Page 347 of 401 FirstFirst ... 247297337345346347348349357397 ... LastLast
Results 3,461 to 3,470 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #3461
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரா….எனக்குத் தெரியாது!
    ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.

    கண்விழித்தவாறே வள்ளல் வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். வள்ளலின் கார் அவரைக் கடந்து செல்கிற போது, வள்ளலின் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸூக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார்.

    உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார்.
    “பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.

    நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று வள்ளல் வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.!

    லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.

    “இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் வள்ளலிடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரனின் நேர்மை, செம்மலை சிலிரக்க வைத்து விட்டது.!

    வள்ளலின் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிகான் வாசனையையும், வைத்து, இது வள்ளலின் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது!

    அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை வள்ளலைப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது.

    “நான் தான் எம்.ஜி.ஆர்”

    “கேள்விப்பட்டிருக்கிறேன்”

    பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.

    “என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?”

    “நான் சினிமாவே பார்ப்பதில்லை. “புரட்சித்தலைர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.

    போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்”என்கிறார்.

    “ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே”

    “சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. “நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி.

    வள்ளல் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார்.

    அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார் வள்ளல்.

    இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.

    டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.

    கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா? என்கிறார். வள்ளலும் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர். அந்த போலீஸ்காரர்கள்.

    மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் வள்ளல், போலீஸ்காரர் மறுக்கிறார்.

    “நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த வள்ளலின் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர். பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்... Thanks Friends...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3462
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R.பற்றி!!

    நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் ஒரு துக்க வீட்டிற்கு ஹைதராபாத் சென்றிருந்தப் பொழுது , அங்கேயே மாரடைப்பால் காலமானார் . அவரது மறைவுச் செய்தி மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .
    தேங்காய் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு மரியாதை செலுத்த வரும் நிலையில் மக்கள் திலகத்தின் உடல் நிலை இல்லை என்பதால் , ஜானகி அம்மையார் மட்டும் மரியாதை செலுத்த வருவார் என்றும் , அது வரை இறுதி ஊர்வலம் கிளம்ப வேண்டாம் என்றும் முதலில் தெரிவிக்கப் பட்டது .
    ஆனால் திடீர் என்று , மக்கள் திலகமே வருகிறார் என்று தெரிவித்தனர் , அவரும் வந்தார் , நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்தப் பொழுதும் , அங்கே அவர் வந்து தேங்காய் ஸ்ரீநிவாசனுக்கு மரியாதை செலுத்தியதுடன் , அவரது முகத்தை பார்த்தப் படி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் .
    பின்னர் கிளம்பும் பொழுது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகனை மட்டும் தனது கார்க்குள் ஏறச் சொன்னார் ... இந்த நேரத்தில் எங்கே அழைத்துச் செல்கிறார் முதல்வர் என்று அனைவரும் புரியாமல் திகைத்து நிற்க , கார் சற்று தூரம் சென்று நின்றது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகன் இறங்கி வந்தார் , அவர் கையில் பொட்டலம் கட்டிய படி பணக் கட்டு

    உலகம் சுற்றும் வாலிபன் , படபிடிப்பு , ஹாங்காங்கில் , யார் யாருக்கு என்றைக்கு பிறந்த நாள் என்று மக்கள் திலகம் டைரியில் குறித்து வைத்திருப்பார் , அன்று , நாகேஷின் பிறந்த நாள் ...
    அனைவரையும் அழைத்தார் மக்கள் திலகம் , " இன்று இரவு 10 மணிக்கு சின்ன பன்க்ஷன் இருக்கு , எல்லோரும் கலந்துக் கொள்ள வேண்டும்" என்றார் .... என்ன பன்க்ஷன் என்பதையும் அவரே விவரித்தார் .
    ஆனால் அன்று இரவு நடந்ததோ , பெரிய பங்க்ஷன் , பணத்தை பற்றியெல்லாம் மக்கள் திலகம் கவலை படவில்லை , நாகேஷுக்கு 9 கற்கள் பதித்த வைர மோதிரத்தை பரிசாக அளித்தார் ... அதை நாகேஷ் தான் இறக்கும் வரை கையில் அணிந்திருந்தார்

    எங்க வீட்டு பிள்ளை , படத்தை தயாரித்தவர் நாகிரெட்டி , படம் 100 நாட்களையும் தாண்டி மிகப் பெரிய வெற்றியாக அமைந்து விட்டது ... இவ்வளவு பெரிய வெற்றியாக இந்தப் படம் அமைந்திடும் என்று எதிர்பார்கவில்லை , அதனால் உங்களுக்கு பேசிய சம்பளத்தை விட அதிகமாக தனியாக ஒரு தொகையை தரப் போகிறேன் , நீங்க அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் திலகத்திடம் நாகி ரெட்டி வற்புறுத்த ...
    "சரி , அந்தத் தொகையை வாகினி ஸ்டுடியோ ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுங்கள் " என்று கூறி விட்டார் மக்கள் திலகம்

    ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியும் பொழுதும் , தன்னுடைய சம்பளத்தை பெறுவதற்கு முன்னர் , திரைப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து ஊழியர்கள் , நடிகர்கள் , டெக்னீஷியன்களையும் தனித் தனியே அழைத்து , அவர்களுக்கான சம்பளம் எவ்வளவு , அது முழுவதுமாக வந்து விட்டதா என்று விசாரிப்பார் மக்கள் திலகம் ...
    அதுமட்டுமில்லாமல் , சம்பளம் 5000 என்றால் , தயாரிப்பாளரை அழைத்து 7000 என்று கொடுக்கச் சொல்வார் , அதை எந்த தயாரிப்பாளரும் மீற முடியாது ...
    அனைவருக்கும் சம்பளம் வந்து விட்டது என்று அறிந்துக் கொண்ட பின்னரே , தனது சம்பளத்தை பெற்றுக் கொள்வார் மக்கள் திலகம் .... Thanks Friends...

  4. #3463
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 20 நிமிடம் மட்டும் தோன்றும் அவசர போலீஸ் 100 17-10-1990 அன்று வெளியானது.சென்னை அலங்கார் 58 நாள் மகாராணி 44 நாள் வசந்தி 58 நாள் கமலா 51 நாள் ஓடியது.
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த 135 வது படமாக வெளிவந்த அவசர போலீஸ் 100 சென்னை அலங்கார் திரையரங்கில் திரு.பாஸ்கர் திரு.பிரஸ் பெருமாள் தலைமையில் இயங்கும் கலை வேந்தன் எம்ஜிஆர் அறக்கட்டளை 135 ஸ்டார் கட்டி தியேட்டரில் சாதனை செய்தார்கள்.... Thanks Friends...

  5. #3464
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது தமிழக அரசுக்கு எம்.ஜி.ஆர் பக்தர்கள் விடுக்கும் ஒரு அன்பான மற்றும் பணிவான வேண்டுகோள். தலைவர் எம்.ஜி.ஆர் மீது அளவு கடந்த பக்தி,மரியாதை வைத்துள்ளோம்.நூற்றாண்டு கடந்தும் இன்னும் அவரை தெய்வமாகவே நினைத்து கோவில்கள் கூட கட்டி வணங்கிவருகிறார்கள்.ஆக இரட்டை இலை எம்.ஜி.ஆர் பக்தர்கள் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் கணிசமாக உள்ளனர். நமது அரசு மதுரைக்கு எம்.ஜி.ஆர் பஸ்ஸ்டாண்ட்,கோயம் பேடுக்கும் எம்.ஜி.ஆர் பஸ்டான்ட் பெயர் வைத்தது மகிழ்ச்சி.தலைவர் மீது பற்று வைத்துள்ள விசுவாசிகள் அரசில் உள்ளனர் என்று இந்த பொருளில் நாங்கள் மகிழ்கிறோம். கோயம்பேடுக்கு ' புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேரூந்து நிலையம்'என்று பெயர் சூட்டப்பெற்றுள்ளது. நமது தலைவரை நாம் ஒரு மாபெரும் கட்சியின் தலைவராக அழைத்த பெயர் புரட்சித்தலைவர்.ஆனால் இன்று அவர் இந்தியாவுக்கும் உலகுக்கும் உயர்ந்த மக்கள் செல்வாக்கு பெற்றவர் ஆனதால் அவரை பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் என்று பெயர் வைத்தலே சாலச்சிறந்தது.அவர் நமக்கு மட்டும் சொந்தமல்ல.இந்த உலகுக்கே சொந்தம்.அவரை பாரதரத்னா என்று தான் உயர் இடத்தில் வைத்து நினைவு கூறவேண்டும். தமிழகத்தில் சேலம்,திருநெல்வேலி பேரூந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயர்சூட்டப்பெற்றுள்ளது.ஆனால் "பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேரூந்து நிலையம்" என பெயர் வைத்த முதல் பெருமை நெல்லைக்கே சேரும்.அதே போன்று கோயம்பேடுக்கு அரசு சார்பாக பெயர் வைக்கும்போது பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேரூந்துநிலயம்" என்று பெயரில் சிறு மாற்றம் செய்து வைக்கும் படி எம்.ஜி.ஆர் பக்தர்களின் பேரில் வேண்டுகிறோம். தொடர்ந்து தலைவர் பெயரை புதிய மெகா அரசு கட்டிடங்களுக்கும் பெயர்வைத்து புகழகாரம் சூட்டவேண்டுகிறோம்.நாம் தலைவருக்கு நன்றிக்கடன் இதுவரை செலுத்தியது போதாது. இன்னும் நினைவு கூறவேண்டும். பாசமுள்ள..., எம்.ஜி.ஆர் பக்தர்கள், நெல்லை -தூத்துக்குடி மாவட்டங்கள்... Thanks Friends...

  6. #3465
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *17-10-1972 மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், எம்ஜிஆர் அவர்கள், தனியாக கட்சி துவங்கிய நாள் இன்று. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயரிடப்பட்டு, பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது... *💐✌🏻🙏🏻. .... Thanks Friends...

  7. #3466
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விசேஷ அழைப்பின் பேரில், நமது மக்கள் திலகம் சென்று வந்த அயல் நாட்டு பல்கலை கழகங்கள் :

    1. விஸ்கான்ஸின் பல்கலைகழகம்
    2. சிகாகோ பல்கலைகழகம்
    3. சான்பிரான்ஸிஸ்கோ பல்கலைகழகம்
    4. கலிபோர்னியா பெர்ச்சவி பல்கலைகழகம்
    5. சான்டியாகோ பல்கலைகழகம்
    6. நியூ யார்க் பல்கலைகழகம்
    7. பென்சில்வேனியா பல்கலைகழகம்
    8. பிலடெல்பியா பல்கலைகழகம்
    9. அரிசோனா பல்கலைகழகம் .... Thanks Friends...

  8. #3467
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகமே

    நீங்கள் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து கடைசி படம் வரை

    திரைப்படங்களில் கெட்டவன் கதா பாத்திரங்களை ஏற்காதவர்

    திரைப்படங்களில் கெட்ட பழக்க வழக்கங்களை கற்பிக்காதவர்

    உத்தமனாக -ஒழுக்க சீலனாக மட்டுமே திரைப்படங்களில் தோன்றியவர்

    தாய் - தந்தை சொல்லை தட்டாமல் மதித்து நடக்க கற்று தந்தவர்

    தீய சக்திகளை எதிர்த்து நம்நாடு முன்னேற நன்றாக பாடுபட்டவர்

    குடியையும் - புகை பிடிப்பதையும் அறவே தவிர்த்தவர்

    வரதட்சணை வாங்குபவரை மதிக்காதவர்

    வசனங்களாலும் - பாடல்களாலும் உழைப்பின் மேன்மையை உயர்த்தியவர்

    கொள்கை பாடல்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகத்தை விதைத்தவர்

    தனக்கு நிகரான நடிகர்களுடன் சண்டை காட்சிகளில் மோதியவர்

    உடன் நடித்த நடிகர்களுக்கு உடனே ஊதியம் கிடைத்திட செய்தவர்

    தரக்குறைவான வசனங்களை பேசாதவர்

    எதிரியை கூட ஏறிட்டு நோக்கி நண்பனாக்கி கொண்டவர்

    இமாலய வெற்றிகள் தேடிவந்த போதும் இறுமாப்பு கொள்ளாதவர்

    இப்படி நல்லவராக நடித்து நல்லவராக வாழ்ந்து ....

    நல்லதொரு தலைவராய் ,நல்லதொரு முதல்வராய் மக்கள் மனதில் பதிந்து

    எங்களையும் நல்வழிக்கு திருப்பிய நாடோடி மன்னனே - வாழ்க உங்கள் புகழ்

    நல்ல மனிதர்க்கு விளம்பரம் தேவையில்லை என்பதை உணர்த்தியவர் பொன்மன செம்மல்... Hats Off... Thanks Friends...

  9. #3468
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தன்னை தூக்கியெறிந்த கட்சியை, தான் இருக்கும் வரை ஆட்சிக்கு வரவிடாமல் செய்தவர் யார்?! அவர்தான் பொன்மனச்செம்மல்... இன்றைக்கும் இவர்தான் cm., அவர் புகழ் ஒன்றே என்றும் வெற்றியடைய ஒரே வழி...👍 👌👍👍👌

  10. #3469
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சர்வதேசம் ... உலகம்... அண்டம்... பேரண்டம்... பிரபஞ்சம்... 17-10-1972 முதன் முதலாக திரைப்பட நடிகர், அரசியல் கட்சி இயக்கம் தொடங்கி பொதுமக்கள் பேராதவுடன் ஆட்சியை ஏற்படுத்த சரித்திர சகாப்தம் படைக்க வித்திட்ட திருநாள் இன்று...👌 👍

  11. #3470
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு சகோதரர்களுக்கு வணக்கம். வாழ்நாள் முழுவதும், தன் மனசாட்சிப்படியும், தர்மத்தின்படியும் வாழ்ந்து வெற்றிக்கொடி நாட்டிய உத்தமத்தலைவர் புரட்சித்தலைவர், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை துவக்கிய நாள், இன்று. நாம் பிச்சை கேட்காமலேயே, இந்திய நாட்டின் உயர் விருதான 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு மனமுவந்து தனக்கு அளிக்கும் அளவுக்கு, தன் கலையுலக மற்றும் அரசியல் உலக எதிரிகள் ஆச்சரியப்படும்படி, வாழ்க்கையில் வெற்றி கண்டவர்.
    அந்த மாபெரும் தலைவரை வணங்கி, அவருடைய தம்பிகளாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
    நன்றி.
    பாஸ்கரன்,
    கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை...... Thanks Friends.. 👍👌

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •