Page 84 of 400 FirstFirst ... 3474828384858694134184 ... LastLast
Results 831 to 840 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #831
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சாதனை சக்கரவர்த்தி நடிகர் திலகம்

    சிவாஜி கணேசனின்


    131 வது திரைச் சித்திரம்

    நிறைகுடம் வெளிவந்த நாள் இன்று


    நிறைகுடம் 08 ஆகஸ்ட் 1969




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #832
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussain







    நடிகர் திலமும் கலைவாணரும்,,,,

    திலகத்தின் இரண்டாவது படம் " பணம்"... இது கலைவாணருடைய சினிமா,,, கலைவாணருக்கு பணம் சம்பாதித்து கொடுத்த சினிமா,

    ,, நடிகர் திலகத்தின மேல் அன்பும் பற்றும் கொண்டார் கலைவாணர்,,, பணம் படத்தில் நம்மவரின் நடிப்பைக் கண்டு வியந்தார்,,, இந்த நடிகன் தமிழுக்கும் சினிமாவுக்கும் தவிர்க்க இயலாத மனிதராக வருவார் என்று அன்றே கணித்தவர் கலைவாணர்,,,, ஒரு சமயம் கலைவாணர் தன்னுடைய தேவைக்காக சென்னை ராயப்பேட்டையில் சண்முக முதலியார் தெருவில் இருந்த தன்னுடைய வீடு ஒன்ற...ை விற்பதற்கு ஏற்பாடு செய்தார்,,, இது கலைவாணருடைய இறுதிக் காலம்,, வழக்குகள் மற்றும் சில பிரச்னைகள் அவருக்கு இருந்தது,, அதனால் வீட்டை விற்க முடிவு செய்தார்,,,

    இந்த வீடு கலைவாணர் நான் குடியிருந்து வரும் தன்னுடைய பூர்வீக வீடு,,,, குறிப்பாக நடிகர் திலகத்திற்கு அவர் தன்னுடைய வீட்டை விற்க விரும்பினார்,,, அந்த வீட்டை வாங்குவதில் நம்மவருக்கும் ஒரு தர்மசங்கடம்,, இருப்பினும் இதை வாங்கினால் அவருக்கு உதவி செய்ததுபோல் இருக்கும் என்று எண்ணினார்,,, வீட்டுக்குரிய பணத்தைக் கொடுத்து வீட்டையும் கலைவாணருக்கே கொடுக்க செய்தாலும் கலைவாணர் ஒப்புக் கொள்ள மாட்டார்,,, இருப்பினும் பேச்சளவில் ஒரு தொகை பேசப்பட்டது,,, ஆனால் பணப் பரிமாற்றம் எதுவும் நடைபெறவில்லை,, தம்பி சிவாஜிக்குத்தான் இந்த வீடு என்று கலைவாணர் கூறி இருந்தார்,, இந்த சூழ்நிலையில் மார்வாடி ஒருவர் இந்த வீட்டை அதிக விலைக்கு வாங்க முன் வந்தார்,,, அன்றைய காலகட்டத்தில் அந்த வீட்டிற்குரிய மதிப்பை விட அதிகப் பணம் தர முன் வந்தார் அந்த மார்வாடி,, அதிக விலை கிடைத்தால் கலைவாணருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அகம் மகிழ்ந்தார் சிவாஜி,,,, கலைவாணருக்கு பணத்தேவை அதிகமாக இருப்பினும் மார்வாடிக்கு வீட்டை விற்க மறுத்து விட்டார்., அதற்கு அவர் கூறிய காரணம் மெய் சிலிர்க்க வைத்தது,,, நம்மவர் மேல் அவர் வைத்திருந்த அன்பு,,, கலைவாணர் மீது நம்மவர் வைத்திருந்த மரியாதைக்கு ஒரு சாம்ப்பிள்,,,, அப்படி என்னதான் கூறினார் கலைவாணர்,, தம்பி கணேசன் உலகம் போற்றும் சிறந்த கலைஞன்,,, இந்த வீட்டை அவருக்கு கொடுத்தால் இந்த வீடும் கலைக்கோயில் போல் வாழும்,,, தம்பி என்ற உரிமையில் நாம் எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம்,,, என் வீடு என் இளைய சகோதரருக்கு கொடுத்த நிம்மதி கிடைக்கும்,,, இவையெல்லாம் அந்த மார்வாடியிடம் இருந்து நான் பெற்றுக் கொள்ள முடியுமா என்றார்,,, நடிகர் திலகத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் கலைவாணர் இப்படி ஒரு வார்த்தையை கூறி இருப்பார்,,, கலைவாணரிடம் இருந்து இப்படி ஒரு நம்பிக்கையை பெற நம்மவர் எவ்வளவு தூரம் கலைவாணரிடம் பழகி இருப்பார்,, இந்த சகோதரப் பண்பை வேறு யாரிடமாவது எதிர் பார்க்க முடியுமா?




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #833
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Vasu Devan





    நடிகர் திலகத்தின் நாயகிகள் (பானுமதி)'

    'திரையுலகின் அஷ்டாவதானி' எனப் புகழ் பெற்றவர். சகலகலாவல்லி. பல்வேறு துறைகளிலும் சிறந்த திறைமைசாலி. 'அறிவாளி' நடிகர் திலகத்துடன் சிறந்த ஜோடியாகத் திகழ்ந்த பெண் அறிவாளி. நடிகர் திலகத்திற்கும் சீனியர் நடிகை. நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம், பாடல்,எடிட்டர், ஸ்டுடியோ அதிபர், வசனகர்த்தா என்று எட்டுத் துறைகளிலும் கொடிநாட்டிய அசாதாரண திறமை கொண்ட நடிகை. இவர் திறமையை எண்ணி வியக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். தமிழக சூப்பர் ஸ்டார்கள் தியாகராஜ பாகவதர் அவர்களுடன் 'ராஜமுக்தி' திரைப்படத்திலும், பி.யூ.சின்னப்பா அவர்களுடன் 'ரத்னகுமார்' திரைப்படத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர். 1953 இல் வெளிவந்த 'சண்டிராணி' என்ற தன் சொந்தத் தயாரிப்பு படத்தின் இயக்குனரும் இவரே. இருபத்தெட்டு வயதிலேயே இயக்குனரான இமய நடிகை.
    தெலுங்கில் 1945-இல் வெளிவந்த 'ஸ்வர்க்கசீமா' திரைப்படத்தில் "ஓஹோ...பாவுரமா" என்று இக்கால நடிகைகள் போல உடையணிந்து புறாவை கையில் வைத்துக் கொண்டு இவர் பாடி வருவதைப் பார்த்து தென்னிந்திய திரைப்பட உலகமே கிறங்கியது. அந்தப் பாடலைப் பார்த்து அசந்து போன முக்கியமானவர்களில் ஒருவர் யார் தெரியுமா? சாட்சாத் நடிகர் திலகம்தான். இதை நடிகர் திலகமே பானுமதி பற்றி கூறும்போது பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
    தெலுங்குத் திரைப்பட உலகில் 'பாவுரமா பானுமதி' என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறார். தெலுங்கில் டாப் ஸ்டார்களாய் திகழ்ந்த என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், நாகையா ஆகியோருடன் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை அளித்தவர்.
    நடிகர் திலகத்துடன் 'கள்வனின் காதலி'யில் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார் பானுமதி. இந்தப் படத்தில் நடிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.
    பானுமதியோ சீனியர் நடிகை. மிகவும் கண்டிப்பானவர். கதாநாயகர்கள் அவரை தொட்டு நடிக்கக் கூட பயப்படுவார்கள். அவர் பெர்மிஷன் இல்லாமல் அவரை தொடக் கூட முடியாது. அப்படிப்பட்ட சீனியருடன் நடிக்க 'கள்வனின் காதலி'யில் நம்மவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஷூட்டிங் நடக்கத் தொடங்கியது. பானுமதி 1939-இல் திரையலகில் களமிறங்கியவர். நம்மவர் 1952 இல் புயலாகப் புகுந்தவர். கிட்டத் தட்ட 13 வருடங்கள் பானுமதி நம்மவருக்கு சீனியர். பட ஆரம்ப ஷூட்டிங்கின் போது பானுமதி இயக்குனர் வி.எஸ் ராகவனிடம் "பையன் எப்படி... நன்றாக நடிப்பானா... எனக்கு சமமாக நடிக்க வேண்டுமே!" என்றாராம். நடிப்பு என்று வந்துவிட்டால் நம்மாளுக்கு சீனியராவது ஜூனியராவது ...நடிகர் திலகம் வழக்கம் போல கள்வனின் காதலியில் நடிப்பில் களேபரம் செய்ய, பானுமதி நம்மவரின் நடிப்பில் மிரண்டு, அரண்டு போய் இயக்குனரை சில நாட்களுக்குள்ளேயே தனியே அழைத்து "அந்தப் பையனை (நடிகர் திலகத்தை) கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்... விட்டால் என்னையே காணாமல் காலி செய்து விடுவான் போல இருக்கிறது" என்றாராம் பரிதாபமாய். (இருங்கள்... கொஞ்சம்... கொஞ்சமென்ன... முழுக் காலரையுமே தூக்கி விட்டுக் கொள்கிறேன்... ஸாரி ...தூக்கி விட்டுக் கொள்ளுவோம்)
    (இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் பின்னாளில் 'சர்வர் சுந்தரம்' படத்தில் மனோரமா சீனியர் நடிகையாகவும்,நாகேஷ் அறிமுக நடிகராகவும் நடிக்கும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்ததாக கூறுவோர் உண்டு... அந்தக் காட்சியும் பிரமாதமாகவே இருக்கும் )
    கல்கியின் 'கள்வனின் காதலி', கொங்கு நாட்டுத் தமிழை புகழ் படுத்திய "மக்களைப் பெற்ற மகராசி', அண்ணாவின் 'ரங்கோன்' ராதா, ("நடிப்பின் இலக்கணம்" என்று அண்ணாவால் பானுமதி போற்றப் பட்டார்), 'அம்பிகாபதி', அறிவாளி, 'மணமகன் தேவை', 'ராணி லலிதாங்கி' படங்களில் கதாநாயகியாக நடிகர் திலகத்துடன் சோபித்தவர். அதுமட்டுமல்லாமல் சாரங்கதாரா, ராஜபக்தி (வில்லி), தெனாலிராமன் (வில்லி), படங்களிலும் நடிகர் திலகத்துடன் நடித்துள்ளார்.
    "வெயிற்கேற்ற நிழலுண்டு"... "வெண்ணிலா ஜோதியை வீசுதே".... "போறவளே போறவளே பொன்னுரங்கம்"... "கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே"..."மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு"...போன்ற அற்புத பாடல்களைப் பாடி தன் தனித்தன்மையான குரல் வளத்தால் நம் உள்ளங்களில் குடிகொண்டவர்.
    குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு படம்'அறிவாளி'. நடிகர் திலகமும், பானுமதியும் போட்டி போட்டுக் கொண்டு தத்தம் திறமைகளை நிரூபித்திருப்பார்கள். சும்மா நம்ம தலைவர் பானுமதியை பாடாய் படுத்துவார் பாருங்கள்... பானுமதியும் சரியாக ஈடு கொடுப்பார்... அந்த ரோலில் பானுமதியைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்துகூட என்னால் பார்க்க முடியவில்லை.
    தத்துவம், ஜோதிடம் இவற்றிலும் சிறந்தவர் பானுமதி. இவருடைய கணவர் ராமகிருஷ்ணா. சொந்தமாக தன் மகன் பெயரில் 'பரணி ஸ்டுடியோ' என்ற ஸ்டுடியோவும் இவருக்கு உண்டு. 'பரணி பிக்சர்ஸ்' பெயரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதில் 'மணமகன் தேவை' என்ற அற்புத நகைச்சுவை படத்தை நடிகர் திலகத்தை வைத்து அருமையாக எடுத்திருந்தார் பானுமதி. Western hero போல இப்படத்தில் நடிகர் திலகத்தை வித்தியாசமாக,அழகுறக் காட்டியிருந்தார்கள்.
    AVM -ன் 'அன்னை' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார் பானுமதி. பல பரிசுகளையும், அவார்டுகளையும் பானுமதி பெற்றிருக்கிறார். அவற்றுள் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் முக்கியமானவை. Western music, Hindustani music இரண்டிலும் கரை கண்டவர். பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.
    நடிகர் திலகம் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட பானுமதி "நியூஸ் கேள்விப்பட்டவுடன் என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை"...என்று துக்கம் தொண்டை அடைக்க கதறியதை நம்மால் மறக்கவே முடியாது.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #834
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #835
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #836
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan











    Sundar Rajan

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    தற்போது சினிமாவில் நமது தலைவரின்
    படத்தை அல்லது படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியையோ அல்லது நடிப்பு என்றால் சிவாஜி தான் என்று பேச...ுவது என பெரும்பாலான திரைப்படங்களில் வருவது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
    பீட்சா, ஜிகர்தண்டா போன்ற படங்களின் இயக்குநா் கார்த்திக்சுப்புராஜ் அவர்கள் மேயாத மான் என்ற பெயரில் முதன்முதலாக சொந்தப் படம் தயாரிக்கிறார்.
    அதில் அண்ணன் தங்கை பற்றி பாடல் ஒன்று வருகிறது. அந்தப் பாடலில் அண்ணன் தங்கை இருவருக்கும் நடிகர்திலகம் மற்றும் நடிகையர்ர்திலகம் இருவரது மாஸ்க் வைத்து ஆடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.
    இநத பாடல் தற்போது யூ டியூப்பில் வெளிவந்துள்ளது.
    மேலும் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஜிகர்தண்டா
    படத்தின் ஆரம்பமே நமது நடிகர்திலகத்தின் பாசமலர் படத்தில் இடம் பெற்ற சரித்திரப் புகழ்பெற்ற மலர்ந்தும் மலராத பாதி மலர் பாடல் இடம்பெறும் வகையில் இருக்கும், அவருடைய கேரியரில் ஜிகர்தண்டா மாபெரும் வெற்றியையும், புகழையும் பெற்றுத் தந்தது.
    தற்போது தான் தயாரிக்கும் முதல் படத்திலேயும் அதே பாசமலர் படத்தினை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மேயாதமான் திரைப்படமும் மாபெரும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.
    யூடியூப்பில் வெளிவந்துள்ள பாடல்காட்சியின் புகைப்படம் மற்றும் மேயாத மான் படத்தின் போஸ்டர் உங்களுக்காக....
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #837
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Sundar Rajan


    அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
    மற்றும் நண்பர்களே,
    நமது தமிழ்நாட்டில்
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் கலையுலக பிரவேசமான 1952ல் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர்கள் பெ...யர் பட்டியல் இதோ,
    1.குமாரசாமி ராஜா 2.ராஜாஜி 3.காமராஜ் 4.பக்தவச்சலம் 5.அண்ணாதுரை 6.நெடுஞ்செழியன் 7.கருணாநிதி 8.எம்ஜிஆர் 9.ஜானகி எம்ஜிஆர் 10.ஜெயலலிதா 11.பன்னீர்செல்வம் 12.எடப்பாடி பழனிசாமி
    இதில் எதிர்பாராத வகையில் நெடுஞ்செழியன் 2 முறையும், பன்னீர் செல்வம் அவர்கள் 3 முறையும் முதலமைச்சராக இருந்துள்ளனர்.
    அதாவது,
    தமிழ்நாட்டில் 1952ல் இருந்து 2017 வரை 65 வருடமாக 12 முதலமைச்சர்கள் இருந்துள்ளனர். இனி இது தொடரும் நாளை சசிகலா அல்லது தினகரன் கூட முதலமைச்சராகலாம்.
    முதலமைச்சர் பதவி என்பது இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவரை மிஞ்சி அடுத்தவர் என தாெடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
    முதலமைச்சர் பதவி என்பது இன்று மிகவும் சாதாரணமாகி விட்டது.
    ஆனால்,
    நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் தான் கால்பதித்த
    1952 முதல், தான் விண்ணுலகம் சென்ற 2001வரை
    49 வருடமாக கலையுலகில் அவரை அசைச்க ஒருவரும் கிடையாது.
    சரி போகட்டும் 2001க்கு பிறகாவது அவருடைய சாதனையை முறியடிக்க அல்லது அவரை மிஞ்ச யாராவது வந்தார்களா என்றால் அதுவும் இல்லை.
    2001க்கு பிறகும் தற்போது 2017 வரை இன்றும் கலையுகில் சிவாஜி ஒருவரே ராஜாவாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
    அன்பானவர்களே, 2017 மட்டுமல்ல 3000மாவது ஆண்டு வந்தாலும் திரையுலகில் சிவாஜி என்ற ஒருவரை விஞ்ச எவரும் முடியாது.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #838
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussain



    சிவகுமார்,,,, ஒரு நடிகராக, ஓவியராக, இப்போது கை தேர்ந்த சொற் பொழிவாளராக,,, நம்முடன் வாழ்ந்து வருகிறார்,,, நம்மைப் போல ஆகப் பெரும் சிவாஜி ரசிகர்,,, சுமார் 17 படங்களில் அவரோடு பணியாற்றி கதாநாயகன் என்ற தகுதியை சிவாஜி என்ற உரைகல்லில் தீட்டப் பட்டு பெற்ற பாக்கியவான்,,, திலகத்தைப் பொருத்தவரை சிவகுமார் அவர்கள் தன்னுடைய இளவல்,, அவளவுதான்,,, வி சி சண்முகத்தின் மீது எவ்வளவு பாசம் வைத்தாரோ அதே அளவு சிவகுமாரின் மீதும் வைத்திருந்தார்,,, ஒரு சமயம் சிவக்குமாரின் வீட்டிற்கு சிவாஜி போகிறார்,,, அவரை கண்டவுடன் சிவகுமாரின் அருமை மகள் பிருந்தா அப்போது சிறுமி,,, ஹை சிவாஜி அங்கிள் என்று ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறார்,, சிவாஜி பிருந்தாவிடம் உன் அப்பனுக்கு நான் அண்ணன்,,, ஆகவே நான் உனக்கு பெரியப்பா ஆகிறேன்,,, என்னை அங்கிள் என்று அழைக்கக் கூடாது பெரியப்பா என்றுதான் அழைக்க வேண்டும் எனறு கூறுகிறார்,,, சிவாஜி அவர்களுக்கு ஒருவரை மிகவும் பிடித்துப் போனால் "வாடா போடா" என்று மிக உரிமையோடு நெருங்கி விடுவார்,, சிவகுமாரையும் வாடா போடா என்றுதான் அழைப்பார்,,, சில நேரங்களில் ஜாதியை சொல்லியும் அழைப்பார்,,, அதில் எவ்வித நெருடலோ விஷமமோ இருக்காது,,, பாந்தமாக இருக்கும்,,, ஒரு ஓவியராக நடிகர் திலகத்தைப் பற்றி சிவகுமார் என்ன கூறுகிறார்?
    சிவாஜியின் மிகப் பெரிய சொத்து, அவரது ஒளிமிக்க உயிர்ப்புள்ள கண்கள்தான்,,,, அந்த கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்,,, என்று கூறுகிறார்,, எவ்வளவு நிதர்சனமான உண்மை,,,
    சிவாஜி என்றால் நடிப்பு,,, நடிப்பு என்றால் சிவாஜி,, அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு முன் மாதிரியும் கிடையாது,,, பின்மாதிரியும் கிடையாது,,, நம் திலகம் பற்றின எத்தனையோ விஷயங்களை சிவகுமார் அவர்கள் நம்மிடம் பகிந்து இருக்கிறார்,,,, அத்தனையும் இச்சிறு பதிவுக்குள் அடக்க முடியாது,, உயர்ந்த மனிதன் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் நல்ல தார்க் குச்சியில் சிவகுமார் வாங்கிய அடி கொஞ்சமா நஞ்சமா? காலத்திற்கும் மறக்க மாட்டார்,,, அந்த சீனில் நடித்த சௌகார் ஜானகி "ஷாக் கார் ஜானகி" ஆகிட்டார்,,, விளையாட்டுப் பிள்ளை படத்தில் பத்மினியம்மா வுக்கு கன்னத்தில் ஒரே அறை,,, காதணிகள் கழண்டோடி விட்டது,, அதையும் சிவகுமார் அறிவார்,,நடிப்பென்று வந்து விட்டால் அடித்து நொறுக்கி விடுவார்,,, சீன் நன்றாக வரவேண்டும் என்ற அக்கரை,..
    சிவகுமாரிடம் தன் தாயார் படத்தை ஓவியமாக வரைந்து கொடுக்க கேட்டிருந்தார்,,, சந்தர்ப்ப வசத்தில் சிவகுமார் அதை மறந்து விட்டார்,,, ஒருமுறை சந்திப்பில் என்னடா சிவா இப்படி ஏமாத்திக்கிட்டு இருக்கே,,, அம்மா படத்தை படத்தை வரைந்து கேட்டேனே மறந்துட்டியா,,, அவங்க ரொம்ப நாள் தாங்க மாட்டாங்கடா என்று சொல்லும் போதே மனதை கசிய வைக்கிறார்,,,,
    சிங்கப்பூர் விழாவில் மயங்கி விழுந்தார் சிவாஜி,,, சிகிச்சை அளிக்கப்பட்டு ஓய்வுக்குப் பின் குடும்பத்துடன் சிவகுமார் திலகத்தை சந்திக்க வருகிறார்,,, அந்த நடிகனுக்குள் இருந்த ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார்,,சிங்ப்பூர்ல ஐந்தாயிரம் அடி திரையில கட்டபொம்மன் காட்சியை போடுறான்,, ஐந்தாயிரம் பேர் விசிலடித்து கொண்டாடி தீர்க்கிறான்,,, ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே தங்கப்பதுமை காட்சிக்கு அரங்கமே குலுக்குது,,, சிவா,, வாட் எ ஃபைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் அப்போ ஏண்டா சாகல,, இப்போ எதுக்குடா உயிரோட வந்தேன்? என்று மனக் குமுறல்களை கூறுகிறார்,, எவ்வளவு ஆதங்கம் உள்ள கலைஞன்,,, புகழின் உச்சத்திலேயே உயிரை விட வேண்டும் என்பதுதானே,,, நடித்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது நடிப்பின் பாராட்டுதலின் போதோ உயிர் போகவேண்டும் என்ற ஆதங்கம் அந்த கலைஞனுக்குள் இருந்து வெளிப்பட்ட தருணம் அது,,,
    முத்தாய்பாக சிவக்குமாரின் வார்த்தைகளில் இருந்து இந்த கட்டுரையை முடிக்கிறேன்,,, நடிகர் திலகம் ஒரு யுகக் கலைஞர்,,, மஹா கலைஞர்,,, அவர் என் துரோணர்,,, அவர் போடாத வேடமில்லை,,, நடிக்காத நடிப்பு இல்லை,,, அடுத்த தலைமுறைக்கு எதையும் விட்டு வைக்காமல் நடித்தவர்,,, இன்றைக்கு எங்கள் நடிப்பு எல்லாம் அவரது நடிப்பின் பாதிப்புதான்,, அப்படிப் பட்ட மஹா கலைஞனை எப்படி மறக்க இயலும்?


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #839
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussain

    நடிகர் திலகத்துடன் அதிக படங்களில் பணியாற்றியவர்,, எம். என். நம்பியார்,,, சிறு வயதில் நாங்கள் அவரை அழைப்பது எமன், நம்பியார் என்றுதான்,, அத்தனை தத்ரூபமான வில்லன் நடிகர்,, ஆனால் நிஜ வாழ்க்கையில் பரிசுத்தமான மனிதர்,,, மேன்மையான குடும்பஸ்தர், சிறப்பு மிக்க ஐயப்பன் பக்தர்,,, குருசாமி,,, இத்தனை குண நலன்கள் மிக்க ஒருவர் நம் திலகத்தை எப்படிப் பார்க்கிறார்? அங்கேதான் வானுயர உயர்ந்து விடுகிறார் நம்மவர்,, ஒருமுறை நம்பியார் தன்னுடன் நடிக்கும் ஒரு கதாநாயகர் நடிகருடன் உணவு இடைவேளையில் உரை...யாடிக் கொண்டு இருக்கும் போது நம்பியார் அவர்களுக்கு வந்த கேரியரில் கருவாட்டு குழம்பும் மீன் வகைகளும் கண்டு அதிர்ச்சி அடைகிறார்,,, காரணம் அவர் சுத்த சைவம்,,, இந்த சாப்பாட்டு கேரியர் மாற்றப்பட்டது அந்த கதாநாயக நடிகரின் செயல்,, இதுதான் அந்த குறிப்பிட்ட நடிகர் நம்பியாரை மதித்த சம்பவம்,, நம்மவர் அப்படி இல்லை தான் அசைவ உணவாளி யாகா இருந்தாலும் பிறர் உணவுப் பழக்கத்தை மதித்தவர்,, அதுமட்டுமின்றி நம்பியார் அவர்களின் ஆலோசனைகளின் படி தானும் ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை போட்டு சபரிமலைக்கு தரிசனம் சென்று வந்தது வரலாறு,,, நம்மவர் செயலுக்கும் அந்த கதாநாயகர் செயலுக்கும் மனித நேயத்தில் எத்தனை வித்தியாசம்,,,,,
    அப்படிப்பட்ட நம்பியார் அவர்கள் நம் திலகத்தைப்பற்றி என்ன சொல்கிறார்? அவர் கூற்றுலேயே பார்க்கலாம்,,,, உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.
    யயாதி மகாராஜா, இந்திரலோகத்தில் இருக்கும் தேவர்கள் போல் இளமையாகவே வாழ விரும்பினார். அதற்கு அவரது பிள்ளைகளில் எவராவது தனது இளமையைத் தந்தால் அவர் இளைமையுடன் வாழலாமென ரிஷி ஒருவர் வரம் தந்தார். ஆனால் எந்தப் பிள்ளையும் தங்களது இளமையைத் தர முன் வர வில்லை. அவர் பெற்ற பிள்ளைகளில் அரூபியாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். அந்தப் பிள்ளை தனது இளைமையை தன் தந்தைக்கு தந்ததாக புராணக் கதையொன்று உண்டு. யயாதியின் நிலையில் சிவாஜி இருந்திருந்தால், நான் என் இளமையைத் தந்திருப்பேன்,,,, என்று கூறுகிறார், ஒரு சிறந்த மனிதர் ஒரு மிகச்சிறந்த மனிதர்பால் உயர்வான அபிப்ராயம் கொண்டுள்ளார் என்றார்,,, அந்த மிகச்சிறந்த மனிதரான நம் நடிகர் திலகம் நம்பியார் அவர்கள் மனதை எவ்வளவு ஆட்கொண்டு இருந்து இருக்கிறார் என்று புரிகிறதல்லவா? அதனால்தான் காலத்தை வென்றவராக மறைந்தும் மறையாத மாமணியாய் திகழ்கிறார்,,,,,






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #840
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussain

    நடிகர் திலகமும்,,, பெண் நடிகர் திலகமும்,,,,,,,,,,,

    அண்ணல் அவர்கள் சுமார் 300 படங்களில் நடித்து இருக்கிறார் எனறால் மனோரமா அவர்கள் அவருடன் சுமார் 150 படங்களிலாவது நடித்திருப்பார்,,, ஒரே படத்தில் இருவரும் நடிக்கும் போதுதான் உண்மையான போட்டியே நிகழும்,, பன்முக திறமையாளர் "சோ" அவர்களின் அக்மார்க் ஸ்டேட்மெண்ட்,,, மனோரமா ஒரு பொம்பளை சிவாஜி என்பதுதான்,,, சோ அவர்கள் யாரையும் அவசரப்பட்டு பாராட்டி விட மாட்டார்,,, அவர் பாராட்டும் போதே கப் என்று பிடித்துக் கொள்ள வேண்டும்,,, சரி பெண் சிவாஜி எனறால் என்ன? பெண் நடிகர் திலகம்,,, நடிகையர் திலகம் அல்ல,,, அவர் வேறு ஒருவர்,,, நடிகர் திலகத்தின் இன்னொரு போட்டியாளர்,,, அவர் வேறு ஒரு எபிஸோடில் வருவார்,,, ஆக நடிகர் திலகத்தின பெண்பால்,,, சாம்பிளுக்கு தில்லானா மோனாம்பாளை எடுத்துக் கொள்வோமே? ஜில் ஜில் ரமாமணியோட அட்டாகாசத்தைப் பார்த்து கோடையிடி நந்தி முத்து ராக்கு அண்ணனே கதி கலங்கி போயிருப்பார்,
    அந்தப் படத்தில் சிக்கலாருக்கும் ரமாமணிக்கும் ஒரு அந்யோநியமான சகோதரப் பாசம் இருக்கும்,,, அது சினிமாவுக்கான நடிப்பு என்றால் நாம் ஏமாந்து போவோம்,,, உண்மையான சகோதரப் பாசம் அது,, பாசமலர் தங்கை ஒரே ரத்தம் என்றால் இது ஒன்றுவிட்ட ரத்தம் அவ்வளவுதான்,,
    நடிகர் திலகம் சிவாஜி படப் பிடிப்புத் தளத்தில் இருந்தாரென்றால், அத்தனை நடிகர்களும் அவரது நடிப்பை வியந்து ரசிப்பார்கள். அதில் நடிப்பிற்கான பாடத்தைப் படிப்பார் கள். அதேபோல் நடிகர் திலகம் அவர்கள் ஒருவரின் நடிப்பை ரசித்துப் பார்க்கிறாரென்றால், அது மனோரமாவின் நடிப்பாகத்தான் இருக்கும்,,,,
    ‘”என் தங்கச்சி நடிப்பப் பாருங்க… எவ்வளவு இயல்பா இருக்கு’’ என மனம் திறந்து பாராட்டுவாராம் சிவாஜி. அப்படி நடிப்பிற்கான பல்கலைக் கழகத் திடமே பாராட்டு பெற்ற பேராற் றல் மிக்கவர்தான் மனோரமா. அதனால்தான் அவர் பெண் சிவாஜி ஆகிப்போனார்,,, சரி தங்கையாக எப்படி ஆனார்?
    காலம் தான் மனோரமா மூலம் சிவாஜிக்கு "ரக்ச பந்தன்" கயிறு கட்டி அவருக்கு தங்கையாக்கியது,, மனோரமாவே கூறுகிறார்,,,,,
    ‘‘எனக்கும், சிவாஜிக்கும் உள்ள உறவு, அண்ணன்-தங்கை உறவு. இதை உண்மை என்று நிரூபிப்பது போல் என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
    எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக, மிகப்பெரிய துணையாக இருந்தவர், என் தாயார். அவர் திடீரென்று இறந்து போனார். என்னால் துயரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தகவல் அறிந்ததும் முதல் ஆளாக என் வீட்டுக்கு வந்தவர், அண்ணன் சிவாஜிதான். என்னை தேற்றியதுடன், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் நெகிழ்ந்து போகும்படி ஒரு செயலை செய்தார்.
    எங்கள் குடும்ப வழக்கப்படி, தாயார் மறைந்தால் முதலில் மகன்தான் கோடித்துணியை தாயார் உடம்பில் போர்த்த வேண்டும். எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் யாரும் கிடையாது. இதை நினைத்து நான் அழுது கொண்டிருந்தபோது, அண்ணன் சிவாஜி, என் கூடப்பிறந்த அண்ணனாக விலை உயர்ந்த ஒரு வெண் பட்டுப்புடவையை என் தாயாரின் உடம்பில் போர்த்தினார்.
    என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘‘அண்ணே, இந்த தங்கச்சி மீது உங்களுக்கு இத்தனை பாசமா அண்ணே’’ என்று கதறி அழுதேன். ‘‘என்னைக்குமே நீ எனக்கு தங்கச்சிதாம்மா’’ என்று என்னை தேற்றினார்.’’
    நடிப்புத்துறைக்கு வந்தோமா நடித்தோமா போனாமா என்றில்லாமல் தன்னுடன் நடிக்கும் அத்தனை கலைஞர்களையும் தன் குடும்பம் போல கருதியவர் அண்ணலார்,, ஆகவேதான் அவரது நடிப்பு இன்றும் சிலாகிக்கப் படுகிறது,,,, தனக்கு சவால் விடும் நடிப்பாளினியை நடிக்காமலேயே வென்று விட்டவர் அவர்,,, அவர்தான் நடிகர் திலகம் என்ற மஹான்,,,



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •