Page 63 of 400 FirstFirst ... 1353616263646573113163 ... LastLast
Results 621 to 630 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #621
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Sundar Rajan · 3 mins

    அன்பு இதயங்களே,
    ஜூலை 21
    மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
    நினைவுநாளை முன்னிட்டு
    ... சென்னை மகாலெட்சுமி திரையரங்கில்
    ஒரு வாரம் 7 முத்தான,
    மாபெரும் வெற்றிக் காவியங்கள்.
    அடித்தது பம்பர் பிரைஸ் சென்னை இதயங்களுக்கு.
    மேலும் தற்போது வியாழன் முதல்
    மகாலெட்சுமி திரையரங்கில்
    வெற்றிநடை போடுகிறது நடிகர்திலகத்தின் எங்க மாமா.
    அதன் தொடர்ச்சியாக நடிகர்திலகம் வாரம்.
    தொடர்ந்து 15 நாள் மகாலெட்சுமி திரையரங்கில் மக்கள்தலைவரின் அன்பு முகம் காண, அன்பு இதயங்களே, அணிவகுப்பீர், மகாலெட்சுமி திரையரங்கிற்கு.
    நாளை மாலை எங்கமாமா ரசிகர்கள் சிறப்புக் காட்சி. சென்னை வாழ் இதயங்களே, தவறாமால் கலந்து சிறப்பியுங்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #622
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சாதனைச்சக்ககரவர்த்தியின் 164வது திரைக்காவியம்
    எங்கள் தங்க ராஜா வெளிவந்து
    சாதனை நிகழ்த்திய நாள் (15.யூலை 1973)








    -----------------------------------------------------------------------------------------------------------------------

    சாதனைச்சக்ககரவர்த்தியின் 157வது திரைக்காவியம்
    தர்மம் எங்கே வெளிவந்த நாள்
    தர்மம் எங்கே (15.யூலை 1972)




    Last edited by sivaa; 17th July 2017 at 02:12 AM.

  4. #623
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

  5. #624
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

  6. #625
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வெற்றித்திலகத்தின் 261வது திரைக்காவியம்

    தாய்க்கு ஒரு தாலாட்டு

    வெளிவந்த நாள் இன்று

    தாய்க்கு ஒரு தாலாட்டு 16 யூலை 1986



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #626
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எங்க மாமா
    சென்னை தியேட்டர் வீடியோ




    https://www.facebook.com/vaannila.vi...5216745914627/
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #627
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #628
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #629
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #630
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    asu Devan

    'பந்தம்' வளர்த்த 'பாசத் தலைவன்'

    கார் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. மேடான பகுதியில் இருந்து சற்று சரிவான பாதையில். எதிர்பாராதவிதமாக காரின் டயர் பஞ்சராகி கார் மெதுவாக நிற்கிறது. உள்ளே அமர்ந்திருக்கும் ஜெனரல் ஆப்ரஹாமிடம் கார் டிரைவர் வண்டியை விட்டு கீழே இறங்கி வந்து நிலைமையைச் சொல்கிறார். உடனே ஸ்டெப்னி மாற்றி விடுவதாகவும் கூறுகிறார். நிலைமை தெளிவாகப் புரிகிறது. 'சரி' என்று தலையசைவில் ஒரு சம்மதம். அந்த இடைப்பட்ட ஒரு சில வினாடியில் அழகாக இடது கைவிரல்களை மடக்கி வாயருகே கொண்டு சென்று சற்றே வாயைப் பிளந்து (கோட்டுவாய் விடுதல் என்பார்களே!.. அது போல) சிறு ரிலாக்ஸ். வலது கை விரல்கள் தன்னையுமறியாமல் சிறு அசைவுகளில் கணநேர களிநடம் புரிகின்றன. நேரான நேர்கொண்ட பார்வை. டிரைவரின் போதாத காலம் ஸ்டெப்னியிலும் காற்றில்லை. பயந்து போய் மிரட்சியுடன் மெதுவாக ஆப்ரஹாமிடம், "அய்யா... ஸ்டெப்னியிலும் காற்று இல்லீங்க...என்று நடுக்கத்துடன் டிரைவர் கூற, அதுவரை நேர்க்கொண்டிருந்த பார்வை வன்மத்துடன் டிரைவரின் மேல் திரும்புகிறது. டிரைவரை மேலும் கீழுமாக நோக்கும் சுட்டெரிக்கும் சூர்யப் பார்வை. ("ஏதோ டயர் பஞ்சராவது சகஜம்... இயற்கை... பொறுத்துக் கொண்டேன். 'ஸ்டெப்னி மாற்றுகிறேன்' பேர்வழி என்றாய்... சரி... செய்ய வேண்டியதுதான்...ஆனால் ஸ்டெப்னியிலும் காற்று இல்லை என்று வந்து என்னிடம் தைரிமாகச் சொல்கிறாய்...உன் பொறுப்பற்ற தன்மைக்காக நான் காரில் அனாவசியமாக தேவையிலாமல் உட்கார்ந்திருக்கவா?... நான் யார்! என் ஸ்டேடஸ் என்ன! ஸ்டெப்னியைக் கூட கவனியாமல் இந்த ஆர்மி ஜெனரலிடம் கார் டிரைவராக வேலை பார்க்க உனக்கு இனியும் யோக்கியதை இருக்கிறதா?") இவ்வளவு விஷயங்களும் அந்த ஒரு பார்வையில், அந்த ஒரு வினாடியில் டிரைவருக்கு உணர்த்தப்பட்டு விடும். இதுவரை பின்னணி இசை இல்லாமல் சென்று கொண்டிருக்கும் காட்சி, இப்போது டிரைவருக்கு ஏற்படப் போகும் ஆபத்துப் பின்னணியை இசைப் பின்னணி மூலம் அற்புதமாக எடுத்துக் காட்ட ஆரம்பிக்கிறது. (நன்றி சங்கர் கணேஷ்) கார் கதவைத் தானே திறந்து அந்த ரோட்டின் சரிவில், உச்சி வெயிலில், உச்ச கோபத்தில் பேன்ட் பாக்கெட்டுக்களில் தன் இரு கைகளையும் நுழைத்த வண்ணம் அமைதியான கொந்தளிப்புடன் ஆர்ப்பாட்டமாக, கனகம்பீரமாக ஜெனரல் ஆப்ரஹாம் நடந்து வரும் அந்த ஒரு நடையிலேயே நமக்குப் புரிந்து விடுகிறது அந்த டிரைவரின் கதி அதோகதிதான் என்று. (தியேட்டர் கைத்தட்டல்களில் கிழியும்)
    ஜெனரல் ஆப்ரஹாம்- நடிப்புலகச் சக்கரவர்த்தி.
    ராஜாங்கம் நடத்திய காவியம்- 'பந்தம்'
    அண்மையில் தொலைக்காட்சியில் பார்த்து செயல் இழந்து போய் நான் உறைந்து நின்ற காவியக் காட்சி.
    மேற்கண்ட குறிப்பிட்ட அந்த அருமையான காட்சியை நீங்களே பாருங்களேன். நம் அனைவருக்காகவும் தரவேற்றி இதோ அந்த ஒரு சில வினாடி காவிய சீன்.
    இந்தக் காட்சியை இப்போது பார்த்து விடுங்கள். சரியாக ஒரே ஒரு நிமிடம்தான். பார்த்து விடுங்கள். (youtube லிங்க் கீழே)
    காட்சியை பார்த்து விட்டீர்களா? காட்சியைப் பார்த்ததும் மீண்டும் இப்போது பதிவுக்கு வாருங்கள் இப்போது மேற்குறிப்பிட்ட காட்சி முடிந்து, அடுத்த நாள் டிரைவர் வேலைக்கு வரும் போது அவர் வேலைலிருந்து தூக்கப்பட்டிருப்பார். ஒழுக்கம், சின்ஸியாரிட்டி, நேர்ந்தவறாமை, வேலையில் பொறுப்பு இதையெல்லாம் கடைபிடிக்கும் நமது ஜெனரல் ஆப்ரஹாம் டிரைவர் தவறு செய்தால் சும்மா விட்டு விடுவாரா?
    பின் தன் அன்பு மகள் அந்த டிரைவருக்காக தந்தை ஆப்ரஹாமிடம் பரிந்து பேசி மீண்டும் அந்த வேலையை அதே டிரைவருக்குத் தருமாறு வேண்ட அதைக் கூட பிடிவாதமாக மறுத்து விடுவார்.ஆப்ரஹாம். காதலித்தாள் என்பதற்காக தன் மகளை வெறுத்து, அவளைப் பிரிந்து, மகள் கணவனை இழந்து விதவையாகியும் கூட அவளை மன்னிக்காமல் வெறுத்து, பின் பேத்தியுடன் பேத்தி என்று தெரியாமலே உயிரோடு பழகி அந்த குழந்தைக்கு இறுதியில் சுவாச நோய் என்று அறிந்து, பின் அந்தக் குழந்தைக்காக தன் குணங்களை மாற்றிக் கொண்டு, கோபம் தணிந்து, ஒரு சமயம் தன வேலையை விட்டு நீக்கிய அதே டிரைவரை மன்னித்து, மீண்டும் அந்த டிரைவரை வேலையில் சேர்த்துக் கொள்வார் ஆப்ரஹாம்.
    இப்போது நடிகர் திலகத்திடம் வருவோம். நடிகர் திலகம் தன் சொந்தப்படமான 'அண்ணன் ஒரு கோயி ல்' படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குனர் கே.விஜயனிடம் தந்திருந்தார். ஏனென்றால் 1976-ல் வெளியான என்.வி.ஆர் பிக்ச்சர்ஸ் தயாரித்த 'ரோஜாவின் ராஜா' படத்தை விஜயன் இயக்கியிருந்தார். (அதற்கு முன் 'காவல் தெய்வம்' படத்தையும் விஜயன் சுப்பையாவிற்காக இயக்கியிருக்கிறார்.) இதற்கு முந்தைய படமான பி.மாதவன் இயக்கிய 'சித்ரா பௌரணமி' நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து ஒருவழியாக வெளியாகி சுமாரான வெற்றி பெற்ற நிலையில் 'ரோஜாவின் ராஜா' வெற்றி நடிகர் திலகத்திற்கு விஜயன் மேல் இருந்த நம்பிக்கையை அதிகமாக்கியது.
    அது மட்டுமல்ல. பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும், அரசியல் காரணங்களினாலும் அன்பே ஆருயிரே, வைர நெஞ்சம் பாட்டும் பரதமும், உனக்காக நான், சத்யம் போன்ற படங்கள் சுமாரான வெற்றிகளை பெற்ற நிலையில் (கிரஹப் பிரவேசம், உத்தமன், அவன் ஒரு சரித்திரம் தவிர்த்து) பாலாஜி அவர்கள் தயாரிப்பில் மது, ஸ்ரீவித்யா நடித்த மலையாளத் 'தீக்கனல்' தமிழில் 'தீப'மாகி விஜயனின் இயக்கத்தில் 1977 குடியரசு தினத்தன்று வெளிவந்து சக்கை போடு போட 'இவர் எப்படா விழுவார்' என்று எதிர்பார்த்திருந்த கூட்டம்' தீபத்தின் மாபெரும் வெற்றியினால் சின்னாபின்னமாகி சிதறித் தெறித்து, பதறி ஓடியது.
    'நடிகர் திலகத்தின் சகாப்தம் முடிந்தது' என்று எழுதியவர்களெல்லாம் வெட்கித் தலை குனிந்து போனார்கள். சூரியன் என்றும் வீழுமா? சூதுமதி என்றும் வெல்லுமா? 1000 பேர் பிறக்கலாம்...லட்சம் பேர் பிறக்கலாம்,.. கோடி பேர் பிறக்கலாம் ..ஒரு 'நடிகர் திலக' சூரியன் போல் இனி எவரும் பிறக்க முடியாது.
    'சிவாஜி மாதிரி ஒரு நடிகன் பிறந்து வரவேண்டும் என்று சொல்லாத வாய் தமிழ்நாட்டில் உண்டா? வேறு எவருக்கேனும் அந்த பாக்கியம் உண்டா? கொடுப்பினை உண்டா?
    விரல் விட்டு எண்ணக் கூடத் தெரியாத ஒரு கூட்டம் சினிமாவில் அண்ணன் சிவாஜியிடம் வழக்கம் போலத் தோற்று, வேறு திசைக்கு ஓடி, தன் பாதையை மாற்றிக் கொண்டது. தீபத்தின் ஒளிக்கு முன்னால் நவரத்தினங்கள் ஜொலிக்க முடியாமல் திணறின. லட்சக்கணக்கில் இருந்த ரசிகர் கூட்டம் நடிகர் திலகத்திற்கு கோடிக்கணக்கில் ஆனது. 'திரிசூல'த்தின் திகைக்க வைத்த வெற்றியால். மதுரை மிரண்டது மிரட்சியளித்த பிரம்மாண்ட வெற்றி விழாவினால். நடிகர் திலகம் மாதிரி பிறப்பது ஒருபுறம் இருக்கட்டும்..முதலில் இந்த ஒரு வெற்றி விழா போல இன்னொரு விழாவை இந்த தமிழகம் இனி காணுமா?
    'தீபத்தின்' அமர்க்களமான வெற்றியினால் விஜயன் மேல் இருந்த நம்பிக்கை நடிகர் திலகத்திற்கு இன்னும் அதிகமானது. அதுவரை நடிகர் திலகத்தை இயக்கிய மாதவன், திருலோகச்சந்தர் போன்றவர்கள் கொஞ்சம் 'அவுட் ஆப் பார்மி'ல் இருக்க, விஜயன் நடிகர் திலகத்தின் ராசியான இயக்குனர் ஆனார். அவரின் செல்லப் பிள்ளையும் ஆனார்.
    இளைய தலைமுறை,(கிருஷ்ணன் பஞ்சு) நாம் பிறந்த மண் (வின்சென்ட்) இவைகளின் வெளியீட்டிற்கு பின் மேலே குறிப்பிட்ட அண்ணனின் 'அண்ணன் ஒரு கோயில்' விஜயன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி. 1977 தீபாவளி சூறாவளி அது. கலக்கல் ஹிட். படத்தின் வெற்றி எட்டுத் திக்கும் எதிரொலித்தது. பட்டி தொட்டியெங்கும் பாடல்கள் பிரபலமானது கல்யாண வீடுகளில் பாசமலர், சாரதா படங்களுக்குப் பிறகு அண்ணன் ஒரு கோவிலாகவே ஆதிக்கம் செய்தார். இன்னொன்றும் இந்த இடத்தில் குறிப்பிடத்தான் வேண்டும். இதே தீபாவளியில் இன்னொரு சுனாமி கலக்கல் தேவரின் 'ஆட்டுக்கார அலமேலு'
    விஜயன், நடிகர் திலகம் ஜோடி வெற்றிக் கூட்டணி ஆனது. பாலாஜி தயாரிப்பில் 'தியாகம்' சூப்பர் டூப்பர் ஹிட். (பெங்காலி 'அமானுஷ்' படத்தின் தழுவல்) நம் முரளி சாரின் செல்ல மதுரையில் சிந்தாமணியில் வெள்ளி விழாக் கண்டது 'தியாகம்'. தவறாக விமர்சனம் செய்த 'விகடர்'களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தது 'தியாகம்'. தமிழ்நாடெங்கும் வசூல் மழை பொழிந்தது 'தியாக'த்தால். தியாகத் தலைவனால். இத்தனைக்கும் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'என்னைப் போல் ஒருவன்' படம் 'தியாகம்' வெளியான 15 தினங்களுக்குள் அதற்கு போட்டியாக வெளியாகி அதுவும் சக்கைப் போடு போடுகிறது.
    ஆனால் பின்னால் ஒரு சிறு பின்னடைவு நடிகர் திலகம் விஜயன் கூட்டணிக்கு திருஷ்டிப் பரிகாரம் போல 'புண்ணிய பூமி' படத்தால் ஆனது. அப்போதய ஹிந்தி ஹிட் 'மதர் இந்தியா' கால மாறுதல்கள் பல ஏற்பட்ட நிலையில் காலந்தாழ்ந்து 'புண்ணிய பூமி'யாக உருவெடுத்து நம்மை ஏமாற்றியது. ('இரு துருவம்' போல) இது வெளியானது 1978-ல். 'புண்ணிய பூமி'க்குப் பிறகு அடுத்து வந்த ஜெனரல் சக்கரவர்த்தி, தச்சோளி அம்பு பைலட் பிரேம்நாத் (ஜஸ்டிஸ் கோபிநாத் தவிர) அனைத்தும் 'போடுபோடு' வென்று வெற்றி நடை போட்டு நடிகர் திலகம்தான் திரையுலகில் நிரந்தரச் 'சக்கரவர்த்தியடா' என்று எப்போதும், என்றும் நெ.1 என்ற நிலையை அளித்து, யாருமே அசைக்க முடியாத சூழலில் வழக்கம் போல தன்னிகராட்சி புரிந்து கொண்டிருந்தது
    இந்த நிலையில் நடிகர் திலகத்தின்
    வெற்றிக்கெல்லாம் மகுடம் சூட்டியது போன்று சுனாமி 'திரிசூலம்' 26.01.1979 அன்று வெளியாகி தமிழ்த் திரைப்பட உலகின் சரித்திரத்தையே மாற்றி எழுதி இதுவரை எந்த ஒரு படமும் வசூலில் விஞ்ச மிஞ்ச முடியாத அளவிற்கு (ஆறே வாரங்களில் அறுபது லட்ச ரூபாய்) விஸ்வரூபம் எடுத்து அப்படியே இன்றுவரை எவரும் தொட முடியாத சிகரமாய் நிற்கிறது. விஜயன் நடிகர் திலகம் தன் மேல் கொண்ட நம்பிக்கையை மிக அழகாக 'திரிசூல'த்தை இயக்கி அருமையாக அதைத் தக்க வைத்துக் கொண்டார்.
    'திரிசூல'த்தை அடுத்து 'நல்லதொரு குடும்ப'மும் விஜயன் இயக்கத்தில் பாலாஜி தயாரிப்பில் நல்ல வெற்றி பெற்றது. வெற்றிகள் குவியக் குவிய விஜயனின் போக்கு சற்று மாறியது. நடிகர் திலகம் மிக நம்பிக்கையுடன் விஜயனை தனது அடுத்த சொந்தப் படமான 'ரத்த பாச'த்திற்கு இயக்குனர் ஆக்கினார். படமும் வெளிநாடுகளில் வளர்ந்து வந்த வேளையில் யாருடைய துர்ப்போதனையோ அல்லது போதாதா காலமோ விஜயன் 'ரத்த பாசம்' படத்தின் மேல் காட்டும் அக்கறையை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க ஆரம்பித்தார். எக்காலத்தும் நெ.1 சூப்பர் ஸ்டாரான நம் திலகத்தின் கால்ஷீட்டுகள் விஜயனின் தாமதப் போக்கினால் வீணாயின. சொந்தப் புரொடக்ஷன் வேறு. வெளிநாடுகளில் அதிக செலவு செய்து படப்பிடிப்பு.
    இதற்கிடையில் விஜயன் விஜயகாந்த், பூர்ணிமாவை ஜோடியாக வைத்து 'தூரத்து இடிமுழக்கம்' என்ற படத்தை வேறு தொடங்கி, அதில் முழுக்கவனமும் செலுத்த ஆரம்பித்தார். படம் முழுக்க எங்கள் கடலூர் துறைமுகத்தில்தான் படப்பிடிப்பு. அங்கே 'ரத்த பாச' குழுவினர் விஜயனுக்காக பல நாட்களாக காத்துக் கிடக்க இங்கே அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தன் சொந்தப்படத்தை இயக்குகிறார் விஜயன்.
    இப்போது சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிர்வாகம் இனி விஜயன் தேவை இல்லை என்று முடிவெடுக்கிறது. இயக்குனர் இல்லாமலேயே சிவாஜி புரொடக்ஷன்ஸ் 'ரத்தபாசம்' படத்தை முடிக்கிறது. (ரத்தபாசம் படத்தில் இயக்குனர் யார் என்று காட்டாமல் பதிலுக்கு நடிகர் திலகத்தின் 3 ஸ்டில்களை போடுவார்கள்) 'ரத்தபாசம்' 14.06.1980 அன்று வெளியாகிறது. திரிசூலம் ஏற்படுத்தியிருந்த பிரம்மாண்ட வெற்றியை மக்கள் மறக்க இயலாத நிலையில் அதே எதிர்பார்ப்பை பொது மக்களும் ரசிகர்களும் 'ரத்தபாச'த்தில் எதிர்பார்க்க, 'திரிசூலம்' அளவிற்கு வெற்றி இல்லையென்றாலும் ரத்தபாசம் வசூலில் நல்ல வெற்றியே.
    (விஜயன் முழுப் படத்தையும் இயக்கியிருந்தால் 'ரத்த பாச'த்தின் வெற்றியே வேறு விதமாக இருந்திருக்கும் என்போர் உண்டு...நானும் அந்தக் கட்சியே... அனாவசியக் காட்சிகள் எதுவுமில்லாமல் நச்சென்று காட்சிகளை வைத்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் கில்லாடி விஜயன். திரிசூலம் படததில் நடிகர் திலகத்தின் காட்சிகளை மூன்று ஷெட்யூல்களாகப் பிரித்து, கொஞ்சம் கூடக் குழப்பமில்லாமல் தெளிவாக படமெடுத்திருப்பார் விஜயன். ராஜசேகரன், சங்கர், குரு பாத்திரங்களை தனித்தனியாக பிரித்து, ஒவ்வொரு கேரக்டரையும் ஒவ்வொரு ஷெட்யூலாக வைத்து நடிகர் திலகத்தை அம்சமாக வேலை வாங்கியிருப்பர் விஜயன்)
    'ரத்தபாசம்' வெளியான அதே 1980 ன் இறுதியில் அநேகமாக டிசம்பர் மாதம் என்று நினைவு விஜயன் இயக்கிய அவரது சொந்தப்படம் 'தூரத்து இடி முழக்கம்' வெளியாகி படுதோல்வியடைகிறது. விஜயனுக்கு வாழ்வு தந்தவர் நடிகர் திலகம். இப்போது விஜயன் யாரும் ஆதரவு தராத நிலையில் 'ரத்தபாசம்' வெளியாகி பின் நடிகர் திலகம் 38 படங்கள் முடிந்த நிலையில் (அடேங்கப்பா!) விஜயன் பல இன்னல்களுக்கு ஆளாகியிருந்தார். கிட்டத்தட்ட 1984 இறுதி வரை. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்.
    இந்த 4 ஆண்டுகளில் பாலாஜியும் அவரது 'பில்லா' ராசி இயக்குனராக 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி அமைந்துவிட, அவரையே தீர்ப்பு, நீதிபதி படங்களுக்கு பாலாஜி இயக்குனராக்க, இரு படங்களும் மகா, மெகா வெற்றி. அதனால் பாலாஜியும் விஜயனை தன் படத்திற்கு அழைக்கமுடியாமல் போயிற்று. இரண்டாவது நடிகர் திலகத்தின் விஜயன் மீதான கோபமும் பாலாஜி அறிந்ததே. அது நியாயம் என்றும் உணர்ந்ததே.
    தன்னை மிகவும் வளர்த்தவர், வாய்ப்பளித்தவர் என்ற முறையில் விஜயன் பாலாஜியிடம் சென்று தன் நிலைமைகளுக்கு வருந்தி மீண்டும் ஒரு படத்தை அதுவும் நடிகர் திலகம் நடிக்கும் படத்தை தனக்கு இயக்கத் தருமாறு பலமுறை வேண்டி கேட்டுக் கொள்ள, பாலாஜியும் அப்போது நடிகர் திலகத்தை வைத்து 'பந்தம்' படம் தயாரிக்கும் நிலையில் இருந்ததால் இது பற்றி நடிகர் திலகத்திடம் பேச, நடிகர் திலகம் மறுப்பேதும் கூறாமல் விஜயன் ரத்த பாசத்திற்கு செய்த துரோகங்களை மன்னித்து, அதே சமயம் உயிர் நண்பர் பாலாஜி அவர்களின் வேண்டுகோளையும் ஏற்று விஜயனை தன்னை இயக்க 'பந்தம்' மூலம் சம்மதித்தார். மேலும் 'விஜயன் மிகச் சிறந்த வெற்றி இயக்குனர் அவர் கேரியரில் மேலும் கேப் விழ வேண்டாம்' என்ற நல்ல எண்ணமும் கொண்டார் நடிகர் திலகம்.
    விஜயனும் நடிகர் திலகத்திடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டு 'பந்தம்' படத்தை மிகச் சிறப்பாக இயக்கி, மீண்டும் பாலாஜிக்கும், நடிகர் திலகத்திற்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்து தன் பாவங்களுக்கு பரிகாரம் தேடிக் கொண்டார்.,
    இப்போது முதல் பாராவுக்கு வருவோம். நான் முதலில் கூறியிருந்த 'பந்தம்' படக் காட்சிக்கும், இவ்வளவு நேரம் நீங்கள் படித்த விஜயன் விஷயத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
    நம் 'ஜெனரல் ஆப்ரஹாம்' நடிகர் திலகம் இயக்குனர் விஜயனிடம் இந்தக் காட்சி பற்றி விவாதிக்கும் போது 'எதற்கு அந்த டிரைவரை மன்னிப்பது போல இப்படி ஒரு காட்சியை வைத்தாய்/ என் கேரக்டர் கண்டிப்பான கேரக்டர். அது எப்படி சரியாகும்? நான் டிரைவரை வேலையை விட்டு நீக்கின காட்சியை மட்டும் வை' என்று சொன்னாராம்.
    அதற்கு விஜயன் நடிகர் திலகத்திடம் 'நானும் இக்காட்சியில் வரும் டிரைவர் போலே உங்களுக்குத் தவறிழைத்து விட்டு 'ரத்த பாச'த்தை சரிவர இயக்காமல் வெளியேறி விட்டேன். நீங்களும் என் மேல் கோபமானீர்கள். இந்த 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் என் தவறுகளை மறந்து, மன்னித்து நீங்கள் என்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதனால்தான் அந்த டிரைவர் கேரக்டருக்கு நீங்கள் மீண்டும் வேலை கொடுப்பது போன்ற காட்சியை என்னை, உங்களை மனதில் வைத்து உங்கள் மேல் நான் கொண்ட நன்றி உணர்வால் எடுத்தேன். என்னையே பெருந்தன்மையுடன் மன்னித்து ஏற்றுக் கொண்ட நீங்கள் அந்த டிரைவரை மன்னிப்பது எப்படி குற்றமாகும்? அதனால்தான் அந்தக் காட்சியை வைத்தேன்' என்று சமயோசிதமாகச் சொல்லி நடிகர் திலகத்தை நெகிழ்வடைய செய்துவிட்டாராம் விஜயன்.
    இப்போது புரிகிறதா நான் சொன்ன குறிப்பிட்ட அந்த 'பந்தம்' காட்சிக்கும், விஜயன் அவர்களின் உண்மைக் கதைக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்று.
    எதிராளியையும், அவர் செய்யும் தவறுகளையும் மறந்து, மன்னித்து மனிதனாக வாழ என்றும் நமக்கு கற்றுத் தந்தவர் நமது இதய தெய்வம்..அவர் மீது நமக்குண்டான நிரந்தர 'பந்தம்' என்றும் நிலையானது. நிதர்சனமானது. உண்மையானது. உயர்வானது. உன்னதமானது. போலியற்றது கள்ளமற்றது. கபடமற்றது.
    ஆனால் நடிகர் திலகத்தின் டிரைவருடனான அந்தக் கோபக் காட்சியை, அந்த 'கெத்து' கம்பீர 'ராஜ' நடையை மட்டும் பார்த்து ரசிக்க மறந்து விடாதீர்கள். அந்தக் காட்சி ஒரு உலக அதிசயம் நம் ஆண்டவரைப் போலவே.
    காட்சிக்கான லிங்க்

    https://www.youtube.com/watch?v=SmRBJcoRN5E






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •