-
25th September 2018, 04:31 PM
#2971
Junior Member
Platinum Hubber
-
25th September 2018 04:31 PM
# ADS
Circuit advertisement
-
25th September 2018, 04:33 PM
#2972
Junior Member
Platinum Hubber
-
25th September 2018, 04:34 PM
#2973
Junior Member
Platinum Hubber
-
25th September 2018, 07:00 PM
#2974
Junior Member
Platinum Hubber
MAKKAL KURAL -25/9/18
-
26th September 2018, 03:03 PM
#2975
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் முதன்முயற்சியாக சொந்தப் படம் எடுக்கும் ஆசையில் தொடங்கப்பட்ட படம் தான் நாடோடி மன்னன்.ஏன் சொந்தப்படம் எடுக்க வேண்டும் எத்தனையோ படங்கள் அவருக்காக காத்திருக்கும் இந்த நேரத்தில்?.ஒழுங்காக அவைகளை முடித்துக்கொடுத்தாலே பணம் கொட்டாதா?.அதை வைத்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டியிருக்கலாமே?.கடுமையாக உழைத்துச் சேர்த்த அத்தனை பணத்தையும் முதலீடு செய்து அடுத்தவரிடம் கையேந்தி ஏன் இப்படி அல்லல் படவேண்டும்.அவரது நலம் விரும்பிகள் மட்டுமல்ல அவரது எதிரிகள் கூட இதைத் தான் கேட்டார்கள்.
மேகலாவில் பங்குதாரராக இருந்து நாம் என்ற படத்தை எடுத்து வெளியிட்ட பிறகு தான் தனியாக ஒரு பட நிறுவனம் நமக்காக வேண்டும் என நச்சரித்தது அண்ணன் சக்கரபாணி தான்.அண்ணனும் தம்பியும் இணைந்து எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் உருவானது.
முதன்முதலில் கலைஞர் வசனத்தில் விடிவெள்ளி என்ற தலைப்பில் ஒரு கதையும் உருவாக்கப்பட்டது.அந்த நேரத்தில் தான் கல்லக்குடி போராட்டம் துவங்கியது.கலைஞர் சிறை சென்றார்.ஆரம்பமே தடையில் முடிய எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் அப்படியே நின்று எம்.ஜி.ஆர்.நாடக மன்றம் ஜரூராக ஆரம்பிக்கப்பட்டது.மக்கள் திலகத்தின் கவனம் நாடக மன்றத்தின் மேல் திரும்பியது.
நல்ல கதைக்காக காத்திருந்ததை விட ஒரு பிரமாண்ட படத்தைத் தரவேண்டும் என்ற ஆர்வத்தில் பொருளாதாரத் தேவைக்காக காத்துக்கொண்டிருந்தது தான் சொந்தப் படம் தாமதமாகக் காரணம்.படம் தொடங்கியது முதல் அவருக்கு சோதனை தான்.
இப்போது தான் கொஞ்சம் புகழ் வரத் தொடங்கியிருக்கிறது.அதற்குள் சொந்தப் படமா?.இதுல டைரக்ஷன் வேறையா?.என்ற கேலியும் கிண்டலும் பல இடத்திலிருந்து வந்தது.லாட்டரி அடிக்கப்போகிறான்.பார்க்கத்தானே போகிறோம்.நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை மக்கள் திலகம் உணர்ந்துகொள்ள இந்தப் படம் அவருக்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது.
எதைஎதையோ எடுக்கிறான்.திரும்பத் திரும்ப எடுக்கிறான்.மாட்டிக்கிட்டு முழிக்கிறான்.சீர்திருத்தாம் சீர்திருத்தம்.அங்கே போயிட்டு வரட்டும்(தணிக்கைக் குழு) அப்புறம் தெரியும்.அரசியலில் நுழைந்துவிட்டால் அவதூறுகளுக்குப் பஞ்சமிருக்காது.ஆனால் ஒரு படம் எடுப்பதற்கு இப்படி எதிர்ப்புகளா?.அவரது காதுபடவே பேசினார்கள்.அப்போது நான் இயேசுவின் வார்த்தைகளைத் தான் நினைத்துக்கொள்வேன் என்கிறார்.தான் செய்வது என்னவென்று தெரியாத அப்பாவிகள்.பேசிக்கொள்ளட்டும்.நானும் சிரித்தேன்.அவர்களும் சிரித்துக்கொண்டார்கள் என்கிறார்.
பைத்தியக்காரன் என்று சிரித்தார்களோ அல்லது அப்பாவி என்று சிரித்தார்களோ தெரியாது படம் வெளியாகி பத்திரிகைகள் ஓஹோவென புகழ சிரித்த அனைவரும் அழுதார்கள் என்பது மட்டும் உண்மை.ஒரு துண்டு கூட வெட்டப்படாமல் எப்படி மொத்தப் படத்தையும் வெளியிட்டான் என்ற ஆச்சர்யம் ஒருபுறம் படம் பல ஊர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடுவதும் மக்கள் பேராதரவு தருவதும் அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை.
உண்மைக்கும் உழைப்பிற்கும் நியாயத்திற்கும் நேரமைக்கும் கிடைத்த வெற்றி.இந்த வெற்றி தனிப்பட்ட எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வெற்றியல்ல.கலைத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த வெற்றி.லட்சக்கணக்காக செலவளித்து படம் எடுப்பது அந்த முதலாளிக்கு எவ்வளவு ரிஸ்க் என்பது அனைவருக்கும் தெரியும்.இந்தப் படத்திற்காக தனது மொத்த வாழ்க்கையை அடமானம் வைத்து எடுத்த இந்தப் படம் ஒரு வேளை தோல்வியைத் தழுவியிருந்தால் எம்.ஜி.ஆர்.என்ற பெயரையே துடைத்தெறியக் காத்துக்கொண்டிருந்த எதிரிகளுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு.அப்படி எதுவும் நடக்காமல் அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் பெற்ற பல விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் லாபம் அடைத்திருக்கலாம்.அதை விட அந்த நாடோடியின் ஆசை நிறைவேறியதே அது தான் முக்கியம்.மக்களுக்குப் பிடிக்காமல் போயிருந்தால் படம் வெற்றிபெற்றிருக்காது.மக்களின் பூரண ஆசி அவருக்கு இருந்த காரணத்தால் நினைத்தது நடந்தது.இது அவருக்கான வெற்றியல்ல.மக்களுக்கான வெற்றி.மக்களுக்காக வாழ்ந்த அந்த மகா கலைஞனின் திரை வாழ்க்கைக்குக் கிடைத்த முதல் வெற்றி... Thanks Friends...
-
26th September 2018, 04:48 PM
#2976
Junior Member
Diamond Hubber
கலைவானில் என்றும் நிலைத்து நின்று ஒளி தரும் மக்கள் திலகத்தின் 100 வது காவியம் ஒளி விளக்கு இத்திரைப்பட
த்திற்கு பொன்விழா. 1968ஆம் ஆண்டில் புரட்சித்தலைவரின் 8 காவியங்கள் வெளிவந்தது. அவ்வாண்டில் தலைவரின் திரைப்படங்கள் பல சாதனைகளையும் வெற்றிகளையும் படைத்துள்ளது.1. சென்னையில் ரகசியபோலிஸ் 115. ஒளி விளக்கு இரண்டு படங்களும் தலா ஐந்து அரங்கில் வெளி வந்து சாதனை. 2. ரகசியபோலிஸ் 115. குடியிருந்த கோயில் ஒளி விளக்கு மூன்று படங்களும் சென்னையில் 3 மாதத்தில் மட்டும் பெற்ற வசூல் கிட்டத்தட்ட. அன்றைய நிலவரப்படி 30.லட்சத்தை பெற்று தந்தது.தமிழ் திரையில் தலைவரே இந்த சாதனையை முதலில் படைத்துள்ளார். 3.முன்று வண்ணப்படங்களும் 11 அரங்கில் 50 நாட்களை கடந்துள்ளது.4.1968ல் குடியிருந்த கோயில் படமே நகரில் இரண்டு அரங்கில் 100.காட்சிகள் அரங்கு நிறைந்துள்ளது. 5. நகரில் குடியிருந்த கோயில் திரைப்படம் வெவ்வேறான அரங்கில் சாதனை (.குளோப் கிருஷ்ணா புவனேஸ்வரி) 100 நாள் ஒடி வண்ணப்படத்தில் சாதனையாகும்.6. 1968 ல் அதிக அரங்கில்100 நாள் ஒடிய திரைப்படம் குடியிருந்த கோயில் ( 8 ஊரில் பத்து தியேட்டரில் 100.நாள்) 7. தலைவரின் ஒளி விளக்கு திரைப்படம் மதுரையில் முதலில் 100 காட்சி அரங்கு நிறைந்து அதிக நாள் (147 நாள்) ஒடியது.அடுத்து குடியிருந்த கோயில் 133 நாள் ஓடியது.நகரில் ரகசியபோலிஸ் 115 கண்ணன் என் காதலன் இரண்டு படங்களும் 92 நாளை கடந்தது. 8 படங்களும் 50 நாட்களை கடந்து ஓடியது. 8. திருச்சி நகரில் முதன் முதலில் தலைவரின் மூன்று வண்ணப்படங்களும் 100 நாள் ஓடி சாதனை.9. சேலத்தில் 100நாள் ஓடிய ஓரே வண்ணப்படம் ரகசிய போலிஸ் 115. மட்டுமே.10.1968 ல் அதிக அரங்கில் 50.நாளை கடந்த திரைப்படம் ஒளி விளக்கு குடியிருந்த கோயில். ஆகும். 11. வெளிநாடான இலங்கையில் இரண்டு அரங்கில் 150.நாளை கடந்த திரைப்படம் ஒளி விளக்கு மட்டுமே. 12. தமிழகத்தில் ABC. மூன்று சென்டர்களிலும் அதிக நாள் அதிக வசூல் அதிக தியேட்டர் சாதனை மக்கள்திலகத்திற்கு மட்டுமே! இன்னும் பல சாதனைகள் உள்ளது. நன்றி! உரிமைக்குரல் ஆசிரியர்... Thanks Friends...
-
26th September 2018, 07:48 PM
#2977
Junior Member
Diamond Hubber
-
26th September 2018, 07:50 PM
#2978
Junior Member
Diamond Hubber
-
26th September 2018, 07:56 PM
#2979
Junior Member
Diamond Hubber
-
26th September 2018, 08:21 PM
#2980
Junior Member
Diamond Hubber
Bookmarks