-
17th April 2018, 10:20 PM
#11
Senior Member
Devoted Hubber
சிவாஜி பறக்கும் படை "
தமிழகத்தின் சிவாஜி ரசிகர்களே உங்களுக்குத் தெரியுமா? இப்படை எங்கிருந்தது என்று.
1988 ல் அய்யன் தமிழக முற்னேற்ற முண்ணனி ஆரம்பித்த பொழுதில் நெஞ்சுரம் கொண்ட 30 இளைஞர்களுக்கு மேல்,
மரணித்தாலும் மறக்க முடியாத அவர் பேர் சொல்ல வேண்டும்
என்ற எண்ணத்திலே ஆரம்பிக்கப்பட்ட ஒரு மன்றம் தான் "சிவாஜி பறக்கும் படை "....
ராஜ ராஜ சோழனுக்கு ஒரு தற்கொலைப்படை இருந்தது போல நாமும் நம் ராஜாதி ராஜ கணேசனுக்காக வாழ வேண்டும் என்ற அடங்காத காளைகளாய் தங்களை மாற்றிக் கொண்ட ஒரு கூட்டம் தான் அது.
அத்தனை பேரும் " வாழ்க சிவாஜி " என்று கையில் பச்சை குத்திக்கொண்டு அவருக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மன்றம் அது.இன்றும் கோவையில் அதை பெருமையாய் சொல்லிக்கொண்டுதான் வாழ்ந்து வருகின்றனர்.
சமூகத்தின் பார்வைகள் எப்படியெல்லாம் இருத்ததிருக்கும்? அதற்காகவெல்லாம் கலங்காத மன்றம் தான் அது.
அதில் சிறு வருத்தம் என்னவெனில் சிலர் கடந்த சில வருடங்களில் நடிகர்திலகத்தின் மரணத்திற்கு பின் காலமாகி விட்டனர்.
இது போல் நீவிர் கண்டதுண்டோ? கேட்டதுண்டோ?
courtesy senthilvel f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th April 2018 10:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks