Page 341 of 401 FirstFirst ... 241291331339340341342343351391 ... LastLast
Results 3,401 to 3,410 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3401
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    ஆவணத்ததிர்கு நன்றி எஸ்வி ாஅய்யா.

    சேலத்தில் ஒரே நேரத்தில் 3 தியேட்டர்களில் வெளியான முதல்படம் எங்க வீட்டுப் பிள்ளை.

    3 தியேட்டரிலும் சேர்த்து 175நாட்கள் தாண்டி ஓடி உள்ளது.

    ஒரே தியேட்டரில் மட்டும் படம் வெளி ஆகி இருந்த்தால் 8 தியேட்டர்களி்ல் படம் வெள்ளி விழா கொண்டாடி இன்னும் சாதனை செய்து இருக்கும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3402
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    அன்றும் .. இன்றும்.. என்றும்..



    தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முதலில் 7 திரையரங்குகளில் வெள்ளி விழா (25 வாரங்கள்) கொண்டாடி சாதனை செய்த படம் மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை. சென்னை காசினோ திரையரங்கில் 211 நாட்கள் ஓடி பழைய சாதனைகளை முறியடித்த படம். காசினோவில் மட்டுமே ரூ. 5 லட்சத்துக்கு மேல் வசூல் செய்தது.


    இதற்கு முன் அதே காசினோ திரையரங்கில் காதலிக்க நேரமில்லை படம் 25 வாரங்களைக் கடந்த ஓடினாலும் தினசரி 2 காட்சிகளாக நடைபெற்றது. ஆனால், எங்க வீட்டுப் பிள்ளை 3 காட்சிகளாக 211 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்ததையும் குறிப்பிட வேண்டும். தஞ்சையில் வெள்ளி விழா கண்ட படம் (யாகப்பா திரையரங்கம்) என்ற சிறப்பும் எங்க வீட்டுப் பிள்ளைக்கு உண்டு.


    கடந்த 2-ம் தேதி டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு சென்னை, கோவை, வேலூர், திருச்சி நகரங்களில் பல திரையரங்குகளில் எங்க வீட்டுப் பிள்ளை படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் முறையில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள்.. சென்னையில்
    1. ஆயிரத்தில் ஒருவன், 2.ரிக்க்ஷாக்காரன், 3.அடிமைப்பெண், 4.நினைத்ததை முடிப்பவன் ஆகிய படங்கள் தொடர்ந்து சென்னை தேவி திரையரங்க வளாகத்தில் வெளியாகி இப்போது 5வது படமாக எங்க வீட்டுப் பிள்ளையும் அதே வளாகத்தில் வெளியாகி உள்ளது.

    மக்கள் திலகத்தின் பழைய டிஜிட்டல் படங்கள் தொடர்ந்து ஏசி அரங்குகளிலும் மால்களில் உள்ள திரையரங்குகளிலும் குறிப்பாக தேவி வளாகத்தில் (சத்தியம் அரங்கையும் சேர்த்துக் கொள்ளலாம்) வெளியாகி வருவதும் ஒரு சாதனைதான். வேறு எந்த பழைய படங்களுக்கும் கிடைக்காத பெருமை இது.


    அந்த அளவுக்கு பெரிய ஏசி திரையரங்குகள், மால்களில் உள்ள திரையரங்குகள் மக்கள் திலகம் படங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளன. பழைய படங்கள் என்ன? சில நேரங்களில் ஒரு சில புதிய படங்களையும் கூட வசூலில் மிஞ்சிவிடும் ஆற்றல் மக்கள் திலகத்தின் படங்களுக்கே உண்டு. தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியான விதமே அதற்கு உதாரணம்.


    முதலில் தேவி திரையரங்கை விநியோகஸ்தர் தரப்பில் அணுகியபோது புதிய படங்கள் வருவதால் இப்போதைக்கு எங்க வீட்டுப் பிள்ளைக்கு தியேட்டர் கொடுக்க முடியாது என்று திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி, இதற்காக காத்திருக்க வேண்டாம் என்று தேவி வளாகம் தவிர்த்து மற்ற திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. திடீரென தேவி திரையரங்கு சார்பில் எங்க வீட்டுப் பிள்ளை விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு தேவி பாலாவில் படத்தை திரையிட விரும்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். விநியோகஸ்தருக்கு இன்ப அதிர்ச்சி...



    தேவி பாலாவில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியாகி இப்போது நடக்கிறது. படத்தை வெளியிட மறுத்த தியேட்டர் நிர்வாகம் விரும்பிக் கேட்டு வாங்கி திரையிட்டிருக்கிறது. இடையில் நடந்தது என்ன? சஸ்பென்ஸை கடைசியில் பார்ப்போம்.

    அதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ் பேக். மக்கள் திலகத்தின் 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படமான ரகசிய போலீஸ் 115 படம் 1968-ம் ஆண்டு வெளியாகி வசூல் பிரளயம் செய்தது. சென்னையில் மட்டுமே வெறும் பத்து நாட்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 470 ரூபாய், 44 காசுகள் வசூலாகி உள்ளது. சென்னையில் முதல் பத்து நாட்களில் மட்டுமே 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இத்தனைக்கும் இது பழைய டிக்கெட் கட்டணம்.


    மக்கள் திலகம் புரட்சித் தலைவராக உருவெடுத்து மக்கள் செல்வாக்கோடு தமிழக முதல்வராக அரியாசனம் ஏறிய பிறகு தியேட்டர்களில் டிக்கெட் விலையை உயர்த்தினார். அதற்கு முன்பு 1968-ல் தியேட்டர்களில் அதைவிடக் குறைவான டிக்கெட் கட்டணமே இருந்தது. இத்தனைக்கும் சென்னையில் ரகசிய போலீஸ் 115 படம் ஏசி திரையரங்குகளில் வெளியாகவில்லை. சென்னையில் அப்போது ஏசி திரையரங்கம் அதிகம் இல்லை. இருந்தாலும் ஏசி திரையரங்கம் என்றால் டிக்கெட் கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அதைவிட ரகசிய போலீஸ் 115 படம் திரையிட்ட அரங்குகளில், ஏசி இல்லாத அரங்குகளில் குறைவான கட்டணம்தான்.

    அப்படி இருந்தும் வெறும் 10 நாட்களில் சென்னையில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான வசூலை ரகசிய போலீஸ் வாரிச் சுருட்டினார் என்றால், M(aximum). G(uarantee). Ramachandran -ஐ வசூல் சக்ரவர்த்தி என்று அழைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

    சென்னையில் 10 நாட்களில் வசூலான தொகையையும், வசூல் சக்ரவர்த்தி என்று மக்கள் திலகத்தைக் குறிப்பிட்டும் 1968-ல் படம் வெளியானபோது நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பரம்.

    இதில், இன்னொன்று... எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியானபோது காசினோவில் மட்டுமே ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக வசூலித்தது என்று முதலில் சொல்லியிருந்தேன். அதற்கு ரகசிய போலீஸ் விளம்பரம் போல விளம்பர ஆதாரம் கிடைக்கவில்லை. அப்போதைய ரசிகர்கள் குறித்து வைத்திருந்தது மற்றும் நோட்டீஸ்கள்தான் உள்ளது.

    ஆனால், 10 நாட்களில் 5 தியேட்டர்களில் ரகசிய போலீஸ் 115 படம் 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்றால், காசினோவில் 211 நாட்கள் ஓடிய எங்க வீட்டுப் பிள்ளை படம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக (காசினோவில் மட்டும்) நிச்சயம் வசூலித்திருக்கும் என்று புரிந்து கொள்ள கணக்கில் புலியாக இருக்கத் தேவையில்லை. பச்சைக் குழந்தைக்கும் புரியும்.



    இப்போது, தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளையை திரையரங்க உரிமையாளர்களே திரையிட விரும்பி விநியோகஸ்தரை அணுகியதன் சஸ்பென்சை உடைப்போம்...

    கடந்த 2-ம் தேதி ‘ புதிய படம் வெளியாகி உள்ளது. தேவி வளாகத்திலும் அந்தப் படம் திரையிடப்பட்டது. படத்துக்கு ஒற்றை இலக்கத்திலேயே ஆட்கள் வந்துள்ளனர். பதறிப் போன தியேட்டர் நிர்வாகம் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை விநியோகஸ்தரிடம் விரும்பிக் கேட்டு வாங்கி தேவி பாலாவில் திரையிட்டுள்ளது.

    முதலில் தேவி நிர்வாகம் மறுத்ததால்தான் எங்க வீட்டுப் பிள்ளை படம் 2-ம் தேதி தேவி பாலாவில் வெளியாகவில்லை. இரண்டு நாள் கழித்து 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் திரையிடப்பட்டது. அதிலும் நாளிதழ் விளம்பரத்தில் பகல் 12.30 மணி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், படத்துக்கு மற்ற திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால் முக்கிய நேரமான மாலைக் காட்சியாக 7 மணிக்கு திரையிட்டு வருகின்றனர். இதுதான் தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியான விதத்தின் சுவாரசியம்.

    ஒரு சில புதிய படங்களை விடவும் மக்கள் திலகத்தின் பழைய படங்கள் வசூலைக் கொடுக்கும் என்பதற்கும் அதனால்தான் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் (ஏசி திரையரங்குகள், மால்களில் உள்ள திரையரங்குகள் கூட) விரும்புகிறார்கள் என்பதற்கும் இப்போதைய உதாரணமாக திகழ்கிறார் தமிழக மக்கள் சொந்தம் கொண்டாடும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’யான மக்கள் திலகம்.

    1968-ல் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரகசிய போலீஸ் 115 படம் வெளியானபோது அன்று மட்டுமல்ல, எல்லா வகையறாக்களையும் ஓரம் கட்டி, ஏழைகளின் இதய தெய்வம் இன்றும் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார் . என்றும் திகழ்வார்.

    நன்றி - அகில உலக எம்ஜிஆர் மன்றம் முகநூல்

    இது எல்லா விஷயமும் சத்தியம்.


    தேவி யில் வெளியான புதுப்படம் என்று எல்லா வகையறாக்கள் என்று கடைசியிலும் குறிப்பு குடுத்திருக்கிறீர்கள்.

    அந்தப்படம் மன்னர் வகையறா தானே எங்கள் ஊரிலயும் படம் காத்தாடுகிறது.

    பல புதுப் படங்களை விட மக்கள் திலகத்தின் படங்கள் அதிக வசூல் குடுக்கும்.

    எங்க வீட்டு பிள்ளை சாதன பெருமமையை நன்றாக புரியும் படி பதிவு போட்டதற்கு நன்றி எஸ்வி அய்
    யா.

  4. #3403
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like

    மலரும் நினைவுகள்

    தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் வசூலில் சாதனைகள் புரிந்த சந்திரலேகா படத்தின் சாதனைகளை

    முறியடித்த முதல் படம் மக்கள் திலகத்தின் ''மதுரை வீரன் '' 1956ல் நடந்தது .

    மக்கள் திலகத்தின் ''நாடோடிமன்னன் '' 1958ல் வெளிவந்து அதற்கு முந்தய மதுரைவீரனின் வசூலை முறியடித்து ஒரு புதிய சாகப்தத்தை உருவாக்கினார் எம்ஜிஆர் .

    1958 முதல் 1965 வரை நாடோடி மன்னன் வசூலை எந்த படமும் நெருங்க முடியவில்லை .

    நாடோடிமன்னன் ரிக்கார்டை 1965ல் வந்த எங்க வீட்டு பிள்ளை முறியடித்தது மிகப்பெரிய சாதனை .

    1965 முதல் 1969 வரை எங்க வீட்டு பிள்ளை - வசூலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டார் .

    1969ல் வந்த எம்ஜிஆரின் அடிமைப்பெண் முந்த சாதனைகளை முறியடித்து

    முதலிடத்தில் மகுடம் சூட்டியது .

    1970ல் மாட்டுக்கார வேலன்

    1971ல் ரிக் ஷாக்காரன்
    [IMG]
    1972ல் நல்லநேரம்
    வசூலில் சாதனைகள் தொடர்ந்தாலும்
    1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் - வசூல் வரலாற்றை உருவாக்கியது
    1936-1973 வரை வெளிவந்த தமிழ் படங்களில் அதிக வசூல் மற்றும் சாதனைகள் புரிந்த காவியமாக உலகம் சுற்றும் வாலிபன் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது .
    1974ல் உரிமைக்குரல் 200 நாடகளுக்கு மேல் ஓடி பல இடங்களில் உலகம் சுற்றும் வாலிபன் வசூலை முறியடித்து விட்டது .

    1975ல் இதயக்கனி மீண்டும் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்து காட்டிய படம் .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் 1977ல் தமிழக முதல்வராக பதவி ஏற்று கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார் .
    1947- 1977
    30 ஆண்டு காலம் இந்திய திரை உலகில் முடிசூடா மன்னன்
    1977-1987
    10 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக ஆட்சி நடத்திய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .

    1987 லிருந்து 2018 இன்று வரை 30 ஆண்டுகளாக எம்ஜிஆர் என்ற மாமனிதரின் திரை உலக ஆளுமைகள் , அரசியல் வெற்றிகள்
    சமூக வலைத்தளங்கள் , ஊடகங்கள் , பத்திரிகைகள் தொடர்ந்து பயணித்து வருவது மூலம் உலகமெங்கும் வாழும் எம்ஜிஆரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெருமை கொள்கிறார்கள் . எங்கள் எம்ஜிஆர் வெற்றி பயணம் தொடரும் ...
    Last edited by esvee; 8th February 2018 at 07:45 PM.

  5. #3404
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் " எங்க வீட்டுப் பிள்ளை " டிஜிட்டல் சென்னை- ஸ்ரீநிவாசா, மற்றும் கோவை - ராயல் அரங்குகளில் மகத்தான 2 (இரண்டாவது) வாரமாக நாளிதழ்களில் விளம்பரம் தராமலேயே வெற்றி நடை போடுவது புரட்சி நடிகர் அவர்களுக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு...

  6. #3405
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    11-02-2018 முதல் தஞ்சாவூரில் உண்மையாக, நியாயமாக வெள்ளி விழா ஓடிய " எங்க வீட்டுப் பிள்ளை" தஞ்சை - ஸ்ரீ ராணி பாரடைஸ் A/C dts அரங்கில் வெளியாவதாக விநியோகஸ்தர்கள் வழியாக தகவல்...

  7. #3406
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    10.2.1985

    மக்கள் திலகம் முப்பிறவி கண்ட பின் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம்


    10.2.1985 அன்று மக்கள் திலகம் மட்டும் முதல்வராக பதவி ஏற்று கொண்டார் .

    ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் - ஏற்கனவே மந்திரி யாக இருந்தவர்கள் - பதவிகளை எதிர் பார்த்து இருப்பவர்கள -மற்ற கட்சி தலைவர்கள் - அரசியல் விமர்சகர்கள் - ஊடகங்கள் -பொது மக்கள் எல்லோரும்
    வியக்கும்படி மக்கள் திலகம் நடத்திய அரசியல் தான் காரணம் .

    எம்ஜிஆரால் இனி சுதந்திரமாக செயல்பட முடியாது .உடல்நிலை ஒத்துழைக்காது .நிர்வாக திறமை .அரசியல்
    ஆளுமை .இவை எல்லாம் எதிர்பார்த்தவர்களுக்கு மக்கள் திலகம் கொடுத்த பதில் - தான் ஒரு சிறந்த அரசியல் தலைவர் - உடலில் வலுவும் மனதில் தைரியமும் உள்ள முதல்வர் என்பதை நிரூபிக்க ஒரு வாரம் மந்திரிகளின்
    பட்டியலை காக்க வைத்து பின்னர் அவரது மந்திரிசபையினை விரிவு படுத்தியதன் மூலம் எல்லோருக்கும்
    எம்ஜிஆர் - யார் என்பது புரிந்து கொள்ள முடிந்தது .

    கட்சியையும் ஆட்சியும் தக்க வைத்து பிரமிக்க வைத்தவர் எம்ஜிஆர் ..

  8. #3407
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் மூன்றாவது முறையாக பதவி ஏற்ற நேரத்தில் பெங்களுர் நகரில்வெளியான அவருடைய படங்கள் .

    ஸ்ரீ - நாடோடி மன்னன்

    சிவாஜி - நம்நாடு

    விநாயகா - பல்லாண்டு வாழ்க

    கினோ - அன்பே வா

    பாலாஜி - இன்றுபோல் என்றும் வாழ்க

    சூப்பர் - காவல்காரன்

    முகுந்தா - அடிமைப்பெண்

    நியூ சிடி - ஒளிவிளக்கு

    ஒரே நேரத்தில் மக்கள் திலகத்தின் எட்டு படங்கள் அவரை வரவேற்கும் விதமாக பெங்களுர் நகரம் முழுவதும்

    திரு விழாவாக காட்சி தந்தது .


    ஒரு நடிகரின் 8 பழைய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி சாதனை படைத்தது -என்றால் அந்த பெருமை

    மக்கள் திலகத்திற்கு மட்டும்தான் என்பது சரித்திரம் .

  9. #3408
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    THANKS - THIRU MANISEKARAN - NET
    MGR was certainly "prophetic" in his own ways. He knew that his acting parameters were limited. He retained same style of acting from day one. Yet he felt that his ultimate strength would be songs. As has been stated several times, MGR looked into every angle and aspect of songs in his films.

    1) MGR decided the song writers

    2) Sat with them and went through the lyrics word for word and line for line. ( The late Marudhakazi and Valee related to me this)

    3) He sat with MDs and approved the tunes. RM Veerappan said that all the tunes in MGR songs were approved by MGR. MGR event went to the extent of buying western vinyl records for the listening of the MDs- Kunnakkudi Vaithiyanathan has said this when songs for Navarathinam were composed

    4) MGR decides the singers as well.


    5) MGR decided the screenplay for the song scenes (Puthaneri Subramaniam related this with me at a breakfast talk in his house. He wrote a song "Veesu Thendrale Veesu" for Nadodi Mannan, for which MGR imagined the song scene. However the song was left out and later used in Ponni Thirunaal. But MGR does contribute to the picturisation)

    The man's intense and deep involvement rewarded we fans very well in that his songs were instant hits, and his song scenes were powerful and left indelible impressions upon us.

    Singers who sang for him and lyricists who wrote for him received many chances from other MDs as well.

    Many of his songs bagged several coveted awards.

    His song scenes were too costly and yet enriching. The song scene with the biggest expenditure in those days was Azhagiya Thamizh Magal Ival- Rickshawkaran- two lakhs then. (One of the fours immortal songs where MSV used too many instruments)

    His dream songs were simmply matchless!

    See the song scene of "Nadagamellaam Kanden Unthan Aadum Vizhiyile" in Madurai Veeran- the staring point of major dream songs. How about "Kannnil Vanthu Minnal Pol" in Nadodi Mannan - underwater scene, that drew the attraction of the press.


    All his efforts paid off. ADMK stood for elections in December 1984, in the absence of MGR. MGR was admitted in Brooklyn Hospital USA for multiple ailments. Tamilnadu felt desperate. The video clipping of MGR conversing with his doctor was screened in all theatres. But more importantly, MGR's famous songs were played over AIR over and over for two weeks. His songs carpetted the entire country and permeated the hearts and souls of his ardent fans.



    And MGR won with the biggest mandate.
    Cho ramasamy wrote" THis is the biggest mandate MGR has received. With this mandate MGR could do two things:
    a) Use his tremeondous influence to do something good for the country; or
    b) decide to be arrogant.


    When MGR was in the Brooklyn Hospital one particular song became a prayer for MGR- again a prayer by all major religious groups. The song is "Aandavane Un Pathangalai Naan Kanneeril Neerattinen" - Oli Vilakku. By Vaalee.
    When MGR recovered and returned to Tamilnadu V. N Janagi, MGR's consort told Valee that it was Valee Bagyam that saved MGR. Valee said it was actually VN Janagi's Taali Bagyam that rescued him!



    When you listen to MGR songs, there is a special power. And that undeniable and irrepressible power is this: When you listen to his songs, the MDs who composed for his songs would be lost out. The singers will be lost out. Automatically the image of MGR and MGR alone would appear before our faces.

  10. #3409
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ...

    நமக்குத் தெரிந்த ஒருவரது பெயரைச் சொன்னாலோ அல்லது ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலோ நமக்கென்று பழக்கமான அவரது முகம் நினைவினில் வந்து நிழலாடும். எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ... நினைவுக்கு வருவது ” நான் ஆணையிட்டால்” என்று சவுக்கை சுழற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை” எம்ஜிஆர் தான். அந்தப் படம் வந்தபோது (1965) நான் பள்ளி மாணவன். தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாது. எம்ஜிஆர் ரசிகன். அவ்வளவுதான். அந்த படத்தை பார்த்த பின்னர் , கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டு மாட்டுக் கொட்டகையில் கயிற்றை சவுக்குபோல் முறுக்கி ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் “ என்று பாடிய சந்தோஷமான நாட்கள் இனி வராது.

    எனது பள்ளிப் பருவத்தில் நான் எம்ஜிஆர் ரசிகன். அதற்காக அவரது படங்களே கதி என்று இருந்தவன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. படிப்பில் கோட்டை விட்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் – சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். .. அப்பொழுதெல்லாம் சினிமா என்றால் நைட்ஷோதான். எம்ஜிஆர் படங்கள் தவிர வேறு பார்ப்பதில்லை. அப்புறம் கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்த்தேன்.

    எங்கள் அம்மாவின் கிராமத்திலும் சரி, அப்பாவின் கிராமத்திலும் சரி உறவினர்கள் அனைவருமே அப்போது திமுக அனுதாபிகள். இயல்பாகவே நானும் திமுக அனுதாபியாகப் போனேன். ( இப்போது எந்த கட்சி அனுதாபியும் கிடையாது ) கூடவே எம்ஜிஆர் படங்களை காணும் ஆர்வம்.. நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியில் ” திராவிடப் பண்ணை” என்று புத்தக பதிப்பாளர் வீடும், பதிப்பகமும் இருந்தது. இதன் உரிமையாளர் பண்ணை முத்துக் கிருஷ்ணன். அறிஞர் அண்ணா புத்தகங்களை வெளியிட்டதற்காக அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். அவருடன் எனது அப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் நல்ல பழக்கம். அவருடைய வீட்டிற்கு திமுகவின் அப்போதைய முக்கிய தலைவர்கள் வருவார்கள். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோரை நேரில் பார்த்து இருக்கிறேன். எம்ஜிஆர் இங்கு வந்ததில்லை. அவர் திருச்சி வந்தால் ஆஸ்பி ஹோட்டலுக்கு சென்று விடுவார். எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை

    அறிஞர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது திருச்சியில் 1970 இல் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்தது. மாநில சுயாட்சி கோஷம் எழுப்பப்பட்டது அங்குதான். அப்போது திருச்சியில் நடக்கும் திமுகவின் எந்த நிகழ்ச்சியானாலும், சிந்தாமணியில் உள்ள் அண்ணா சிலையிலிருந்துதான் தொடங்குவார்கள். அப்படியே இந்த மாநாட்டிற்கும் இந்த அண்ணா சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாலைவேளை என்பதால் அந்தபகுதி முழுவதும் விளக்குகள் மயம். ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் தேர் போன்று அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தலைவர்கள். எம்ஜிஆர் நடுநாயகமாக இருந்தார். கூட்டம் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அந்த ரதத்துடனேயே சென்றது. அவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் எம்ஜிஆரை முதன் முதல் பார்த்தேன். கொஞ்சதூரம் சென்றுவிட்டு நேரில் பார்த்த திருப்தியில் பாதியிலேயே வந்துவிட்டேன்.

    அடுத்து அந்த மாநாட்டிற்கு நானும் சென்று இருந்தேன். மாநாட்டு மேடையில் அப்போது ஒருவர் முழங்கிக் கொண்டு இருந்தார். திடீரென்று மாநாட்டு பந்தல் முன்பு ஒரே சலசலப்பு. மைக் முன்பு பேசிக் கொண்டு இருந்தவர் நிறுத்தி விட்டார். ” எம்ஜிஆர் எம்ஜிஆர் ‘ என்று கத்தினார்கள். கூடவே வாழ்க, வாழ்க என்று கோஷம். அப்போதுதான் மேடைக்கு வந்தார் எம்ஜிஆர். இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல்.
    இப்போது நான் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. ஆனாலும் நான் இப்போதும் எம்ஜிஆர் ரசிகன்தான். மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள எம்ஜிஆர் படப் பாடல்கள்தான .

    courtesy-Elango - TAMIL MANAM .

  11. #3410
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.

    courtesy- nakkeeran

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •