-
26th August 2018, 07:23 AM
#3631
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th August 2018 07:23 AM
# ADS
Circuit advertisement
-
26th August 2018, 07:24 AM
#3632
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th August 2018, 07:24 AM
#3633
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th August 2018, 08:19 AM
#3634
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th August 2018, 08:20 AM
#3635
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th August 2018, 08:20 AM
#3636
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th August 2018, 08:21 AM
#3637
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th August 2018, 12:43 PM
#3638
Senior Member
Diamond Hubber
ஒரு புத்தம் புதிய பதிவு.
ஸ்டைல் கடவுளை பாருங்க ...சான்ஸே இல்லை.
கண்டிப்பா மறந்து போயிருப்போம்.
'தங்கை' படத்தில் நாகேஷ் தலைவர் மதனை (என்றும் மன்மதன்தானே!) முதன் முதலாக அந்த பிரம்மாண்ட ஹோட்டலுக்கு அழைத்து செல்லும் போது தலைவர் பண்ணும் அட்டகாச ஸ்டைல்தான் என்ன!அடா அடா அடா. ஓட்டலில் நுழையும் போது அதுவரை அந்த பிரமாண்டத்தை காணாதவராய், அப்பாவி லோ கிளாஸ் சூதாடியாக, வாயிலில் உள்ள சுழலும் வாயிற்கதவுகளிலிருந்து உள்ளே வரமுடியாமல் சிக்கிக் கொண்டு படும் அவஸ்தை நமக்கு இன்ப அவஸ்தை.
நாகேஷ் இவரை இழுத்துவிட்டு சென்றதும் தலைவர் அப்படியே மாறுவார் ஸ்டைலில் அந்த சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி.
அப்பப்பா...ஸ்டைலா அது.
கையில் இருக்கும் கோட்டை படுஸ்டைலாக கழுத்துத் தோள்பட்டையின் பின்புறம் அப்படியே தூக்கிப் போட்டு நிற்கும் ஸ்டைல்...வாவ். கால்களை வைத்திருக்கும் அழகைப் பாருங்கள்.கண் கொள்ளாது. லேசாக வலதுகாலை முன்னம் வைத்து சற்றே பென்ட் செய்தபடி நிற்பார். ஒரு வினாடி நுனிப் பாதத்தில் நிற்பார். அற்புதமாக இருக்கும்.
ஓட்டலில் வாசிக்கப்படும் இசைக்குழுவின் இசைக்கருவிகளுக்கேற்ப சிரித்தபடியே தொடைகளில் லேசாக தாளம் போட்டு ஒரு மூவ் கொடுப்பாரே. கொன்று விடுவார்.
நாகேஷ் இருக்கையில் மன்றாடி அமரவைத்து சிகரெட் பாக்கெட்டைக் கொடுத்ததும் பழக்க தோஷத்தில் நம் மதன் பீடியை எடுத்து வாயில் வைத்து, சடுதியில் உஷாராகி, படுஸ்டைலாக அந்த பணக்கார சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிகரெட்டை அப்படி எடுத்து, டேபிளில் அதை இரண்டு தட்டு தட்டி, பெருமை பொங்க, (அந்த கண்களில்தான் என்ன ஒரு பெருமை தாண்டவமாடும்!) வாயில் வைத்து டேபிளில் இருக்கும் மங்கை ஓருத்தியின் சின்ன கட் அவுட்டை 'பார்க்குதே' என்று கவிழ்த்துப் போட்டு, மிஸ் லலிதா (காஞ்சனா) அட்டகாசமாக அறிமுகமாக, ஈஸ்வரியம்மாவின் குரலில் ச்சும்மா தூள் பாட்டு.
(பாடலைப் பாடிய ஈஸ்வரியம்மாவுக்கும், மெல்லிசை மன்னருக்கும் ஒரு பெரிய 'ஓ ' இன்னா பாட்டு!.,.. இன்னா உச்சரிப்பு!)
தலைவரின் வாயில் சிகரெட்டின் நுனி மட்டும் நுழைந்து இருக்க, கையில் பற்ற வைக்க நெருப்பு இருக்க, அப்படியே காஞ்சனாவை ஆச்சரியத்துடனும், வியப்புடனும் பார்க்க, காஞ்சனா இவர் பக்கம் வர, இவரைத் தொட, இவர் அந்த காந்தக் கண்களை உருட்டி, சற்றே மிரண்டு, பின் சுதாரித்து, மங்கையின் ஸ்பரிசத்தில் சற்றே நாணி, உதடுகளை சேர்த்து வைத்து ஒரு நாணம் கலந்த புன்சிரிப்பை காட்டுவார் பாருங்கள். அந்த உதடுகள் புரியும் லீலைகள்தான் என்ன...ஆஹா!
காஞ்சனாவின் நடனத்தின் போது விஷமி ஒருவன் தன் எதிரில் அமர்ந்து காஞ்சனாவிடம் வாலாட்டும் போது காஞ்சனாவைப் பார்க்காமல் அப்படியே எதிரியின் கையை பலமாக பிடித்து, பலப்பரீட்சை பார்த்து, அவன் கையை சாய்த்து வெற்றிக்கொடி நாட்டுவார் பாடலுக்கு மத்தியில்.
'தொடாதடா...இனி அவள் என் சொத்து..யாருகிட்ட?' என்பதை முகபாவங்களில் காண்பிப்பார்.
'கனவு கனவு... நேற்று கனவு'
என்று காஞ்சனா உடன் பாடும்போது நம் கடவுள் சிரிப்பதை பாருங்கள். ரீவைண்ட் பண்ணி பாருங்கள்...மறுமுறை..மறுமுறை...அதற்கு மேல் தாண்ட மாட்டீர்கள். கீழுதட்டை கீழ்வரிசை பற்களால் லேசாக கடித்து நாணத்துடன் சிரிப்பார். அழகு..அழகு. கொள்ளை அழகு சிரிப்பு. பார்க்கும் என் கண்களிலோ கண்ணீர்.
'தன்னிகரில்லா தலைவா...எங்கு போனாயோ எங்களை விட்டு விட்டு' என்று எண்ணி தாரை தாரையாக கண்களில் கண்ணீர். தானாக வருகிறது அருவித் தண்ணீர் மாதிரி கண்ணீர். நான் என்ன செய்ய!
அப்படியே நாம் எதிர்பாராமல் உற்சாகத்தின் விளிம்பில், சந்தோஷத்தின் எல்லைகளில் சேரிலிருந்து எழுந்து, புரியாத பாஷையில் ('ரியோ ரியோ ரியோடி... ஹோ ஹோ ஹோஹோஹோ' ...என்று துள்ளல் ஆட்டம் போட்டு (அதிலேயே கைகளை மடக்கி டப்பாங்குத்து போஸும் உண்டு) பண்ணும் அமர்க்களம் இருக்கே...சொல்லி மாளாது. எளிமையான உடையில், அரைக்கை ஷர்ட்டில். (அந்த கைகளில் ஷர்ட் எவ்வளவு அழகாக பிட் ஆகி இருக்கும் தெரியுமா...ஆண்மை கொடிகட்டிப் பறக்கும் அந்த அரைக்கை ஷர்ட்டில் )
'ஹோ ஹோ' என்னும்போது இடுப்பை ஷேக் செய்வார் பாருங்கள் படுவேகமாக. கண் இமைப்பதற்குள் அத்தனை ஷேக் செய்துவிடுவார். ச்சும்மா தலைவரின் ராஜாங்கம் கொடி கட்டிப் பறக்கும்.
ஹோட்டலில் உள்ளவர்கள் தன்னுடைய சேட்டை நடனத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை 'டக்'கென்று உணர்ந்து, டான்ஸை நிறுத்தி, அப்படியே வெட்கம் பிடுங்கித் தின்ன, இருக்கையில் அமர்ந்து, இரு கைகளாலும் முகத்தை மறைத்து, உடல் குலுங்க சிரித்து (அடடா என்ன சிரிப்புப்பா அது...இதுவரை எந்த படத்திலும் அவரே செய்யாதது)
பின்ணணிப் பெடலெடுப்பாரே தெய்வம்!
உடன் நார்மலாகி, தொங்கும் சரவிளக்கில் ஊஞ்சல் ஆடியபடி வரும் காஞ்சனாவை ஆச்சர்யத்துடன் பார்ப்பார். எப்படி...சும்மா கிம்மா இல்லே...அந்த உதடுகளை அப்படியே சுருக்கி கீழுதட்டை மடக்கி அவர் காஞ்சனாவை ரசிக்கும் ரசிப்பு இருக்கே. கிளாஸிக்.
இதற்கு மேல் நான் சொல்ல மாட்டேன். நீங்களே பார்த்து சொல்லுங்கள்.
ஒரு கிளப் டான்ஸ்தான். பாடுவது காஞ்சனா. ஹோட்டல் டான்ஸ். அந்த ஐந்து நிமிடங்களும் அப்படியே இவர் கையில். அப்படியே நம்மை கட்டிப் போட்டு விடுவார். நமக்கு கையும் ஓடாது..காலும் ஓடாது. இவர் ஒவ்வொரு வினாடியும் பண்ணும் முகபாவங்களை ஆயிரம் முறை பார்த்தாலும் முழுமையாக ரசிக்க முடியாது.
அதாம்பா தலைவன். எவரும் நெருங்க முடியாத தலைவன். சும்மாவா கும்பிடறோம் நம் தெய்வத்தை. தெய்வங்களுக்கு மேலல்லவா நம் தலைவன்!
-
26th August 2018, 04:18 PM
#3639
Senior Member
Devoted Hubber
Originally Posted by
vasudevan31355
ஒரு புத்தம் புதிய பதிவு.
ஸ்டைல் கடவுளை பாருங்க ...சான்ஸே இல்லை.
கண்டிப்பா மறந்து போயிருப்போம்.
'தங்கை' படத்தில் நாகேஷ் தலைவர் மதனை (என்றும் மன்மதன்தானே!) முதன் முதலாக அந்த பிரம்மாண்ட ஹோட்டலுக்கு அழைத்து செல்லும் போது தலைவர் பண்ணும் அட்டகாச ஸ்டைல்தான் என்ன!அடா அடா அடா. ஓட்டலில் நுழையும் போது அதுவரை அந்த பிரமாண்டத்தை காணாதவராய், அப்பாவி லோ கிளாஸ் சூதாடியாக, வாயிலில் உள்ள சுழலும் வாயிற்கதவுகளிலிருந்து உள்ளே வரமுடியாமல் சிக்கிக் கொண்டு படும் அவஸ்தை நமக்கு இன்ப அவஸ்தை.
நாகேஷ் இவரை இழுத்துவிட்டு சென்றதும் தலைவர் அப்படியே மாறுவார் ஸ்டைலில் அந்த சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி.
அப்பப்பா...ஸ்டைலா அது.
கையில் இருக்கும் கோட்டை படுஸ்டைலாக கழுத்துத் தோள்பட்டையின் பின்புறம் அப்படியே தூக்கிப் போட்டு நிற்கும் ஸ்டைல்...வாவ். கால்களை வைத்திருக்கும் அழகைப் பாருங்கள்.கண் கொள்ளாது. லேசாக வலதுகாலை முன்னம் வைத்து சற்றே பென்ட் செய்தபடி நிற்பார். ஒரு வினாடி நுனிப் பாதத்தில் நிற்பார். அற்புதமாக இருக்கும்.
ஓட்டலில் வாசிக்கப்படும் இசைக்குழுவின் இசைக்கருவிகளுக்கேற்ப சிரித்தபடியே தொடைகளில் லேசாக தாளம் போட்டு ஒரு மூவ் கொடுப்பாரே. கொன்று விடுவார்.
நாகேஷ் இருக்கையில் மன்றாடி அமரவைத்து சிகரெட் பாக்கெட்டைக் கொடுத்ததும் பழக்க தோஷத்தில் நம் மதன் பீடியை எடுத்து வாயில் வைத்து, சடுதியில் உஷாராகி, படுஸ்டைலாக அந்த பணக்கார சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிகரெட்டை அப்படி எடுத்து, டேபிளில் அதை இரண்டு தட்டு தட்டி, பெருமை பொங்க, (அந்த கண்களில்தான் என்ன ஒரு பெருமை தாண்டவமாடும்!) வாயில் வைத்து டேபிளில் இருக்கும் மங்கை ஓருத்தியின் சின்ன கட் அவுட்டை 'பார்க்குதே' என்று கவிழ்த்துப் போட்டு, மிஸ் லலிதா (காஞ்சனா) அட்டகாசமாக அறிமுகமாக, ஈஸ்வரியம்மாவின் குரலில் ச்சும்மா தூள் பாட்டு.
(பாடலைப் பாடிய ஈஸ்வரியம்மாவுக்கும், மெல்லிசை மன்னருக்கும் ஒரு பெரிய 'ஓ ' இன்னா பாட்டு!.,.. இன்னா உச்சரிப்பு!)
தலைவரின் வாயில் சிகரெட்டின் நுனி மட்டும் நுழைந்து இருக்க, கையில் பற்ற வைக்க நெருப்பு இருக்க, அப்படியே காஞ்சனாவை ஆச்சரியத்துடனும், வியப்புடனும் பார்க்க, காஞ்சனா இவர் பக்கம் வர, இவரைத் தொட, இவர் அந்த காந்தக் கண்களை உருட்டி, சற்றே மிரண்டு, பின் சுதாரித்து, மங்கையின் ஸ்பரிசத்தில் சற்றே நாணி, உதடுகளை சேர்த்து வைத்து ஒரு நாணம் கலந்த புன்சிரிப்பை காட்டுவார் பாருங்கள். அந்த உதடுகள் புரியும் லீலைகள்தான் என்ன...ஆஹா!
காஞ்சனாவின் நடனத்தின் போது விஷமி ஒருவன் தன் எதிரில் அமர்ந்து காஞ்சனாவிடம் வாலாட்டும் போது காஞ்சனாவைப் பார்க்காமல் அப்படியே எதிரியின் கையை பலமாக பிடித்து, பலப்பரீட்சை பார்த்து, அவன் கையை சாய்த்து வெற்றிக்கொடி நாட்டுவார் பாடலுக்கு மத்தியில்.
'தொடாதடா...இனி அவள் என் சொத்து..யாருகிட்ட?' என்பதை முகபாவங்களில் காண்பிப்பார்.
'கனவு கனவு... நேற்று கனவு'
என்று காஞ்சனா உடன் பாடும்போது நம் கடவுள் சிரிப்பதை பாருங்கள். ரீவைண்ட் பண்ணி பாருங்கள்...மறுமுறை..மறுமுறை...அதற்கு மேல் தாண்ட மாட்டீர்கள். கீழுதட்டை கீழ்வரிசை பற்களால் லேசாக கடித்து நாணத்துடன் சிரிப்பார். அழகு..அழகு. கொள்ளை அழகு சிரிப்பு. பார்க்கும் என் கண்களிலோ கண்ணீர்.
'தன்னிகரில்லா தலைவா...எங்கு போனாயோ எங்களை விட்டு விட்டு' என்று எண்ணி தாரை தாரையாக கண்களில் கண்ணீர். தானாக வருகிறது அருவித் தண்ணீர் மாதிரி கண்ணீர். நான் என்ன செய்ய!
அப்படியே நாம் எதிர்பாராமல் உற்சாகத்தின் விளிம்பில், சந்தோஷத்தின் எல்லைகளில் சேரிலிருந்து எழுந்து, புரியாத பாஷையில் ('ரியோ ரியோ ரியோடி... ஹோ ஹோ ஹோஹோஹோ' ...என்று துள்ளல் ஆட்டம் போட்டு (அதிலேயே கைகளை மடக்கி டப்பாங்குத்து போஸும் உண்டு) பண்ணும் அமர்க்களம் இருக்கே...சொல்லி மாளாது. எளிமையான உடையில், அரைக்கை ஷர்ட்டில். (அந்த கைகளில் ஷர்ட் எவ்வளவு அழகாக பிட் ஆகி இருக்கும் தெரியுமா...ஆண்மை கொடிகட்டிப் பறக்கும் அந்த அரைக்கை ஷர்ட்டில் )
'ஹோ ஹோ' என்னும்போது இடுப்பை ஷேக் செய்வார் பாருங்கள் படுவேகமாக. கண் இமைப்பதற்குள் அத்தனை ஷேக் செய்துவிடுவார். ச்சும்மா தலைவரின் ராஜாங்கம் கொடி கட்டிப் பறக்கும்.
ஹோட்டலில் உள்ளவர்கள் தன்னுடைய சேட்டை நடனத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை 'டக்'கென்று உணர்ந்து, டான்ஸை நிறுத்தி, அப்படியே வெட்கம் பிடுங்கித் தின்ன, இருக்கையில் அமர்ந்து, இரு கைகளாலும் முகத்தை மறைத்து, உடல் குலுங்க சிரித்து (அடடா என்ன சிரிப்புப்பா அது...இதுவரை எந்த படத்திலும் அவரே செய்யாதது)
பின்ணணிப் பெடலெடுப்பாரே தெய்வம்!
உடன் நார்மலாகி, தொங்கும் சரவிளக்கில் ஊஞ்சல் ஆடியபடி வரும் காஞ்சனாவை ஆச்சர்யத்துடன் பார்ப்பார். எப்படி...சும்மா கிம்மா இல்லே...அந்த உதடுகளை அப்படியே சுருக்கி கீழுதட்டை மடக்கி அவர் காஞ்சனாவை ரசிக்கும் ரசிப்பு இருக்கே. கிளாஸிக்.
இதற்கு மேல் நான் சொல்ல மாட்டேன். நீங்களே பார்த்து சொல்லுங்கள்.
ஒரு கிளப் டான்ஸ்தான். பாடுவது காஞ்சனா. ஹோட்டல் டான்ஸ். அந்த ஐந்து நிமிடங்களும் அப்படியே இவர் கையில். அப்படியே நம்மை கட்டிப் போட்டு விடுவார். நமக்கு கையும் ஓடாது..காலும் ஓடாது. இவர் ஒவ்வொரு வினாடியும் பண்ணும் முகபாவங்களை ஆயிரம் முறை பார்த்தாலும் முழுமையாக ரசிக்க முடியாது.
அதாம்பா தலைவன். எவரும் நெருங்க முடியாத தலைவன். சும்மாவா கும்பிடறோம் நம் தெய்வத்தை. தெய்வங்களுக்கு மேலல்லவா நம் தலைவன்!
வணக்கம் வாசு சார்
தங்கள் வரவுக்கும் பதிவிற்கும் நன்றி
சிறு விடயங்களையும் கவனித்து எழுதும்
தங்கள் எழுத்தின் சுவை குறையடையவில்லை
தொடர்ந்து வாருங்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th August 2018, 04:21 PM
#3640
Senior Member
Devoted Hubber
aathavan ravi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks