-
27th March 2018, 04:40 PM
#211
Junior Member
Platinum Hubber
-
27th March 2018 04:40 PM
# ADS
Circuit advertisement
-
27th March 2018, 04:43 PM
#212
Junior Member
Platinum Hubber
-
27th March 2018, 04:45 PM
#213
Junior Member
Platinum Hubber
-
27th March 2018, 04:46 PM
#214
Junior Member
Platinum Hubber
-
27th March 2018, 04:49 PM
#215
Junior Member
Platinum Hubber
29/3/18 புதிய தலைமுறை வார இதழ்
-
27th March 2018, 04:53 PM
#216
Junior Member
Platinum Hubber
-
27th March 2018, 04:55 PM
#217
Junior Member
Platinum Hubber
04/04/18 துக்ளக் வார இதழ்
-
27th March 2018, 07:47 PM
#218
Junior Member
Platinum Hubber
-
27th March 2018, 08:23 PM
#219
Junior Member
Platinum Hubber
சென்னை ஆல்பட் திரை அரங்கில் எம்ஜிஆரின் நாடோடிமன்னன் திருவிழாக்கோலம் .
25.3.2018 ஞாயிற்று கிழமை மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை ஆல்பட் திரை அரங்கில் எம்ஜிஆர் ரசிகர்கள் ஏராளமாக திரண்டு வந்து பட்டாசுகள் வெடித்தும் , எம்ஜிஆர் கட் அவுட் மற்றும் பேனர் களுக்கும் மாலை அணிவித்து கொண்டாடினார்கள் . சாலை முழுவதும் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது .60 ஆண்டுகளுக்கு முன்பு வந்த நாடோடிமன்னன் படம் இன்றும் மக்களால் , எம்ஜிஆரின் ரசிகர்களால் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்திய சினிமாவில் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம் . கடந்த ஆண்டில் ஜூலையில் தேவி பாரடைஸ் அரங்கில் எம்ஜிஆரின் மற்றுமொரு சகாப்தமான அடிமைப்பெண் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடியது குறிப்பிடத்தக்கது
courtesy fb
-
27th March 2018, 08:28 PM
#220
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆர் படத்தில் ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம் பணம் படைத்தவன்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற கண்போன போக்கிலே கால் போகலாமா.. பாடலை கண்ணதாசன் எழுதினார் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது.
கண்போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
என்று அந்தாதியாக ஆரம்பிக்கும் இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வாலி.
பணம் படைத்தவனில் அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்
என்ற பாடல் இருக்கிறது. அங்கே மச்சான். இங்கே மாப்பிள்ளை.
பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற எல்லாப் பாடல்களுமே இனிமையானவை.
அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்...'
இந்தப் பாடல் காட்சியை நடனக் கலைஞர் தங்கப்பன் நன்றாக அமைத்திருப்பார். கட்டிலில் படுத்திருக்கும் எம்ஜிஆர் எழுந்து ஆடும் பொழுது, அவரிடம் இருக்கும் குதூகலத்தை அவரின் கால்களில் அவர் காட்டும் முத்திரைகளில் பிரதி பட வைத்திருப்பார். நாயகனும் நாயகியும் தொடாமலே காதலைத் தெரிவிக்கும் இந்தக் காட்சிஅழகாக இருக்கும். இப் பாடலில் அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்' என்ற வரிகள் இசைத் தட்டில் இருக்கும். ஆனால் இந்த கன்னி சுகம்' என்பது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதால், அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல' என்று படத்தில் மாற்றி இருப்பார்கள்.
அலுங்காமல் குலுங்காமல், துள்ளாமல், துடிக்காமல் எம்ஜிஆர் அமைதியாகப் பாடுவதாகக் காட்சி இருக்கும்.
Courtesy - net
Bookmarks