-
6th January 2018, 05:10 PM
#2821
Junior Member
Platinum Hubber
KOONDUKILI HEROINE SAROJA MADAM
-
6th January 2018 05:10 PM
# ADS
Circuit advertisement
-
6th January 2018, 05:15 PM
#2822
Junior Member
Platinum Hubber
ACTRESS L. VIJAYALAKSHMI
-
6th January 2018, 05:16 PM
#2823
Junior Member
Platinum Hubber
ACTRESS VYJAYANTHIMALA
-
6th January 2018, 05:45 PM
#2824
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆருடன் இணைந்து பணியாற்றியவர்களை நினைவு கூர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நேரில் அழைத்து எம்ஜிஆர் நினைவு பரிசை வழங்கினார்கள்
பி.எஸ்.சரோஜா - புதுமைப்பித்தன் மற்றும் கூண்டுக்கிளி
சௌகார் ஜானகி - ஒளிவிளக்கு மற்றும் பணம் படைத்தவன்
வாணிஸ்ரீ - கண்ணன் என் காதலன் மற்றும் ஊருக்கு உழைப்பவன்
கீதாஞ்சல-, அன்னமிட்டகை மற்றும் ஆசைமுகம்
ஷீலா - பாசம் மற்றும்புதியபூமி
பவானி - உழைக்கும் கரங்கள்
ரமாபிரபா - புதியபூமி மற்றும் ராமன் தேடிய சீதை
சச்சு - மாட்டுக்காரவேலன் மற்றும் கலையரசி
குட்டிபத்மினி- நம்நாடு மற்றும் நான் ஏன் பிறந்தேன்
காஞ்னா - பறக்கும் பாவை மற்றும் நான் ஏன் பிறந்தேன்
ஏ.சகுந்தல - பல படங்கள்
ஜெயசித்ரா - நவரத்தினம்
சாரதா - நினைத்ததை முடிப்பவன்
பேபி இந்திரா - நான் ஏன் பிறந்தேன்
வெண்ணிறாடை நிர்மலா - ரகசிய போலீஸ் 115 மற்றும் ஊருக்கு உழைப்பவன்
எல்.விஜயலட்சுமி - கொடுத்து வைத்தவள் மற்றும் குடியிருந்த கோயில்
ரோஜாரமணி - நீதிக்கு தலை வணங்கு
பி.ஆா்.வரலட்சுமி, ஒய்.விஜயா ஜெயா - மூவரும் நடித்த படம் நவரத்தினம்
லதா - பல படங்கள் ,
எம்.என்.ராஜம் - நாடோடிமன்னன்
ராஜஸ்ரீ - கலையரசி மற்றும் குடியிருந்த கோயில்
வைஜெயந்தி மாலா - பாக்தாத் திருடன்
பி.எஸ்.சீதாலட்சுமி - பல படங்கள்
ஜமுனா -தாய் மகளுக்கு கட்டிய தாலி
அமிர்தம் - - நேற்று இன்று நாளை ஒளிப்பதிவாளர்
கவிஞா் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், - பல படங்கள் பாடல் இயற்றியவர்கள்
ஆரூா்தாஸ், சொர்ணம் - பல படங்கள் வசனகர்தாக்கள்
காஸ்டியுமா் முத்து,
எடிட்டா் எம்.ஜி.பாலுராவ்,
ஏவிஎம்.
ஆா்.ஆா்.சம்பத் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
-
6th January 2018, 07:27 PM
#2825
Junior Member
Devoted Hubber
புரச்சித் தலவர் வாழ்க
பொன்மணச் செம்மல வாழ்க
தெய்வம் வாழ்க
என் தலவன் வாழ்க்க
எல்லரும் நல்லா இருக்க வேண்டும்
உலகத்தை நடத்தும் மகாசக்தி என் தலைவன் புகழ்ச்சி வாழ்க.
-
6th January 2018, 07:43 PM
#2826
Junior Member
Devoted Hubber
ரஜினி காந்த்த் கூட புரச்சித் தலவர பாராட்டி பேசித்தான் கட்சி தொடக்கப் போறார்.
யாரா இருந்தாலயும் நம் தலவன் பேர் சொன்னால்தான் வெர்றி ெபற்றுவார்கள்.
ரஜினி காந்த் பேச்சு... கீழ..
சென்னை: ''பணம், புகழ், பதவியை விட, எம்.ஜி.ஆரை போல் நல்ல குணத்தோடு வாழ்ந்து, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்,'' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர்.,MGR, நடிகர் ரஜினி,actor Rajini, சச்சிதானந்தர்,Satchidananda, தயானந்த சரஸ்வதி,Dayananda Saraswati,ரஜினி ரசிகர்கள், Rajini fans, ஆன்மிகம், spiritual,சிவாஜி,Shivaji, நல்ல குணங்கள், Good qualities, Good characters ,
சென்னையில், தன் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, நேற்று நான்காவது நாளாக, கோவை, திருப்பூர், வேலுார் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.
ரசிகர்கள் மத்தியில், ரஜினி பேசியதாவது: இன்னும், இரண்டு நாளில் நல்ல விஷயம் நடக்க வேண்டும் என, ரசிகர்களாகிய உங்களுக்கு, நான் வாழ்த்து கூறுகிறேன். கோவை, எனக்கு மிகவும் முக்கியமான ஊர்.
என் குரு, சச்சிதானந்தர், மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர்.அவர் தான், எனக்கு மந்திர உபதேசம் செய்தார்.
அவர் சொல்லி தான், பாபா படம் எடுத்தேன். சச்சிதானந்தரின் குரு, அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி, ஆன்மிகத்தை பரப்பு என்றார்.இன்று, பல நாடுகளில் சச்சிதானந்தரின் ஆசிரமங்கள், ஆன்மிகத்தையும், யோகாவையும் கற்றுத் தருகின்றன. சச்சிதானந்தர் இறக்கும் போது, நான் தான் கடைசியாக, அவரை பார்த்தேன். அந்த பாக்கியம், எனக்கு கிடைத்த பெருமை. அதேபோல், தயானந்த சரஸ்வதியும், எனக்கு ஒருகுரு.
கோவை விமான நிலையம் வரும்போது, ஒரு சம்பவம், அப்போது, அண்ணாமலை படம் வெளியான நேரம்; குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக, நான் விமானத்தில் கோவை சென்றிருந்தேன்.உடன் சிவாஜியும் இருந்தார். விமான நிலையம் சென்றதும், ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து, 'வாழ்க' கோஷமிட்டனர். சிவாஜி உடன் இருக்கும்போது, எனக்கு சங்கடமாக இருந்தது.
ஆனால், சிவாஜி, என்னை தட்டிக் கொடுத்து, 'எங்கடா நழுவுற... வா முன்னாடி வா...
Advertisement
இது, .உன் காலம்; நன்றாக உழை; நல்ல படங்களை கொடு... என் காலம் போய் விட்டது' என்றார்.என் காரை முதலில் வரவழைத்து, என்னை அனுப்பி வைத்தார். நடிப்பை தாண்டி, நல்ல குணங்களை கொண்டவர், சிவாஜி.பணம், புகழால் மதிப்பு தான் வரும்; மரியாதை வராது. நல்ல குணாதிசயங்களை கொண்டதால் தான், எம்ஜிஆர்., இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
நாம் அனைவரும், நல்ல குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கோவை விமானநிலையம் சென்றபோது, என்னை சிலர் தடுத்து, 'இப்போது வெளியே வர வேண்டாம்; ஒரு நடிகர் வந்திருக்கிறார்.'அவரை பார்க்க, ஆயிரக்கணக் கான ரசிகர்கள் கூடியுள்ளனர். அவர் போன பின், நீங்கள் வரலாம்' என்றனர்.
அப்போது தான் சிவாஜி கூறியது, ஞாபகம் வந்தது. அந்தந்த காலத்தில் அனைத்தும் மாறும். மாற்றம் வருவதை, யாராலும் தடுக்க முடியாது. சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரும். காலம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ரஜினியிடம், 'தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சிகளை எதிர்த்து போட்டி இடுவீர்களா?' என, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பதில் கூற, ரஜினி மறுத்து விட்டார்.
-----------
இந்த பேச்சுக்கான தினமலர் பேப்பர் நெட் லிங்கி ---- http://www.dinamalar.com/news_detail.asp?id=1928882
புரட்சித்தலவன் வாழ்க
சுப்பர் ஸ்டர் ரஜனி காந்த் வாழ்க்க
புரட்சித் தலவரிடம் ஆசீர் பெறும் ரஜினிகாந்த். கால்ல விழப்போகும் ரஜினி காந்ைத புரட்ச்சித் தலவர் தடுக்கின்றார். என்ன மாதிரி ஒரு பெரிய குணம் பாருங்கள்
அதெ நிகள்ச்சியில் வேற போஸ்கள்
இதற்கான வீடிேயா பதிவு லிங்கி..
ஒரு விழாவில் ரஜினிக்கி புரச்சித் தலவர் பரிசு குடுக்கிறார்.
Last edited by MASTHAAN SAHEB; 6th January 2018 at 08:19 PM.
-
6th January 2018, 07:57 PM
#2827
Junior Member
Devoted Hubber
உலகத்தில் அவர வெஞ்சவர்களுக்கு கூட நல்லது செஞ்ச ஒரே நல்ல மனிதன் ஒரே தலைவன் புரச்சித் தலவர்.
எல்லாரும் புரச்சித் தலவைைரப் பாராட்டகிறார்கள். ஆனால், அவர இன்னம் புரிஞ்சுக்காதவர்கள் கொஞ்சம் பேர் இுருக்கிறார்கள் என்பது சமயத்திலே கோவமாய் வருகின்றது. சமயத்தில் அவர்கைளைப் பார்த்தால் பாவமாய் இருக்கிறத. எந்த ந்ம்பிக்கையில் இருக்கிறார்கள்.
புரச்சித் தலவர் மாதிரியான நல்லவர்களை எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து ஆதரிச்சு வாழ்த்தினால் எவ்வளவு சந்தோசமாய் இருக்கும்.
புரச்சித் தலவைர புரிஞ்சவர்கள் புரியட்டும். புரியாதவர்கள் போகட்டும். என்னிக்காவது ஒருநாள் புரிஞ்சுப்பார்கள்.
புரச்சித் தலவர் வாழ்க
என் தெய்வம் வாழ்க
எல்லாரும் வாழ்க.
-
6th January 2018, 08:20 PM
#2828
Junior Member
Devoted Hubber
-
7th January 2018, 11:22 AM
#2829
Junior Member
Platinum Hubber
“இன்றும் விஜய் அஜீத்துக்கு போட்டி எம்.ஜி.ħ
எம்.ஜி.ஆர்
நிஜத்திலும் நிழலிலும் தன்னை ஒரே பிம்பத்தில் பொருத்திக்கொண்டு காலம் முழுவதும் தன்னை வெளிப்படுத்துவது என்பது எந்த ஒரு தனி மனிதனாலும் முடியாத காரியம். இதை வெற்றிகரமாக சாதித்தவர் எம்.ஜி.ஆர். ஒரு நாடக நடிகராக தன் சினிமா வாழ்க்கை துவக்கி தனக்கென தனிப்பட்ட குணாதிசயங்களோடு திரைப்படத்தில் பணியாற்றி அதை தன் பொதுவாழ்க்கைக்கு வெற்றிகரமாக முதலீடாக்கிய ஒரு நபர் எம்.ஜி.ஆர். நாம் கொண்டாடும் எம்.ஜி.ஆரின் பிரத்யேக அடையாளங்கள், அவரது சாம்பல் நிற புஸ் புஸ் தொப்பியும், கருப்புக்கண்ணாடியும்.
இயல்பான வாழ்வில் இந்த அடையாளங்களோடு நம் தெருவில் ஒருவர் நடந்துசெல்தைப் பார்த்தால் நிச்சயம் அவர் நம் கண்ணுக்கு கேலிப்பொருளாகத்தான் தெரிவார். ஆனால் இந்த அடையாளங்களோடு ஒரு மனிதர் நம்மிடையே நடமாடிச் சென்றிருக்கிறார் என்பது ஆச்சர்யம். சினிமாவுக்காகக் கூட சிகரெட், மதுவைத் தொடுவதில்லை, பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொண்ட கதைகளில் நடிப்பதில்லை, பெண்களை அவமதிக்கும் காட்சிகளை ஒப்புக்கொள்வதில்லை என சினிமாவில் அவர் கடைபிடித்த விஷயங்கள் அவருக்கு பெரும் ரசிகர் கூட்டத்தை தந்தது. தனிப்பட்ட வாழ்வில் அவரது கொடுக்கும் குணம் இன்னும் அவர் மேல் மதிப்பைக் கூட்டியது. தமிழ்சினிமாவில் ஏழை எளியவர்களுக்கென இலவச மருத்துவமனை நடத்திய முதலும் கடைசியுமான நடிகர் அவர்தான். நடிகராக இருந்து நாடாளும் வாய்ப்பு கிடைத்தபின்னும் அவர் சித்தாந்தங்கள் வழி தன் ஆட்சியை நடத்தவில்லை. தன் அனுபவங்களில் எதிரொலியாகவே அவரது சட்டங்கள் இருந்தன. பற்பொடியும் கால்செருப்பும் சத்துணவும் அவருக்கு உதித்தது அப்படித்தான்.
எம்.ஜி.ஆர்மறைந்து 30 ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் அவர் மக்களால் போற்றப்படுகிறார். தமிழர் குடும்பங்களில் அவர்கள் வணங்கும் தெய்வம், உறவினர்களைத்தவிர்த்து மூன்றாவது ஒரு நபர் அவர்களின் புஜையில் இடம்பெற்றிருந்தால் அது எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். கட்சி மாச்சர்யமின்றி அன்றும் இன்றும் போற்றப்படுகிறார் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தின் வழிவந்து கருணாநிதியின் ஆகச்சிறந்த தொண்டனாக ஒரு காலத்தில் பணியாற்றிய வைகோ, அவரது நுாற்றாண்டுவிழாவை கொண்டாடுகிறார். 'யாரை அதிகம் மிஸ் செய்ததாக வருந்துகிறீர்கள்' என கருணாநிதியிடம் கேட்டால் எம்.ஜி.ஆர் என அவர் உருகுகிறார்.
கருணாநிதியின் அமைச்சரவையில் அதிகாரத்தில் இருக்கும்போதே, 'எனக்கு தந்தையைப்போன்றவர்' என கண்கலங்கி கட்டுரை எழுதுகிறார் துரைமுருகன். எம்.ஜி.ஆர் இருக்கையில் மேடையில் அவரை வறுத்தெடுத்து டி.ராஜேந்தர், 'அந்த மனிதனை திட்டியதற்காக இன்னமும் வெட்கப்படுகிறேன்' என ஒரு மேடையில் அழுது தீர்த்தார். இவர்களின் இந்த பண்பை எடைபோட எம்.ஜி.ஆர்தான் எடைக்கல். தான் சந்தித்த ஒவ்வொரு நபரிடமும் தன்னைப்பற்றிய பிம்பத்தை ஆழமாக பதியவைத்தது எம்.ஜி.ஆரின் சாதனை.
இறந்து இத்தனை ஆண்டுகளானபின்னும் ஒருவருக்கு 10க்கும் மேற்பட்ட இதழ்கள் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் அவர் புகழ்பாடும் அமைப்புகள் உருவாகிக்கொண்டே இருப்பது உலகளவில் வேறு யாருக்காவது உண்டா என்பது சந்தேகமே. வெளியாகும் இந்த இதழ்கள் வணிக பத்திரிகைகளுக்கு ஈடாக வரவேற்பு பெற்றிருப்பதும் ஆச்சர்யம். அவரைப்பற்றி இன்னமும் ஆய்வு நோக்கில் தொடர்ந்து நுால்கள் வெளியிடப்படுகின்றன. திராவிட இயக்கத்தின் பண்பாட்டுத்தளத்திலிருந்து விலகி உருவான தலைவர் என அவரைச் சொல்வார்கள். ஆனால் திராவிட இயக்கங்களின் தலைவர்கள் வரிசையில் அதிகம் நுால்கள் வெளியானது இன்றுவரை அவர் ஒருவருக்குத்தான் என்பது ஆச்சர்யம் அளிக்கும் விஷயம். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் முன்னாள் டி.ஜி.பி மோகன்தாஸ் எழுதிய 'எம்.ஜி.ஆர், தி மேன் அன் தி மித்', எம்.எஸ். பாண்டியன் எழுதிய 'தி இம்பேக்ட் ஆஃப் எம்.ஜி.ஆர் ', உள்பட ஆங்கிலத்திலும் எம்.ஜி.ஆர் குறித்த நுால்கள் வெளியாகி உள்ளன.
வார மாத பத்திரிகைகள் என எடுத்துக்கொண்டாலும் இன்றைக்கு புகழ்பெற்றுவிளங்கும் விஜய் அஜித் போன்ற உச்சநட்சத்திரங்களைவிடவும் எம்.ஜி.ஆர் பெயரில்தான் இதயக்கனி, உரிமைக்குரல், எம்.ஜி.ஆர் ரசிகன் என பல பத்திரிகைகள் வெளியாகி வருகின்றன.
-
7th January 2018, 04:43 PM
#2830
Junior Member
Platinum Hubber
SOWKAR JANAKI MADAM AT MGR FUNCTION 3.1.2018 AT CHENNAI
Bookmarks