-
29th March 2018, 06:56 AM
#2051
Senior Member
Devoted Hubber
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
86 வது வெற்றிச்சித்திரம்
இருவர் உள்ளம் வெளியான நாள் இன்று
இருவர் உள்ளம் 29 மார்ச் 1963
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th March 2018 06:56 AM
# ADS
Circuit advertisement
-
29th March 2018, 07:01 AM
#2052
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th March 2018, 07:02 AM
#2053
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th March 2018, 02:48 AM
#2054
Senior Member
Devoted Hubber
vaannnila
உங்களுக்குத் தெரியுமா?
டிஜிட்டல் கர்ணன் 2012 சாதனைகள்...
மார்ச் 16, 2012- ல் டிஜிட்டலில் திரையிடப்பட்ட...
நடிகர்திலகத்தின் கர்ணன் அதே வருடம் ஆகஸ்ட் 15 க்குள், 5 மாத காலத்தில், அதாவது 150 நாட்களுக்குள் மொத்தம் 304 அரங்குகளில் திரையிடப்பட்டு, இணைந்து 510 வாரங்கள் ஓடி, 5 கோடி ரூபாய்க்கும்மேல்
வசூலை வாரிக் குவித்தது.
அதாவது,
சென்னையில் திரையிடப்பட்ட 14 அரங்குகளில் இணைந்து 70 வாரங்களும்,
செங்கை மாவட்டத்தில் திரையிட்ட 25 அரங்குகளில் இணைந்து 36 வாரங்களும்,
வட ஆற்காட்டில் திரையிட்ட 25 அரங்குகளில்,
இணைந்து 49 வாரங்களும்,
தென்னாற்காடு, பாண்டி பகுதிகளில் 25 அரங்குகளில் இணைந்து 33 வாரங்களும்,
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையிட்ட 53 அரங்குகளில், இணைந்து 79 வாரங்களும்,
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் திரையிட்ட 38 அரங்குகளில் இணைந்து 61 வாரங்களும்,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 29 அரங்குகளில், இணைந்து 54 வாரங்களும்
மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் திரையிட்ட 39 அரங்குகளில் 53 வாரங்களும்,
சேலம், தருமபுரி மாவட்டங்களில் திரையிட்ட 47 அரங்குகளில் இணைந்து 66 வாரங்களும்,
பெங்களூர் மற்றும் கோலாரில் 8 அரங்குகளில் இணைந்து 9 வாரங்களும் ஓடி மகத்தான வசூல் சாதனைப் படைத்தது.
இது வெறும் 5 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையாகும். அதுவும் தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் நிழ்ந்த அதிசயம்.
நடிகர்திலகத்தை நடிப்பில் மட்டுமல்ல... இது போன்ற திரையுலகச் சாதனைகளையும் வென்று விடலாம் என்பது பகலில் தோன்றும் கனவு. கல்லில் நார் உறிக்கும் செயல்.
நடிகர்திலகம் நிஜத்தில் மட்டுமல்ல...
மின்பிம்பங்களிலும் அவரே ஒரிஜினல் கர்ணன்.
சிவாஜியும் சினிமாவும் ஒன்னு!
இதை அறியாதவன் வாயில் மண்ணு!!
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th March 2018, 02:54 AM
#2055
Senior Member
Devoted Hubber
கும்பகோணம் M.S.M. திரையரங்கில் 29/3/2018 முதல் தினசரி 4.காட்சிகள் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அர்களின் மாபெரும் வெற்றி படமான ராஜபார்ட் ரங்கதுரை வெற்றி நடை பொடுகிறார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th March 2018, 02:58 AM
#2056
Senior Member
Devoted Hubber
v.raikumar
வணங்காமுடி திரைப்படம் சிவாஜியின் வாழ்க்கையிலே மிக முக்கியமான படம் .அந்த படத்திற்கு சித்ரா தியேட்டரில் 80 அடி உயரத்திலே கட் அவுட் மிக பிரமாண்டமாக வைக்கபட்டிருந்தது .அதுவரை ஆசியாவிலே வைக்க பட்டிருந்த கட் அவுட் ல் உயரமான கட் அவுட் .ஏ கே வேலன் இயக்கத்தில் வெளியான அந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றது .அந்த படத்தின் 100 வது நாள் விழா கிரௌன் தியேட்டரில் நடந்த போது தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக அழைத்து செல்லபட்டார் .சிவாஜி மன்ற ரசிகர் மன்ற மாநாடு நடக்கிறதோ என்று பார்ப்பவர்கள் எண்ணுகின்ற அளவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வணங்காமுடி படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டார்கள் .சிவாஜிக்கு பின்னால் மிக பெரிய ரசிகர்கள் படை இருக்கிறது என்று உலகுக்கு உணர்த்திய விழாவாகவெற்றி விழா அமைந்தது .
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th March 2018, 03:00 AM
#2057
Senior Member
Devoted Hubber
vaannila
சென்னை வாழ் அய்யனின் அன்பு இதயங்களே...
ஒரு வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயார் ஆகுங்கள்....
ஏப்ரல் 13, 2018 முதல்....
சென்னை மகாலட்சுமி திரையரங்கில்...
தினசரி 3 காட்சிகள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th March 2018, 03:14 AM
#2058
Senior Member
Devoted Hubber
நாஞ்சில் இன்பா
.......................................
முட்டாளின் அரசியல்
----------------------------------
சிவாஜி எனும் கஞ்சன்
-------------------------------------
ஆளுமை கொண்ட தமிழர்...கள் அரசியவாதிகளால் பந்தாடப்படும் கலைதான் இன்றைய முட்டாளின் அரசியலில் இடம் பெறுகிறது .
மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு சிலை ஏன் ? குஜராத் காந்தியின் நிழலை சிவாஜி சிலை மறைக்கிறது என தேசிய கட்சி கூக்குரல் யிட்ட போது தமிழன் அமைதி காத்தான் .அவனுக்கு சிவாஜியை கஞ்சனாக அடையாளம் காட்டி வைத்திருந்தத்தார்கள் .
திராவிடமும் ,தேசியமும் எங்களுக்கு வேண்டாம் ,தமிழியம் போதும் என தமிழ் நாட்டில் இன்று பலர் மனதளவில் சொல்வதின் உள்ள அர்த்தம் என்ன என ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரியும் .
தமிழன் இந்த உலகின் முதல் குடி என்பதை வரலாறு பதிவு செய்து உள்ளது . அறிவுசார்பு விடயங்களில் தமிழன் உலகை ஆட்டிப்படைக்கும் சக்தியாக இன்றுவரை உள்ளான் .இது தேசியவாதிகளுக்கும்.திராவிடம் பேசுவோருக்கும் பிடிக்காத விடயம் .தமிழனை அழிக்க எந்த ஆயதத்தையும் இந்த கூட்டங்கள் எடுக்கும் .சிவாஜி தமிழின் ஆளுமையாக வளர்ந்தபோது ஜீரணிக்கமுடியாத திராவிடமும் .தேசியமும் சிவாஜிக்கு எதிராக எடுத்த ஆய்தம் கஞ்சன் .
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக இருந்த கக்கன் தேசிய கட்சியில் மந்திரியாக இருந்தார் .இன்றைய திராவிட , தேசிய தலைவர்களை போல மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் உக்தி கக்கனுக்கு தெரியவில்லை .பாவம் நேர்மையான அரசியல்வாதியாக கக்கன் வாழ்ந்து தொலைத்தார் .
கக்கனின் கடைசிகாலம் சோதனை காலமாக இருந்தது .நல்லவர்களை எந்த இறை முன்நின்று காத்து இருக்கிறது .கக்கனை காக்க, . தேசிய கட்சி கக்கனை தெரியாத கட்சிபோல நடந்து கொண்டது .அது அக் கட்சியின் பிறவி குணம் .
கக்கன் நிலை அறிந்த சிவாஜி ..மனதுக்குள் தனக்குத்தானே ஒரு கணக்கு போட்டு கொண்டார் , நிகழ்வில் ஒன்றில் தனக்கு கிடைத்த தங்க சங்கிலியை சிவாஜி ஏலம் இட்டார் சபையில் இருந்தோருக்கு அதிர்ச்சி .எதற்காக சிவாஜி தங்க சங்கிலியை ஏலம் இடுகிறார் ?...வியப்போடு பார்ததனர்..
சிவாஜி விழா நடைபெறுவதற்கு முன் விழா ஏற்பாட்டாளர்களிடம் நான் நடிக்கும் இந்த நாடகத்திற்கு எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் அதுப்போல என் சார்பு உடையவர்களுக்கும் நீங்கள் எதுவம் தர வேண்டாம் ..எனது நண்பர்கள் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கும் தங்க சங்கிலியைய் மேடையில் அன்பளிப்பாக தாருங்கள் என பணித்து இருந்தார் .
தங்க சங்கலி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது .அந்த பணத்தை சிவாஜி யாரிடமும் கொடுக்காமல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்குட்டு வேலோன் நடத்தி வந்த ஈரோடு நிதி நிறுவனத்தில் வைப்பு தொகையாக கக்கன் பெயரில் முதலீடு செய்தார் . அந்த முதலீடு பத்திரத்தை கக்கனிடம் கொடுத்தார். மாதம் மாதம் இப்பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து கக்கனின் செலவுகளை செய்ய செய்தார் .சத்தியமாக சிவாஜி இதை பத்திரிகளையில் முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்து வள்ளல் என்று தம்பட்டம் அடிக்கவில்லை ;
செய்த நலன்களை சுய விளம்பரம் செய்யாத சிவாஜி கஞ்சன்தான் ..அந்த தமிழனுக்கு மக்கள் பார்வையில் படும்படி சிலை வைத்தது தவறுதான் .தேசியமும் திராவிடமும் சேர்ந்து ஒரு தமிழனின் சிலையை கூண்டுக்குள் வைத்து விட்டது .
தமிழ் பிறப்புகள் அல்லாதவர்களின் பிறந்தநாள் கொண்டங்களுக்கு என்று கோடிகோடியாக செலவு செய்து மக்கள் வரி பணம் வீணடிக்கப்பட்டுவிட்டது .சமாதிகள் அலங்காரம் என்ற பெயரில் கோடிகள் ஒதுக்க பட்டு விட்டது . தமிழின் ஆளுமைகள் மட்டும் கேட்கநாதியின்றி கேலி செய்யப்படுகிறது .
காவேரி நதி நீர் பிரச்சனை ஈழ பிரசனனை , தமிழக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை .நெடுவாசல் போராட்டம் , தூத்துக்குடி காப்பர் ஆலை என தமிழன் எல்லா விடயத்திலும் வஞ்சிக்க பட்டு கொண்டு இருக்கிறான் .அதில் சிவாஜி சிலையும் அடக்கம் .
வாழ்க தேசியம் தமிழனை கொன்று வாழ்க தேசியம்
இன்பா
Last edited by sivaa; 30th March 2018 at 05:41 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th March 2018, 06:36 AM
#2059
Senior Member
Devoted Hubber
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
77 வது வெற்றிச்சித்திரம்
வளர்பிறை வெளியான நாள் இன்று
வளர்பிறை 30 மார்ச் 1962
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th March 2018, 06:52 AM
#2060
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks