Page 137 of 400 FirstFirst ... 3787127135136137138139147187237 ... LastLast
Results 1,361 to 1,370 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1361
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Abdul Razack

    நீயா?நானா? பகுதி.2. அதற்குமுன் சிறு முன்னோட்டம் ஒரு சம்பவத்தை நாம் கற்பனையில் எழுதுவதற்கு எல்லையே கிடையாது எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம் அதே போல் கடந்த காலங்களில் நடந்ததை எழுதுவதும் சிரமம் இல்லை சில சம்பவங்கள் மறந்து விட்டாலும் யாருக்கும் தெரியாது ஆனால் இரு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியின் சம்பவத்தை எழுதுவது மிகவும் சிரமம் காரணம் கிட்டதட்ட 100 நபர்கள் அங்கு இருந்தார்கள் இந்தபதிவை அவர்களால் யாரவது படித்து மிகை படுத்தி எழுதி இருக்கிறான் என்று சொன்னால் இந்த பதிவின் நோக்கமே தோற்று விடும் மேலும் நம் அன்பர்கள் சிலர் நாங்கள் தோல்வி அடைந்து வந்துவிட்டது போல் எங்களை கண்டித்தும் ஆறுதல் கூறியும் பதிவிடுகிறார்கள் அதற்க்காக நடந்த சம்பவங்களை இட்டு கட்டி எழுதி பாராட்டு வாங்குவதை விட உண்மையை எழுதி திட்டுவாங்குவதே மேல் சிவாஜியின் பாடல்களில் இரண்டு பாடல்களை நாம் கடைபிடித்தால் எந்த இடத்திலும் நாம் தயங்கி நிற்க மாட்டோம் முதல் பாடல் ,.....,உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசை பார்த்துக்க நல்லபடி,...,...........அடுத்த பாடல்,..உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது,இந்த இரண்டு பாடல்கள் தான்..சரி நிகழ்ச்சிக்கு செல்வோம் நீங்கள் முதன் முதலாக கேட்டு அடுத்து மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய பாடல் என்ன என்று எங்கள் பக்கம் திரும்பினார் கோபிநாத் நம் வரிசையில் நண்பர் ஒருவர் பாடலுக்கான விளக்கம் சொல்ல ஆரம்பிக்கும் போது நேரம் ஆகிறது பாடலை மட்டும் பாடினால் போதும் என்று எதிர் முகாமிற்கு கொடுத்த உரிமையை நமக்க பறித்தார் நாங்கள் எவ்வளவு கேட்டும் பாடல் மட்டுமே போதும் நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்று நமது ஆர்வத்தை குறைத்தார் காரணம் சொல்லாமல் எப்படி பாடமுடியும் நல்ல பாடல்கள் பாடினாலும் காரணம் இல்லாததால் அது எடுபடவில்லை பிறகு நாங்கள் எல்லாம் வற்புறுத்தி கேட்டபிறகு சுருக்கமாக சொல்லி பாடவும் என்றார் அது சமயம் நம் சமூகநலபேரவை சந்திரசேகர் அவர்கள் வசம் மைக் இருந்ததது அவர் விளக்கம் சொல்லி தில்லானமோகணம்பாள் படம் என்றதும் எங்களுக்கு ஆர்வம் குறைந்தது காரணம் அதில் சிவாஜிக்கு பாடல்களே இல்லையே இதை சற்று தாமதமாக புரிந்து கொண்டு அடுத்த சுற்றில் அருமையான பாடலை பாடி கைதட்டலும் பாராட்டும் பலமாக வாங்கினார் சந்திரசேகர் அவர்கள் இந்த நேரத்தில் என் சுயபுரானம் கொஞ்சம் தேவை படுகிறது போட்டியில் கலந்துகொள்வதற்கு நான் ரயில் பயணத்தில் இருக்கும் போது நம் அண்ணன் திரு ஜாஹிர் உசேன் அவர்களிடம் விபரம் சொல்லி சில பாடல் களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வையுங்கள் என்று கேட்டேன் அவரும் மிகவும் மகிழ்ச்சியாக சிரமம் பார்க்காமல் அருமையான 8 பாடல்களை அனுப்பிவைத்தார் அவருக்கு நன்றி சொல்லிபிரிக்க வேண்டாம் நம் குடும்பதேவைக்கு அவர் செய்தார் ஆனால் அந்த பாடல்கள் அனைத்தும் மற்றவர்கள் பாடிவிட்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியின் அம்சமே விளக்கத்துடன் ஒரு பாடல் என்றதால் நான் சிவாஜியின் ரசிகனாக ஆவதற்கு தூண்டுகோலாக இருந்த பாடல் அதன் காரணம் சொல்லலாம் என்று ஆர்வமுடன் இருந்தேன் அங்கே விளக்கம் அளிக்க மறுக்கபட்டதால் இங்கு பதிவிடுகிறேன் வருடம்1992 அந்த கட்டத்தில் எனக்கு ரஜினி விஜயகாந்த் இவர்கள் படம் பார்ப்பேன் காரணம் சண்டைகாட்சிகள் இருக்கும் என்பதால் என் வயது அப்போது19 சிவாஜி படம் பார்ப்பேன் என் பெற்றோர் இருவரும் சிவாஜி ரசிகர்கள் எனக்கு ஒரு பிடிப்பு இருக்காது அந்த காலகட்டத்தில் சிவாஜியின் நிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க அவர் ரசிகர்கள் என்னை அழைத்து போவார்கள் அப்போது நான் சென்னையில் என் மச்சானின் ஸ்டுடியோவில் வேலைகற்று வந்த காலம் சிவாஜியோடு அவர்களை வைத்து நிறைய போட்டோக்கள் எடுத்த நான் நானும் நின்று எடுப்பதற்கு பாக்யம் இல்லாதவனாக ஆகிவிட்டேன் இதை நினைத்து இன்றுவரை ஏன் என் உயிர் உள்ளவரையிலும் வருத்தபடுவேன் என்னை அழைத்து போனவர்கள்கூட நீயும் எடுத்துக்கப்பா என்பார்கள் அதற்கு நான் நான் உங்களை எடுத்துவிடுவேன் என்னை யார் எடுப்பார்கள் என்று கேட்பேன் காரணம் இன்றைய நிலைப்போல் அன்று போட்டோ எடுப்பதுஎளிமையானது இல்லை சரி தகவலுக்கு வருகிறேன் அந்த 1992 வருடகாலகட்டத்தில் ராமஜென்ம பூமி பாபர் மஸ்ஜுத் பிரச்சனை இந்தியாமுழுவதும் பரபரப்பாக இருந்தது நம் தமிழ்நாட்டில் அவ்வளவாக இல்லை காரணம் நாம் அனைவரும் தொப்புள்கொடிஉறவுகள் அது சமயத்தில் நன்றாக என்னிடம் பழகி கொண்டு என் பக்கத்துவீடு நண்பர்களும் எங்கள் நண்பர்கள் சிலருக்கும் மனகசப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டிகொண்டோம் இது எங்கள் வீட்டிற்கு தெரிந்து என் அம்மா என் நண்பர்களின் அம்மா ஐந்து பேர் சேர்ந்து எங்களை வேற்றுமை இல்லாமல் திட்டி கண்டித்து அட அறிவுகெட்டவன்களா நாம் எல்லாம் வேறு வேறு கிடையாது அனைவரும் ஒன்று தான் என்று சொல்லி அடுத்த அரைமணி நேரத்தில் டேப் ரிக்கார்டரில் பாரத விலாஸ் பாடலான இந்தியாநாடு என்வீடு இந்தியன் என்பது என்பேர் என்ற பாடலை போட்டுகாட்டியும் அடுத்த நாளே வீடீயோவில் அந்த படத்தை போட்டுகாட்டியும் எங்களை தெளிவான பாதைக்கு கொண்டு வந்தார்கள் இன்று அவர்கள் இல்லை நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் அதனால் எனக்கு இந்த பாடல்தான் தேசீயகீதம்,,...,....மன்னிக்கவும் தவிர்க்க முடியாத வேலைவந்து விட்டது இன்று மாலையில் பதிவிடுகிறேன்,



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1362
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Abdul Razack


    நீயா? நானா? பாகம் 2 தொடர்ச்சி ..,,,,,,......அந்த தேசஒற்றுமை பாட்டை நான் அமர்ந்து கூட கேட்கமாட்டேன் எழுந்து நின்று தான் கேட்பேன் அதையே கோபிநாத்திடமும் சொல்லி எழுந்து நின்று பாட அனுமதி கேட்டேன் சரி நின்று பாடுங்கள் என்று சொன்னார் நானும் எழுந்து விளக்கம் சொல்ல முயன்றேன் நேரம் இல்லை பாடமட்டும் செய்யுங்கள் நாங்கள் புரிந்து கொள்வோம் என்றவுடன் நான் பாடினேன் நல்லகைதட்டல் எதிர் அணியில் இருந்தும் கிடைத்தது தேசஒற்றுமை நல்ல பாடல் என்று சொல்லி விளக்கம் கேட்காமல் அடுத்தவரிடம் மைக் கொடுங்கள் என்றவுடன் நம் அருமை நண்பரும் இந்த நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொள்ள காரணமாக இருந்த நண்பர் ராம்குமார் மைக் வாங்கினார் இவருக்கு ஒரு பழக்கம் உண்டு சாமி கும்பிடும் அறைக்கு அழைத்துபோய் சாமி கும்பிடு என்றால் அங்கு மாட்டி இருக்கும் எல்லா படத்தையும் பார்ப்பார் அதில் முருகன் வினாயாகர் கிருஷ்ணர் என்று படங்கள் இருந்தாலும் நான் வணங்கும் தெய்வம் சிவாஜி படம் இல்லை அதனால் சாமி கும்பிட மாட்டேன் என்று சொல்லுவார் அந்தஅளவிற்கு சிவாஜியை பூஜிப்பவர் அவரும் விளக்கம் சொல்லி பாட முயன்றார் பாடல் மட்டும் என்று சொன்னவுடன் சிவாஜி தானேஅவருக்கு தெய்வம் அதனால் இதோ எந்தன் தெய்வம் என்றார் இந்த பாடல் ஏற்கனவே பாடிவிட்டீர்கள் அடுத்தவரிடம் மைக் என்ற உடன் கம்பீரமாக எழுந்தார் சேகர் பரசுராம் சார் எடுத்தவுடன் ஹைபீட்சில் நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்று எதிர் அணியை பார்த்து பாடினார் அவர்களுக்கு ஷாக் கோபிநாத்திற்கு அதிர்ச்சி இது நல்லபாடல்தான் ஆனால் அரசியல் வரும் என்று சொல்லி மேலும் பாடவிடாமல் செய்தார் நம் அணியில் இருந்த பெண்களும் நல்லபாடல்கள் பாடி அசத்தினர் நிகழ்ச்சி இப்படி நடக்கும் போது நம் பகுதிஇருக்கையில் 50to60 வயது இருக்கும் ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார் கோபிநாத் அவர்க்கு வணக்கம் வைத்து அழைத்தார் முதல் சுற்றிலே நம்மிடம் நல்லகுரல் வளம் உள்ளவர்கள் பாடல் வரிகளை மறந்து விடுவார்கள் வரிகள் ஞாபகம் உள்ளவர்களுக்கு ராகம் வரவில்லை நான் உள்பட இவை இரண்டுமே அருமையாக பெண்களுக்கு வந்தது ஆனால் சிவாஜி ஆண் அதனால் ஆண் குரலில் பாடல்கள் தான் வேண்டும் என்று சொல்லி அடுத்த சுற்று ஒரு பாடலை கேட்டவுடன் எழுந்து ஆட வேண்டும் கிட்டதட்ட குத்துபாட்டு அதுவும் எப்படி என்றால் பாடலின் முதல்வரி பாடாமல் நேராக சரணத்திற்கு போக வேண்டும் இது எப்படி என்றால் என்னடி ராக்கம்மா பாடலை முதல் வரியில் ஆரம்பிக்காமல் அஞ்சாறு ரூபாய்க்கு மணி மாலை என்று பாடவேண்டும் இதுதான் பாடலின் சரணம் என்பது குத்துபாட்டு என்ற உடன் எதிர் அணியினர் செம உற்சாகம் நம் அணியினர் சிறு தயக்கம் எதிர் அணியின் நாங்க புதுசா கட்டிகிட்ட ,..,நேத்து பூத்தாலே பட்டத்துராஜாவும் ஆடபிறந்தவளே என்று வரிசையாக பாடல் வந்தது மேலும் இந்த இடத்தில் தனிமனித புகழ் அதிகம் இருந்தது ஏழைக்கு பாடினார் உழைப்பாளிக்கு பாடினார் கஷ்டபட்டவர்களுக்கு பாடிபாடியே ஆட்சியை பிடித்தார் என்று கோபிநாத்தும் சேர்ந்து புகழ்ந்து நேரத்தை விரயமாக்கினார் என்மனதில் ஏற்பட்ட எண்ணம் ஏழை உழைப்பாளி கஷ்டபட்டவன் எல்லாம் இவர் ஆட்சிக்கு வந்தவுடன் டாட்டா பிர்லாவாக மாறினான என்று அடுத்து நம் அணியின் வசம் மைக் வந்தது இங்கும் கேட்டுகோடி உறுமி மேளம் என்னடி ராக்கம்மா கேட்டவரெல்லாம் பாடலாம் தேர்பாருக்க வந்து இருக்கும் சித்திரபெண்ணே என்று களைகட்டியது மைக் சந்திரசேகர் அவர்கள் வசம் வந்ததது நாங்கள் ஆவலுடன் இருந்தோம் அவர் அச்சம் என்று ஆரம்பித்தவுடன் எதிர் அணியில் உற்சாகம் பறந்தது எங்கள் அணியில் திகைப்பு என்ன சேம்சைடு கோலா? என்று அவர்க்கு பின்னால் இருந்த நான் அவரின் தோலை தொட்டு அண்ணே எம்ஜிஆரின் பாட்டு என்று மெதுவாக காதில் சொன்னேன் இவை எல்லாம் கனநேரம்தான் ஆனால் அவர் அடுத்த வார்த்தையில் அடித்தார் சூப்பர் சிக்ஸர்,..அடங்கட்டும் என்று அனைப்பேன் மெதுவாக இனி மிச்சம் மீதி இருந்தாலும் விலகும் மெதுவாக ஹேப்பி இன்று முதல் ஹேப்பி எங்கள் பக்கம் பயங்கரகைதட்டல் எதிர் டீமில் கீப்பரை மறைத்து சரியாக நம் பக்கம் கோல் போட்டு விட்டாரே என்ற முனுமுனுப்பு கேட்டது அடுத்து மைக் எங்கள் ஊர்காரர் சென்னையில் வசிக்கும் நண்பர் சண்முகசுந்தரம் அவர்களிடம் அவர்கொடுத்த விளக்கம் பக்தி பாடலிலே குத்து பாட்டை பாடியவர் எங்கள் திலகம் என்னபாடல் பொன்னும் பொருளும் மூட்டை கட்டி ......பார்த்த பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் என்று பட்டையைகிளப்பினார் அடுத்த நண்பர் சொர்க்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் நிற்கட்டுமே கைதட்டல் காதை பிளந்தது இன்னும் ஒருவர் முத்துக்கள்சிரிக்கும் நிலத்தில் பொன்மகள் வந்தாள் என்று தூள் கிளப்பினார் மைக் மாறி மாறி எனக்கு வராதா என்று ஏங்கினேன் எனக்கு அருகில்இருந்த சகோதரியிடம் வந்தது அவர் குலாம் காதர் சமையலிலே கறி கிடக்குது அது பத்மநாபர் ஐயர்வீட்டில் குழம்பில் மிதக்குது மேரியம்மா கேரியரில் என்று பின்னி பெடல் எடுத்தார் வேறொருவர் கல்யாண பொன்னு கடை பக்கம் போனா என்று போட்டுதாக்கினார் எதிர் அணி சிவாஜிக்கு இத்தனை குத்துபாட்டா வந்தவன்கள் லேசுபட்டவன்கள் கிடையாது முதல் ரவுண்டில் நம் கை ஓங்கியது இப்போது ஆட்டம் திசை மாறுகிறது என்று நினைக்க ஆரம்பித்தார்கள் இதில் சிறிய வருத்தம் கோபிநாத் அவர்களுக்கு சிவாஜியின் நாம் பாடிய நல்லபாடல்களே தெரியவில்லை என்ன படம் என்று நம்மிடமே அடிக்கடி கேட்பார் அடுத்து மைக் சென்றது மேலே இருக்கும் போட்டோவில் மஞ்சள் கலர் புடவை கட்டி அமர்ந்து இருக்கும் சகோதரியிடம் அரங்கில் திடீரென்று ஒரு பரபரப்பு டேப்ரிக்கார்டர் எங்கும் பாடுகிறதோ என்று காரணம் அந்த மஞ்சள்மகிமை அன்பே,,,,என்அன்பே,ஹா ஹாஹா என் அன்பே ஒன்னும் ஒன்னும் ரெண்டு உன்மேல் ஆசை உண்டு ரெண்டு மூனும் அஞ்சு என்னை நீயும் கொஞ்சு ..யாரடி நீ மோகினி என்று கிடைத்த பந்துகள் எல்லாம் சிக்ஸர் போர் என்று பறக்கவிட்டு சுமார் 10 நிமிடங்கள் அரங்கையே தன் கட்டுபாட்டில் வைத்து அமர்க்களபடுத்தினார் கோபிநாத் இருகைகளையும் சிவாஜி தட்டுவது போலே தட்டி ஆடினார் நாங்களும் அமர்ந்துகொண்டே அந்த ஸ்டலை பயன்படுத்தி ஆடி ஆர்பரித்தோம் ஒன்று மட்டும் சத்தியம் இவர் குரலுக்கு பொருத்தமாக நம் பக்கம் ஒரு ஆண் குரல் இருந்து இருந்தால் இந்த ரவுண்டிலே ஆட்டத்தை முடித்து போங்கய்யா போய் புள்ளைகளுக்கு தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடிங்கள் என்று அனுப்பி இருப்பார் இந்த மகிழ்ச்சியோடு இந்த சுற்று முடிந்து அடுத்து காதல் பாடல்கள் என்றார் ........தொடரும் ...,,,


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1363
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Abdul Razack

    நீயா? நானா? சிறு விளக்கம் மட்டும்,.,,,, இன்று முகநூல் வாட்ஸ்அப் சமூக வலைதளங்கள் அனைத்திலும் நாம் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் விபரங்கள் தான் பரபரப்பாக பேசிகொண்டு இருக்கிறார்கள் அங்கு நடந்த நிகழ்வுகளை
    நானும் எழுதுகிறேன் நிறைய நண்பர்கள் சகோதரிகள் பாராட்டுகிறார்கள் ஒரு உண்மையை நான் சொல்லிவிடுகிறேன் நான் சிவாஜி ரசிகன் என்று முழுமையாக மாறியபிறகு வெளியான சிவாஜியின் படம் தேவர் மகன் அதற்கு முன்பும் அவரின் படங்கள் பார்த்து உள்ளேன் ஒரு பார்வையாளனாக ரசிகன் என்று மாறிய பிறகு அவரின் பல... படங்களை தேடி தேடி பார்த்து இருக்கிறேன் எங்கள் ஊரிலிருத்து 62 கிலோமீட்டர் தஞ்சாவூர் அங்கு சென்றும் 1994 வருடங்கள் உத்தமன் தெய்வமகன் நீதி போன்ற படங்கள் பார்த்து உள்ளேன் நான் பிறப்பதற்கு முன்பே சிவாஜியின் தீவிர ரசிகர்கள் பலர் இந்த பகுதியில் தங்கள் நினைவுகளை அருமையாக பதிவிடுகிறார்கள் அதிலும் குறிப்பாக திரு முரளி ஸ்ரீனிவாஸ் சார் ,திரு வாசுதேவன் சார் திரு ஜாஹிர் உசேன்பாய் அவர்கள் திரு நாகராஜன் வெள்ளையங்கிரி சார் மதுரை சுந்தர் ராஜன் சார் இன்னும் பெயர் விடுபட்டுபோன ஜாம்பவான்களுக்கு மத்தியில் நான் முதல் வகுப்பு படிக்கும் மாணவன் மேலே குறிப்பிட்ட அத்தனை ஜாம்பவான்களின் பதிவுகளை படிக்கும்போது அதிக வியப்பாக இருக்கும் ஆனாலும் அடி மனதில்ஒரு வருத்தம் இருக்கும் (யாரும் தவறாக நினைக்க வேண்டாம்) என்ன வருத்தம் என்றால் இவ்வளவு பதிவுகள் படித்தாலும் அவை எல்லாம் பழையசம்பவங்கள் தானே புதிதாக எதுவும் நடந்து அதையாராவது பதிவிட மாட்டார்களா என்று ஏங்கினேன் அந்த நேரத்தில் தான் வாராது வந்த மாமணியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது மற்றவர்கள் எழுதுவதைவிட நாமே எழுதினால் என்ன என்ற முடிவோடுதான் இதில் நான் இறங்கினேன் நினைத்தது போலவே இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பாராட்டு எதிர்ப்பு விமர்சனம் என்று விறுவிறுப்பாக உள்ளது அதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது காரணம் நமது கம்பீரம் இன்றும் குறையவில்லை வேறு என்றும் குறையாது என்பதையும் தெரிந்நு கொணைடேன் எதைபற்றியும் சிந்திக்காமல் நாளை நீயா? நானா? பகுதியின் 3.ம் பாகம் எழுதிவிடுகிறேன்,,,,,நன்றி,,,




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1364
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram


    நாங்கள் கலந்து கொண்ட விஜய் டிவியின் நீயா நானா மீது கடும் விமர்சனங்களை நம நண்பர்கள் வைத்த வண்ணம் உள்ளனர்,
    நிகழ்ச்சியை பற்றி நண்பர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர்கள் செய்த அவசரப் பதிவு அதுதான் திசை திருப்பி விட்டு விட்டது,
    ஒரு புறம் அவைகள் இருக்கட்டும்
    நிகழ்ச்சியில் இடம் பிடித்த சுவாரஸ்யமான சம்பவங்களில் இருந்து
    எம்ஜிஆர் இன காதல் பாடல்களில் கூட அவரின் கொள்கையை வலியுறுத்துவார் என உயர்த்திப் பேசிய எதிரணியினருக...்கு சரியான பதிலைக் கொடுத்தார் எழுத்தாளர் நாஞ்சில் இன்பா அவர்கள்
    அதாவது காதல் பாடல்களிலும் கூட ஒரு கண்ணியத்தை கடைப் பிடித்தவர் நடிகர் திலகம் உதாரணமாக " நீரோடும் வைகையிலே" பாடல் வரிகளை மேற்கோள் காட்டியதும் கரவொலி பறந்தது,
    தொடர்ந்து எம்ஜிஆர் இன் ரசிகர்கள் பேசுகையில் உரிமைக் குரல் பாடலான " விழியே கதை எழுது" வை உதாரப் படுத்தி இந்த ஒரு பாடலுக்காக மட்டுமே படம் வெள்ளி விழா கண்டது இந்தப் பாடல் அளவிற்கு எந்தப் பாடலுக்கும் செட் அமைக்கவில்லை என்றனர்,
    இதற்கு பதிலளிக்கும் விதமாக நானும் கான் சாரும் ஒரு சேர முயன்றோம் அதாவது பின்னர் வந்த நடிகர் திலகத்தின் அந்தமான் காதலியின் ஜேசுதாஸ் பாடலே அந்தப் பாடலை முறியடித்து சாதனை படைத்தது "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா" இந்தப் பாடல் காட்சி தத்ரூபமாக அமைக்கப் பட்டிருக்கும், நடிகர் திலகம் பாடல்களுக்கு பிரமாண்டமான செட்கள் தேவையே இல்லை, அவரின் நடிப்பு மட்டுமே பிரதானம், மேலும் இன்றைய தலைமுறையினர் கூட நடிகர் திலகம் பாடல்கள் என்றால் வீடியோ விசூவல் மற்றும் ஆடியோவையும் விரும்புகிறார்கள், ஆனால் எம்ஜிஆர் பாடல்களைப் பொறுத்த அளவில் ஆடியோவை மட்டுமே விரும்புகிறார்கள் என்றதும் கோபிநாத்தும் கூட மைக்க வாங்கிச் சொல்லுங்க என்றார்
    எங்களின் இந்த இந்தப் பேச்சை பதிவு செய்ய மைக் எங்கள் கைகளுக்கு வரவே இல்லை, உரக்க சொன்னது பதிவு ஆகாமல் போனது துரதிருஷ்டவசமாகவே போனது,
    மேலும் கூட
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1365
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Jayasankar Jai




    உத்தம புத்திரன்.


    1978 ஆம் வருடம் தீபாவளிக்கு நான்
    சென்னையில் இல்லை.ஒரு விஷேச
    குடும்ப நிகழ்ச்சிக்காக உறவினர் கிராமத்திற்க்கு சென்று அங்கேயே
    தீபாவளி கொண்டாடுவது என்று முடிவு...
    செய்து ஊருக்கு வந்தாகி விட்டது.
    எணக்கு தீபாவளிக்கு சிவாஜி படம்
    பார்க்க முடியவில்லையே என்று கோபம்.
    யாருடனும் பேசாமல் தனித்து இருந்தேன்.
    உறவினர் அந்த ஊரில் இருந்த என் வயது
    பையன்களிடம் என்ன அறிமுகப்படுத்தினர்.
    அவர்களும் நான் சென்னையில் இருந்து வந்திருந்ததாலும் என்னுடைய நடை உடை
    பாவனைகளை பார்த்து என்னிடம் தயக்கத்துடனே பழகினர்.அப்போது காற்றில்
    பாடல் ஒலித்தது என்ன என்று கேட்டேன்.
    டூரிங் தியேட்டரில் படம் போடுவதற்க்கு முன்
    பாடல் போடுவார்கள் என்று கூறினர்.
    என்ன படம் என்றேன் உத்தம புத்திரன்
    என்றனர்.உடனே வீட்டில் சொல்லி விட்டு
    கிளம்பி விட்டோம் ஏற்க்கனவே சென்னையில் என் நண்பர்கள் அப்படத்தை
    பார்த்து விட்டு என் மனதில் ஆசையை
    ஏற்படுத்தி இருந்தனர். தீபாவளிக்கு
    சிவாஜி படம் பார்க்க போகிறோம் என்ற
    மகிழ்ச்சியுடன் இரட்டிப்பு சந்தோஷத்துடன்
    படம் பார்த்தேன். ஆஹா என்னபடம்
    என்ன ஸ்டைல் என்ன நடிப்பு இரு வேடங்கள்
    விக்ரமன் பார்த்திபன் என இரு கதாபாத்திரங்கள் வழக்கமான ராஜா ராணி
    கதை ஒருவர் நல்லவனாகவும் மற்றவர்
    தீயவனாகவும் வளரும் சூழ்நிலை.
    விக்கிரமனாக வரும் நடிகர் திலகம்
    ஸ்டைலாக பேசும் வசனங்கள் பெரும்
    கைதட்டல்பெற்றது. யார்டி நீ மோகினி
    பாடலுக்கு டூரிங் தியேட்டரே ஆடியது.
    விக்கிரமா நீ அவனை போல் இருக்கிறாய்
    என்று நம்பியார் சொன்னதும் இல்லை
    இல்லை அவன்தான் என்னை போல்
    இருக்கிறான் என்று ஸ்டைலாக சொல்லி
    கைதட்டலை அள்ளுவார். மாமா என்று
    அவர் நம்பியாரை அழைப்பதும் நளினமே.
    பார்திபன் மேல் பரிதாபம் வருவதும்
    விக்கிரமன் மேல் ஆத்திரம் வந்தாலும்
    அதை மீறி ஆசை வருவதும் சிவாஜியின்
    நடிப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
    அந்த ஊரில் ஒரு வாரம் இருந்த
    வரை நான் தினமும் படம் பார்க்க சென்று
    விடுவேன் அங்கிருந்து நண்பர்களுடன்.
    அதனாலேயே நான் பிரபலமாகி விட்டேன்
    அந்த ஊரில்.அந்த காலங்களும் அதன்
    நினைவுகளும் பசுமையானவை.
    என்றும் இதயத்தை விட்டு நீங்காதவை.
    அன்றும் இன்றும் என்றும் சிவாஜி
    அய்யா நினைவில்.
    See more



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1366
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Murali Srinivas

    1972 ஆகஸ்ட் - நடிகர் திலகம் நினைவலைகள்

    1972 ஆகஸ்ட். இன்றைக்கு சரியாக 45 ஆண்டுகளுக்கு முன்றைய காலம்.தமிழகத்தின் அரசியல் களத்தில் பரபரப்பான காட்சிகள் அரேங்கேறி கொண்டிருந்த நேரம் . மக்கள் மனதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பெருந்தலைவரின் வழிகாட்டுதலை அவர் தலைமையை மீண்டும் தமிழகம் ஏற்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.
    இப்படி சொல்வதற்கு காரணம் என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.
    அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் வன்முறையாளர்களால் 1971 ஜூலை மாதம் (23-ந் தேதி என்று நினைவு) உயிரிழந்தார் [அரசியல் பேச வேண்டிவரும் என்பதனால் அதற்கு உள்ளே செல்வதை தவிர்க்கிறேன்]. அவர் மரணம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருந்தது. 1972 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்த வெள்ளி விழா ஆண்டு. அதை கொண்டாடும் வகையில் 1972 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து என்று நினைவு. அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை சட்டமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் யார் மீதும் குற்றமில்லை என்ற வகையில்தான் அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் அந்த மாணவனின் உயிர் தியாகம் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பதும் உண்மை. நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.
    தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி மேலும் எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம். அதைப் பற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
    பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தவப்புதல்வன் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் திரைக்கு கொண்டு வருவதற்கு முக்தா ஸ்ரீநிவாசன் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை பற்றியும் வசந்த மாளிகையை பொறுத்தவரை அது நவம்பர் 4 தீபாவளியன்று வெளிவரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனபோது தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதற்கு முயற்சி எடுத்த முக்தா. VC சண்முகம் அவர்களிடம் பேசி ஆகஸ்ட் 26 அன்று வெளியிடுவதற்கு சம்மதம் வாங்கி விட்டார்.தர்மம் எங்கே வெளி வந்த ஜூலை 15 தொடங்கி 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.
    படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு அன்னை இல்லத்தில் வைத்தே மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. இறுதி ஊர்வலத்தின்போது பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,
    தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன, எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை. அந்த நிகழ்வுகளின் புகைப்படங்களை இணைத்துள்ளேன்.
    இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
    அன்புடன்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1367
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Abdul Razack

    நீயா? நானா? பாகம்.3....... இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபராப்பாகும் என்று பல அன்பர்கள் முகநூல் வாட்ஸ்அப் அலைபேசி வாயிலாக கேட்கிறார்கள் நானும் இது சம்பந்தமாக விஜய் TVயில் என்னை அழைத்த நண்பர்க்கு போன் செய்து கேட்டேன் அவர் நம்மை விட மிகதீவிர சிவாஜி ரசிகராக இருப்பார் போலே ! நாமெல்லாம் சிவாஜி படம் பார்ப்போம் அவர் பேசும் வசனங்கள் பேசுவோம் அதன்படி நடக்கமாட்டோம் ஆனால் இவரோ ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் நம்பியாரிடம் பணம் வாங்கும் போது சிவாஜி சொல்லுவார் எனக்கு நாக்கு ஒன்னு வாக்கும் ஒன்னுதான் என்று அதை இவர் அப்படியே பின்பற்றுகிறார் நான் கேட்கும் நேரம் எல்லாம் இரண்டுவாரத்தில் ஒளிபராப்பாகும் என்றுதான் சொல்லுகிறார் வேறு வாக்கு மாறாமல் ...சரி நிகழ்ச்சி காதல் பாடல்கள் என்று சொன்னவுடன் இரண்டு பக்கமும் மகிழ்ச்சியாக இருந்தது இருவரது சிறப்புகளையும் சொல்லுங்கள் என்று கோபிநாத் சொன்னார் அதுவரையிலும் யாரும் யாரையும் குறைவாக சொல்லாமல் நிகழ்ச்சி போய்கொண்டு இருந்தது இந்த இடத்தில் ஒரு ரசிகர்எம் ஜி ஆர் பாடலில் சோதனைமேல் சோதனை என்று பாடி நம்மை பயமுறுத்தமாட்டார் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பார் அடுத்து எங்கே நிம்மதி என்று புலம்பமாட்டார் உலகம் பிறந்தது எனக்காக என்பார் என்று அப்பட்டமாக சிவாஜி பாடல்களை குறைத்து சொன்னார் இதை கோபிநாத் கண்டிக்கவில்லை அந்த அணியில் உற்சாகம் நம் பக்கம் சிறிது கோபம் ,..அந்த ரசிகர் அடுத்து ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ என்று பாடமாட்டார் எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைபோலவே இருப்பான் என்றதுதான் தாமதம் நம் அணியிலிருந்து ஒரு குரல் புறப்பட்டது எனக்கு மகன் பிறந்தால் அவன் என்னைப்போல்தான் இருப்பான் அதைவிட்டு பக்கத்து வீட்டுக்காரன் எதிர் வீட்டுகாரன் போலா இருப்பான் குடும்பத்தில் பிரச்சனை வராதா? என்று கேட்டவுடன் நம் பக்கம் குபீர் சிரிப்பு எதிரில் அசட்டு சிரிப்பு கோபிநாத்துக்கோ குலுங்கி குலுங்கி சிரிப்பு அவர் போய் நீங்கள் சிவாஜியை குறைத்து மதிப்பிட்டால் அதலா பாதாளத்தில் மாட்டி கொள்வீர்கள் என்று மைக்கை வாங்கி அடுத்தவரிடம் கொடுத்தார் அவர் திறமையாக பேசினார் எம்ஜிஆர் நடிகன் என்பதற்கு முன்னால் ஒரு நல்ல ரசிகர் அவர் ரசிப்பதைதான் ரசிகனுக்கு கொடுப்பார் அதை அவன் ஏற்றுகொள்வான் ஒரு பாடல் ஆசிரியர் இசைஅமைப்பாளர் அவர்களிடம் இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்குவார் என்று எம்ஜிஆரின் ஆளுமை என்று சொன்னார் அது சமயம் என் மனதில் மின்னலாக இரண்டு விடயம் ஞாபகம் வந்ததது எம் ஜி ஆர் ரசிகர்கள் அடிக்கடி இன்றும் சொல்லுவார்கள் தலைவரிடம் ஓருவன் அனுசரனையாக போனால் அவனை வளர்த்து விட்டு அழகு பார்ப்பார் எதிர்த்தால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிடுவார் என்று சொல்லுவார் எனது பதிவுகளை எம்ஜிஆரின் ரசிகர்களும் படிக்கிறார்கள்அவர்களுக்கும் தெரியும் எதிர்த்து வளராமல் போன கவிஞர் ஆலங்குடி சோமு ஆம்...... சொர்க்கம் படத்தில் பொன் மகள் வந்தாள் என்றபாடலை எழுதியவர் அவரின் சொந்த ஊர் காரைக்குடியில் இருந்து சிவகங்கை போகும் வழியில் இருக்கும் ஆலங்குடி என்ற கிராமம் என் அத்தா(அப்பா)விற்கும் அது தான் சொந்தஊர் இன்று கூட எங்கள் உறவினர்களில் வயதானவர்கள் என்னையும் என் சகோதரர்களையும் ஆலங்குடியான் மகனாடா என்றுதான் கேட்பார்கள் என் அத்தாவும் ஆலங்குடி சோமுவும் சிறு வயதில் ஒன்றாக படித்த நண்பர்கள் என் சிறு வயதில் சோமு அவர்கள் எழுதிய கடிதம் எல்லாம் எங்களிடம் காட்டி உள்ளார் அந்த ஆலங்குடி சோமு ஒருகால் சற்று விந்தி விந்தி நடப்பவராம் அவர் எம்ஜிஆர் நடித்த புதியபூமியில் நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை என்ற பாடலை எழுதிகொண்டு இருக்கும் போது எம்ஜிஆர் அவரிடம் பாடலில் இந்த வரிகளையும் சேர்த்து கொள்ளுங்கள் என்றாராம் அதற்கு சோமு என் வேலை நான் சரியாக செய்கிறேன் அண்ணே என்றாம் அப்போ நான் சரியாக செய்யவில்லையா என்று எம்ஜிஆர் நினைத்துஅந்த கவிஞரை ஓரம் கட்டிவிட்டாராம் இதை ஆலங்குடி சோமு என் அத்தாவிடம் சொல்லி அதை எங்களிடம் சிறுவயதில் என் அத்தா சொல்லி இருக்கிறார் தவறோ சரியோ அந்த ஆளுமை எம் ஜி ஆரிடம் இருந்தது உண்மைதான் என்று பல சம்பவங்கள் நமக்கு ஞாபகபடுத்தும் இது போன்று நமக்கும் வந்துவிடக்கூடாது என்று கவிஞர்களும் இசைப்பவர்களும் அவரின் வார்த்தைகளை ஏற்றுகொண்டார்கள் இது போன்று எம்ஜிஆரின் சிறப்புகளை வேறு சிலரும் சொன்னபின்பு நம் பக்கம் மைக் வந்ததது முதலிலே நான் பதிவில் சொல்லி இருப்பேன் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது ஒரு பெண்மணி வந்தார்கள் என்று அவர்கள் செட்டிநாட்டு ஆச்சி சிவாஜியின் படங்களையும் ஏற்று நடித்த பாத்திரங்களையும் சொல்லசொல்ல அவ்வளவு அற்புதமாக இருந்தது அவர் சொன்னது சிவாஜி வெளி ஆள் இல்லை நம் குடும்ப உறவுமுறையில் என்னென்ன இருக்கிறது அப்பா,,அண்ணன்,தம்பி ,தாய்மாமன்,சித்தப்பா.பெரியப்பா,மச்சான் நண்பன் தாத்தா என்று பல உறவுமுறைகளே அவர் மூலமாகத்தான் பெருமை அடைந்தது அந்த உறவில் உள்ளவர்கள்கூட நாமும் அப்படி இருக்க வேண்டும் ஏங்கவைத்தது என்று மணிமணியாக வர்னித்தார் அது சமயம் எதிர் அணியினர் தங்களுக்குள்பேசிகொள்ளாமல் அந்த ஆட்சி அவர்களின் பேச்சையே உன்னிப்பாக கேட்டார்கள் இங்குதான் இருக்கிறது சிவாஜியின் வெற்றி அவரை பிடிக்காதவர்கள் கூட சில வினாடிகள் அவரின் படத்தை பார்த்தால் தங்களை மறந்துவிடுவார்கள் எம் ஜி ஆர் தன் ரசிகர்களுக்கு அவர்கள் விரும்பியதை கொடுத்து வெற்றிபெற்றார் ஆனால் சிவாஜி தான் கொடுப்பதை மக்களையும் ரசிகர்களையும் ஏற்றுக்கொள்ளவைத்து வெற்றி பெற்றார் யார் சிறந்தவர் என்பதை உங்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்,,,தொடர்ச்சியை இரவு பதிவிடுகிறேன் என் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரவேண்டும்,,,,.



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1368
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கலைக்கதிரவன் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    123 வது வெற்றிச்சித்திரம்


    எங்க ஊர் ராஜா வெளியான நாள் இன்று




    எங்க ஊர் ராஜா 21 அக்டோபர் 1968

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1369
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ‎Ghovi Veer‎





    ஒரு முறை இணை இயக்குனராகப் பல படங்களில் பணியாற்றிவர் என்னிடம் கூறினார். ஒவ்வொரு நடிகருக்கும் கேமரா கேரணம் என்று ஒன்று இருக்கும். அதை மாற்றி படம் எடுத்தால் அவர்கள் முகத்தைத் திரையில் பார்க்க முடியாது. ஆனால் சிவாஜி ஒருவருக்கு மட்டும்தான் எந்தக் கோணத்திலும் காமராவை வைத்து படமெடுக்க முடியும். எந்தக் கோணத்திலும் அவர் முகம் அழகாகவே இருக்கும். திரைப்படங்களுக்காகவே பிறந்த கலைவாணியின் செல்லக் குழந்தை சிவாஜி என்று கூறியதுடன் டைட் குளோஸப் எடுக்கு் போது முகம் மட்டும் காமெராவில் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும். வெளியே ரிலாக்ஸ்டாக காலை சர்வசாதாரணமாக ஆட்டிக் கொண்டிருப்பார். அந்தந்த உடல் பாகத்தை மட்டும் தேவைக்கேற்ப நடிக்க வைக்கும் வித்தகர் என்றும் கூறினார். அசுரப் பிறவி.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1370
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Abdul Razack‎

    நீயா? நானா? 3 ...

    தொடர்ச்சி

    அந்த ஆச்சிஅவர்கள் பேசி முடித்த பின் நண்பர் நாஞ்சில் இன்பா அவர்கள் சிறப்பாக பேசினார்கள் முக்கியமாக என் ஊர் குமரி மாவட்டம் அங்கு எங்கள் ஊரில் சிவாஜியை தவிர வேறு நடிகர்களுக்கு ரசிகர்களேஇல்லை என்று பலத்த கைதட்டலோடு பேசி முடித்தார் உடனே எதிர் அணியில் மைக் சென்று காதல் பாடல்கள் நல்லநல்ல பாடலாக பாடினார்கள் தொட்டால் பூ மலரும் .பச்சைக்கிளி முத்துச்சரம்,சந்திரரோதயம் ஒரு பெண்ணானதோ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்று இனிம...ையான பாடல்கள் அந்த மேடைபாடகர்கள் குரலில் இடம் பெற்றன அது சமயம் நம் அணியில் இருந்த மஞ்சள் சேலை சகோதரி நம் குழு ஆண்களை பார்த்து சார் சிவந்த மன் படத்தில் வரும் ஒரு ராஜா ராணியிடம் என்ற பாடலை நான் பாடுகிறேன் என்னோடு சேர்ந்து யாரவது ஆண் குரலில் பாடினால் நல்லா இருக்கும் யாராவது பாடுங்கள் சார் என்று பல முறை கேட்டார் நம்மில் யாரும் சரி என்று சொல்லவில்லை நான் உள்பட அங்கு பாட்டிற்கு விளக்கமும் கொடுத்தார்கள் அதில் ஒரு ரசிகர் ஆர்வகோளாறில் எம்ஜிஆரின் காதல் பாடல்கள் நமக்கு உணர்ச்சியை வரவழைத்து உச்சத்துக்கு கொண்டுபோகும் என்று பெருமை படுத்துவதாக நினைத்து சிறுமை படுத்தினார் அந்த பக்கம் இருந்தபெண்களே முகம் சுழித்தார்கள் அங்கு இருந்த மைக் இந்த பக்கம் வந்ததது இங்கும் அருமையான பாடல்கள் மயக்ம் என்ன இந்த மெளனம் என்ன பூ மாலையில் ஒர் மல்லிகை மதன மாளிகையில் மந்திரமாலைகளா நீரோடும் வைகயிலே நின்றாடும் மீனே பொன்னை விரும்பும் பூமிலே என்னை விரும்பும் ஒர்ருயிரே அமைதியான நதியினிலே ஓடும் .. .ஒரு சகோதரி நாளை இந்த வேளை பார்த்து ஒடிவா நிலா என்று பாடினார்கள் அதை கேட்டுகொண்டிருந்த கோபிநாத் நல்லபாடல்கள் பாடுகீறீர்கள் ஆனால் ராகம் வரவில்லை என்று கூறியவர் ஆண்டவன் கட்டளை அமைதியான நதி பாடலை இழுத்து பாடுங்கள் என்றார் தென்னை இளங்கீற்றினிலேலலலலலலலலலலலலால இவ்வளவு தூரம் யாரும் இழுக்கவில்லை பாடகர் TMS அவர்களே சொல்லுவார் நான் எம்ஜிஆர்க்கு மேலோட்டமாக பாடினால்தான் நல்ல இருக்கும் சிவாஜிக்கு அடி வயிற்றில் இருந்து பாடுவேன் அப்பதான் அவர் உடல்மொழிக்கு சரிவரும் என்று சொல்லி இருக்கிறார் அது புரியாமல் கோபிநாத் நம்மை பாடசொல்கிறாரே என்று மற்றவர்களும் நினைத்தார்கள் இப்படி தெரிந்து இருந்தால் அடுத்த வீட்டு பெண் படத்தில் தங்கவேலுக்கு TR ராமசந்திரன் பின்னால் இருந்து பாடுவார் அதேபோல் நாம் வாய் மட்டும் அசைத்து பின்னாடி யாரையும் பாட சொல்லலாமா என்று நினைத்தேன் நிகழ்ச்சி இப்படி போய் கொண்டு இருக்கும் போது கோபிநாத் இரண்டு பக்கமும் சிறந்த பாடல்கள்தான் வந்து இருக்கின்றன நீங்கள் இரு தரப்பினரும் ஏன் சண்டை போடுவது மாதிரி பேசிகொள்கிறீர்கள் அமைதியாக இருங்கள் நீங்கள் சண்டை போட்டாலும் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்று ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள் இன்று இருவருமே இறந்துவிட்டார்கள் அவர்கள் இருவரின் பாடலையும் மேடையில் ஒரே பாடகர் தான் பாடுகிறார்கள் என்று பேசிவிட்டு தற்போது பிரேக் உணவு இடைவேளை என்று புறப்பட்டார் நாங்களும் அரங்கில் இருந்து வெளியே வந்தோம்.......தொடரும்,






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •