-
9th December 2017, 05:22 AM
#1961
Junior Member
Regular Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
புரட்சித் தலைவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு எந்த நடிகருக்கும் இல்லை என்பது மக்களிடம் நடத்திய இந்த கருத்து கணிப்பு மூலம் உறுதியாகிறது.
இப்போதைய கதாநாயகர்கள் கூட மக்கள் மனதில் மக்கள் திலகத்தின் இடத்தை பெற முடியவில்லை.
இதைவிட முக்கியம். மற்ற நடிகர்களோடு மக்கள் திலகத்தை ஒப்பிட்டாலே மக்கள் கோபப்படுகிறார்கள் என்று இந்த கருத்து கணிப்பின் மூலம் தெரிகிறது.
இன்னும் 300 வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் புரட்சித் தலைவர்தான் நிரந்தர இடம் பிடித்து வாழ்வார்.
இது நமக்கு பெருமை அளிக்கும் விசயம். மக்கள் திலகத்தின் ஒவ்வொரு ரசிகனும் புரட்சித் தலைவரின் ஒவ்வொரு தொண்டனும் நெஞ்சை நிமிர்த்தி நடக்கலாம்.
குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கைக்கும் பதிவிட்ட லோகநாதன் அவர்களுக்கும் நன்றி.
-
9th December 2017 05:22 AM
# ADS
Circuit advertisement
-
9th December 2017, 05:34 AM
#1962
Junior Member
Regular Hubber
"குப்பத்துராஜா" எனும் புதிய திரைப்படம் ஒன்றின் டீஸர் வெளியாகி உள்ளது.
டீஸரின் ஆரம்பம் முதல் முடிவு வரை வரும்
50 வினாடிகளிலும் திரையின் ஏதாவது ஓரிடத்தில் நம் மக்கள் திலகம் பரிமளிக்கிறார்...
டீசரின் ஆரம்பமே மக்கள்திலகத்தின் திரு உருவச்சிலைக்கு பிரபல மனிதநேயர் - நடிகர் அண்ணன் திரு.பார்த்திபன் அவர்கள் தலைவர் கெட்டப்பில் மாலை அணிவிக்க அங்கே கூடி உள்ளோர் மலர் தூவி ஆர்ப்பரிக்க...
அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் நம் மக்கள் திலகத்தின் அபிமானியாக மக்களுக்கு நல்லது செய்யும் முக்கியஸ்தராக பார்த்திபன் அவர்கள் தோன்றுவதாக தெரிகிறது டீசரின் மூலம் ...
மக்கள் திலகத்தின் புகழ் பாடும் காட்சிகள் தற்போது வரும் படங்களில் நிரம்பி வழியும் சூழலில் இந்த படத்திலும் வெகு ஜோராக இருக்கும் என்றே நம்புகிறேன்...
"இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்து வாழுமோ...?! மக்கள் திலகத்தின் புகழ்..." - என எதிரிகளையும் - துரோகிகளையும் முனக வைக்கும் டீஸர் இணைத்துள்ளேன்
மீண்டும் மீண்டும் இது போன்ற செய்திகளை உங்களுக்கு என் மூலமாகவே முதல் முறையாக தெரிவிக்க வைக்கும் அந்த அற்புத மஹாசக்தியினை எண்ணி எண்ணி மெய்சிலிர்க்கும்...
- மக்கள் திலகத்தின் மாணவன் - மயில்ராஜ்
-
9th December 2017, 05:37 AM
#1963
Junior Member
Regular Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
-
9th December 2017, 05:43 AM
#1964
Junior Member
Regular Hubber
-
9th December 2017, 10:03 PM
#1965
Junior Member
Diamond Hubber
தொடர்ந்து
மக்கள் திலகத்தின்
திரைக்காவியங்கள்
கோவையில்
டிலைட் - அலிபாபாவும் 40 திருடர்களும்
-
9th December 2017, 10:20 PM
#1966
Junior Member
Diamond Hubber
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் நினைவிடம் அருகே நினைவு மண்டம் எழுப்பக் கூடாது என கூறியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், எம்ஜிஆரை சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரில் ஆஸ்கருக்கு நிகரான விருது ஒன்றை அறிவிக்க வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் சுவாமிநாதன் கூறியது: தமிழக அரசு சார்பில் இப்போது நடத்தப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கூட்டங்களில் அவருக்குப் புகழ் சேர்ப்பதை விட்டுவிட்டு சொந்தப் பிரச்சினைகளைப் பற்றியே முதல்வரும் துணை முதல்வரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஊழலை எதிர்த்துதான் திமுக-வை விட்டு வெளியேறினார் எம்ஜிஆர். அப்படியிருக்கையில் அவருக்காக நடத்தப்படும் விழாக்களில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலலிதாவின் படத்தைப் பெரிதாகப் போடுகிறார்கள். இது ஏற்புடையது அல்ல.

பெரியார் நூற்றாண்டைக் கொண்டாடிய எம்ஜிஆரும் அண்ணா நூற்றாண்டைக் கொண்டாடிய கருணாநிதியும் அவர்கள் இருவருக்கும் புகழ் சேர்க்கும் விதமாக பல திட்டங்களை செயல்படுத்தினர். அதுபோல, எம்ஜிஆருக்கும் இப்போதுள்ள அதிமுக அரசு புகழ் சேர்க்க வேண்டும். அதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் சென்னையிலுள்ள பன்னாட்டு விமான முனையத்துக்கும் (எண் 4) எம்ஜிஆர் பெயரைச் சூட்ட மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா சாலையில் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட அண்ணா சிலையில் இருந்து எம்ஜிஆர் நினைவிடம் வரை உள்ள சாலைக்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்ட வேண்டும். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் எம்ஜிஆர். எனவே, அவரது புகழை காலத்துக்கும் சொல்லும் வகையில், ஆஸ்கர் போன்ற சர்வதேச அளவிலான விருதை வழங்க தமிழக அரசு அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்�
: தமிழக அரசு அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்த விருதும், அளிக்கப்படும் பரிசின் மதிப்பும் ஆஸ்கரை காட்டிலும் மதிப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் இல்லத்தில் நினைவு ஸ்தூபி எழுப்பி, அங்கு மாஸ்கோ செஞ்சதுக்கம் போல நட்சத்திரப் பின்னணியில் அவருடைய உருவம் ஜொலிக்கும்படி செய்ய வேண்டும். மெரினா பீச்சுக்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்டுவதற்கு இதுதான் சரியான தருணம். அதேசமயம், எம்ஜிஆர் நினைவிடம் அமைந்திருக்கும் வளாகத்தில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் எழுப்புவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
தேவைப்பட்டால், ஜெயலலிதாவுக்கு வேறு இடத்தில் மண்டபம் கட்டிக்கொள்ளட்டும். இந்த விவகாரம் தொடர்பாக நானும் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன். எனது சொந்த ஊரான சிதம்பரத்தில் எம்ஜிஆருக்கு எனது சொந்த செலவில் சிலை வைக்க தமிழக முதல்வரிடம் அனுமதி கேட்டேன். இதுவரை எந்தப் பதிலும் இல்லை என்றார்.

Last edited by suharaam63783; 9th December 2017 at 10:27 PM.
-
9th December 2017, 10:31 PM
#1967
Junior Member
Platinum Hubber
-
9th December 2017, 10:32 PM
#1968
Junior Member
Platinum Hubber
-
9th December 2017, 10:34 PM
#1969
Junior Member
Platinum Hubber
-
9th December 2017, 10:36 PM
#1970
Junior Member
Platinum Hubber
Bookmarks