation scene between King and Wanderer is good example for double action scenes, concentration should be on the technical side but remember the dialogues are also very well written and used by MGR, the dialogues are by Kannadasan and Ravindran a good balance between audio and visual.

    I added this clip to continue to show the brilliance, very simple technique but awesome to watch. Wanderer as King was speaking with the Queen enacted by M.N.Rajam. These characters standing near a big glass window. M.G.Chakrapani takes King MGR to show him that his wife is cheating King MGR. The camera shows Wanderer and Queen now the camera turns left to show the King entwined by his enemies. First it appeared to me two shots interconnected. I slowed the clip and watched frame by frame there was no jerk, here the distance between both MGR characters are more when compared to the above conversation scene between King and Wanderer. With second one I came to conclusion that Wanderer and Queen shot is back projection and the camera spins to King MGR side that is live character, watch the camera gets inside the set and you can see 3D view of King MGR side.

    Dialogue Scenes:

    I think this is one movie were MGR has spoken a lot of dialogues the dialogues are not lengthy which is supposed to be protocol for historical movies. The time was 1958 the dialogue was ruling the tamil movie world. Kannadasan who was also a D.M.K. and Ravindran is very close to MGR. Both the writers had one concept that worked well. MGR had told that both of them belonged to same kind of principles that made MGR very easy going with them.

    Video clip:

    In this clip I took the famous one liners, when Wanderer insists to give him powers to make law, both the Ministers look dumb struck watch now in a second three shots are joined. one shot prime minister looks to the side of Commander, second shot Commander looks to the side of Prime Minister and third the Prime Minister looking to MGR. I conclude that first and third shot are one shot and MGR used the last part of the first shot for third one. Remember the importance is for dialogues only but the visual is balanced evenly.

    I added this to glorify MGR because all the Actors in the world have proclaimed some heroic deeds but I feel MGR only had fulfilled what he said in the screen that he had done in his life. Look into the dialogue that he is giving away half of the property to the deaf and dumb. (Remember the Will of MGR in 1986). The other laws Wanderer as King proclaims are the one MGR done in his political career. I think MGR had some time travel mechanism that he knew what are going to be happen in the future.

    Video clip:

    This one video clip is special that I have touched the cup used by MGR in this movie. Out of these two cups which one I took into my hands I don’t know. Both are looking same. I thank Jr.MGR Pradeep the opportunity to handle the precious glass the important thing which change the Wanderer to become the King.

    T
    Only a week is left for the 50th Year of Nadodi Mannan. A special Book is being done by B.S.Raj. The book will be 65 page fully having the details of Nadodi Mannan, the records from 1958 and to the present day re-releases.

    Those who are reading this Blog and interested to write about Nadodi Mannan, can send their mail to replytomgr@live.in and write about the most liked scene in Nadodi Mannan, any interesting details about the movie which will be published in this Blog.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •