Page 128 of 401 FirstFirst ... 2878118126127128129130138178228 ... LastLast
Results 1,271 to 1,280 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1271
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    விகடன் பொக்கிஷம் சினிமா விமர்சனம் – 30-4-1972-இல் வந்தது. நன்றி, விகடன்!

    ராமன் தேடிய சீதையில் தயாரிப்பாளர்கள் தேடி எடுத்திருக்கிற கதையம்சம் சுவையானது.

    ஒரு லட்சிய மனைவியின் ஆறு குணங்கள் என்னென்ன என்று நிறைந்த வாழ்வு வாழும் ஒரு முதிய தம்பதியர் மூலம் அறிந்து, அந்தப் பெண்ணைத் தேடி மணந்துகொள்கிறான் கதாநாயகன். அந்த முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தாம் இப்படத்தின் கதை.

    பாம்பாட்டி நடனம் முதல் காபரே வரை விதவிதமான நடனங்களை ஆடிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா. ஆடை களையும் நடனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு நடனக் காட்சியில் அவருடைய ஆடை, கதாநாயகரான எம்.ஜி.ஆரே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் அளவு விரசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டாலும், அவர் நடனங்கள் கண்களுக்கு ரசமாகவே இருக்கின்றன.

    எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சற்று மாறுதலான பாத்திரம். ஏதாவது ஒரு பிரச்னையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சீரியஸாக இல்லாமல் இருப்பதே அந்த மாறுதல்! லட்சிய மனைவி வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாகவும் உல்லாசமாகவும் மாப்பிள்ளை மாதிரி தோன்றி, சிறப்பாக நடிக்கிறார். அசோகனுடன் அவர் போடும் சண்டை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

    எம்.ஜி.ஆரின் கன்னம் அதிர்ஷ்டம் செய்தது. அவர் கன்னத்தில் பாம்பு கொத்திய விஷத்தை ஜெயலலிதா தன் வாயினால் உறிஞ்சி எடுக்கிறார்! (சென்ஸார் விஷயத்தில் எல்லாரும் இப்படிச் சாமர்த்தியமாக இருக்கத் தெரிந்து கொண்டிருந்தால், கோஸ்லா கமிட்டிக்கு வேலையே இருந்திருக்காதே!)

    ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதை யைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை.

    இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால்தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1272
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    உரிமைக் குரல் (Urimaik Kural)



    விகடனுக்கு நன்றி.

    .

    ———————————–

    நாட்டுப்புறக் கதைக்குத் தேவையான ஒரு பணக்கார மிராசுதார் குடும்பம். மிராசுதாரின் ‘வில்லன்’ மகன், நாணயமான ஒரு சின்ன மிராசுதார், அவருடைய கதாநாயகத் தம்பி, அழகான கதாநாயகி, எடுபிடி அடியாட்கள் – இவர்களுடன் காதல், போராட்டம், அண்ணன் தம்பி பாசம், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துவிட்டால் விறுவிறுப்பு இல்லாமல் போகுமா?

    ஆரம்பமாக, வெள்ளைக் குதிரை பூட்டிய ரேக்ளாவில் வெகு கம்பீரமாக வரும் கதா நாயகன் கோபி (எம்.ஜி.ஆர்), கடத்திச் செல்லப் படும் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். அதிலிருந்து சோதனை மேல் சோதனை! பொதுப் பணத்தை கோபியின் அண்ணன் பறி கொடுக்கிறார். அண்ணனும் தம்பியும் நிலத்தை அடமானம் வைக்கிறார்கள். கோபியின் காதலியை (லதா) மிராசுதாரின் மகன் (நம்பியார்) மணந்து கொள்ள ஏற்பாடாகிறது. கல்யாண நாளன்று மணப் பெண்ணை மீட்டுச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்கிறான் கோபி. அண்ணன் தம்பி உறவு முறிகிறது. கதா நாயகன் தாக்கப்படுகிறான். நிலம் ஏலத்திற்கு வருகிறது. கடைசியில், உரிமைக் குரல் எழுப்பி நியாயம் கிடைக்கச் செய்கிறான் கோபி.

    கதையின் உயிரோட்டம் எம்.ஜி.ஆர்! காதல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் இயற்கையாக அமைந்திருக்கின்றன. குறும்பும், கொஞ்சலும், கொந்தளிப்புமாக லதா சளைக்காமல் நடித்திருக்கிறார்.

    பிரிவினை செய்யப்பட்ட வீட்டில் கீற்றுத் தடுப்புக்கு அப்பால் எம்.ஜி.ஆரும் லதாவும் நடத்தும் காதல் விளையாட்டும், அந்த சரஸங் களைக் காது கொடுத்துக் கேட்கக் கூசி மெல்ல வும் முடியாமல், விழுங்கவும் முடியாதபடி அண்ணன் சகஸ்ரநாமம் தவிப்பதும் இனிமை! சகஸ்ரநாமம் பக்குவமான நடிப்பின் உருவமாக வருகிறார்.

    வயலில் நடக்கும் சண்டையையும், வழியில் நெருப்பு மூட்டப்படும் கிளைமாக்ஸ் காட்சியையும் டைரக்டர் படுவேகத்தில் படமாக்கியிருக்கிறார். பாராட்டலாம்.

    தையற்காரர் தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு கோஷ்டி யின் முற்பகுதி நகைச்சுவை முழுச் சிரிப்பு. சச்சுவிடம் ஒரு மெருகு தெரிகிறது.

    பாடல்கள் அதிகம். ‘கல்யாண வளையோசை’, ‘உனக்காகவே நான் வாழ்கிறேன்’ பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன.

    மூலக் கதையில் டைரக்டர் கொஞ்சம்கூட கை வைக்க விரும்பவில்லை போலிருக்கிறது. கதாநாயகன் கோபியின் உடை யைப் பார்க்கும்போது ஆந்திர விவசாயி அல்லவா நினைவுக்கு வருகிறார்! கிராமியப் பின்னணிகளும் அநேகமாக ஆந்திரத்தை தான் நினைவுபடுத்துகின்றன.

    குரலில் உற்சாகம் இருக்கிறது.

  4. #1273
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R.'s Unique Triumph
    (An extract of an article published on 7-8-1965)
    A NEW milestone—significant in every respect—was reached the other day when Vijaya Combines

    Productions and the Madras City distributors, Emgeeyar Pictures, celebrated the Silver Jubilee

    Week of their remarkable colour picture 'Enga Veettu Pillai*, which has proved to be a great money spinner. As described aptly by Mr. A. L. Srinivasan, the new President of the Film Federation of India, the success of 'Enga Veettu Pillai' symbolises the success of the Tamil film industry. The makers, the artistes and the technicians responsible for creating such ah unforgettable film have earned the salute of the motion picture industry in South India.

    In recent years, only very few pictures had the distinction of celebrating the Silver Jubilee. They were 'Kalyana -Parisu', 'Pava Mannippu', 'Pasamalar' and 'Kathalikka Neramillai'. Yet. the success of those films cannot equal that of 'Enga Veettu Pillai'. The difference lies in this. While they were shown only at one picture house, 'Enga Veettu Pillai' has been drawing bumper crowds at three cinemas—Casino, Broadway and Mekala—in Madras. This apart, the film has had a Silver Jubilee run in four other district centres in the South—Madurai, Coimbatore, Tiruchirappalli and Thanjavur.

    It is a' record, about which the makers can feel proud.

    Statistical figures reveal that the Government has received a bigger share of income from this film from the three theatres in the City than the distributers and the exhibitors. As many as 12 lakhs of people in Madras City, with a population of over 20 lakhs, have seen this film. The total income to the State by way of entertainment tax on this film throughout South India is estimated to be in the region of Rs. 50 lakhs. These staggering figures and the enormous box-office pull of 'Enga Veettu Pillai' have restored the needed confidence in the minds of the distributors to invest more and more in production.

    What are the causes for the success of 'Enga Veettu Pillai'? The reasons are not far-to seek. A casual appraisal will convince everyone that the picture's universal appeal, capable of ensuring a repeat audience, has primarily contributed to its unqualified success. Besides wholesome entertainment values, the moral of the film, which is most inspiring, is another contributing factor. On top is the magnificent performance of the lead player, M. G. Ramachandran, in the dual role of the nitwit and his dashing, enterprising twin brother. The gamut of emotions displayed by M.G.R. in the dual role and particularly his interpretation of the nitwit have won for him the unstinted admiration of critics, connoisseurs and cinegoers. All of them have come to the conclusion that M.G.R., who is always capable of good acting has made great strides in the field of histrionics. The picture indeed marks the unique triumph of M.G.R. In the earlier years, M.G.R.'s own film 'Nadodi Mannan' was considered a great box-office hit. And now he has beaten his own record with his latest film, 'Enga Veettu Pillai', which is far superior in production and technical values to his own earlier hit. Further, it is in opulent colour. The actual "shooting" of the Him was completed within a record period of 45 days while the entire production took up less than two and a half months. This is a record for any colour film produced in India. According to B. Nagi Reddi and Chakrapani, the "de jure" makers of the film, the speed and efficiency with which the film was completed should be attributed tซ the indefatigable work put in by M.G.R. as the "de facto" producer of the film, besides shouldering the dual role in it. The latter worked for nearly sixteen to eighteen hours each day on the film and supervised' every aspect of its production.

    The impression about M.G.R. all the while has been that he is incapable of acting and that he is fit only for swashbuckling roles. Th.e discerning fiimgoers have taken pride in declaring that they scrupulously avoid seeing his pictures. But 'Enga Veettu Pillai' has dispelled all sorts of misgivings about him. It has, on the other hand, proved that his success as an actor has been mainly due to his talent, sincerity, humility, hard work and a spirit of camaraderie displayed by him. Both on and off the screen. His fans are now legion.

  5. #1274
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    "1985-ம் வருடம்... #எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து ஆப்பரேஷன் முடிச்சுட்டு இந்தியா வரப்போறாரு.

    அப்ப சில சொந்த வேலை காரணமா திருநெல்வேலிக்கு போயிருந்தேன்.

    "ச்சே...தலைவர் வரும்போது நேர்ல பாக்கமுடியலையே"-ன்னு தவிப்பு எனக்கு....

    அந்த நேரத்துல தமிழ்நாடு முழுக்க ஒரே வதந்தி...

    "எம்.ஜி.ஆர். உயிரோடவே இல்லை...எலெக்சன்ல ஜெயிகிறதுக்காக ஆர்.எம். வீரப்பனும், ராஜிவ்காந்தியும் மக்களை ஏமாத்துறாங்க" அப்படி, இப்படின்னு வதந்தி...

    ஏன்...? தமிழ்நாட்டுல அ.தி.மு.க தலைவர்கள் சிலரே

    "தலைவர் உயிரோட இருக்காரா... இல்லையான்னு தெரியலே' என்று பேட்டியெல்லாம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க...

    மக்களுக்கோ ஒரே குழப்பம்...எதை நம்புறதுன்னு தெரியலே...
    இந்த நிலையில செய்தி வருகிறது..

    "எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து நாளை திரும்பிவருகிறார்" என்று.

    அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்

    ஒட்டு மொத்த இந்தியாவும் "ஆப்பரேசனுக்கு பிறகு எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்னு" ஒரே எதிர்பார்ப்பு.

    அப்பொழுது எங்கள் ஊரில் டி.வி. வரவில்லை...ஆகையால் ரேடியோவில் வர்ணனை செய்து கொண்டு இருந்தார்கள்.

    எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து சென்னை வருவதாக திட்டம்.

    எம்.ஜி.ஆரை வரவேற்க கிண்டியில் உள்ள ராணுவப்படை மைதானத்தில் மிகப் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்...

    காலை 7 மணிக்கு விமானம் சென்னை வந்துவிடும் என்பதால் முதல் நாள் இரவே லட்சோபலட்சம் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்துவிட்டனர்.

    திருநெல்வேலியில் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள டீக் கடையில் ரேடியோவில் நேரடி வர்ணனையை நானும் நண்பர்கள் சிலரும் கேட்டுக்கொண்டு இருந்தோம்...

    நேரம் போகப்போக வர்ணனையை கேட்கும் கூட்டம் அதிகமாகிகொண்டே இருந்தது...அந்த அதிகாலை வேளையில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டுவிட்டனர்...

    எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவருக்கு கை, கால் வேலை செய்யாது என்று சொன்னதாகவும் அதனால் விமானத்தில் இருந்து இறங்கும் அவரை ஒரு வீல்சேரில் அழைத்து ஆம்புலன்சில் ஏற்றி நேராக மேடைக்கு கொண்டு வந்துவிட வேண்டும்...என்பது r.m. வீரப்பன் அவர்களின் திட்டம்...

    மேடையில் ஆம்புலன்ஸ் ஏறுவதற்கு வசதியாக ஒரு ரேம்ப் அமைத்து இருந்தனர்... மற்ற தலைவர்கள் ஏற வலது பக்கம் படிக்கட்டுக்கள்...

    இப்பொழுது ரேடியோ வர்ணனை...

    டெல்லியில் இருந்து எம்.ஜி.ஆர்., புறப்பட்டார்...

    வர்ணனையை கேட்ட அனைவரும் கை தட்டி, விசில் அடித்து ஆரவாரம்...

    நேரம் செல்ல செல்ல அனைவருக்கும் டென்ஷன்...

    இனிமேல் எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்...

    ஓடி, ஆடி சினிமாவில் சண்டை போட்டாரே இனிமேல் காலம் முழுவதும் வீல் சேரில் தான் இருப்பாரா...?

    பக்கம்,பக்கமாக வசனம் பேசினாரே...இனிமேல் அவரால் பேச முடியாதா...? இப்படி எல்லோர் மனதிலும் கவலை.

    மணி 7...

    மீண்டும் ரேடியோ வர்ணனை...

    "முதல்வர் வந்த விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கும் என்று அறிவிக்க பட்டு இருக்கிறது..."

    மீண்டும் விசில், கைதட்டல், ஆரவாரம்...

    15 நிமிடங்கள் போய்இருக்கும்...

    மீண்டும் ரேடியோவில் செய்தி...

    "சென்னை விமான நிலையம் முழுவதும் ஒரே பனிமூட்டமாக இருப்பதால் m.g.r. வந்த விமானம் தரை இறங்க முடியவில்லை...ஆகவே விமானத்தை பெங்களூருக்கு திருப்பலாமா என்று விமானிகள் ஆலோசித்து வருகின்றனர்..." என்று ரேடியோவில் செய்தி...

    "ச்சே..என்னடா இது...தலைவர் வருவாரா...மாட்டாரா...?"

    "தலைவர் உண்மையிலேயே உயிரோடு இருக்காரா...?"

    "ஏதோ கோல்மால் நடக்குது..."

    என்றெல்லாம் விமர்சனங்கள்...இந்த ரேடியோ அறிவிப்புக்கு பிறகு.

    20 நிமிடங்கள் போயிருக்கும்...

    பனிமூட்டம் விலகி விமானம் தரை இறங்க போகிறது என்று அறிவிப்பு...

    இங்கு உற்சாகம்...கொண்டாட்டம்...

    எம்.ஜி.ஆரை அழைத்துவர ஓடுபாதைக்கே ஆம்புலன்ஸ் செல்கிறது.
    விமானத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., இறங்குகிறார்...

    "எதற்காக ஆம்புலன்ஸ்" என்று திட்டுகிறார்..?

    அவரது 4777 அம்பாசிடர் கார் வந்து இருக்கிறது... அதில் ஏறி உட்காருகிறார்...கார் புறப்டுகிறது...

    வழியெங்கும் மக்கள் வெள்ளம்...அவர்களை பார்த்து கை அசைத்துக்கொண்டே ராணுவ, மைதானத்திற்கு சென்றடைகிறார்.

    ஆம்புலன்சில் வருவார் என்று எதிர் பார்த்த தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர்., அம்பாசிடர் காரில் வருவதை பார்த்து அதிர்ச்சி...!

    இருந்தாலும் அதை சமாளித்துக்கொண்டு "காரிலேயே மேடைக்கு போய்விடலாம்" என்று ஆர்.எம்.வி சொல்கிறார்...

    எம்.ஜி.ஆர்., அவரை திட்டிவிட்டு வலது புறம் இருக்கும் படிக்கட்டுகளில் வழக்கம்போல வேகவேகமாக ஏறி ...

    மேடைக்கு வந்து அனைத்து திசைகளிலும் கைகாட்டுகிறார்...பின் பெண்களைப்பார்த்து தலையைகுனிந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்குகிறார்...

    அப்பொழுது வந்த கைதட்டல், விசில் சத்தம் சென்னை முழுவதும் எதிரொலித்து இருக்கும்.
    ரேடியோவில் வர்ணனையை கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லிக்கொள்கிறோம்...

    இப்பொழுது தலைவர் பேசுவார் என்று அறிவிப்பு...

    ஒரே நிசப்தம்...

    எல்லோருமே தலைவரால் பேச முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்த நேரம்...

    "பெரி......யோ...ர்....க......ளே, தா.....ய்....மார்....க.....ளே...."

    கொஞ்சம் வார்த்தை தடுமாறியது...பலரது கண்களில் கண்ணீர்...

    "என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே..."
    தெளிவான உச்சரிப்பு. கம்பீரமான அதே குரல்...

    இப்பொழுது எழுந்த ஆரவாரத்தை பதிவு செய்து இருந்தால் கின்னஸ் சாதனையாகி இருக்கும்...அப்படி ஒரு கைதட்டல்...

    ரேடியோவில் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும், கூச்சல் இட்டுக்கொண்டும் இருந்ததால் அதன்பின்பு எம்.ஜி.ஆர்., என்ன பேசினார் என்பதை கேட்க முடியவில்லை...

    வழக்கமாக காலை 6 மணிக்கு வரும் தினமலர் அன்று 11 மணிக்கு தான் வந்தது...பேப்பரை வாங்கிப் பார்த்தால் எம்.ஜி.ஆர்.,

    அமெரிக்காவில் இருந்து திரும்பிய போடோக்கள். மேடையில் ஏறிய காட்சி, இரட்டைவிரலை காட்டிய காட்சி. பெண்களைப் பார்த்து தலைகுனிந்து வணங்குவது என்று முதல் பக்கம் முழுவதும் படங்களை போட்டு இப்படிதலைப்பு வைத்திருந்தார்கள்...

    நினைத்தேன்_வந்தாய் 100வயது"

    courtesy . Facebook

  6. #1275
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    பள்ளி குழைந்தைகள் பல் விளக்கவேண்டும் என்று பல் பொடி வழங்கியவர் பசி இல்லாமல் ஒருவேளை உணவாது உண்ணவேண்டும் என்று சத்துணவை மதிய உணவாக தரம் உயர்த்தியவர் விவாசியிகலின் கடனை வட்டியை ரத்து செய்தவர் ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்த்தவர் பல துறைகளில் பல சாதனைகளை படைத்த வள்ளல் என்று பாடுவேன்

    இதய தெய்வம் புரட்சி தலைவர் ஒரு அதிசிய பிறவி. அவரை போல ஒரு மனிதர் தோன்ற பல நூறு ஆண்டுகளாவது ஆகும். மக்களிடம் தனது செல்வாக்கை, தான் மறைந்த பிறகும் நிலை நிறுத்தி உள்ள ஒரு தெய்வ பிறவி. தனது ஆட்சி காலத்தில் மக்களின் குறைகளை அறிந்து அதற்கேற்ப விலைவாசியை கட்டுபடுத்தி, நல்ல ஒரு ஆட்சியை தந்த தலைவர். தனது கொள்கைகளை திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து பிறகு அவர்களது ஆதரவால் தனது இறுதி மூச்சு வரை அவர்களுக்காக தனது கொள்கைப்படி ஆட்சி செய்த மாசற்ற மாமனிதர். இன்று ஊழல் மூலம் பல லட்சம் கொடிகளை அள்ளி குவித்துள்ள தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்வளித்த வள்ளல். இருமுறை எமனை வென்ற அவரது ஆயுள் மட்டும் சற்றே நீடித்திருந்தால் திருக்குவளை குடும்பம் அட்ரஸ் இல்லாமல் போயிருக்கும்.

    ஏழைகளின் துயர் துடைத்த வள்ளல்.. தமிழக மக்கள் மீது அளவில்லாத அன்பும், பரிவும் கொண்ட உத்தம தலைவர். அவரது இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. இன்னொரு எம்.ஜி.ஆர் நமக்கு கிடைக்கவே மாட்டார்.

    பொன்மனச்செம்மல் என்றும், புரட்சி நடிகர் என்றும், புரட்சித் தலைவர் என்றும், மக்கள் திலகம் என்றும், எங்கள் வீட்டு பிள்ளை என்றும், சத்துணவு தந்த சரித்திர நாயகன் என்றும், வாத்தியார் என்றும், இதயக்கனி என்றும், இதய தெய்வம் என்றும்........ இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். "எம்.ஜி.ஆர்" என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம்.

    ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மொட்டைகொபுரமாஇ இருந்ததை மாற்றி வானளாவிய வண்ணமிகு கோபுரமாய் மக்கள் மனம் மகிழும் வண்ணம் கட்டியதில் பெரும்பங்கு எம் ஜி ஆருடைது....அதைப்பாராட்டி ஸ்ரீரங்கம் ஜீயர் சொன்னார்...இவர் எம் ஜி ஆர் அல்ல...எம் ஜீயர் என்று....இதைவிடவா அந்த மாபெரும் மனிதருக்கு ஒரு சான்று வேண்டும்.

    பொது நீதியிலே, புது பாதையிலே வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன். .. இங்கு ஊமைகள் ஏங்கவும், உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன் ? '' என்று கூறியவர், தன் அன்புக்குரிய, எந்த கைம்மாறும் எதிர்பார்க்காமல், தங்களின் உயிருக்கும் மேலாக - தம் மீது அன்பு வைத்திருந்த தமிழ்நாட்டு மக்களை அவரும் தன் உயிருக்கும் மேலாக மதித்துள்ளார் என்பதையும், அதனாலேயே அவருக்கு '' பொன்மனச் செம்மல்'' என்ற பெயருள்ளது என்பதையும் நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், அவற்றில், இந்த செய்தி ஒரு மணிமகுடமாகும்.............................

    Courtesy from comments portion.

  7. #1276
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like

    எம்ஜிஆரின் ''தில் ''

    1972 -1973 எம்ஜிஆர் தனி மனிதராக நின்று திரை உலகில் சந்தித்த போராட்டங்கள்

    ஆளுங்கட்சியின் அதிகாரம்
    காவல் துறை அராஜகம்
    திரை அரங்கு உரிமையாளர்களுக்கு மிரட்டல்
    விநியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை
    படத்தயாரிப்பளர்களுக்கு உத்தரவுகள்
    எம்ஜிஆர் ரசிகர்களுக்கு காவல் துறை நெருக்கடிகள்
    எம்ஜிஆர் மன்றங்களை மூட மும்மர பணிகள்
    பத்திரிகைகளில் எம்ஜிஆர் பெயர் , படங்கள் , செய்திகள் இருட்டடிப்பு /
    அரசியல் மேடைகளில் எம்ஜிஆரை தரமின்றி தாக்கி பேசுதல்

    எம்ஜிஆரின் எதிர்காலம் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்தது .அன்றைய தினம் பலம் பொருந்திய நடிகர சங்கத்திலிருந்து ஒரு நடிகர் கூட எம்ஜிஆருக்கு ஆதரவு தெரிவிக்க இல்லை .காமராஜர் , கருணாநிதி , மற்றும் இ.,காங் தலைமை அனைவரும் எம்ஜிஆரை தாக்குவதில் மும்மரமாக இருந்தனர் .

    எம்ஜிஆர் தன்னுடைய ரசிகர்களையும் கட்சி தொண்டர்களையம் , மக்களையும் மட்டுமே நம்பினார் . மனவலிமை கொண்ட எம்ஜிஆர் மக்கள் சக்தியின் பெரும் ஆதரவோடும் ரசிகர்களின் முழு ஒத்துழைப்போடும் களத்தில் இறங்கினார் .

    முதல் வெற்றி .....உலகம் சுற்றும் வாலிபன் .

    எம்ஜிஆரின் உலகம் சுற்றும்வலிபன் சந்தித்த போராட்டங்கள்
    1. நேரிடையாகவே திமுக வை சேர்ந்த மதுரை முத்து படம் வெளிவராது .வர விடமாட்டோம் என்று சவால் விட்டார் .
    2. படத்தின் ரீ ரெக்கார்டிங் நேரத்தில் ஏகப்பட்ட தொல்லைகள் மாநில அரசால் தரப்பட்டது .
    3. படத்தின் நெகடிவ் சேதாரப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது
    4. ஒரு வேளை பட வேலை முடிந்துவிட்டால் திரை அரங்கிற்கு வரவிடாமல் தடுக்க திட்டங்கள் தீட்டப்பட்டது


    எல்லா சவால்களையும் எம்ஜிஆர் இன்முகத்துடன் எதிர்கொண்டு தான் குறிப்பிட்டபடி 11.5.1973 அன்று 39 திரை அரங்குகளில் திரையிட முடிவு செய்து 7.5.1973 அன்று அலைஓசை , தென்னகம் மற்றும் தினமணி முன்பதிவு விளம்பரம் தந்தார் .

    முன்பதிவு தினத்தன்று முன்னாள் இரவே சென்னை அண்ணா சாலையில் ரசிகர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது .
    திரை உலக வரலாற்றில் புதிய வரலாற்றை எம்ஜிஆர் நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்

    உலகம் சுற்றும் வாலிபன் - 11.5.1973 அன்று 39 அரங்குகளில் வெளியானது .
    படமும் மாபெரும் வெற்றி
    வசூலில் புதிய . வரலாற்றை உருவாக்கினான் உலகம் சுற்றும் வாலிபன்
    எம்ஜிஆர் திரை உலகை விட்டு விலகிய பின்னரும் அந்த சாதனையை யாராலும் 1979 வரை முறியடிக்க இயலவில்லை.
    அதுதான் எம்ஜிஆரின் தில் ஆன சாதனை .

    courtesy fb

  8. #1277
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள். *

    எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. *

    எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர். *

    எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'. *

    எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
    *
    எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'. *

    எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'. *

    எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'. *

    எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'. *

    எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி',

    எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.

    எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.

    எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.

    எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.

    எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.

    எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.

    எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'. எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.

    எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.

    எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.

    எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான். எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.

    எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்). எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.

    எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.

    எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.

    அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'.
    இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.

    எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.

    எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.

    எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'

    . எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.


    எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.

    எம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார். எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப் சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.

    எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம்

    'படகோட்டி'. எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.


    courtesy - net

  9. #1278
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    மீண்டும் மீண்டும் எம்ஜிஆர்


    பழையகாலத்துத் தமிழ் சினிமாக்களை இப்போது மீண்டும் பார்க்கவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி இணையம்தான் என்றாகிப்போன காலம் இது. யூடியூபில் மட்டுமே பழைய படங்களைக் காண இயலும் என்கிற நிலை தோன்றி அநேக காலம் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்த கதி.

    உலகமெங்கும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை மங்கச் செய்திருக்கிற டிவிடி வருகை மற்றும் பரவலாகிவிட்ட இணையதளப் பயன்பாடு போன்றவை சினிமாக்களின் திரையரங்கத் திரையிடல்களுக்குப் பெரும் சவால்களாகியிருக்கின்றன. முதல்முறை வெளியீடுகளுக்குக்கூட வசூல் உத்தரவாதமற்ற நிலைமை உருவாகியிருக்கும் இன்றைய காலத்திலும் தமிழில் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் திரையரங்குகளில் திரையிடல் வாய்ப்பையும் ரசிகர்களின் அமோக ஆதரவினையும் பெற்றிருப்பவை எம்ஜிஆர் படங்கள் என்றால் அது மிகையல்ல.

    எம்ஜிஆர் நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ஒருசில படங்கள் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிடப்பட்டு ஒரு கலக்குக் கலக்கியது பல திரையரங்குகளில்.

    புதிதாகத் தயாரிக்கப்படும் படங்களுக்குக்கூடக் கிடைக்காத பெரும் வரவேற்பைக் காலம்தோறும் எம்ஜிஆர் படங்கள் பெற்றுவருவதை உள்ளபடியே ஆய்வுக்குட்படுத்தினால் இங்கே எத்தனை ரசனை மாற்றங்கள் வந்தபோதிலும் எம்ஜிஆர் படங்களுக்கான வரவேற்பினை அவற்றால் ஒன்றும் செய்துவிட இயலவில்லை என்பதற்கான அடிப்படைகளை அறிந்துகொள்ளவும் இயலும். இந்தச் சூழலில் இதோ மற்றுமொரு எம்ஜிஆர் சினிமா 48 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, 5.1 ஒலி நுட்ப அமைப்புடன், சினிமாஸ்கோப் திரைப்படமாக வெளிவரத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

    எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப்படத்தில் மறைந்த ஜெயலலிதாவும், லட்சுமியும் அவருக்கு ஜோடிகள். அவர்களுடன் அசோகன், வி.கே.ராமசாமி, சோ போன்றோரும் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை.

    ப.நீலகண்டன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 1970ல் இந்தப் படம் முதன்முதலில் வெளியானபோதே மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. சென்னையில் மட்டும் அது திரையிடப்பட்ட அரங்குகளில் தொடர்ந்து அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என். கனகசபை தயாரிப்பில் உருவான இந்த மாட்டுக்கார வேலன் படத்தின் டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட்ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறாராம்.

  10. #1279
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Courtesy - Mr Bhaskar - chennai
    Last edited by ravichandrran; 11th June 2018 at 08:08 PM.

  11. #1280
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •