Page 14 of 400 FirstFirst ... 412131415162464114 ... LastLast
Results 131 to 140 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #131
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #133
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    richy Srinivasan · 6 June at 11:15 ·


    11. எதிர்பாராதது :
    இப்படம் பெயரும் எதிர்பாராதது. இது வெற்றி பெற்றதும் எதிர்பாராதது.
    என்னமோ கே.பாலசந்தர் மூன்று முடிச்சு படத்தில் புதிதாக படத்தை செய்தது போல..., அதாவது ரஜினி ஶ்ரீதேவியை விரும்பி, அவள் காதலித்த கமலை , ரஜினி தண்ணீரில் இருந்து காப்பாற்றாமல் இறக்க வைத்து, ஶ்ரீதேவியை மணமுடிக்க நினைத்து. கடைசியில் அவள் ரஜினியின் தந்தையை திருமணம் முடித்து , ரஜினிக்கு தாயாக வருவதாக கதை...இதை அன்றே 1954 லில் வெற்றிகரமாக கதை செய்து சிவாஜி பத்மினியைக் காதலித்து, சூழ்நிலை காரணமாக பத்மினி சிவாஜியின் தந்தையை மணம் முடித்து, சிவாஜிக்கே தாயாகும் கதை. மிகவும் புரட்சிகரமான கதை, இப்படி படம் தமிழகத்தில் கலாச்சாரத்திற்கு ஓடுமா , ஓடாதா...என்ற பயம் கூட சற்றும் இல்லாமல் படம் செய்தனர். இதில் நமது உலக மகா நாயகனும் நடித்து, படம் வெற்றிப்படமாக அமைந்தது ஒரு சாதனையே.
    சிவாஜி 1952 லிருந்து 1954 க்குள் 2 வருடங்களிலேயே எப்படி எப்படியோ நெகடிவ்வான கேரக்டர்களை அதிகமாக நடித்தது, சிவாஜியின் துணிச்சல், அதை நினைத்தாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சிவாஜி அவரது இமேஜை பற்றிக் கூட கவலைக்கொள்ளாமல், நடிப்பு என்று வந்துவிட்டால் எப்படிப் பட்ட கதாபாத்திரங்களையும், சவாலாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஏற்றுக்கொண்டு அவைகளில் வெற்றிக் கொடியையும் நாட்டினார் என்றால்..இதுவே ஒரு உலக அதிசயம் தான். 1954லில் மொத்தம் 8 படங்கள் வந்ததில் இதுவே கடைசிபடம், 7 படங்கள் வெற்றி பெற்றன. சிவாஜிக்கு இந்த ஆண்டு ஒரு இன்ப ஆண்டு, வெற்றி ஆண்டு. இதேபோல் ஆரம்ப காலங்களில் அதிக படங்களில் கதாநாயகி நமது பத்மினி. சரி, நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்.
    திருச்சி எம்.சீனிவாசன்.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #134
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Trichy Srinivasan · 5 June at 14:59 ·


    10. தூக்குத் தூக்கி :
    1954ல் வெளிவந்தது, அந்த வருடம் மட்டும் சிவாஜியின் 8 படங்கள் வெளிவந்தன, அதில் துளிவிஷம் படம் தவிற அனைத்தும் வெற்றிப்படங்கள்.
    இது கொண்டுவந்...தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டுவந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன் என்ற ஒரு கருவை மையமாக வைத்து செய்யப்பட்ட படம். இதில் உலக மகா நாயகனின் நடிப்பு மட்டுமல்ல, பரத நாட்டியமும் தியேட்டரில் கை தட்டலின் ஆரவாரத்தைப் பெற்றிருக்கும். சிவாஜி சிறு வயதில் நாடக கம்பெணியில் இருந்தபோதே தினசரி வழக்கமாக அனைத்து நாடகங்களையும் முறையாக கற்றவர். அலட்டிக் கொள்ளாமல் அற்புதமாக ஆடுவார். அவரது ஆட்டங்களின் தொகுப்பை எனது 8 வது உலக அதிசயம் சிவாஜி என்ற டிவிடியில் காட்டியிருக்கிறேன். இப்படத்தில் சிவாஜிக்கு கோனாரை தாக்கும் ஒரு பாடல் வரும். திருச்சியில் எடத் தெரு (கோனார்கள் நிறைந்த பகுதி) , திருச்சி பிரபாத் தியேட்டரை நடத்தியவரும், தெய்வமகன் படத் தாயாரிப்பாளருமான மறைந்த பெரியண்ணக் கோனாரும் அந்த பகுதியில் வசித்தவர் தான். சிவாஜி சிறு வயதில் சங்கிலியாண்டபுரத்தில் இருந்தபோது அந்த எடத்தெரு ஏரியாவில்தான் அதிக பொழக்கம். ஆகவே, அங்கே இருக்கும் கோனார்கள் அனைவரும் இப்பாடலால் நமது சிவாஜி மீது மிகவும் கோபம் கொண்டனர். பிறகு, படத்தில் காட்சிக்கேற்ப அப்படி நடிக்க வேண்டியிருந்ததை விளக்கி அவர்களிடையே சமாதானம் செய்து, பிறகு அவர் அந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி வரப் போக இருந்தார்.
    இப்படத்தில் சுந்தரி , சௌந்தரி பாடலில் சிவாஜியின் அருமையான நாட்டியத்தைப் பார்த்து கை தட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அற்புதமான படம் இந்த தூக்குத் தூக்கி. நன்றி
    நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்.
    திருச்சி எம்.சீனிவாசன்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #135
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    மதுரையில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மக்கள்தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரை சரித்திரம் காணாத வகையில் நான்காவது வாரத்தை தொடர்கிறது.
    பழைய படங்கள் 3 நாட்களை தாண்ட முடியாத நிலையில் நமது நடிகர்திலகத்தின் இமாலய சாதனையாக ராஜபார்ட் ரங்கதுரை 25வது நாளைக் கொண்டாட இருக்கிறது.
    ... அன்பு இதயங்களே, மதுரையே வியக்கும் வண்ணம் ராஜபார்ட் ரங்கதுரையின் 25வது நாளைக் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, மாபெரும் வெற்றிவிழா ஆக்கிடுவோம்.
    25வது நாள் விழா கொண்டாட.....மன்றத்து மறவர்களே, அணிதிரண்டு வாரீர் மதுரையை நோக்கி.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #136
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #137
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    இன்று (08/06/17)
    சன் லைப் -- 11 am -- " நவராத்திரி "

    நடிகர் திலகத்தின் 100 வது திரைப்படம்
    திரையுலக நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
    முதன்மையானதும் வசூலில் சாதனை படைத்ததும்
    சென்னையில் 4 திரைகளிலும் மற்றும் பல இடங்களில் 100 நாட்களுக்கு மேல்
    ஓடிய படம், உலக அளவில் பேசப்பட்ட, பேசப்படும் படம்
    நடிகர் திலகத்திற்கு செவேலியர் விருதை வாங்கிக் கொடுத்த
    திரைப்படம் நவராத்திரி.




    நவராத்திரி- 03/11/1964.

    அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.

    எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.

    ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.

    என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.

    ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
    நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.

    இதில் ஒரு விஷயம்.

    எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.

    அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.

    குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.

    டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.

    கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.

    சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.

    செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.

    வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்

    ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.

    உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.

    இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.

    பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.

    அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.

    இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.

    உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.

    மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.

    1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)

    2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.

    3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.

    4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
    நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தோணி,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தோணி(சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையாக மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.

    5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )

    6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை காய் குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.

    7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?

    8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அகலத்துக்கு, நளினாவை ஆன் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.

    9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
    வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனதனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?

    இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது.
    Last edited by Gopal.s; 9th June 2017 at 07:24 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes Harrietlgy, sivaa liked this post
  10. #138
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பொதிகை தொலைக்காட்சி வாரம் முழுவதுமே நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியங்களை கொண்டாடி வருகிறது,
    பாகப்பிரிவினை, பாலும் பழமும், ஆலயமணி, பார்த்தால் பசி தீரும், பழனி என நம்மையெல்லாம் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது,
    இன்று முத்துச் சிப்பியை எடுப்பது போன்ற ஒளிபரப்பு,
    * பாவ மன்னிப்பு*
    இரவு 8:30 க்கு ...

    பாவ மன்னிப்பு பல சாதனைகளை படைத்த ஒரு காவியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று,
    வெள்ளி விழா காவியம், இசைத் தட்டில் தகர்க்க முடியாத சாதனை,
    நடிப்பில் நடிகர் திலகத்தை குறை கண்டவர்கள் பாவ மன்னிப்புக்குப் பிறகு சுவடு தெரியாமல் போனார்கள், டூரிங் கொட்டகையில் 150 நாட்கள் ஓடிய உலகின் ஒரே காவியத் திரைப்படம்,
    இத்தனை சாதனைகள் கொண்ட பாவமன்னிப்பு ஒரு சொல்ல முடியாத சோகத்தையும் வரலாற்றில் சேர்த்துக் கொண்டது, அந்த நிகழ்வு பற்றி பதிவு செய்ய மனம் இல்லை,
    ஆனால் ஆனந்த விகடன் நிகழ்வைப் பற்றி எழுதும் போது கூட அதில் ஒரு பிரமாண்டம் மறைந்து போனது என மேற்கோள் காட்டியது..
    பாவ மன்னிப்பை கொண்டாடிவோம்!!!





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #139
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussainto Nadigarthilagam Fans · 3 hrs ·

    Nadigarthilagam Fans க்ளப் இல்,,, உறுப்பினர்கள் எண்ணிக்கை 6400 கடந்தது,,, சேகர் சார் உட்பட பல நண்பர்கள் சென்னையிலும் முரளி சார் உட்பட பல நண்பர்கள் மதுரையிலும் கொடிக்குறிச்சி முததையா அண்ணன் போன்றோர் நெல்லையிலும் நமது தம்பியண்ணன் ரஸாக் அவர்கள் புதுக்கோட்டையில்,,, நாகராஜன் சார் & பிரதர்ஸ் & ஃபேமிலி & ஃப்ரண்ட்ஸ் பொள்ளாச்சியில் உள்ளார்கள்
    தமிழ்நாடு தாண்டி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரந்து விரிந்து இருக்கிறார்கள்,,, பணி நிமித்தமாய் வெளிநாடுவாழ் நண்பர்களும் அதிக அளவில் உள்ள...
    னர்,,, இதில் பெயர் குறிப்பிடாத நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர் அவர்களை குறிப்பிட்டு சொல்லாததனால் வருத்தம் வேண்டாம்,,,
    இவர்கள் அனைவரும் சிவாஜி என்ற ஒற்றை இழையில் பின்னப்பட்டவர்கள்,, அன்பாலும் பண்பாலும் உயர்ந்தவர்கள்,,, ஆழ்ந்து பார்த்தோமே ஆனால் சிவாஜி ஐயா அவர்கள் போதித்த நன்னெறிகள் குடும்பப் பற்றுதல் பாசம் இங்கிதம் என்று பற்பல உணர்வுகளை பிரதிபலிப்பவர்கள்,, அவரது பொது வாழ்விலும் சரி இல்வாழ்விலும் சரி அவர் கடைபிடத்த நெறிகளை கண்டு வியந்து தொடர்பவர்கள்,,, இந்த "மனித சங்கிலி" வளையம் பிற நடிகர்களுக்கு வாய்க்கப் பெறாத ஒன்று,,, சம்பாத்தியம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்து மறைந்த திரையுலக கலைஞர்களை அவர்கள் காலத்திற்கு பிறகு மறந்துபோவது தான் மனித இயல்பு,,, இறைவன் படைப்பில் முழு வடிவம் பெற்ற உன்னதமான கலைஞன்,, மனிதனாக இருப்பதால் நாவாற மட்டுமின்றி மனதார போற்றுகிறோம்,,, அவர் வழிபேண விரும்புகிறோம்,,,
    நமது நண்பர்கள் சொந்தபந்தங்கள் போல ஆகிப்போனோம்,,, பெரும்பாலான நண்பர்கள் 40 வயது கடந்தவர்கள் ஆனாலும் துடிப்பான இளைஞர் பட்டாளமும் இந்த தளத்தில் காணப் படுகிறார்கள்,,, சிவாஜி என்ற மஹா சமுத்திரத்தை அறிந்தவர்கள் ஆதலால் அவர்களும் நல் ஒழுக்கங்களை கடைபிடிப்பார்கள் என்பது திண்ணம்,,, ஏதோ ஒரு சந்தர்பத்தில் ஏதோ ஒரு விஷேக வைபவங்களில் நாம் சந்தித்து அளாவளாவி மகிழ்வது அல்லது துக்க சம்பவங்கள் நடந்துவிடும் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் நிற்பது போன்ற சந்தர்பங்கள் உன்னதமானவை,,, நேற்று ஒரு சுபகாரியத்தில் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்,,, இவ்வளவு எழுதுவதுமே ஒரு காரணத்திற்காக! நாம் ஒருவரை ஒருவர் நேரில் ஒரு முறையேனும் பார்க்கும் வாய்ப்பு உருவாக வேண்டும்,,, நாம் அனைவரும் வயது பேதமின்றி அந்த நாள் முழுக்க சிவாஜி சிவாஜி என்று அந்த மனிதனைப் பற்றியே அர்ச்சிக்க வேண்டும்,,, இந்த எளியோனின் விருப்பம் நிறைவேறுமா? காலம் பதில் சொல்ல வேண்டும்,,, நண்பர்களுக்கு நன்றி,,, (படம் அண்ணன் கௌசிங்கன் ராமையா அவர்களுடையது)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #140
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •