Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Ramiah Narayanan

    பாசமலர் !
    இன்றும் பாசமுள்ள அண்ணன் தங்கை என்றால் என்ன பாசமலரா என்று கேட்கும் வழக்கம் மக்களிடே இருக்கிறது இன்றைக்கும் கை வீசம்மா கை வீசு என்று சிவாஜி உருகி கண்ணீர...் மல்கி பேசுவதை கண்டு கண்ணீர்விடுகின்றவர்கள் இருக்கிறார்கள்.
    *படம் என்கிறார் சிலர் பாடம் என்கிறார் பலர் பாசத் தேன் குடம் அது.
    * சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து சேர்ந்தே மறைந்த செல்வங்களின் கதை பாசமலர்.
    * முதல்நாள் படம் பார்த்த எவர் முகத்திலும் புன்னகையில்லையாம் எதையோ பறிகொடுத்தமாதிரி, சோகத்தில் ஆழ்ந்த நிலையில் வீடு திரும்பினார்களாம்.
    * ராஜசேகரன் போன்ற அண்ணனுக்காக தங்கைகளும், ராதா மாதிரியான சகோதரிக்காக அண்ணன்களும் கோடிக்கணக்கில் ஏங்கினார்களாம்.
    * முதலில் ஆண்குழந்தை பெற்றவர்களுக்கு இரெண்டாவது பெண் குழந்தை பிறந்தால் ராதா என்றே பெயர் சூட்டினார்களாம்.
    * சிவாஜியுடன் ஜோடியாக நடிக்க கூடாது என்று சாவித்திரிக்கு பலர் கடிதம் எழுதினார்களாம்.
    * அடுத்து சிவாஜியுடன் சாவித்திரி நடித்த எல்லாம் உனக்காக படம் முதலில் ஓடவில்லையாம். பின்னர் தான் பார்க்க ஆரம்பித்தார்களாம்.
    கிளைமேக்ஸ் காட்சிதான் நம் நெஞ்சை பிழிந்துவிடும். அது குறித்து வசனகர்த்தா ஆருர்தாசும் சாவித்திரியும் கூறியது ............!
    ஆரூர்தாஸ்!
    சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப் பட்டினி. வழக்கமான நட்சத்திர தடபுடல், ஆமாம் சாமிகள், ஜால்ரா கூட்டம் அருகில் வர அனுமதியில்லை. சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?
    ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின் காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள்.
    ‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா? என தேம்பி தேம்பி அழுகிறார். கைவீசம்மா கைவீசு என சிவாஜி அவர்கள் பாட விம்மி விம்மி அழுதார்கள். தியேட்டரில் கேட்க வேண்டும்மா ?
    சாவித்திரி !
    அண்ணன் சிவாஜி கணேசனின் மேக் அப்பும் இதில் ஸ்பெஷலாக இருந்தது. மீசை, தாடி, கோட் இவைகளுடன் அவர் குலைந்து போய் வரும் கடைசிக் காட்சியில் யாரும் மனம் நெகிழாமல் இருக்க முடியாது. படத்தின் இறுதிக் காட்சியை எப்படி எடுத்து முடிக்கப் போகிறோம் என்று எல்லாரும் ஒரு சஸ்பென்ஸூடன் காத்துக் கொண்டிருந்தோம்.
    கடைசி நாள் படப்பிடிப்பு தயாராயிற்று. அதில் நான் இறந்து போவதாகவும் என் மீது மலர்களைத் தூவுவது போலவும் காட்சியை எடுக்க வேண்டும். செட்டில் அன்று யாருமே பேசவில்லை. ஊசி போட்டால் சத்தம் கேட்கும். அவ்வளவு அமைதி! லைட் பாய்ஸ் கூட வாய் திறக்காமல் நடந்து கொண்டனர். காபி தரும் வரும் பையன்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தார்கள். மேலேயிருந்து என் மீது மலர்களைப் போடுபவர்கள் அழுதவாறே தூவினார்கள்!
    நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ…
    வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ…
    வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ…
    தோல்வியுமில்லை ஆ…
    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்,
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே!





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •