-
2nd June 2018, 05:27 AM
#11
Senior Member
Devoted Hubber
vee yaar
Digital Raja Emperor Raja III
ஆல்பர்ட் அளப்பரை 2 – தொடர்ச்சி..
20. நீ வரவேண்டும் பாடல் காட்சியில் குறிப்பாக உன் மனமும் குணமும் நாடகம் என்ற வரியின் போது வலது கையில் சூட்கேஸோடும் இடது கையில் ஜெயலலிதாவின் கரங்களைப் பற்றிக்கொண்டும் நடந்து வரும் காட்சி. அதகளம் தான்.
21. காவல் அதிகாரி சுந்தர்ராஜன் அனாவசியமாக ஃபிலிமை வேஸ்ட் பண்ணாதே என்று எச்சரிக்கும் போது லேசாக சிரித்தவாறே அவரைப் பார்த்து விட்டு தலையை அசைக்கும் இடம்.
22. சுந்தர ராஜன் வயர்லெஸ்ஸில் பேசி முடிக்கும் போது புன்னகைத்துக்கொண்டே, அவர் முடிக்கும் போது இடது கையால் Thank you Sir என்று கையை உயர்த்தி சொல்லும் இடம்
23. பாலாஜி விசாரணை செய்யும் காட்சியில் ராஜா தி கிரேட் என்னும் இடம். திரையரங்கமே அதிரும் அளவிற்கு கரகோஷம்
24. எப்படி தப்பித்தேன் என்று விவரித்துக் கொண்டே திடீரென ரந்தாவா பாலாஜி என அனைவரையும் ஒரு நொடியில் பந்தாடும் லாவகம்.
25. இதென்ன இன்னும் போகப் போகப் பாரு என்று சொல்லும் போது
26. ரந்தாவாவிடம் பாலாஜி அடி வாங்கி விழுந்தவுடன் அவன் தப்பித்து ஓட எத்தனிக்கும் போது வாசலில் நிற்கும் போஸிலிருந்து அந்த சண்டைக் காட்சி முடியும் வரை.. ஒவ்வொரு சின்னச் சின்ன நுணுக்கமான உடலசைவிற்கும் கரகோஷம்.. சோஃபாவிலிருந்து கீழே குதிக்கும் போது வலது காலை சற்றே நீட்டி பின் மீண்டும் ஒரு ஜெர்க்குடன் பேலன்ஸ் செய்யும் Body language
27. பேடா நீ எனக்கு குடுத்ததை நான் உனக்கு திருப்பிக் கொடுக்கவேணாம், என்ற வசனம் பேசும் போது
28. முதல் பஞ்ச் ரந்தாவிற்கு கொடுத்தவுடன் கை விரல்களை ஊதிவிட்டுக் கொண்டு எக்ஸ்யூஸ் மீ மேம் என்னும் போது.
29. தன்னை விட பலசாலியுடன் மோதும் போது உடல் பலம் மட்டும் போதாது புத்திப்பிரயோகமும் வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு தன் வழிமுறையை அமைத்துக்கொள்வது. குறிப்பாக ரந்தாவாவின் இரண்டு கைகளையும் வளைத்துப் பிடித்து முறுக்கிப் பிடித்து அந்த பிடிமானத்தையே தனக்கு பலமாக மாற்றி ஒரு எகிறு எகிறி தன் காலால் அவன் மார்பில் உதைத்து தள்ளி விடும் இடம்.
30. மீண்டும் எகிறு எகிறி அவனை காலால் உதைத்து விட்டு தான் விழும் போது அதே வேகத்தில் எழுந்து கால்களை பேலன்ஸ் செய்யும் போது
31. கே.கண்ணனுக்கு பெட்டியை திறந்து காட்டும் போது அவன் லபக்கென்று அந்த பணத்தை எடுக்க எத்தனிக்கும் போது இடது கையால் ஒரு வெட்டு வெட்டி அவனைப் புறந்தள்ளும் ஸ்டைல்.
32. கல்யாண பொண்ணு பாட்டு முழுதுமே ஆங்காங்கே. குறிப்பாக பாட்டின் துவக்கத்தில் அவளை ஒரு செமி சர்க்கிள் வடிவத்தில் இடமிருந்து வலமாக ஆடிக்கொண்டே வலம் வருவது.
33. பாட்டின் ஆரம்பத்தில் பல்லவி முடிந்த வுடனே இரு கைகளையும் அகல நீட்டிக்கொண்டே பேலன்ஸ் செய்து ஒரு குறுகலான Parapet சுவற்றின் மேல் கால்களை பேலன்ஸ் செய்து கொண்டே ஸ்டைலாக ஆடுவது.
34. பாட்டின் முடிவுக் கட்டத்தில் பல்லவியைப் பாடிக்கொண்டே அவள் பின்னால் துள்ளிக்குதித்து ஓடும் இடம்.
35. போட்டில் சரணம் முடிந்து நீ ஆடி ஆடி போகும் வேகம் வரியின் போது சுற்றிக்கொண்டே ஆடுவது.
36. பாட்டின் முடிவில் லால்லா லலல்லா பாடும் போது இரு கைகளையும் வீசியவாறே ஆடும் ஸ்டைல்.
37. கங்கையிலே ஓடமில்லையோ பாட்டின் முடிவில் நிறுத்துங்க எல்லோரையும் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்லியவாறே போலீஸ் வேஷத்தில் நுழையும் இடம்
38. இரண்டில் ஒன்று பாட்டின் துவக்கத்தின் போது அந்த காஸ்ட்யூமின் காம்பினேஷனும் ஸ்டைலும் பெற்ற வரவேற்பையும் கரகோஷத்தையும் எழுத்தில் எழுதி மாளாது
39. பாட்டில் ஒரு கட்டத்தில் வீட்டுக்குள்ளேயே வந்து விடும் ராஜா எல்லா கதவையும் சாத்திவிட்ட பின் வேறு வழியில்லாமல் அவள் கட்டிலுக்கு போகும் போது கதவை ஒட்டி இரு கால்களையும் Stand at Ease Positionல் வைத்துக் கொண்டு கைகளை கட்டிக்கொண்டு அட்டகாசமான ஸ்டைலில் நிற்கும் இடம்.
40. மெத்தை போடும் தேவன் என்று என்னைச் சொல்லம்மா வரியின் போது வலது காலை பின் புறம் மடக்கி பின் அதே போல் இடது காலை பின்புறம் மடக்கி கைகளை மார்பின் குறுக்கே வைத்து பாட்டின் தாளத்திற்கேற்ப நடையை அளந்து வரும் ஸ்டைல்.. ULTIMATE ஸ்டைல் இது தான் இதற்கு மேல் பூலோகத்தில் என்ன வேண்டும் என்று ஆணித்தரமாக நிரூபித்து சவால் விடும் இடம்.
41. பாட்டு முடியும் போது இரண்டில் ஒன்று பல்லவி ஒலிக்க அவளைக் கட்டிப்பிடித்தவாறே கண்களை லேசாக உயர்த்தி மூடியவாறே செம்மையான புன்னகை ஒன்றை சிந்தும் இடம்
42. பாலாஜியுடனான சண்டையில் வாங்கிக்கோ லெஃப்ட் என குத்து விடும் ஸ்டைல். தாவி வந்து இரு கைகளையும் பரந்த விரித்தவாறே நின்று கொண்டு பின் வலது கையால் கம் ஆன் என்று பாலாஜியை அழைக்கும் இடம்.
43. பின் அப்படியே மனம் உருகி சந்தர் என அண்ணனை அழைக்கும் இடம்
44. இதற்குப் பிறகு தாயாரை விஸ்வம் அழைத்து வந்து கொடுமைப்படுத்தும் இடம். விஸ்வம் தாயாருக்கு இழைக்கும் சித்ரவதையைத் தாங்க முடியாமல் சங்கர் துடிக்கும் போது ராஜா மிகவும் சிரமப்பட்டு அதை சமாளிக்கும் இடம். மன வலியைத் தாங்கிக்கொண்டு சிரித்தவாறே சமாளிக்கும் இடம். உலகத்தில் உள்ள அத்தனை நடிகர்களுக்கும் ஒரு இலக்கணம் இந்த காட்சி.
45. இறுதியாக மணமேடையில் வேஷ்டி சட்டையில் அட்டகாசமாக தோன்றும் இடம்.
உலகத்தில் இப்படி காட்சிகள் தோறும் கைதட்டலும் புகழ் கோஷமும் உணர்ச்சி மேலிடலும் எந்த ஒரு நடிகனுக்கும் நிச்சயம் கிட்டாது.
தலைவர் படத்தில் சொல்வது போல் ராஜான்னா ராஜா தான்.
இவ்வளவு பெரிய அளப்பரையை மிஸ் பண்ணிட்டோமே என்று இப்போது தங்களில் பலருக்கும் நிச்சயம் தோன்றும்.
இதோ உங்களுக்காக அந்த வாய்ப்பு. எதிர்வரும் ஜூன் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆல்பர்ட் திரையரங்கில் மாலைக்காட்சி ரசிகர் காட்சியாக மலர இருக்கிறது. இந்த வாய்ப்பினைப் பயன் படுத்திக்கொண்டு இதை விட இன்னும் அட்டகாசமான அளப்பரையோடு கொண்டாடுங்கள்.
மறக்காதீர்கள். ஞாயிறு 03.06.2018மாலை 6.30 மணி. காட்சி. சென்னை ஆல்பர்ட் திரையரங்கம்..
நன்றி.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd June 2018 05:27 AM
# ADS
Circuit advertisement
Bookmarks