Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மெல்லிசை மன்னரின் அற்புத இசையமைப்பில் வரிசை கட்டி வந்து கொண்டிருந்த படங்களில் ஒன்றுதான் ஒளிவிளக்கு. 1968 ல் வெளியான இப்படம் திரு எம்.ஜி.ஆரின் நூறாவது படம் என்ற பெருமையும் பெற்றது.

    ஆனால் இப்படத்தின் பாடல்களைப் பற்றி பேசும் வாய்ப்பு வருபோதெல்லாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குறிப்பிடுவது இப்படத்தில் வரும் இரண்டு பாடல்களைப்பற்றி மட்டும்தான் என்பது, உண்மையான இசையை ரசிக்கும் ரசிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    நான் சொன்ன இரண்டு பாடல்களில் ஒன்று, பி.சுசீலா பாடிய
    "ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்"
    என்ற பாடல். இதை எல்லோரும் ஒருமித்து பாராட்டிப்பேசக் காரணம், அடிபட்டுக்கிடக்கும் கதாநாயகனைக் காப்பாற்ற அனைத்து மதத்தவரும் பிரார்த்தனை செய்வதாக காட்டப்படுவது. மற்றும் கதாநாயகர் எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம் போன்றவற்றை தனிப்பட்ட முறையில் புகழும்

    "உள்ளமதில் உள்ளவரை.... அள்ளித்தரும் நல்லவரை
    விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்"

    போன்ற வரிகள். பல்லவிக்கு முன் தொகையறாவோடு அமைந்த பாடல் இது. இசையமைப்பு அருமை என்பதில் சந்தேகமில்லை.

    அடுத்து அனைவரும் குறிப்பிடும் இன்னொரு பாடல்

    "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
    நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடிதானுங்க"

    குறவன் குறத்தி பாடுவதாக அமைந்த இப்பாடலில் திரு எம்.ஜி.ஆரும் செல்வி ஜெயலலிதாவும் குறவன் குறத்தியாக வேடம் கட்டி ஆடியதால் புகழ்பெற்றது.
    இவையிரணடையும் தவிர்த்து அவர்கள் குறிப்பிடுவதானால்
    "தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா" என்ற டி.எம்.எஸ்.பாடலைச் சொல்வார்கள். அதற்கும் காரணம் கதாநாயகன் இப்பாடலில் குடிப்பழக்கத்தின் கேடுகளைச் சொல்வதனாலும், ஒரு காட்சியில் அவர் ஐந்து வேடங்களில் தோன்றுவதனாலும்தான்.

    ஆனால் இம்மூன்றையும் தாண்டி, உண்மையிலேயே இசையை ரசிக்கும் ரசிகர்களுக்கு அரிய விருந்தாக அமைந்த மூன்று முத்தான பாடல்கள், அதே ச்மயம் மற்றவர்களால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டவை

    "நான் கண்ட கனவில் நீயிருந்தாய்"

    "ருக்குமணியே...பப்பர..பர...பர.."

    "மாம்பழத்தோட்டம் மல்லிகைக் கூட்டம்"

    ஆகிய மூன்று முத்தான பாடல்கள்தான். நாமும் அவற்றை கண்டுகொள்ளவிட்டால் எப்படி..?. அதற்குத்தான் இந்த சின்ன பதிவு.

    Courtesy msv times
    saradhaa sn

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •