-
31st July 2017, 02:18 AM
#11
Senior Member
Devoted Hubber
ramanathan kalyan
இதற்கு முன் பலமுறை பார்த்த படம் ரொம்ப நல்ல படம். ஆணால் நேற்று இரவு பார்த்தது முதல் இப்போது வரை சோகம் மீளவில்லை. நடிகர்திலகமும் நடிகையர்திலகமும் வெறும் மூன்றே மூன்று காட்சி தான் சேர்ந்து தோன்றுவார்கள். சாவித்திரி கொஞ்சம் அசந்தால் அண்ணனையே தூக்கி சாப்பிடும் அன்பான அரக்கி. ஆணால் இந்த படத்தில் SSR ம் பி(ந)டித்திருக்கிறார். சின்ன வயதில் திரையில் அண்ணனை பார்த்தால் பூ இறைப்பது கற்பூரம் காட்டுவது கைத்தட்டுவது காட்டுத்தனமாக ரசிப்பது ஒருவாரம் ஒருபடம் ஓடினால் நான்கு முறை இரவு காட்சி ...பார்ப்பது. . இப்படித்தான் எங்கள் சிவாஜி ரசனை. ஆணால் இந்த பகுதியில் ஆருயிரின் அன்பு இதயங்கள் தலைவனை பற்றி வரி வரி யாக வர்ணிக்கும் போது நான் ஏதோ கடைசி பெஞ்சு மக்கு மாணவனாக இருந்து விட்டோமோ என்று ஏங்குகிறேன். நான் சுவாசித்த என் தெய்வத்தை இனி புதிதாக வாசிக்கிறேன். ஒரு பத்துபடம் மட்டுமே பாக்கி உள்ளது என்ற இருமாப்பில் இருந்தேன். இல்லை இனிமேல் தான் பராசத்தி யில் இருந்து பிள்ளையார் சுழி போடனும்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st July 2017 02:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks