Page 65 of 400 FirstFirst ... 1555636465666775115165 ... LastLast
Results 641 to 650 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #641
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர் வாலி-18th July- Memories

    வாலியின் மிக சிறந்த வரிகள்.

    தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.

    கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே. பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே.

    மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்

    முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக

    முக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ

    நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்

    கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ

    மாளிகையே அவள் வீடு மரகிளையில் என் கூடு

    மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

    நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

    புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

    வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால் ,பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்,வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்

    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ





    எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .

    எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .

    நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)

    1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.

    2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)

    3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.

    4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.

    5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.

    வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.

    ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.

    M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)

    இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.

    வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes Harrietlgy, sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #642
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாலி- நடிகர்திலகத்தின் நடிப்புக்கு மிக பெரிய ரசிகர் மட்டுமில்லாமல், அதை தன்னை அப்போது ஆதரித்து கொண்டிருந்த நடிகரிடம் (அப்போது சிவாஜி-ஜெமினிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.)இதை வெளிப்படையாகவும் சொன்னாராம்.

    வாலி எழுதிய நடிகர்திலகம் படங்களில் என்னை கவர்ந்தவை- அன்புக்கரங்கள்,பேசும் தெய்வம்,இருமலர்கள்,கலாட்டா கல்யாணம்,செல்வம்,இருமலர்கள் ,உயர்ந்த மனிதன்.நம்மால் மறக்க முடியாத ஒருதரம் ஒரே தரம்(சுமதி என் சுந்தரி) எழுதியவர் வாலியே.

    சில மறக்க முடியாத பாடல்கள்.







    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes Harrietlgy, sivaa liked this post
  6. #643
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #644
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    Sundar Rajan


    சென்றவாரம்
    சென்னை குலுக்கிய
    மக்கள்தலைவரின் எங்கமாமாவை
    தொடர்ந்து,
    ... ஜூலை 21 முதல்
    சென்னை மகாலெட்சுமியில்
    நடிகர்திலகத்தின் 300 முத்துக்களில் 7 முத்துக்கள் உங்களை மகிழ்விக்க வருகிறது.
    வாரம் 1 ஆனால் 7 மக்கள்தலைவரின் படங்கள். பார்க்க பார்க்க தெவிட்டாத மாபெரும் வெற்றிப்படங்கள்.
    ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம், நமது நடிகர்திலகத்தைத் தவிர வேறு யாரால் முடியும்.
    அன்பிற்குரிய, சென்னை இதயங்களே,
    வழக்கம் போல் உங்கள் ஆர்ப்பாட்ட ஆரவாரம்
    இந்த வாரமும் தொடரட்டும்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #645
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussain



    நேற்று போல இருக்கிறது,,, நடிகர் திலகம் மறைந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டது,,, மறக்க முடியாத மாமனிதராகவும் நினைக்க நினைக்க நினைவு கூறப்படும் உயர்ந்த நடிகராகவும்,,, பந்தபாசம் மிக்க குடும்பத் தலைவராகவும்,,, ரியல் ஹீரோவாகவும் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்,,, முதலமைச்சராக பதவியில் இருந்தபோது மறைந்த தலைவர்கள் மூவர்,,, பேரறிஞர் அண்ணா அவர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்,, அண்ணா அவர்கள் மறைவின் போது காட்சி ஊடகங்கள் இல்லை,,, ஆகவே கின்னஸில் பதிக்கப்படும் அளவுக்கு ஜனகோடிகள் சங்கமம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தது,, இன்னொரு காரணம் எதிர் பாரா மரணம்,,, எம் ஜி ஆர் அவர்கள் மரணத்தின் போது ஓரளவுக்குத்தான ஊடக வெளிச்சம் இருந்தது,, ஜனத்திரள் வந்தது,, ஜெயலலிதா மரணம் கொஞ்சம் மாறுபட்டது,,, ஆனால் நடிகர் திலகம் மரணம் கொஞ்சம் வித்தியாசமானது,, மரணிக்கும் போது எவ்வித பதவிப் பின்புலமும் இல்லை,,, காட்சி ஊடகங்கள் தெரு தெருவுக்கு வீடு வீட்டுக்கு வந்து விட்டது,, அதோடு அல்லாமல் பெரும்பாலான தொலைக் காட்சிகள் லைவ் டெலிகாஸ்ட் செய்தன,,, அதையும் தாண்டி சென்னை குலுங்கியது ,,, ஒவ்வொருவர் வீட்டிலும் தன் சகோதரனை தந்தை ஸ்தானத்தில் வைக்கப்பட்ட ஒரு மாமனிதரை இழந்த சோகம் படிந்த முகங்களோடு வலம் வந்தார்களே ஏன்?
    எவ்வித பதவியும் வகிக்காமல் அரசு மரியாதையோடு துப்பாக்கி குண்டுகள் முழங்க உடலெரிக்கப்பட்டது ஏன்? காரணம் இருக்கிறது,,, உலகெங்கும் ரசிகர்கள் கட்சி மாறுபாடு இன்றி அரசியல்வாதிகள் முக்கிய பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் உயர் அந்தஸ்த்தில் இருப்பவர்கள்,,, எம் பிக்கள் எம் எல் ஏக்கள் அண்டை மாநில முக்கிய பிரமுகர்கள் சமகால நண்பர்கள் நடிப்புலகில் இருப்பவர்கள் நாடக நடிக நடிகையர்கள் மொத்த தொழில் நுட்ப கலைஞர்கள் என் பட்டியலில் விடுபட்ட முக்கிய பிரமுகர்கள்,, அத்துணை பேரும் இந்த ஒற்றை மனிதருக்கு ரசிகர்கள்,, அவரவர் வீடுகளில் கோடிக்கணக்கானோர் தொலைக் காட்சிகளில் பார்க்கிறார்கள்,, செய்தித் தாள்களில் பார்க்கிறார்கள்,, பிறகு ஏன் நேரிடையாக அஞ்சலி செலுத்த அத்தனை கோடி மனிதர்கள் வந்தனர்,, அவர்தான் சிவாஜி,, கலைஞர்களின் தலைமகன்,,, எல்லார் உள்ளங்களிலும் உள்ளவர் சிவாஜி,, அறிஞர் அண்ணா மறைவின் போது செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி முதலமைச்சர் அண்ணா மரணம் என்றும் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா மரணித்த போது முதல்வர் எம் ஜி ஆர் மரணம் முதல்வர் ஜெயலிதா மரணம் என்று தலைப்புச் செய்திகள் வந்தது,, சிவாஜி மரணித்த போது "இமயம் சரிந்தது",, வீழ்ந்தது கல்தூண் என்று செய்தி வெளியிட்ட செய்தித்தாள்கள் நிறைய்ய,,, மன்னவன் சென்றானடி என்று ஒரு வார இதழ் அஞ்சலி செய்தி வெளியிட்டது,,, அவர்தான் சிவாஜி,, நடிகராக வாழும்போது சிறந்த நடிகர்,, அரசியலில இருந்த போது அப்பழுக்கற்ற தலைவர்,, அன்னை இல்லத்தில் பாசமுள்ள குடும்பத் தலைவர்,, நண்பர்களுக்கு இனிய நட்பாளர்,,, இப்படி அவர் வாழ்நாள் முழுவதும்" நல்ல" "சிறந்த" "உயர்ந்த" என்ற அடை மொழிகளோடு வலம் வந்தவர்,, ஆதனால்தான் அவர் மறைந்தபோது அவர் பெயரை குறிப்பிடாமல் அவர் அடைமொழிகளை குறிப்பிட்டு செய்தி வெளிட்டதை பார்க்க முடிகிறது,, பெருந்தலைவரின் மரணமும் உலுக்கியெடுத்த ஒன்றுதான்,,, பெருந்தலைவருக்கு பெருந் தொண்டராக என்றுதன்னை அடையாளப்படுத்தக் கொண்டாரோ அன்று முதல் அவர் கண்மூடும் வரை இவர் காலம் முடியும் வரை அவர் அடியொற்றி நடந்தார்,,, தேர்தல் வெற்றிகளில் மமதை கொள்ளாது இருந்ததும் தோல்விகளின் முகட்டில் முனை முறியாது நின்றதும் கர்மவீரருக்கு எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளையும் இவரும் பெற்றார்,,, அப்பழுக்கற்று நின்றார்,, அதனால்தால் மரணத்தை வென்று இன்று வரை மக்கள் மனதில் வாழ்கிறார்,,
    ஜூலை 21 என்பது நினைவு நாள் அல்ல,, மறக்கப் பட்டவர்களுக்கே ஆண்டுக்கொரு தினம் அவர்தினம்,, என்றென்றும் நினைக்கப்படும் மனிதருக்கு ஆண்டு முழுதும் நினைப்பு தினம்,, நல்ல மனதில் குடியிருக்கும் நடிகராண்டவா,, நினைவில் நிலைத்திருந்து நாளும் வேண்டவா!


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #646
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Sundar Rajan


    நாளை முதல்
    மக்கள்தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு நாளை 21.07.2017 வெள்ளி முதல்
    நடிகர்திலகத்தின்
    சூப்பர்ஹிட் காவியம் ...
    வைரநெஞ்சம்
    மதுரை சென்ட்ரலில் தினசரி 4 காட்சிகள்.
    தலைவர் சும்மாவே ஸ்டைலில் கலக்குவார்.
    அதிலும் வைரநெஞ்சம் திரைப்படத்தில் துப்பறியும் அதிகாரி,
    சொல்ல வேண்டுமா படம் முழுவதும் ஸ்டைலிஷ்
    சிவாஜியை காண்
    அன்பு இதயங்களே, விரைவோம் மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு....
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #647
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Prabou

    மதியவணக்கம்நண்பர்களே.

    இன்று இரவுசன்லைப்சானலில்.07.00மணிக்குஇமயம்திரைப்படம்காணத ் தவறாதீர்கள். ...



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #648
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #649
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like






    Sundar Rajan





    களை கட்டும் மதுரை,
    எங்கு காணினும் சிவாஜி விழா,
    எங்கு காணினும் சிவாஜி அவர்களின் சுவரொட்டி...
    ... ஆம், அன்பு இதயங்களே,
    ஜூலை 21 காலை 9 மணிக்கு
    மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி.
    மாலை 5 மணி
    மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற புதிய அமைப்பு துவக்கவிழா.
    ஜுலை 22 மாலை
    தமிழருவிமணியன் எழுதிய
    'திரையுலக தவப்புதல்வன்சிவாஜி'
    என்ற நுால் வெளியீட்டு விழா.
    மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
    ஜூலை 23 மாலை
    மக்கள்தலைவரின் நினைவுநாளையொட்டி மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வைரநெஞ்சம் ரசிகர்கள் சிறப்புக் காட்சி.
    அன்பினால் நம்மை ஆண்ட மக்கள்தலைவருக்கு தவிர, அரசாண்டவர்களுக்கு கூட இப்படி தொடர் நிகழ்ச்சி நடக்காது.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. #650
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று (21.7.2017)
    மாலை 7.30 க்கு
    ' ராஜபார்ட் ரங்கதுரை'
    ராஜ் டிஜிடல் பிளஸ் சேனலில்.






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •