Page 99 of 400 FirstFirst ... 4989979899100101109149199 ... LastLast
Results 981 to 990 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #981
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    மகா கலைஞன் சிவாஜி கணேசன் - சிவகுமார் நெகிழ்ச்சி

    'திரையுலகின் தவப்புதல்வன்' நூல் அறிமுக விழா.



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #982
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Vikatan.

    தமிழ் ராக்கர்ஸுக்கு ராஜபார்ட் ரங்கதுரையின் தில் சவால்!

    நாற்பது வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான படம் `ராஜபார்ட் ரங்கதுரை'. இது, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மதுரை மீனாட்சி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி நூறு நாள்கள் ஓடியதை, சிவாஜி ரசிகர்கள் பிரமாண்ட விழாவாகக் கொண்டாடினார்கள்.

    இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பலதரப்பட்ட வேடங்களில் வெளுத்துவாங்கியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை உணர்ச்சிப்பிழம்பில் நெகிழவைத்துவிடுவார். சிவாஜி கணேசனின் திரையுலகப் பயணத்தை அலங்கரித்த வெள்ளிவிழா திரைப்படங்களில் `ராஜபார்ட் ரங்கதுரை'யும் ஒன்று. 100-வது நாள் விழாவில் சிறியவர் பெரியவர் பாகுபடின்றி, கலைத்தாயின் பிள்ளைகளான மதுரை மாவட்ட ரசிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது பெங்களூரு, சித்தூர், கொச்சின் என, தென்னிந்திய சிவாஜி ரசிகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டது விழாவின் மிகப்பெரிய ஹைலைட்!



    புதுமுக நடிகர்களாக, துணை நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு முதல் ரசிகர் மன்றம் உருவாக்கும் கலை ரசனையும் தாராள மனமும்கொண்டவர்கள் `மதுரை ரசிகர்கள்'. அதனால்தான் சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது, அதை மதுரையில் தொடங்குவதை சென்டிமென்டாகக் கொண்டிருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான மதுரை ரசிகர்கள், சமீபகாலமாக எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படத்தையும் ஒரு வாரத்துக்குமேல் பார்ப்பதில்லை. தரமில்லாத படங்களாக வருவது, திருட்டு சிடி, நெட்டில் டவுன்லோடு செய்து பார்ப்பது, டிக்கெட் விலை உயர்வு, அதிகமான திரையரங்குகளில் வெளியாவது போன்றவையே முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த நிலையில்தான் சிவாஜியின் சூப்பர் ஹிட் படமான `ராஜபார்ட் ரங்கதுரை', மதுரை மீனாட்சி பாரடைஸில் வெளியானது. வழக்கமாக, இதுபோன்ற பழைய படங்கள் மூன்று நாள்கள் அல்லது ஒருவாரம் வரைதான் ஓடும். ஆனால், `ராஜபார்ட் ரங்கதுரை'யோ கூட்டம் குறைவில்லாமல் ஓடத் தொடங்கியது. இந்தப் பகுதியில் நடுத்தர மக்கள், தினக்கூலி உழைப்பாளி மக்கள் பெருவாரியாக வாழும் நிலையில், இந்தப் படத்தை குடும்பத்துடன் காண வரத்தொடங்கினர். தினமும் மாலை மற்றும் இரவு என இரண்டு காட்சிகளாக ஐம்பது நாள் வரை ஓடியது. ஐம்பதாவது நாளன்று படம் பார்க்க வந்தவர்களுக்கு, பிரியாணி பொட்டலம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.



    அதையும் தாண்டி மக்களின் ஆதரவால் இன்று நூறாவது நாளைத் தொட்டது `ராஜபார்ட் ரங்கதுரை'. இதை பெரும் விழாவாகக் கொண்டாட நினைத்தனர் சிவாஜி ரசிகர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் மதுரையில் குவிந்தார்கள். சிவாஜி கட் அவுட்டுக்கு பிரமாண்ட மாலை அணிவித்தார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். தியேட்டர் வளாகத்தில் மேடை அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். வெடிகள் வெடித்து அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.

    சிவாஜி ரசிகர் அல்லாதவர்களும் அந்தப் படத்தின் கதைக்காக பார்க்க வந்ததாகக் கூறினார்கள். ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், இந்தப் படத்துடனான தங்கள் அனுபவங்களைக் கூறி ரசிகர்களை நெகிழவைத்தார்கள். ``இனி, சிவாஜியின் சிறந்த படங்கள் தங்கள் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப்படும்'' என்று மீனாட்சி பாரடைஸின் உரிமையாளர்கள் உறுதி அளித்தார்கள். சமீபகாலமாக மதுரையில் எந்த ஒரு முன்னணி நடிகர் படத்துக்கும் இப்படியோர் உணர்வுபூர்வமான விழாவைப் பார்த்ததில்லை என்று அசந்துபோய் கூறினர் பொதுமக்கள். `சிவாஜி' என்ற மகா நடிகனை அவர் மறைவுக்குப் பிறகும் கொண்டாடிவருகிறார்கள் மதுரை மக்கள்.

    படம் முடிந்து வெளியே வந்த ரசிகரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘இந்தப் படத்தைத்தான் ஏற்கெனவே பலமுறை பார்த்திருப்பீங்களே. திரும்பவும் தியேட்டர்ல வந்து பார்க்க என்ன காரணம்?’. ‘நடிகர் திலகம் படத்தை எத்தனை வாட்டினாலும் தியேட்டர்ல பார்க்கலாம்’ என்றார். ‘பழைய படத்தை எல்லாம் நெட்ல ரிலீஸ் பண்ணா, வீட்டுல இருந்தே பார்ப்பீங்களா’ என நாம் கேள்வியை முடிக்கும் முன்னரே, ‘‘மாட்டவே மாட்டேன். தமிழ் ராக்கர்ஸோ, ஜோக்கர்ஸோ... எத்தனை நெட்டு வந்தாலும், தலைவர் நடிப்பை எல்லாம் தியேட்டர்ல வந்து பார்க்குறதுதான் சுகம்’’ என கிளம்பினார்.

    அகண்ட திரையில் தன் ஆதர்ச நாயகனைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை பாகுபலி மட்டுமல்ல பாரசக்தியை இன்று ரீ ரிலீஸ் செய்தாலும் ஹவுஸ் ஃபுல் போர்டு தொங்கும்.

  4. #983
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Many happy returns of the day Rakesh. God Bless You
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #984
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    For information purpose only.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #985
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று(18/9/17) பகல் 12மணிக்கு மெகா டிவியில் இப்படத்தை கண்டுமகிழுங்கள்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #986
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Aathavan Ravi




    கடந்த 10.09.2017 அன்று மதுரையில் நிகழ்ந்து,
    தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த அய்யன்
    நடிகர் திலகத்தின் "ராஜபார்ட் ரங்கதுரை" திரைக்காவியத்தின் 100-ம் நாள் வெற்றி விழாவில் நானும் கலந்து கொண்ட பெருமை பெற்றேன்.
    நாவன்மை மிகக் கொண்டவர்கள் பல நூறு வல்லவர்கள் ஓரிடத்தில் கூடியிருக்கிற அந்த மகாசபையில் தப்பித் தவறி பேசுவதற்கு எனக்கொரு வாய்ப்புக் கிடைப்பின் பேசலாமென்று நான் ஒரு உரை தயாரித்துப் போயிருந்தேன். அங்கே பேசுவதற்கான வாய்ப்புக்
    கிட்டவில்லை.
    அந்த விழா முடியவில்லை.. அடுத்த ஞாயிறு வந்தும் அந்த மகாசபை கலையவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
    ஆகவே, நான் தயாரித்துப் போயிருந்த உரையை
    இந்த சபையில் தருகிறேன்.
    கேளுங்கள்.. விமர்சனம் தாருங்கள்!
    *******
    " வணக்கம்!
    ஆன்றோரும், சான்றோரும் நிரம்பித் ததும்பும் மாமதுரை. அங்கே அகன்று விரிந்ததொரு அருங்கலை காட்டும் வெள்ளித்திரை.
    அந்த அற்புத வெண்திரையில்... வெற்றியென்பது எத்தனை நீளமோ.. அதன் முடிவு வரை பார்த்து விடும் எங்களய்யன் நடிகர் திலகத்தின் ராஜபார்ட்
    ரங்கதுரை.
    இதயத்துக்கு நெருக்கமான இத்திரைப்படம் ஓடிய
    தினங்களோ ஒரு நூறு. இன்று படைக்குது வரலாறு.
    சாதனை வரலாறு படைத்திருக்கும் இக்காவியத்தின் வெற்றிவிழாவிற்கு வந்திருக்கும் அய்யனின் உயிர்கள் அத்தனைக்கும்
    ஆதவன் ரவியின் முதல் வணக்கம்!
    --------
    எங்கும் வெற்றித் தோரணங்கள்...
    எதிர்ப்படும் முகங்களில் பரவசங்கள்...
    அத்தனை மனதிலும் ஆனந்தம்...
    அதில் அய்யனைச் சுமக்கும் பேரின்பம்...
    காலங்கள் தாண்டி ஜெயிப்பதற்கு நடிகர் திலகத்தால் மட்டுமே முடிகிறது. சினிமாவுலகைக்
    கவ்விய இருட்டெல்லாம் எங்கள் சிவாஜியால்தான்
    விடிகிறது.
    இன்று ஓங்கியொலிக்கிற வாழ்த்துக் கோஷங்களுக்கு மத்தியிலே அபத்தக் குரல்களும் கேட்கின்றன.
    " படம் ஓடவில்லை... ஓட்டுகிறார்கள்" என்கிற அபத்தக் குரல்கள் கேட்கின்றன.
    ஆமாம். ஓட்டுகிறோம்.
    நடக்கவே வக்கில்லாத படங்களெல்லாம் நம்மைச்
    சூழும் கொடுமை மாற்ற, நடிகர் திலகத்தின் படத்தை நீண்ட காலம் ஓட்டுகிறோம்.
    சிவாஜி படமென்பது தெய்வம் வீற்றிருக்கும் தங்க ரதம். அதனை வெற்றிப் பாதையிலே விரைவாக
    ஓட்டுகிறோம்.
    தெய்வத்தின் தேரென்றாலும் தானாக ஓடாது.
    அதனாலே, பக்தர்கள் நாங்கள் பரவசமாய் ஓட்டுகிறோம்.
    அது புறம் பேசும் மடையருக்கும் அருள் வழங்கும்
    தெய்வத் தேர். பாவம்... அவர்களும் வாழட்டும் என்று கூட ஓட்டுகிறோம்.
    --------
    என் இனிய நண்பரொருவர் சமீபமாய் எழுதியிருந்தார்.. " இன்று நீங்கள் நடத்தும் பட விழாக்கள் நாளைய வரலாற்றில் இருக்கப் போவதில்லை.."- என்று. வேதனையாயிருந்தது.
    அந்த அன்பு நண்பர் அறியத் தருகிறேன்...
    வெறும் வெற்று விழாவல்ல.. இந்த வெற்றி விழா!
    அரசியலில் தூய்மை, சமூகப் பொறுப்புணர்வு, அடுத்தவரை உயர்த்தும் அருங்குணம், ஏசியோரையும், ஏச்சுக்களையும் மறக்கும் பெருங்குணம் என்று எல்லா உன்னதங்களும் வாய்க்கப் பெற்ற எங்களய்யன் நடிகர் திலகத்தை
    எல்லோரும் பார்க்கும் ஆச்சரியப் பார்வைக்கு
    ஆதாரமானவை... அய்யனின் திரைப்படங்களே!
    வேறு எவனுக்கும் வாய்க்காத தொலைநோக்குப்
    பார்வையோடு இந்த உலகத்தை அய்யன் பார்த்தது... சினிமா என்கிற ஞானக் கண் கொண்டுதான்.
    இது போன்ற வெற்றி விழாக்கள் நிச்சயமாய் நடக்க வேண்டும். எதிரிகள் வீசும் கேலி ஆயுதங்களை இந்த மாதிரியான வெற்றி விழாக்
    கேடயங்கள் கொண்டுதான் தடுக்க வேண்டும்.
    சும்மா.. ஏதோ ஒரு நாளில் .. எல்லோரும் கூட..
    ஏனோ தானோவென்று நடக்கிற விழாவல்ல இது.
    உருவம் அகற்றிச் சிரிப்பவர்களின் கர்வம் அகற்றக் கூடியவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.
    " ஆ.. ஊ" வெனக் கத்தி உணர்ச்சிவசப்படாமல் ஓர்
    அற வழியில்.. மன்றத்தின் பலம் காட்டும் எழுச்சி
    நிலையில்.. நாளை அண்ணலுக்கும், பெருந்தலைவருக்கும் ஊடே அய்யனை நிறுவும்
    திருநாளில்... அங்கே நிரம்பப் போகிறவர்களில்
    பாதிப்பேர் இங்கேதான் இருக்கிறார்கள்.
    இவர்கள் போதும்!
    இவர்கள் கர்ணனை ஓட்டுவார்கள்.
    பாசமலரை ஓட்டுவார்கள்.
    வசந்த மாளிகையை ஓட்டுவார்கள்.
    வீரபாண்டிய கட்டபொம்மனை ஓட்டுவார்கள்.
    சிவகாமியின் செல்வனை ஓட்டுவார்கள்.
    ராஜபார்ட் ரங்கதுரையை ஓட்டுவார்கள்.
    கூடவே... சிங்கத் தமிழனை மட்டப்படுத்தும்
    சிறுமதியாளர்களையும் ஓட்டுவார்கள்.
    அய்யன் நடிகர் திலகத்தின் சிறப்பான வளர்ப்பில்
    வந்தவர்கள் என்று காட்டுவார்கள்.
    ராஜபார்ட் ரங்கதுரையின் நூறாம் நாள் வெற்றி விழா போல் எண்ணற்ற விழாக்களை இந்த நாடு
    பார்க்கட்டும்.
    அய்யனுக்கு உழைத்து, உழைத்து காய்ப்பேறிப்
    போயிருக்கிற நம் திறமைக் கரங்கள் ஒற்றுமையாய்க் கோர்க்கட்டும்.
    இன்று நாம் கொண்டாடும் வெற்றிக்குக் காரணமாயிருக்கும் ஒவ்வொருவர் கரங்களையும்
    பற்றிக் கொண்டு...
    என் கண்களில் அவற்றை ஒற்றிக் கொண்டு...
    சிறப்புத் தந்த யாவருக்கும் சிவகங்கை மாவட்ட
    சிவாஜி மன்றத்தின் சார்பாக நன்றிகளைக்
    கூறிக் கொண்டு... விடை பெறுகிறேன்.
    என்றும் சிவாஜி புகழ் இருக்கும்!
    எங்கும் நமது கொடி பறக்கும்!
    நன்றி! வணக்கம்!






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #987
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vasudevan srirangarajan




    அமெரிக்காவில் உள்ள Georgia நகரில் உள்ள ஒரு உணவு விடுதியில் நடிகர் திலகத்தின் புகைப்படம்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #988
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    மும்பையில் தமிழ்ச் சங்கத்தில் செம்பை வைத்தியநாத பாகவதரை கெளரவிக்கிறார் நடிகர் திலகம்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #989
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Mathiyalagan Balasubramaniyam

    அன்பின் இனிய சகோதரர்களுக்கு வணக்கம், அன்பு நண்பர்களே நாற்பது வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான படம் `ராஜபார்ட் ரங்கதுரை'. இது, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மதுரை மீனாட்சி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி நூறு நாள்கள் ஓடியதை, சிவாஜி ரசிகர்கள் பிரமாண்ட விழாவாகக் கொண்டாடினார்கள்.
    இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பலதரப்பட்ட வேடங்களில் வெளுத்துவாங்கியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை உணர்ச்சிப்பிழம்பில் நெகிழவைத்துவிடுவார். சிவாஜி கணேசனின் திரையுலகப் பயணத்தை அலங்கரித்த வெள்ளிவிழா திரைப்படங்களில் `ராஜபார்ட் ரங்கதுரை'யும் ஒன்று. 100-வது நாள் விழாவில் சிறியவர் பெரியவர் பாகுபடின்றி, கலைத்தாயின் பிள்ளைகளான மதுரை மாவட்ட ரசிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது பெங்களூரு, சித்தூர், கொச்சின் என, தென்னிந்திய சிவாஜி ரசிகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டது விழாவின் மிகப்பெரிய ஹைலைட்!
    புதுமுக நடிகர்களாக, துணை நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு முதல் ரசிகர் மன்றம் உருவாக்கும் கலை ரசனையும் தாராள மனமும்கொண்டவர்கள் `மதுரை ரசிகர்கள்'. அதனால்தான் சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது, அதை மதுரையில் தொடங்குவதை சென்டிமென்டாகக் கொண்டிருக்கிறார்கள்.
    அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான மதுரை ரசிகர்கள், சமீபகாலமாக எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படத்தையும் ஒரு வாரத்துக்குமேல் பார்ப்பதில்லை. தரமில்லாத படங்களாக வருவது, திருட்டு சிடி, நெட்டில் டவுன்லோடு செய்து பார்ப்பது, டிக்கெட் விலை உயர்வு, அதிகமான திரையரங்குகளில் வெளியாவது போன்றவையே முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த நிலையில்தான் சிவாஜியின் சூப்பர் ஹிட் படமான `ராஜபார்ட் ரங்கதுரை', மதுரை மீனாட்சி பாரடைஸில் வெளியானது. வழக்கமாக, இதுபோன்ற பழைய படங்கள் மூன்று நாள்கள் அல்லது ஒருவாரம் வரைதான் ஓடும். ஆனால், `ராஜபார்ட் ரங்கதுரை'யோ கூட்டம் குறைவில்லாமல் ஓடத் தொடங்கியது. இந்தப் பகுதியில் நடுத்தர மக்கள், தினக்கூலி உழைப்பாளி மக்கள் பெருவாரியாக வாழும் நிலையில், இந்தப் படத்தை குடும்பத்துடன் காண வரத்தொடங்கினர். தினமும் மாலை மற்றும் இரவு என இரண்டு காட்சிகளாக ஐம்பது நாள் வரை ஓடியது. ஐம்பதாவது நாளன்று படம் பார்க்க வந்தவர்களுக்கு, பிரியாணி பொட்டலம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.
    ராஜபார்ட்
    அதையும் தாண்டி மக்களின் ஆதரவால் இன்று நூறாவது நாளைத் தொட்டது `ராஜபார்ட் ரங்கதுரை'. இதை பெரும் விழாவாகக் கொண்டாட நினைத்தனர் சிவாஜி ரசிகர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் மதுரையில் குவிந்தார்கள். சிவாஜி கட் அவுட்டுக்கு பிரமாண்ட மாலை அணிவித்தார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். தியேட்டர் வளாகத்தில் மேடை அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். வெடிகள் வெடித்து அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.
    சிவாஜி ரசிகர் அல்லாதவர்களும் அந்தப் படத்தின் கதைக்காக பார்க்க வந்ததாகக் கூறினார்கள். ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், இந்தப் படத்துடனான தங்கள் அனுபவங்களைக் கூறி ரசிகர்களை நெகிழவைத்தார்கள். ``இனி, சிவாஜியின் சிறந்த படங்கள் தங்கள் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப்படும்'' என்று மீனாட்சி பாரடைஸின் உரிமையாளர்கள் உறுதி அளித்தார்கள். சமீபகாலமாக மதுரையில் எந்த ஒரு முன்னணி நடிகர் படத்துக்கும் இப்படியோர் உணர்வுபூர்வமான விழாவைப் பார்த்ததில்லை என்று அசந்துபோய் கூறினர் பொதுமக்கள். `சிவாஜி' என்ற மகா நடிகனை அவர் மறைவுக்குப் பிறகும் கொண்டாடிவருகிறார்கள் மதுரை மக்கள்.
    படம் முடிந்து வெளியே வந்த ரசிகரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘இந்தப் படத்தைத்தான் ஏற்கெனவே பலமுறை பார்த்திருப்பீங்களே. திரும்பவும் தியேட்டர்ல வந்து பார்க்க என்ன காரணம்?’. ‘நடிகர் திலகம் படத்தை எத்தனை வாட்டினாலும் தியேட்டர்ல பார்க்கலாம்’ என்றார். ‘பழைய படத்தை எல்லாம் நெட்ல ரிலீஸ் பண்ணா, வீட்டுல இருந்தே பார்ப்பீங்களா’ என நாம் கேள்வியை முடிக்கும் முன்னரே, ‘‘மாட்டவே மாட்டேன். தமிழ் ராக்கர்ஸோ, ஜோக்கர்ஸோ... எத்தனை நெட்டு வந்தாலும், தலைவர் நடிப்பை எல்லாம் தியேட்டர்ல வந்து பார்க்குறதுதான் சுகம்’’ என கிளம்பினார்.
    அகண்ட திரையில் தன் ஆதர்ச நாயகனைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை பாகுபலி மட்டுமல்ல பராசக்தியை இன்று ரீ ரிலீஸ் செய்தாலும் ஹவுஸ் ஃபுல் போர்டு தொங்கும்.என்றென்றும் அன்பின் இனிய சகோதரன் பா.சு.மதியழகன்,பாலவாக்கம்.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #990
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Jahir Hussain





    மதுரை மாநகரில் ஒரு "சிவாஜி சினிமா" 100 நாட்களை கடந்து விட்டது,,, அதற்கு ஒரு இனிய விழா,, இளமாலை வேளையில் கொண்டாட்டங்கள் இருக்கப் போகிறது,,, இதற்கு முன் மதுரையில் சினிமா 100 நாள் ஓடியதில்லையா இதற்கு மட்டும் ஏனிந்த சிறப்பு? சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு சினிமா மதுரையில் 100 நாட்கள் ஓடி இருக்கிறது,, இதற்குமுன் சென்னையில் இதே போல கர்ணன் சிவாகாமியின் செல்வன் உள்ளிட்ட சில படங்கள் 100 நாட்களை கடந்து விழா கொண்டாடியது,, இதெல்லாம் படம் வெளிவந்து சுமார் அரை நூற்றாண்டு கழித்து திர...ையிடப்பட்டு வெற்றி பெறுகிறது,, தமிழர்களின் இன்றைய ரசனையை அப்போதே சிவாஜி சினிமாக்கள் எடை போட்டு இருக்கிறது என்பதே கூர்ந்து கவனிக்கத் தக்க விஷயம்,,, 25 ஆண்டுகளுக்கு முன் வீரபாண்டிய கட்டபொம்மன் படமும் மறுவெளியீட்டில் ஒரே திரையரங்கில் 50 நாட்களைக் கடந்தும் ஷிப்ட்டிங்கில் 100 நாட்களைக் கடந்தும் ஓடி இருக்கிறது என்பதை நினைவு கூர்கிறேன்,,, அதன் வசூல் விபரங்களும் வெளியிடப் பட்டதாக நினைவு,,, அந்த புள்ளி விபரங்களை நமது மதிப்பிற்குரிய நண்பர்கள் வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன்,,, இன்றைய திருவிழாவில் கலந்து மகிழ அடியேனும் செல்வதாக உத்தேசித்து உள்ளேன்,,, மனித இலக்கணம் எழுதிய ஒரு மஹானின் திருவிழா போலவே நான் கருதுகிறேன்,,, என் வயதையொத்த நண்பர்கள், என்னிலும் சில ஆண்டுகள் கூட, குறைவான வயதுடைய சகோதர சகோதரிகள், எங்கள் பிள்ளைகளை ஒத்த வயதுடைய இளைஞர்கள் என்று பலதரப்பட்ட மனித இனத்தை சந்திக்கும் "த்ரில்"லை அனுபவிக்கப் போகிறேன்,, ஒரு நடிகருக்கு அவரது படவிழாவுக்கு ஒரு ரசிகன் செல்வதாய் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது,,, அதையெல்லாம் கடந்து தமிழ்திரையில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய லட்சக் கணக்காண குடும்பங்களுக்கு வழிகாட்டியாக தனது சினிமாவில் பாடம் சொல்லிக் கொடுத்த பொறுப்புள்ள ஒரு குடும்பத் தலைவனை நினைவில் ஏந்தி செல்கிறோம்,, இன்னும் நிறையவே இருக்கிறது குறிப்புகள் எழுதுவதற்கு,,, இருப்பினும் இதை ரத்தினச் சுருக்கமாக பதிந்து மகிழ்கிறேன்,,,

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •