Page 77 of 400 FirstFirst ... 2767757677787987127177 ... LastLast
Results 761 to 770 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #761
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    ‎ramanathan kalyan

    இதற்கு முன் பலமுறை பார்த்த படம் ரொம்ப நல்ல படம். ஆணால் நேற்று இரவு பார்த்தது முதல் இப்போது வரை சோகம் மீளவில்லை. நடிகர்திலகமும் நடிகையர்திலகமும் வெறும் மூன்றே மூன்று காட்சி தான் சேர்ந்து தோன்றுவார்கள். சாவித்திரி கொஞ்சம் அசந்தால் அண்ணனையே தூக்கி சாப்பிடும் அன்பான அரக்கி. ஆணால் இந்த படத்தில் SSR ம் பி(ந)டித்திருக்கிறார். சின்ன வயதில் திரையில் அண்ணனை பார்த்தால் பூ இறைப்பது கற்பூரம் காட்டுவது கைத்தட்டுவது காட்டுத்தனமாக ரசிப்பது ஒருவாரம் ஒருபடம் ஓடினால் நான்கு முறை இரவு காட்சி ...பார்ப்பது. . இப்படித்தான் எங்கள் சிவாஜி ரசனை. ஆணால் இந்த பகுதியில் ஆருயிரின் அன்பு இதயங்கள் தலைவனை பற்றி வரி வரி யாக வர்ணிக்கும் போது நான் ஏதோ கடைசி பெஞ்சு மக்கு மாணவனாக இருந்து விட்டோமோ என்று ஏங்குகிறேன். நான் சுவாசித்த என் தெய்வத்தை இனி புதிதாக வாசிக்கிறேன். ஒரு பத்துபடம் மட்டுமே பாக்கி உள்ளது என்ற இருமாப்பில் இருந்தேன். இல்லை இனிமேல் தான் பராசத்தி யில் இருந்து பிள்ளையார் சுழி போடனும்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #762
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    தனது முதல்படத்தை வெள்ளி விழா படமாகக் கொடுத்ததுடன்,
    அதிக வெள்ளிவிழா படங்களை தமிழ் திரை உலகிற்கு கொடுத்த,
    வெள்ளிவிழா நாயகன்,

    தமிழ் திரை உலகின் விடி வெள்ளி
    திரைஉலக நாயகன் சிவாஜி கணேசன் அவர்களின்

    104 வது திரை காவியம்
    திருவிளையாடல்
    வெளிவந்து வசூலில் சாதனை படைத்த நாள் இன்று




    திருவிளையாடல் யூலை 31 1965















    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #763
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    தனது முதல்படத்தை வெள்ளி விழா படமாகக் கொடுத்ததுடன்,
    அதிக வெள்ளிவிழா படங்களை தமிழ் திரை உலகிற்கு கொடுத்த,
    வெள்ளிவிழா நாயகன்,

    தமிழ் திரை உலகின் விடி வெள்ளி
    திரைஉலக நாயகன் சிவாஜி கணேசன் அவர்களின்

    104 வது திரை காவியம்
    திருவிளையாடல்
    வெளிவந்து வசூலில் சாதனை படைத்த நாள் இன்று




    [/SIZE]
    [/COLOR]





    திருவிளையாடல்- 1965.

    சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.

    1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.

    திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)

    முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).

    இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)

    இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.

    உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.

    "இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
    ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
    இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
    ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
    சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
    சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
    அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
    ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
    ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
    ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
    ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
    சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).

    இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )

    நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

    கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

    இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.

    இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.

    முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.


    அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.

    அடுத்த episode love teasing பிரச்சினை.

    அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.

    இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.

    இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )

    முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.

    என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.


    சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.

    சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)

    குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).

    மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.

    அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.

    கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.

    நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?

    ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.


    இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  6. #764
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    natarajen pachaiappan



    "கல்வியா ? செல்வமா ? வீரமா ?"

    **************************************
    "சரஸ்வதி சபதம்" இது படமல்ல... வாழ்க்கையின் பாடம்...ஆம் இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ற படம்... எந்தகால சூழ்நிலைக்கும் பொறுத்தமான பாடம்...
    இது போன்ற அறிவுச் சொல்லும எத்தனையோ சிவாஜியின் இணையற்ற நடிப்பால் மக்களுக்கு அறிவுரை
    வழங்கிய படங்கள் 'நடிகர் திலகத்தை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
    அன்றைக்கு உச்ச கட்ட காட்சிக்கு தயாராக இருந்தது "சரஸ்வதி சபதம்"
    சிவாஜி அய்யாவை யானை மிதிக்கின்ற காட்சி... ஆனால் யானை மிதிக்க கூடாது. இது கதை...
    ஒரு சரிந்த மேடையில் கைகளை சங்கிலியால் பிணைத்து கட்டி படுக்க வைக்கபட்டிருக்கிறார் நடிகர் திலகம்.
    அப்போது யானை மிதிக்க வருவதற்கு வருகின்ற வேளை. சிவாஜி அய்யா பேச வேண்டிய அழகு தமிழ் வீர வசனம்...
    யானைக்கு பயந்தால் வசனம் மறந்து போய்விடும்.
    பயம் முகத்தை காட்டி கொடுத்து விடும்.
    அதெல்லாம் பராவாயில்லை டப் செய்யும் போது சமாளித்துக் கொள்ளலாம். யானை மிதிக்கும் போது
    உண்மையிலே சிவாஜியை மிதித்து விட்டால்... ஒரு மாபெரும் கலைஞனின் கதி இதுதானா ?
    ஆகவே இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அய்யா டூப் போட்டுக்கொள்ளலாம் என்று சிவாஜிஅய்யாவிடம்... சொல்ல அவர் ஒத்துக்கொள்ள மறுத்தார்.
    காட்சி இயல்பாய் அமையாது... "நானே டூப் இன்றி நடிக்கிறேன்" என்றார் அய்யன் சிவாஜி.
    யானை வந்தது... காலை மிதிக்க தூக்கியது கேமரா இயங்கிக் கொண்டேயிருந்தது. இயக்குனருக்கு
    முகம் இறுகியது... ஒவ்வொருவருக்கும் பதட்டமாயிருந்தது...
    பதட்டபடாதவர் ஒருவர் அங்கிருந்தார் என்று சொன்னால், அது அய்யன் சிவாஜி மட்டுமே...
    அவர் சிவாஜியாக இல்லை. பாத்திரத்தில் ஒன்றிணைந்திருந்தார். நில் என்றார்... யானை நின்றது. திரும்பிசெல் என்றார்... யானை திரும்பி சென்றது...
    எல்லாருக்கும் ஆச்சரியம். இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கு உயிர்வந்தது.
    அய்யனே... கணேசன்! அந்த கணேசன் என்ன செய்வான் அவரை...? அவரின் குரலில் மனிதர்கள் மட்டும் மயங்குவதில்லை.... விலங்குகளும் விதி விலக்கில்லை.
    சரி என்ன வசனங்களை நம் அய்யன் பேசினார் ?
    அதையும் கொஞ்சம் பார்ப்போமே...
    "அவிழ்த்து விடுங்கள் பட்டத்து யானையை... வில்லா ? எனது சொல்லா ? எதுவென்று பார்த்து விடுகிறேன்."
    (விநாயகர் அவருக்கு காட்சியளித்து
    ஆசிர்வதிக்கின்றார்)
    "விநாயகப் பெருமானே.... பிரணவத்தின் பீடமே...
    ஞானத்தின் பரம்பொருளே... வேண்டும் வரம் தரும்
    வேலவனின் தமையனே... வேத நாயகனின் தலைமகனே... என் அன்னை கொடுத்த கன்னித் தமிழால்... உன்னை வருக வருகவென வரவேற்கின்றேன்.
    வணக்கம் !
    எழுத பாரதத்திற்கு நீர் பிறவி எடுத்தது உண்மையானால்...
    அந்த மாபெரும் காவியம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக புலமைக்கு முதலிடம் கொடுத்து நீரே சுவடி எடுத்து.... எழுத்தாணியாய் உன் கொம்பை ஒடித்து... பாரதத்தை ஏட்டினிலே பதித்தது உண்மையானால்....
    ஆற்று நீரை கமண்டலத்தில் அடக்கி அகத்திய முனிவன் எடுத்துச் செல்கிறான் என்பதை அறிந்து.... காக்கை வடிவெடுத்து கமண்டலத்து நீரை கவிழ்த்து... அதன் காரணமாக காவேரி ஆறு பரந்து ஓடுவது உண்மையானால்...
    அன்னை தந்தையே உலகம் என்பது மற்றவருக்கு எடுத்துக்காட்ட... அவர்களையே வலம் வந்து நீரே ஞானப்பழம் பெற்றது உறுதியானால்...
    கல்வி கற்ற சான்றோர்கள் முதலில் உம்மை நினைத்து... உனக்கு காப்பு செய்யுள் இயற்றிய பின்பே... மற்றவைகளை எழுதுவது உறுதியானால்...
    தமிழ் மகளாம் வள்ளியை தம்பி முருகனுக்கு மணமுடிக்க... நீரே யானை வடிவில் வந்து நீரே திருமணத்தை நடத்திவைத்தது நிச்சயமானால்....
    ஞானத்தின் பீடத்திலே அமர்ந்து ஓம் என்ற பிரவணத்தின் வடிவத்தில் நீரே என்பது திண்ணமானால்...
    பாலும் தேனும் பாகும் பருப்பும் இவை நாலையும் தந்த தமிழ் மூதாட்டி ஔவைக்கு நீரே தங்க தமிழ் மூன்றையும் தந்தது சத்தியமானால்...
    நில் ! என் கல்வி மீது ஆணையிட்டு கூறுகிறேன். வந்த வழியே பின்னுக்கு செல் !"
    ( அய்யன் கணேசன் வசனத்தை கேட்டு ஆனை கணேசன் திரும்பாமலே பின்னுக்கு சென்றது)
    இன்றைய தினத்திலும் மெய் சிலிர்க்கும் காட்சிகளை இவரை தவிர வேறு ஒருவர் நிகழ்த்தி காட்ட முடியுமா? வீரம் என்பது அவருடன் பிறந்தது. விவேகம் என்பது
    அவர் மனதில் நிறைந்தது. ஆச்சரியமான நடிகர் மடுமல்ல, ஆச்சரியப்பட வைக்கும் தன்னிகரில்லா மாமனிதன்.
    வாழ்க அய்யன் சிவாஜி்!
    அன்புடன்....
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #765
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    Sekar Parasuram



    "மக்கள் செல்வாக்கு"

    கண் மூடித்தனமாக விவாதிக்கும் செய்தி சேனல் விவாதிகள் அறிந்து கொள்ள,
    எந்த விதத்திலும் குறைந்தவர் கிடையாது எங்கள் நடிகர் திலகம்,
    .................. வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் வித்தையை அறிந்து வைத்து இருந்தார்கள்,
    ... நடிகர்திலகத்துக்கு அமைந்த ரசிகர்கள் வாக்குச் சாவடிக்கு வருவதையே தவிர்த்து வந்தார்கள்
    இது தான் வரலாறு





    Last edited by sivaa; 31st July 2017 at 06:33 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #766
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    திரை உலக அதிசயம் செவேலியர்

    சிவாஜி கணேசனின் ஆகஸ்ட் மாத வெளியீடுகள்

    1) குங்குமம் 02 1963

    2)மன்னவன் வந்தானடி 02 1975

    3)மர்ம வீரன் 03 1956

    4)மக்கள ராஜ்ஜிய (கன்னடம்) 05 1960

    3)நிறைகுடம் 08 1969

    4)நான் வாழவைப்பேன் 10 1979

    5)ஜீவன தீராலு 12 1977

    6)சுமங்கலி 12 1983

    7)மூன்று தெய்வங்கள் 14 1971

    8)அக்கி புத்துரு (தெலுங்கு) 14 1987

    9)முதல் குரல் 14 1992

    10)சாரங்கதாரா 15 1958

    11)ராமன் எத்தகை ராமனடி 15 1970


    12)எழுதாத சட்டங்கள் 15 1984

    13)முதல் மரியாதை 15 1985

    14)மகா கவி காளிதாஸ் 19 1966

    15)ஒரு யாத்திரா மொழி (மலையாளம்) 19 1996

    16)மரகதம் 21 1959


    17)என் மகன் 21 1974

    18) மாடி வீட்டு ஏழை 22 1984

    19)மருதநாட்டு வீரன் 24 1961

    20)கூண்டுக்கிளி 26 1954

    21) தூக்குத் தூக்கி 26 1954

    22)மங்கையர் திலகம் 26 1955

    23)தவப்புதல்வன் 26 1972

    24)தாயே உனக்காக (கெளரவ தோற்றம்) 28 1966

    25)ஜல்லிக்கட்டு 28 1987

    26)கிருஷ்ணன் வந்தான் 28 1987

    27)என் ஆசை ராசாவே 28 1998
    Last edited by sivaa; 1st August 2017 at 07:52 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #767
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #768
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    vee yaar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #769
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    Sundar Rajan














    Sundar Rajan அன்பு இதயங்களே,
    வரும் ஞாயிறு 6.08.2017 அன்று திருச்சியில், திருச்சி சிவாஜி பிலிம்ஸ் கிளப் சார்பில் வழங்கப்படும் சிவாஜி விருதினைப் பெறும் நமது மக்கள்தலைவர் சிவாஜ...ி அவர்களின் புகழ்பாடும் அன்பு இதயங்கள் சுப்பு, ஆதவன் ரவி அவர்களை வாழ்த்துகிறேன்.
    சென்னையைச் சேர்ந்த சுப்பு அவர்கள்,
    சென்னையில் நமது நடிகர்திலகத்தின் திரையிடுவதில் இடைவெளி ஏற்பட்ட போது, தானே படத்தை வாங்கி திரையிட்டு, நடிகர்திலகத்தின் படங்கள் வசூலை வாரி குவிக்கும் என்று உணர்த்தியவர்.
    மேலும் திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பல மாவட்டங்களில் நமது நடிகர்திலகத்தின் படங்களை வெளியிட்டு நமது ரசிர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர்.
    சிவகங்கையைச் சேர்ந்த
    ஆதவன் ரவி அவர்கள், தனது கவித்திறமையால் நமது மக்கள்தலைவரின் புகழ் பாடி வருபவர்.
    நமது நடிகர்திலகத்தைப் பற்றி இவர் எழுதும் கவிதையை வாழ்த்த வார்த்தைகளே இல்லை.
    நடிகர்திலகத்தின் விழா எங்கு நடந்தாலும் அங்கு முதல் ஆளாக இருப்பவர் ஆதவன் ரவி அவர்கள். இவரை இனி சிவாஜி கவி என்றே அழைக்கலாம்.
    சிவாஜி விருது கொடுப்பதற்கு இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்த திருச்சி சிவாஜி பிலிம்ஸ் கிளப் - அண்ணாதுரை அவர்களுக்கு
    நமது சிவாஜிகணேசன்.இன் சார்பில்
    நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #770
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    Sundar Rajan



    அன்பு இதயங்களே,
    சினிமா 720 யூ டியூப் சேனலில் தலைவருடன் நான் நிகழ்ச்சியில் என்னுடைய பேட்டி வெளி வந்துள்ளது.
    எனக்கு தெரிந்த அளவிலும்,...
    நான் நேசித்த அளவிலும், பகிர்ந்துள்ளேன்.
    தவறேதும் இருப்பின் மன்னித்து விடுங்கள்.
    கடைக்கோடி ரசிகனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்த நான் வணங்கும் தெய்வம் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கும், சினமா 720 சேனலுக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
    இதயங்களே, வீடியோவைப் பார்த்து விட்டு தங்கள் கருத்தைக் கூறவும்.
    <iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/QC0dSkqVLoM" frameborder="0" allowfullscreen></iframe>











    SIVAJI GANESAN | தலைவனுடன் நான் | Cinema720
    Watch & Share.... Like & Comment #IAmWithUOviya To Promote Your Videos Contact : cinemaa720@gmail.com For Latest Hot Cine Updated Send "Hi" Whatsapp to +9190...
    youtube.com
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •