Page 24 of 400 FirstFirst ... 1422232425263474124 ... LastLast
Results 231 to 240 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #231
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Ratha pasam 7


  2. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #232
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Ratha pasam 8


  5. #233
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிவா சார்,

    பாகம் 19 ஐ அம்சமாகத் துவங்கியதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


    'ஸ்டைல் சக்கரவர்த்தி' விஜயகுமார் (மீள்பதிவு... சில புதிய விளக்கங்களுடன்)




    "மிஸ்டர் மைனர்...ரொம்ப நாழியா நீங்க நிக்கிறீங்களே... உக்காருங்க"... என்று பழிவாங்கும் படலத்தை பக்காவாகத் தொடங்குமிடம்.....

    அதே போல நாற்காலியைத் தள்ளி மைனரின் தன்மானத்தைத் தவிடுபொடியாக்குமிடம்....

    "மிஸ்டர் மைனர்... என்னைத் தெரியுதா?" (கூலிங் கிளாசை கழற்றிவிட்டு) "தெரியல?" என்றபடி நொடிப்பொழுதில் கோட்டைக் கழற்றி, பின் ஷர்ட்டையும் கழற்றி, முதுகைத் திருப்பி முன் அடிபட்ட தழும்புகளைக் காட்டும் ஆவேசம்....

    "தெரியல...தெரியல"...என்று கேட்டபடியே ஷர்ட்டை சடுதி நேரத்தில் போட்டு பட்டன்களைப் போடாமல் அப்படியே பேன்ட்டுக்குள் செருகும் செம ஸ்டைல்...

    "சாப்பாட்டு ராமன்" என்றபடி கைகளை தடதடவெனக் கொட்டி "கதவை இழுத்துப் பூட்டு" என்று கட்டளையிட்டு கர்ஜிக்குமிடம்...

    "யாராவது இங்கிருந்து அசைஞ்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்" என்றபடி சென்று பிரம்பை எடுத்து (காமெராவின் லோ ஆங்கிளில்... நம்பியார் கீழே விழுந்தபடி பார்த்தால் எந்த ஆங்கிளில் தெரிவாரோ அந்த ஆங்கிளில்) வளைத்து, நம்பியாரை நோக்கி நான்கு ஸ்டெப்கள் படு ஸ்டைலாக நடந்து வந்து வந்து எட்டி உதைத்து விட்டு,

    "அன்னைக்கு சொன்னேனே ஞாபகம் இருக்கா?... ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்"....என்று சவுக்கை ஓங்கும் வேகம்...தான் முன்னம் ராமனாக நம்பியாரிடம் உதைபடும் அந்த குட்டி பிளாஷ்பேக்கிற்கு பிறகு ஓங்கின பிரம்பை மெதுவாகக் கீழே இறக்கி 'சடேலெ'ன உதறும் மின்னல் வேகம்....(அடாடடடா! என்ன ஒரு காட்சி! என்ன ஒரு வேகம்! என்ன ஒரு ஸ்டைல்!) அத்தனை மனக்குமுறல்களையும், கோபங்களையும், ஆத்திரங்களையும் அந்த ஒரு உதறலில் தீர்த்துக் கொள்வார்!

    நம்பியாரின் மேல் சூட்கேஸில் உள்ள பணத்தை வீசி அடிக்கும் போது 'எத்தனை லட்சம் வேணும்?' என்று கேட்பார். இந்தக் காட்சியை அப்படியே ஓடவிட்டு கண்ணை மூடிக் கொண்டு தலைவர் சொல்லும் அந்த வசனத்தைக் கேளுங்கள். சிங்கம் ஒன்று நேரில் பேசுவது போல அப்படி ஒரு கர்ஜனையாய் அது ஒலிக்கும்.

    'லட்சாதிபதியா வரணும்னு சொன்னே இல்லே! கோடீஸ்வரனா வந்திருக்கேன்...கூப்பிடு உன் தங்கையை' என்று கர்ஜித்துக் கொண்டே கையில் இருக்கும் பிரம்பால் வெகு நேர்த்தியாக நம்பியாரின் இடது மார்பில் பாய்ச்சி நிற்க வைப்பார். உலகில் உள்ள ஒவ்வொரு துரும்பும் இவர் சொல் கேட்கும். அவருக்கு அடங்கும். இந்தப் பிரம்பும் அப்படித்தான்.

    "கூப்பிடு உன் தங்கையை" என்று சொல்லி பதிலுக்குக் காத்திராமல் "தேவகி" என்றபடி மாடிப்படிக்கட்டுகளில் ஏறும் அசுர வேகம்... "தேவகி" என்று கூப்பிட்டபடியே தேவகியின் ரூமுக்குள் அவசர, ஆனால் ஆழமானதேடல்.(தேவகியின் பெட் அருகில் ஓடிப் போய் நிற்கும் போது ஸ்பீடைக் குறைக்க கால்களால் ஒரு அழகான பேலன்ஸ் பண்ணுவார்) பின் எதிர் ரூமிலும் தேடிவிட்டு ('தேவகி') என்று கூப்பிட்டபடி பிரம்பை விசிறியபடியே 'சட்'டென்று உடலை இடப்புறமாகத் திருப்புவார். காமெராவுக்குக் கட்டுப்படாத ஸ்பீடாக அது இருக்கும். அளித்திருக்கும் ஸ்டில்லைப் பாருங்கள். எப்படி இருக்கிறது?)



    'சரசர'வென படிக்கட்டுகளில் படுவேகமாக இறங்கிவரும் ஆர்ப்பாட்டம்...(அது என்ன ஸ்பீடா?... ஸ்பீடான்னு கேட்கிறேன். மனுஷன் கண்மூடி கண் திறப்பதகுள் கீழே இறங்கி வந்து விடுவார்)
    19 அல்லது 20 படிக்கட்டுகளில், அனாயாசமாக அவ்வளவு வேகத்தில், அதாவது ஆறே வினாடிகளில் இறங்கி வந்து விடுவார். இந்த ஸ்பீடில் வேறு எவரும் இறங்கி வரவே முடியாது...இயலாது..அவர் ஒருவரைத் தவிர. இறங்கும் வேகம் ஒருபுறம் இருக்கட்டும். இறங்கும் அழகு...ஸ்டைல் இருக்கிறதே அதை பற்றி வார்த்தைகளால் வடித்து விட இயலுமா?

    இன்னும் எப்படித்தான் எழுதுவது? எப்படித்தான் புகழ்வது? ஒன்றுமே தெரியவில்லை. புரியவில்லை. யானைத் தீனிக்கு சோளப்பொறிதான் போட முடிகிறது. தோண்டத் தோண்ட அதுபாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? படைத்த பிரம்மன் என் கடவுளைப் பற்றி எழுத இன்னும் பத்து கைகள் படைத்திருக்கக் கூடாதா?
    Last edited by vasudevan31355; 15th June 2017 at 12:04 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks sivaa thanked for this post
    Likes adiram liked this post
  7. #234
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    மூவாயிரம் முத்தான பதிவுகள் தந்த சிவா சாருக்கு நல்வாழ்த்துக்கள்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  8. Thanks sivaa thanked for this post
  9. #235
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Radhakrishnan Saijayaraman

    · 4 hrs

    சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் புதுவை ஒதியஞ்சாலை திடல் (இன்றைய அண்ணா திடல் ) நடிகர் திலகம் பேசவிருந்த பொதுக்கூட்டம் . திடல் நிரம்பி வழிகிறது . கூட்டம் தொடங்கியது . உடனே ஒரு மறைந்த தலைவர் பெயர் கூற விரும்பவில்லை , நடிகர் சிவாஜி வரவில்லை ,நடிகரை பார்க்க வந்தவர்கள் கிளம்பி செல்லலாம் என்று அறிவித்தார். ஒரு சில நிமிடங்களில் திடல் காலியாகிவிட்டது. . பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் அரண்டு போய் நின்றது இன்னும் என் கண்ணில்..
    சிவாஜி புதுவை வந்துவிட்டார். ஆனால் கடுமையான ஜுரம...் .அப்போது திலகம் இரவு பகல் பாராமல் படபிடிப்பில் கலந்து கொண்டிருந்த நேரம். கூட்டத்திற்கு செல்ல விரும்பியவரை நமது ரசிகர்களும் , திலக த்தின் மேல் பற்று கொண்ட கட்சி தலைவர்களும் நீங்கள் வரவேண்டாம் என்று தடுத்து விட்டனர். இது தெரியாத அந்த தலைவர்
    சிவாஜியை பார்க்க வந்தவர்கள் கிளம்பலாம் என்று கூறி கூட்டத்தை காலியாக்கி விட்டார்.
    நடிகர் திலகத்தின் பவர் என்ன என்பதை அன்றைய தலைவகர்ள் கண்கூடாக கண்டனர்..
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #236
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    https://www.facebook.com/trichy.srin...6004453175513/




    Trichy Srinivasan

    · Yesterday at 02:13 ·






    19. நான் வணங்கும் தெய்வம் :
    நேற்று 20வது படமாக ரங்கோன் ராதா வெளியிட்டேன். நேற்றே கூறினேன் அதற்கு முன்பாக வந்த இந்த நான் வணங்கும் தெய்வம் படத்தை 19 வதாக இன்று போடுவதாக, இப்போது போட்டுவிட்டேன் நண்பர்களே.
    இந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு மாறுபட்ட கதாபாத்திரம். அதாவது, திரு. நாகையா அவர்கள் டாக்டராக வருவார், அவர் ஒரு விஷப்பரீட்சை நடத்துவதற்காக அதாவது ஒரு ஆராய்ச்சிக்காக ஒரு மருந்தை மனித உடம்பில் செலுத்திப்பார்க்க சிவாஜியை பயன்படுத்துவார், அந்த மருந்தை செலுத்தியவுடன் சிவாஜியின் குண...ம், தோற்றங்கள் மாறும் , மிகவும் விபரீதமாகி இறுதியில் அவருக்கு மாற்று மருந்து கொடுத்து, நிலைமையை சீராக்குவதாக கதை. இந்தக் கதை அந்த காலத்திலேயே படமாக்கப்பட்டது, மிகவும் ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது. சிவாஜி என்ற மகா கலைஞர் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று, அனைத்தையும் விரைவிலேயே முடித்து சாதித்து விட்டார். இன்று கூட வரும் படங்கள் அனைத்தும் சிவாஜியின் பழைய படங்களின் கதைகளை தழுவாமல் வர சந்தப்பமே இல்லை. நீங்கள் எந்த படத்தை எடுத்துப் பார்த்தாலும் ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் சிவாஜியின் பழைய பட வாடை அடித்தே தீரும்.
    இப்படத்தில் நாகையா கதாபாத்திரம் கௌரவம். சிவாஜி மிக பெரிய நடிகர் அதே சமயம் எனக்கு நாகையா, எஸ்.வி.ரங்காராவ், எஸ். வி. சுப்பையா, டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா , நாகேஷ், போன்ற மிக பெரிய ஜாம்பாவான்களையும் மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் நாகையா அவர்கள் சிவாஜியின் அதிக படங்களில் மிக, மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரக் கூடியவர். இப்படம் மிகவும் ஒரு வித்தியாசமான படம் சிவாஜிக்கு. நன்றி
    திருச்சி எம்.சீனிவாசன்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #237
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    "காவியமா நெஞ்சில் ஓவியமா",
    " வண்ணத் தமிழ் பெண் ஒருத்தி கண்ணெதிரே வந்தாள் "
    இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்...
    " பாவை விளக்கு "

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #238
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    சமீபகாலமாக மதுரையில் சினிமா சம்பந்தப்பட்ட விழா எதுவுமே நடைபெற்றதில்லை, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படவிழாவினைத் தவிர...
    2013ல் கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றி விழா மதுரை மக்களே வியக்கும் அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா எந்த முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளாமலே காலை நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டது, திரையுலகினரை திரும்பி பாா்க்க செய்தது.
    அதற்கு பிறகு, தற்போது மீண்டும் நமது கலை தெய்வத்தின் மற்றொரு வெற்றி விழா. நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியம் ராஜபார்ட் ரங்கதுரை தொடர்ந்து 25வது நாள் கண்டது.
    மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள் சார்பில் மதுரை மீனாட்சி பாரடைஸ் திரையரங்கில் 25வது நாள் வெற்றிவிழாவினை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தென்சென்னை சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் ஜெயக்குமார் அவர்கள் மாபெரும் ஒத்துழைப்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ராஜபார்ட் ரங்கதுரை டிஜிட்டல் தயாரிப்பாளர். தியேட்டர் நடத்துபவர், பட விநியோகஸ்தர் ஆகியோருக்கு நினைவுப்பரிசையும் வழங்கினார். ஜெயக்குமார் அவர்களுக்கு நமது சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    25வது நாள் விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நான். பச்சைமணி, வெங்கடேஷ் போன்றோர் சில முன்னேற்பாடுகளை செய்ய தியேட்டரில் தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கூடி செய்து வந்தோம். விழாவினை முன்னிட்டு காலை முதல் ஒலிபெருக்கியில் நடிகர்திலகத்தின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
    மாலை 5 மணி முதல் ரசிகர்கள் தியேட்டரில் குவியத் தொடங்கினர். தொடர்ந்து 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை மாலை ரங்கதுரையை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் மதுரையை சேர்ந்த மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    மதியமே ராஜபாளையத்தை சேர்ந்த அருமை சகோதரர் திருப்பதி ராஜா அவர்களும், டிஜிட்டல் தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன், நாகர்கோவிலை சார்ந்த த.ஜெகன் ஆகியோர் வந்து விட்டனர். அவர்களும் தங்களது விழாவிற்கு தங்களது முழு ஒத்துழைப்பை கொடுத்தனர்.
    விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டார். கார்த்திகேயன் அவர்களுக்கு ஜெயக்குமார், பச்சை மணி, அவனியாபுரம் குப்புசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தினர். பின்னர் படத்திற்கு வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நினைவுப்பரிசினை கார்த்திகேயேன் அவர்கள் வழங்க பட தயாரிப்பாளர், தியேட்டர் நிர்வாகி மற்றும் விநியோகஸ்தருக்கு வழங்கினார்.
    தியேட்டருக்கு அருகில் வசிக்கு பொதுமக்கள் அனைவரும் இப்படி ஒரு விழாவினை தாங்கள் இதுவரை இந்த தியேட்டரில் பார்த்ததில்லை எனக் கூறி அனைவரும் குழந்தைகளுடன் தியேட்டர் வளாகத்திற்குள் வந்து விழாவினை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தியேட்டரைச் சேர்ந்தவர்களோ வியப்பில் ஆழ்ந்தனர். இவ்வளவுக்கும் விழா மிகவும் சிறியதாக தான் நடைபெற்றது. இதற்கே இப்படி என்றால் மக்கள்தலைவரின் மற்ற படவிழாவினை இவர்கள் பார்த்திருந்தால்....
    தியேட்டேருக்குள் நமது இதயங்கள் அனைவரும் இளைஞர்களாகவே மாறியிருந்தனர். மனது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் கோயிலுக்கு சென்றால் மன அமைதி ஏற்படும் என்பார்கள். ஆனால் நமது நடிகர்திலகத்தின் இதயங்களுக்கோ அவர் படம் ஓடும் தியேட்டரே கோவில் அவரே தெய்வம். தன் மனக்கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடித்து விட்டார் நம் கலைக் கடவுள்.
    ரசிர்களின் பேப்பர் மழையில் தியேட்டர் முழுவது பேப்பரால் மூழ்கியது. இன்றை ரசிகர்களுக்கு இந்த பேப்பர் மேட்டர் அவ்வளவாக தெரியாது. அதிலும் ரோஸ் என்பவர் ஜிகினா பேப்பராக போட அந்த பேப்பா் தியேட்டருக்குள்ளேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
    காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் கலகலத்து போய் விட்டனர். ஒருவர் நடிகர்திலகத்தை,எங்கள் தலைவரை மதித்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று கோசம் எழுப்பி காங்கிரஸ் கட்சி சிவாஜி அவர்களை மறந்ததை நினைவுகூர்ந்தார்.

    ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் ஆர்ப்பாட்ட ஆரவாரம் நிச்சயம் விண்ணிலிருக்கு நமது தலைவருக்கு கேட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. வெளியில் மக்கள் பேசிக்கொண்டது. சிவாஜி ரசிகர்கள் சிவாஜி ரசிகர்கள் தான் விழாவினை அமர்க்களப்படுத்தி விட்டார்கள் என் காதில் விழுந்தது.
    அடுத்த விழாவிற்கு தயாராவோம் எனக் கூறி அனைவரும் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினோம், நானும் தான்...
    படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் ரமேஷ்பாபு, சோமசுந்தரம் சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் ஜோதிபாஸ்கரன், சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சிவாஜி செல்வம், பழனிச்சாமி, பழனிக்குமார், சிவக்குமார், பத்மநாபன் கார்த்திகேயன், கே.கே.நகர் குமார், எம்.என்.குமார் மற்றும் அனைவருக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
    25வது நாள் வெற்றி விழாவின் புகைப்படங்கள் சில.....
    ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியத்தை டிஜிட்டலில் தயாரித்த பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திகயேன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிய போது....
    உடன் இருப்பவர்கள் இடமிருந்து வலம் ரமேஷ்பாபு, திருப்பதி ராஜா, மீனாட்சி பாரடைஸ் தியேட்டர் மணிகண்டன், ஆர்.எம்.எஸ் மாணிக்கம், ஜெயக்குமார, பழனிச்சாமி, ஜோதிபாஸ்கரன், கார்த்திகேயன், குமார், சிவாஜிகணேசன்.இன் சுந்தராஜன், பச்சைமணி, சோமசுந்தரம் ஆகியோர்.





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. #239
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வழங்கப்பட்ட நினைவுப் பரிசு.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #240
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் அவர்கள் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய போது... உடன் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் ரமேஷ்பாபு, தேனுார் சாமிக்காளை, தெப்பக்குளம் பால்பாண்டி, பச்சைமணி ஆகியோர்..

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •