-
23rd February 2018, 06:40 PM
#3441
Junior Member
Platinum Hubber
ஷாரூக்கான் இன்று செய்வதை எம்ஜிஆர் அன்றே செய்துவிட்டார்!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்தப் பின்னாலும் என் பேச்சிருக்கும் என் பாடி அசத்தியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர் கடமையை குறிப்பிட்டு சொன்னாலும் அவரது பெயர் மூன்று எழுத்தில் இருப்பதால் அவ்வாறே ரசிகர்களால் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. இவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் தமிழக மக்களின் இதயங்களில் மறையாது வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 1968ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் நடித்த தேர்த்திருவிழா என்ற திரைப்படம் வெளியானது. இதில் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்திருந்தார். அதில் அவரே நடிகராகவும் அவருக்கு அவரே ரசிகராகவும் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பலகாட்சிகளில் தான் ஒரு எம்ஜிஆர் ரசிகர் என்று அவரே கூறுவதாக காட்சிகள் இருக்கும்.
இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 50 வருடங்களை கடந்து விட்டது. ஆனால் இப்படத்தை போன்ற ஒரு படம் பாலிவுட்டில் தயாராகியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஃபேன் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் ஷாருக்கான் இருவேடங்களில் நடித்துள்ளார். அவரும் அவருக்கு ரசிகராக அவரே நடித்துள்ளதால் இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இதை நம் புரட்சித்தலைவர் 50 வருடங்களுக்கு முன்பே செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
23rd February 2018 06:40 PM
# ADS
Circuit advertisement
-
23rd February 2018, 06:48 PM
#3442
Junior Member
Platinum Hubber
தேர்த்திருவிழா
23.2.1968
மக்கள் திலகம் அவர்கள் 1963/1966 ஆண்டை போலவே 1968 பொங்கலுக்கு முன் ரகசிய போலீஸ் 115என்ற பிரமாண்ட வெற்றி படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தார் ..6 வார இடை வெளிக்கு பின்னர் தேவரின் தேர்த்திருவிழா படம் வெளியானது . இனிமையான பாடல்கள் - பொழுது போக்கு
படமாக வந்தது . மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து .
தேர்த்திருவிழா வெளிவந்து மூன்று வார இடைவெளியில் குடியிருந்த கோயில் படம் வந்துமாபெரும் வெற்றி சித்திரமாக வசூலில் முதலிடம் பெற்ற படமாக இருந்தது .
ரகசிய போலீஸ் 115-குடியிருந்த கோயில் இரண்டு மிகப்பெரிய ஹிட் படங்களுக்கு மத்தியில் தேர்த்திருவிழாஒரு ரசனையான -சிறந்த படமாக ரசிகர்களுக்குவிருந்தாக அமைந்தது .
-
23rd February 2018, 07:00 PM
#3443
Junior Member
Platinum Hubber
தமிழ் நாடு சட்ட சபை மன்றத்தில் புரட்சி தலைவர் mgr., அவர்கள்1980-ஆம் வருடம் தமிழ் நாடு முதல்-அமைச்சராக சபையில் வீற்றிந்தபொழுது நிதி-அமைச்சர் திரு நாவலர் நெடுநசெழியன் அவர்கள் ஒரு புள்ளிவிவரம் அளிதத்தாவது,; இன்றைய திரைஉலகில் தெரிந்த முகம், தெரியாத முகம், புரிந்த முகம், புரியாத முகம், அறிந்த முகம், அறியாத முகம், போயிட்டு வந்த முகம், வந்திட்டு போன முகம் --- என்ற ரீதியில் உள்ள நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் 700- கும் குறைவான திரைகளில் ஓடும்போது நம் புரட்சிதலைவர் இப்பொழுது திரை உலகை விட்டு விலகிய பொழுதும் அவரின் பழைய திரைப்படங்கள் 900 -கும் அதிகமான திரை அரங்கங்களில் மக்களின் பேதாரவோடு வெற்றிநடை போடுகிறது - என சபை உறுப்பினர்களின் பலத்த கர கோஷங்களுடன் விளக்கம் அளித்தார்...அப்பொழுது இந்த செய்தி எல்லா நாளிதழ்களிலும் வெளியாகியது...
-
24th February 2018, 10:39 AM
#3444
Junior Member
Diamond Hubber
1980 ஆம் ஆண்டுகளில் மக்கள் திலகம் காவியங்களின் திரையரங்குகள் திரையீடுகள் எண்ணிக்கை மாபெரும் அளவான 1100 க்கும் மேலான அளவீடுகள் ஆகும்...
-
24th February 2018, 06:19 PM
#3445
Junior Member
Diamond Hubber
-
24th February 2018, 06:23 PM
#3446
Junior Member
Diamond Hubber
-
24th February 2018, 06:26 PM
#3447
Junior Member
Diamond Hubber
-
24th February 2018, 07:39 PM
#3448
Junior Member
Diamond Hubber
-
24th February 2018, 10:09 PM
#3449
Junior Member
Diamond Hubber
மறு வெளியீட்டு காவியங்களின் இலக்கணம் வகுத்த ஒரே கலையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் "குடியிருந்த கோயில்" தற்போது சென்னை- ஸ்ரீநிவாசா dts இல் திரையிட்டுள்ளது...
-
25th February 2018, 09:01 PM
#3450
Junior Member
Devoted Hubber
நடிகை சிறீதேவி மக்கள் தலைவருடன் நம்நாடு படத்தில் நடித்திருக்கிறார். புரட்சித் தலவை ரை சித்தாப்பா என்று மழலை குரலில் சொல்லுவார்.
சங்கே முழுங்கு பட்டத்திலும் சீறிதேவி குழந்தையாக நடித்து இருக்கிறார். ஆனல் புரட்சி்த் தலவரோடு சேர்ந்து காட்சி இல்ைல. கொஞ்ச நேரம் மட்டுமே வருவார்.
மாரடப்பில் இறந்துபோன நடிகை சிறீதேவிக்கு அனுதாபத்துடன் வருந்துகிறோம்.
Bookmarks