Page 122 of 400 FirstFirst ... 2272112120121122123124132172222 ... LastLast
Results 1,211 to 1,220 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1211
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussain

    palani india







    அக்டோபர்,1 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்
    பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஸ்டுடியோ அதிபர், ஏவி.எம்.குமரன்; தன் தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கும், தனக்கும், சிவாஜி கணேசனுடன் ஏற்பட்ட சுவையான சம்பவங்களை, 'வாரமலர்' வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்:
    என் தந்தையின் நெருங்கிய நண்பர், பி.ஏ.பெருமாள் முதலியார். என்.எஸ்.சி., எனப்படும் நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு, செங்கல்பட்டு போன்ற பெரிய ஏரியாக்களின், வெற்றிகரமான திரைப்பட வினியோகஸ்தர்.
    ஒருமுறை, 'பராசக்தி என்று ஒரு நாடகம் பார்த்தேன்; நல்ல கதை. அதை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்...' என்று, என் தந்தையிடம் சொன்னார், பெருமாள்.
    'பெரிய வினியோகஸ்தரான நீங்க, ஒரு கதைய தேர்ந்தெடுத்து, இது படமாக வந்தால் நன்றாக இருக்கும்ன்னு நினைக்கும்போது, எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட எல்லா உதவிகளையும் செய்வதோடு, தலைமை தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஏற்பாடு செய்து தர்றேன்...' என்று உறுதியளித்தார், என் தந்தை.
    ஏவி.எம்., நிறுவனமும், பி.ஏ.பெருமாளின் நேஷனல் பிக்சர்சும் இணைந்து ,கூட்டுத் தயாரிப்பில் உருவானது தான், பராசக்தி திரைப்படம்.
    இயக்குனராக கிருஷ்ணன் - பஞ்சு; வசனகர்த்தா மு.கருணாநிதி, இசையமைப்பாளர், ஆர்.சுதர்சனம், ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் மற்றும் அரங்க அமைப்பு பாலு போன்றோர், இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படப்பிடிப்பு ஆரம்பமாகி, நல்ல முறையில் நடைபெற்று வந்தது.
    இப்படம் கூட்டுத் தயாரிப்பு என்பதால், குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், அதைப் போட்டுப் பார்த்து, நிறை, குறைகளைக் கண்டு, அதற்கேற்ப, மேற்கொண்டு படப்பிடிப்பை தொடர்வது, என் தந்தையின் பழக்கம். எடுத்தது வரை, படத்தை போட்டுப் பார்த்ததில், சிவாஜி கணேசனின் தோற்றத்தில் திருப்தி ஏற்படவில்லை, என் தந்தைக்கு!
    பெருமாள் மற்றும் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோரை அழைத்து, 'என்னப்பா இது... இந்த பையன் எலும்பும் தோலுமாக இருக்கிறார்; இவரைப் போட்டு படம் எடுத்தால் சரியா வருமா... வியாபாரம் செய்ய முடியுமா... பேசாமல், எடுத்தவரை, 'கேன்சல்' செய்துட்டு, அண்ணாதுரை கதை வசனத்தில், வேலைக்காரி படத்தில் நடித்திருக்கும், கே.ஆர்.ராமசாமிய நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும்; அவருக்கு பேரும், புகழும் வேற இருக்கு...' என்றார்.
    ஏவி.எம்.,மே இப்படி சொல்கிறாரே, எப்படி மறுத்து பேசுவது என்று, மூவரும் தயங்கினர்.
    ஆனாலும், இயக்குனர் பஞ்சு, 'இந்தப் பையன், கருணாநிதி வசனத்தை, ரொம்ப அருமையா பேசியிருக்கார். இப்ப நீங்க பார்க்கிற கணேசனை வச்சு சொல்லாதீங்க. இவரு, 'டிராமா'விலிருந்து சினிமாவுக்கு வந்திருக்காரு. நாடகத்தில நடிச்சிட்டிருந்தபோது, வசதியா சாப்பிட்டிருக்க மாட்டார். அது தான் மெலிஞ்சு இருக்கார்.
    ஏவி.எம்., ஸ்டுடியோவிலேயே ஒரு அறையை ஒதுக்கி கொடுங்க. மூணு மாசம் அங்கேயே தங்கி, வேளா வேளைக்கு சத்தான உணவா சாப்பிட்டு, நிம்மதியா உடம்பை கவனிச்சிக்கட்டும். அதன் பின், படப்பிடிப்பை வைச்சுக்கலாம். அதுக்குபிறகும் உங்களுக்கு திருப்தியில்லன்னா, என்ன செய்யலாம்ன்னு பார்ப்போம்...' என்றார்.
    என் தந்தைக்கும் அது சரி என்று படவே, ஏவி.எம்., வளாகத்தில் கணேசனுக்கு அறை ஒதுக்கி தந்தார். அத்துடன், அந்த மூன்று மாதங்களும், உடம்பை தேத்துவதைத் தவிர, வேற வேலையை செய்ய கூடாது என்று கூறிவிட்டார்.
    மூன்று மாதங்களுக்குப் பின், கணேசன் நடித்த அந்த காட்சிகளை, மறுபடியும் எடுத்துக் காட்டினர். 'பையன் பூசின மாதிரி இருக்கார்; பிரமாதமாக பேசி நடித்திருக்கிறார்...' என்று என் தந்தை சொல்ல, மொத்த படக் குழுவினரும் சந்தோஷப்பட்டு, விரைந்து படப்பிடிப்பை முடித்தனர்.
    கிருஷ்ணன் - பஞ்சுவின் பிடிவாதம், பி.ஏ.பெருமாளின் ஒத்துழைப்பு, கருணாநிதியின் சம்மதம் இவற்றுடன் ஏற்கப்பட்ட நாடக நடிகர், கணேசன், பராசக்தி படத்தின் மூலம், திரை உலகின் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி, சிவாஜி கணேசன் என்று மறுபிறவி எடுத்து, சரித்திரம் படைத்தார்.
    கடந்த, 1951ல், பிரபல இயக்குனர், அகிராகுரோஸாவா இயக்கிய, ரோஷோமேன், உலக அளவில் எல்லாராலும் புகழப்பட்ட வெற்றிப் படம். 'அப்படத்தின் பாணியில், நான் ஒரு கதை எழுதியிருக்கேன்; நீங்க விரும்பினால், இதை, உங்கள் பேனரில் படமாக்கலாம்...' என்று, என் தந்தையிடம் சொன்னார், பிரபல வீணை வித்வானும், இயக்குனருமான,
    எஸ்.பாலச்சந்தர். ஏற்கனவே, அப்படத்தை ஜப்பானில் பார்த்திருந்தார், என் தந்தை. பாலச்சந்தர் சொன்ன கதையும் பிடித்திருந்ததால் சம்மதம் தெரிவித்தார்.
    படம் கால் பாகம் முடிந்த நிலையில், எடுத்தவரை போட்டுப் பார்த்ததில், என் தந்தைக்கு திருப்தி இல்லை. 'நீங்க என்னிடம் கூறிய கதையில் இருந்த விறுவிறுப்பு, த்ரில், இந்த காட்சிகளில் இல்லயே... விஸ்வநாதனின் நடிப்பும், கதைக்கேற்றபடி சோபிக்கவில்லயே...' என்றார்.
    இதை சற்றும் எதிர்பாராத இயக்குனர், 'கோல்கட்டா, விஸ்வநாதன் சிறந்த நடிகர்; கோல்கட்டாவில் நாடக மேடைகளிலும், திரைப்படங்களிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது...' என்றார்.
    'வங்கத்தில் அவர் புகழ் பெற்றவராக இருக்கலாம்; தமிழகத்தில் பேர் எடுக்கும் அளவுக்கு அவர் நடிப்பு இல்லயே... கணேசனைப் போட்டு, இந்தப் படத்தை எடுங்கள்; படம், நன்றாக, விறுவிறுப்பாக அமையும்...' என்றார், என் தந்தை.
    எந்த, கணேசனின் தோற்றம் சரியில்லை என்று மாற்றச் சொன்னாரோ, அதே, கணேசனைப் போட்டு படம் எடுத்தால், படம் நன்றாக அமையும் என்று, கணேசனுக்கு பரிந்து பேசினார், தந்தை.
    ஜாவர் சீதாராமன் சொன்ன சில மாறுதல்களை செய்து, கணேசனை நடிக்க வைத்து, படம் முடிக்கப்பட்டது. ஆரம்பித்த போது, 'ஒரு நாள்' என்று இருந்த பெயர், பின் மாற்றப்பட்டு, அந்த நாள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
    அக்காலத்தில், பாடல்கள் இல்லாமல் படம் எடுப்பது மிகவும் அரிது. ஆனால், இப்படம், பாடல்களே இல்லாமல் உருவானது. ஒளிப்பதிவு அமைப்பிலும், கேமரா நகர்விலும் புதிய பாதையை அமைத்ததை பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.
    கதாநாயகனாக நடிக்கத் துவங்கியிருந்த கணேசன், இப்படத்தில் வில்லனாக நடித்து, நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிக்காட்டி, பேரும், புகழும் பெற்றார். ரிலீசான நேரத்தை விட, இந்தப் படம், அடுத்தடுத்து வெளியான நேரங்களில், பெரிய வெற்றியை அடைந்தது.
    சிவாஜியின், 125வது படம், உயர்ந்த மனிதன்! தன், 125வது படம், ஏவி.எம்., நிறுவனத்தால் தயாரிக்கப்பட வேண்டும் என்ற தன் ஆசையை, என் தந்தையிடம் தெரிவித்திருந்தார், சிவாஜி கணேசன். அந்தப் படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கிருஷ்ணன் - பஞ்சு, ஜாவர் சீதாராமன், உதவி இயக்குனர்கள், கதாசிரியர்கள் எல்லாரையும் அழைத்து, 'சிவாஜிக்கு ஏற்ப நல்ல கதை வேண்டும்...' என்றார், என் தந்தை.
    அப்போது, வங்க மொழியில் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடும், உத்தர் புருஷ் என்ற திரைப்படத்தைப் பற்றி அறிந்து, அப்படத்தை சென்னைக்கு வரவழைத்து பார்த்தோம்; கதை எல்லாருக்கும் பிடித்திருந்தது. தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப, சில மாறுதல்கள் செய்யப்பட்டன. கதையைக் கேட்டதும், உடனே கால்ஷீட் கொடுத்து விட்டார், சிவாஜி.
    கதையில், சிவாஜியும், மேஜர் சுந்தர்ராஜனும் சிறு வயது நண்பர்கள்; பெரும் செல்வந்தர், சிவாஜி. அவர் வீட்டு கார் டிரைவர், மேஜர்.
    மலை பகுதி சாலையின் வழியாக வரும் போது, 'நாம் சின்ன வயசில் பள்ளிக்கு செல்லும் போது, நடந்த நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகத்திற்கு வந்து விட்டன...' என்று சொல்லி, மனம் விட்டு சிரிப்பார், சிவாஜி. 'இந்த இடத்தில் ஒரு பாடல் வந்தால் நன்றாக இருக்கும்...' என்று, சொன்னார்கள், கிருஷ்ணன் - பஞ்சு. அக்கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டோம். 'என்ன மாதிரி பாட்டு அமைய வேண்டும் என்று ஒரு, 'க்ளூ' கொடுங்கள்...' என்று கேட்டார்,
    எம்.எஸ்.விஸ்வநாதன்.
    அப்போது சபையர் தியேட்டரில், மை பேர் லேடி என்ற படம் ஓடியது. அப்படத்தில், மலை அடிவாரத்தில், கதாநாயகன் ரெக்ஸ் ஹாரியன், கையில் ஒரு ஸ்டிக்கை வைத்து, அதைச் சுழற்றி, பேசியபடியே வருவார், சிரிப்பார், பாடுவார், ஓடுவார்; பார்க்க நன்றாக இருக்கும். அக்காட்சி என் நினைவுக்கு வந்தது. எம்.எஸ்.வி.,யிடம் விவரமாக சொன்னேன். 'வாலியை வரச் சொல்லுங்கள்; உட்கார்ந்து பேசி, 'கம்போஸ்' செய்துடுவோம்...' என்றார்.
    ஏவி.எம்., நிறுவனம் தயாரிக்கும் படங்களில், இசை அமைப்பாளரோடு உட்கார்ந்து விவாதிப்பது, டியூன் போட வைப்பது, டியூனை, 'அப்ரூவ்' செய்வது, ஓ.கே., செய்வது இவை எல்லாம் என்னுடைய பொறுப்புகள்.
    கவிஞர் வாலி வந்ததும், கதையில் பாடல் வரும் இடத்தைச் சொன்னோம். 'அந்த நாள் ஞாபகங்களை, நண்பரிடம் சொல்லி பாடுகிறார் சிவாஜி. இடையிடையே, அந்த நிகழ்ச்சிகளை வசனமாகவும் பேசுகிறார். அந்த வசனங்களையும், நீங்கள் தான் எழுத வேண்டும். இப்படி ஒரு பாடல் வேண்டும்...' என்று சொன்னேன்.
    நாங்கள் சொன்ன முதல் வாக்கியத்தையே முதல் அடியாக வைத்து, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே நண்பனே... என்று பாடல் வரிகளை சொல்ல, அதை பாடிக் காண்பித்தார்
    எம்.எஸ்.வி., 'கம்போசிங்' சிறப்பாக முடிந்தது.
    மறுநாள் ரெக்கார்டிங்; இப்போது இருப்பது போல, மல்டி டிராக் ரெக்கார்டிங் சிஸ்டம் கிடையாது; சிங்கிள் டிராக் ரெக்கார்டிங் சிஸ்டம் தான். ஒரே சமயத்தில் பாடலையும், அதன் நடுவே வரும் வசனங்களையும் பேசி, ரெக்கார்டிங் செய்ய வேண்டும். ஒரு மைக்கில், டி.எம்.எஸ்., பாட, மற்றொரு மைக்கில், சிவாஜியும், மேஜரும் ஜோடியாக நின்று வசனம் பேச, ரெக்கார்டிங் தியேட்டரில், இசை கலைஞர்கள், இசைக் கருவிகளை வாசிக்க, சிறப்பாக நடந்தது, ரெக்கார்டிங்.
    சிவாஜியின், 125வது படமான, உயர்ந்த மனிதன் வெற்றி அடைந்து பேரும், புகழும் பெற்றுத் தந்தது.
    சிவாஜியின், 125வது படமான, உயர்ந்த மனிதன் படத்தை, அவரது முதல் படமான, பராசக்தி படத்தை இயக்கிய, கிருஷ்ணன் - பஞ்சு தான் இயக்கினர்.
    கடந்த, 1968ல் தான், பின்னணி பாடகிக்கு விருதை அறிவித்தது, மத்திய அரசு. விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டே, 1968ல், உயர்ந்த மனிதன் படத்தில், 'நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...' என்ற, பாடலுக்காக, முதல் தேசிய விருது பெற்றார், பி.சுசீலா.
    'ஏவி.எம்., ஒரு செல்லுலாய்டு சரித்திரம்' என்ற பெயரில், தன் தந்தையின் திரைப்பட அனுபவங்களை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டுள்ளார்,
    ஏவி.எம்.குமரன்.
    சிவாஜி கணேசனுக்கு, ஏவி.எம்., ஸ்டுடியோவில், ஏ.சி.,யுடன் கூடிய, பிரத்யேக, 'மேக் - அப்' அறை உண்டு........ (Thanks to Rathinavelu sir)





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1212
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jiaa Mohamed Sulthan

    ·




    #நடிகர்திலகத்தின்
    #நன்றி_மறவாமை!


    நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நாடகத்துறையில் நடித்து கொண்டிருந்தபோது சில காலம் திருச்சியில் தங்கி நாடகத்திலும் சினிமாவிலும் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது திருச்சியில் தங்குவதற்கு கூட இடம் இல்லாத சூழ்நிலையில் அவரது திறமையை உணர்ந்து சிவாஜியை தன் வீட்டில் தங்கவைத்து அவருக்கு ஆதரவு கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த நடுத்தர வணிகரான பெரியண்ணா அவர்கள். மளிகை வியாபாரியான யாதவரான பெரியண்ணாவின் வீடு திருச்சி நகரத்தில் காஜாபேட்டை அருகில் எடத்தெருவில் இருந்தது. நடிக்கும் ஆர்வத்தில் திருச்சிக்கு வந்த சிவாஜியை அரவணைத்து தன்வீட்டின் ஒருபகுதியில் தங்கவைத்து ஆதரவு கொடுத்தவர் பெரியண்ணா
    காலம் கடந்தது! சிவாஜி சென்னைக்கு சென்று பராசக்தி படத்தில் நடித்து மக்கள் போற்றும் மிகப்பிரபலமான நடிகராகி விட்டார். அவர் பிரலமான நடிகராகி விட்டாலும் சிலகாலம் திருச்சியில் தன்னை தங்கவைத்து ஆதரித்த பெரிண்ணாவை மறக்கவில்லை.
    தன்னுடைய மகள் சாந்தியின் பெயரால் சாந்திபிலிம்ஸ் என்ற படகம்பெனியை துவக்கி அதில் பெரியண்ணாவை தயாரிப்பாளராக்கி சில படங்களை நடித்து கொடுத்தார் நடிகர்திலகம். அப்படி பெரியண்ணாவின் தயாரிப்பில் நடிகர்திலகம் நடித்து கொடுத்தபடங்களில் குறிப்பிடதக்கவை தெய்வமகன் திருவருட்செல்வர் தர்மம்எங்கே ஆகும்!
    அதுமட்டுமல்ல திருச்சி பாலக்கரையில் பிரபலமான இஸ்லாமிய குடும்பமான ந.மு குடும்பத்தாரின் பில்டிங் தான் N.M. பில்டிங். பிரபாத் தியேட்டர் என்றழைக்கபட்ட இந்த தியேட்டரை ந.மு. குடும்பத்தாரிடம் நடிகர் திலகமே நேரடியாக பேசி பெரியண்ணாவிற்காக நீண்ட கால குத்தகைக்கு எடுத்து கொடுத்தார்.
    சென்னையில் எப்படி சாந்திதியேட்டர் சிவாஜி ரசிகர்களுக்கு சொர்க்கமாக இருந்ததோ. அதைப்போல தான் திருச்சி பிரபாத் தியேட்டரும் சிவாஜி ரசிகர்கள் ஒன்று கூடும் இடமாக அமைந்தது.தன் மகன் பிரபுவை நடிகர்திலகம் பெங்களூரில் படிக்கவைத்தபோது பெரியண்ணணாவின் மகன் பரணியையும் பிரபுவுடன் படிக்கவைக்கும் பொறுப்பையும் நடிகர் திலகம ஏற்றுக்கொண்டார்.
    நடிகர்திலகம் நடித்த உத்தமன் திரைப்படத்தில் வரும் காஷ்மீர் ஸ்கேட்டிங் காட்சியில் பிரபுவும் வருவார் என்பது சிவாஜி ரசிகர்கள் அறிந்த செய்தி!
    அக்காட்சியில் பிரபுவுடன் பரணியும் இருப்பார்.
    தன் வீட்டில் தங்கவைத்த அக்குடும்பத்திற்கு பல உதவிகளை செய்த சிவாஜி 1983 என நினைக்கிறேன் பெரியண்ணா அவர்கள் மறைந்தபோது தன்னுடைய அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக திருச்சி விரைந்தார்.
    முதல்நாள் இரவு 11.00மணியிலிருந்து மறுநாள் மதியம் வரை பெரியண்ணாவின் உடல் அருகிலேயே இருந்து தன்கையாலேயே அவரது உடம்பை தூக்கி தன் சொந்த சகோதரனை போல் இறுதி கடமைகளை நிறைவேற்றினார் சிவாஜி!
    அப்போது சிவாஜியுடன் G.k.மூப்பனார் அவர்களும் பிற்காலத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடைக்கலராஜ் அவர்களும் உடன் இருந்தார்கள்
    (அரசியலில் வேறு இடத்தில் இருந்தாலும் இளம்பிராயத்தில் இருந்து மிகத்தீவிரமான சிவாஜி ரசிகரான நான்அப்போது பிரபாத் தியேட்டர் அருகே புத்தககடை வைத்திருந்து அந்த துக்க நிகழ்வுக்கு சென்றிருந்ததால் இவை நேரடியாக நான் கண்ட சம்பவங்களாகும்)
    பெரியண்ணா இறந்த பிறகும் அக்குடும்பத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்தார் நடிகர்திலகம்!
    பெரியண்ணாவின் மருமகன் T.சீனிவாசன் தான் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றதலைவராக நீண்ட காலம் இருந்தார்.
    1989ல் சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிகட்சியை துவங்கியபோது திருச்சி 1வது தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தார்.
    ஏறிவந்த ஏணியை எட்டிஉதைக்கும் கலையுலகில் தன்னை ஆதரித்த ஒருவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்திய நடிகர்திலகம் பற்றிய இச்செய்தியினை அவரது பிறந்தநாளான இன்று பதிவிடுவதில் பெருமையடைகிறேன்!


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1213
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1214
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் 51 வது வெற்றிக்காவியம்

    சபாஷ் மீனா வெளியான நாள் இன்று


    சபாஷ் மீனா 3 ஒக்டோபர் 1958


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1215
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Abdul Razack

    சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பராசக்தி, இந்த படத்தை தயாரித்தவர், வடஆற்காடு மாவட்டம் வேலூர் தோட்டபாளையத்தில் வசித்த P.A. பெருமாள் என்பவர், அவருக்கு சொந்தமாக நேஷ்னல் தியேட்டர் வேலூரில் இருந்தது... அதன் பெயரிலேதான்...
    நேஷ்னல் தியேட்டர்ஸின் பராசக்தி..
    இயக்குனர்கள்: கிருஷ்ணன்-பஞ்சு
    கதை-வசனம்- மு.கருணாநிதி ...
    ... இவர் தியேட்டரிலேயே வெள்ளிவிழா கொண்டாடியது...
    சில வருடங்கள் கழித்து………
    PA பெருமாள் தொழில் அபிவிருத்திக்காக சிவாஜியிடம் தனது திரையரங்க பத்திரங்களை வைத்து சில லகரங்களை கடனாக பெற்றார்.
    பல வருடங்கள் கழித்து
    சிவாஜியின் மறைவிற்கு பிறகு
    தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக திரும்ப செலுத்தாமல் இருந்த சில லகரம் கடன் பல ஆண்டுகள் ஆனதால் சில கோடியானது.
    PA பெருமாளின் பிள்ளைகள் தங்களால் கடனை திரும்ப செலுத்த முடியாது என்பதை உணர்ந்து சிவாஜியின் மகன் பிரபுவிடம் வந்து தங்கள் இயலாமையை சொல்லி சிவாஜியின் குடும்பத்திற்கு அவர்களது திரையரங்கை மாற்றி பத்திரபதிவு செய்துதருவதாக கூறினர்.
    பிரபு அவர்களை அவர்களது வீட்டில் உணவருந்த சொல்லிவிட்டு, சற்று நேரத்தில் வருகின்றேன் என்று கூறி வெளியே சென்றுவிட்டார்.
    இரண்டு மணிநேரம் கழித்து ஒரு பெட்டியுடன் வந்த பிரபு, சாரி அமொண்ட் பெரிசு அதான் லேட்டாயிடுச்சி என்றவராய் தனது கையிலிருந்த பெட்டியை PA பெருமாள் அவர்களின் பிள்ளைகள் கையில் கொடுத்து
    "அண்ணே அன்று அப்பா (PA பெருமாள்) இல்லை என்றால் இன்னைக்கு நாங்க இந்த நிலைமையில இல்ல.
    எங்களுக்கு வாழ்வுகொடுத்த தெய்வம் அவர். நீங்க போய் அந்த இடத்தை விற்க்கலாமா"? என்று கேட்டு திரையரங்க பத்திரத்தையும் , பணத்தையும் கையில் கொடுத்து அவர்களை வழியனுப்பினார்.
    தங்கள் வாழ்வில் விளக்கேறியவரின்
    வீட்டில் விளக்கேற்றியவர் நடிகர் திலகம் சிவாஜியின் வாரிசு. இந்த பதிவின் நோக்கம் நேற்று திரு .ஜாஹிர் உசேன் அவர்கள் ரத்னவேலு சாரின் பதிவில் AVM குமரன் தினமலர் வாரமலர் இதழில் எழுதிய பதிவை பார்த்தேன் அண்ணன் பிரபு செய்த இந்த காரியமே போதும் யார் சிறந்தவர் என்பதை நாம் அறிந்து கொள்ள! இந்த அன்னை இல்லம் எல்லா செல்வமும் பெற்று இன்றும் வளமுடன் நடைபோட காரணம் நன்றி என்னும் செஞ்சோற்று கடன் தான்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1216
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1217
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1218
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan








    Sundar Rajan



    கோவை மாநகரில் உள்ள
    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    நமது நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் தலைவரின் படம் திரையிடப்படவில்லை என்ற மனவருத்தத்தை களைய... வந்து விட்டார் நமது கலை தெய்வம் சிம்ம சொப்பனமாக,
    ஆம், ஒரு படம் அல்ல, ஒரு வாரம், ஏழு படம் அல்ல ஏழு காவியம்.
    ஆம் அன்பு இதயங்களே, வரும் 6.10.2017 வெள்ளி முதல் கோவை ராயல் திரையரங்கில் வெற்றி முரசு கொட்ட வருகிறார் நமது நடிகர்திலகம். வரவேற்க தயாராகுங்கள் அன்புள்ளங்களே....
    நடிகர்திலகம் வாரம் வசூல் புரட்சி செய்யட்டும்,
    திரளட்டும் சிங்கத்தமிழனின் அன்பு கூட்டம், கோவை ராயல் திரையரங்கில்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1219
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1220
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜிகணேசன் ஒரு நடிப்புச் சுரங்கம், சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பல்கலைக் கழகம்,
    சிவாஜிகணேசன் நடிகர்களின் பிதாமகன்,
    சிவாஜி நடிப்புலகின் கலைக்கலஞ்சியம் ,
    தலைசிறந்த நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி என்றெல்லாம் சிவாஜி பற்றி எல்லாரும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
    ஆனால் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறமாதிரி நடைமுறையில் அவரை மதித்துச் சிறப்பிக்கும் விதமாக இங்கே ஏதாவது அரங்கேறியிருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஒரு சிறு துரும்பைக்கூட அவருக்காக கிள்ளிப்போட யாரும் இங்கே தயாராக இல்லை.
    "அதெல்லாம் எங்களுடைய வேலை இல்லை". அரசாங்கம் செய்திருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்யமுடியும்?’ என்று கேட்டு ஒதுங்கிவிடுவார்கள். அரசாங்கமும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஒதுங்கியே இருந்துவிடுகிறது.
    பக்தவச்சலம் ஆட்சிக்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் எல்லாம் திராவிடம் பேசியே தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனைப் பெருமைகளையும் கிடைக்காமல் செய்துவிட்ட அரசாங்கங்களே தவிர, நியாயமான பெருமைகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்த அரசாங்கங்கள் அல்ல.


    கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது, சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும் (அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள்.

    (எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம் எனக்குத் தேவையில்லை’ என்று உதறி எறிந்தது அற்புதமான காமெடி).

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •