Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Vasu Devan

    ஸ்டைல் என்றல் நம் 'சக்கரவர்த்தி' ஒருவரே
    ஸ்டைலில் எவருமே நடிகர் திலகத்திற்கு ஈடு, இணை கிடையாது. இயல்பான ஸ்டைலுக்கும், மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று தன்னைத்தானே அலட்டிக் கொள்ளும் ஸ்டைலுக்கும் தயவு செய்து யாரும் முடிச்சு போடாதீர்கள்.
    ஸ்டைல் என்பது நடிகர் திலகத்திற்கு தானாக வருவது. அவராக வரவழைத்துக் கொள்வது கிடையாது. ஸ்டைல் அவருடன் வாழ்ந்தது. அவருக்குள் இருந்து தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது. அவரது ஸ்டைலை செய்து பார்க்க அவர் மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு. மற்ற எவர் ...ஸ்டைலும் வெறும் வெற்று புஸ்வாணமே! ஸ்டைல் என்பது அலட்டலால் வருவது அல்ல. இயற்கையாக அது வரவேண்டும். அது அமைந்த ஒரே ஸ்டைல் சக்கரவர்த்தி நடிகர் திலகம் மட்டுமே. 'அதில் நான் சக்கரவர்த்தியடா' என்று தூள் கிளப்பி சொல்ல, பெருமைப்பட்டுக் கொள்ள அவருக்கு மட்டுமே உரிமை உண்டு.
    ஒன்றுமே வேண்டாம். எந்த ஸ்டைலும் வேண்டாம் அவருக்கு கோட் அணிவித்து சும்மா ஒரு பக்கம் அவரை நிற்க வைப்போம். மற்றவர்களுக்கு கோட் சூட் போட்டு விட்டு எதிரில் வரிசையாக நிற்க வைப்போம்.
    கூன் போட்டு, முதுகு வளைந்து, முருங்கைக்காய் கால்களுக்கும், புடலங்காய் உடம்புகளுக்கும் கோட் சூட் மாட்டியது போல எதிரில் நிற்பவர்களுக்கு மாட்டியிருப்பதை பார்த்து வருடம் முழுக்க நாம் எதிர் வரிசையில் நிற்பவர்களை பார்த்து தமாஷாக சிரித்துக் கொண்டிருக்கலாம் இதில் அவர் ஸ்டைலை மற்றவர் எங்கே நெருங்கிப் பார்ப்பது?
    அவர் அவர்தான். அவரைத் தவிர எவருக்கும் இயற்கையான ஸ்டைல் சுட்டுக் போட்டாலும் வராது. புகையைக் கூட ஸ்டைலாக வளைக்க அவரால் மட்டுமே முடியும்.
    ஜான் கென்னடி அழைப்பின் பேரில் நடிகர் திலகம் அமெரிக்க அரசின் சிறப்பு விருந்தினராக அங்கே சென்றிருந்த போது உலகப் பெருநடிகர் மார்லன் பிராண்டோ நடிகர் திலகத்திடம் ஒரு செய்தி சொன்னாராம்.
    'மிஸ்டர் சிவாஜி கணேசன்! உங்களை மிகச் சிறந்த நடிகர் என்கிறார்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உங்களை போல் என்னால் நிச்சயம் நடித்து விட முடியும். அது ஒன்றும் எனக்கு கஷ்டமில்லை...ஆனால் 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' படத்திலே மனைவி ஜக்கம்மாவிடம் கட்டபொம்மனாக நீங்கள் போருக்குப் புறப்படுமுன் வீர உரையாற்றி வாளை அதன் உறைக்குள் 'சர்ர்ரெக்' கென்று அதை பார்க்காமேலேயே செருகுவீர்களே! அதை செய்ய என்னால் முடியாது" என்று ஆச்சர்யத்துடன் சொன்னாராம்.
    அந்த ஒரு வாள் செருகும் ஸ்டைலுக்கு ஈடாகுமா?
    அவ்வளவு ஏன்? ஒரு லோ-கிளாஸ் ரவுடி கேரக்டர் 'பலே பாண்டியா' மருது வாயில் பீடியை சுழலவிடுவதை எடுத்துக் கொள்வோம். கைலியை சற்றே கால்களுக்கு மேல் உயர்த்தி பின் தொடைகளுக்கு மத்தியில் செருகி பீடியை வாயில் விளையாடவிட்டு ராதாவை முனகியபடியே திட்டிச் செல்வதை எவராவது நினைத்தாவது பார்க்க முடியுமா?


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •