முத்தையன் அம்மு கூறியதை மாற்றுத் திரியில் போட்டு விளக்கம் சொல்கிறார்கள். அவர்கள் திரியிலும் சென்று முத்தையன் அம்மு அவர்களின் தவறுகளை கண்டிச்சு இருக்கிறார். அதை அழித்துவிட்டு இனி அப்படி பேசாதீர்கள். என்று அவருக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் முத்தையன் சொன்னதை நாங்கள் அழிக்கவில்லை. அதே சமயத்தில் தப்பாக இருந்தால் திருத்திக் கொள்ள தயங்க மாட்டோம்.
இப்போது நாங்கள் பந்துலு பிரிவும் நட்பும் பதிவில் பொய்யை சுட்டிக் காண்பித்த பிறகு ரகசிய போலீஸ் படம் 100 நாள் ஓடவில்லை என்று அந்த எழுத்தாளர் எழுதியது தவறு என்று சொல்கிறார்கள்.
அதுமட்டும் இல்லை. விஜய் டிவி மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் பந்துலு மகள் விஜயலட்சுமி எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த பந்துலுவின் குடும்பம் ஏன் மஞ்சக் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு வந்தது என்று அந்த பதிவில் உள்ளது. நேத்திக்கு சொல்லியிருக்கிறேன். தேடி வந்த மாப்பிள்ளை படத்துக்கு அப்புறம் பந்துலு கடவுள் மாமா உள்பட சில படங்கள் எடுத்தார். அதில்தான் நஷ்டம். மக்கள் திலகம் படத்தால் நஷ்டம் கிடையாது. ஆனால், எப்படி திரிச்சு கூறுிறகிறார்கள்.
அதோடு, அதே விஜய்டிவி நிகழ்ச்சியில் கடன் சுமையில் தங்கள் குடும்பம் கஸ்டப்பட்டதை சொல்லி அப்போது எம்.ஜி.ஆர்.தான் எங்களுக்கு உதவினார். எங்கள் குடும்பக் கடனை அடைத்தார் என்று விஜயலட்சுமி சொன்னதை மறைத்துவிட்டார்கள். இதுவும் பொய்தனே? அதை பதிவு போட்டவர் அந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. அதை பார்க்காவிட்டால் அந்த நிகழ்ச்சியை பற்றி சொல்லி, கடன்சுமையால் மஞ்சக் கடுதாசி கொடுக்கும் நிலை இருந்தது என்று விஜயலட்சுமி சொன்னது மட்டும் எ்ப்படி தெரிஞ்சது?
இந்த மாதிரி நிறைய பொய்கள் அதில் உள்ளன. இதை எடுத்து அந்த திரியில் போட்டவர் சிவா என்பவர். சிவா நீங்கள் என்ன செய்வீரகள். பாவம். முகநூலில் இருந்ததை காப்பி பேஸ்ட் எடுத்து போட்டிருக்ீகீறீர்கள். ஆனால், அதை எழுதியவர் முரளி சீனிவாஸ் என்று உள்ளது. அவர் உங்கள் முகநூல் நண்பாராக இருந்தால் இப்படி எல்லாம் பொய் செய்தியை பரப்பாதீர்கள் என்று சொல்லுங்கள்.
எங்கள் திரியில் முத்தையன் அம்மு பொய்யான செய்தியை சுட்டிகாட்டி பதிவு போட்டார். அதையும் நாங்கள் நீக்கவில்லை. தப்பாக இருந்தாலும் திருத்திப்போம். ஆனால், உங்க திரியில் உங்கள் நடிகருக்கு புகழ் சேர்க்கும் செய்தியாக இருந்தாலும் அல்லது மக்கள் திலகத்துக்கு கெட்ட பேர் வரும் செய்தியாக இருந்தாலும் யாரும் கண்டு கொள்வது இல்லை. நீங்கள் யாரும் சுட்டிக் காட்டுவது இல்லை. அப்பிடியே விடப்படும்.
அவர்கள் திரியில் வந்த பொய்யான பதிவுகளை இங்கே போடுகிறன். அது உண்மையா என்று அவர்களே சொல்லட்டும்.
1.மனோகரா படம் வெளியான போது சென்னையில் ஒரே வாரத்தில் 84,லட்சத்தி 276 ரூபாய் வசூல் என்று அவர்கள் திரியில் வந்தது. பத்திரிகையில் வந்த செய்தியை போட்டார்கள். மனோகரா படம் அது வந்த காலத்தில் சென்னையில் மட்டுமே ஒரே வாரத்திலே 84 லட்சம் வசூலிச்சதாம். அதுவும் டிக்கெட் அணா, பைசா காலத்தில். அதுவும் ஒரே வாரத்தில். இன்றை கணக்கு படி பார்த்தால் 40 ஆயிரம் கோடி வசூல் வரும். உங்களு்க்கே சிரி்ப்பு வரலையா?
2. பிராப்தம் படத்தில் நடிக்க மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டு சாவித்ரி வீட்டுக்கு சென்றார் என்று நாஞ்சில் இன்பா என்ற புருடா பேர்வழி அபத்தமாக எழுதி பத்திரிகையில்வந்த செய்தியை எடுத்து அவர்கள் திரியில் போட்டார்கள். இதுதான் அந்த பதிவு
பிராப்தம் படம் வந்த காலத்தில் மக்கள் திலகம் யாரும் எட்ட முடியாத உச்சத்தில் திரையுலக சக்கரவர்த்தியாக இருந்தார். அவர் போய் பிராப்தம் படத்தில் நடிக்க சாவித்ரி வீட்டுக்கு சென்று வாய்ப்பு கேட்டாராம். எந்த கேனையனாவது இதை நம்புவானா?
அதிலும் நாஞ்சில் இன்பா என்பவன் டுபாக்கூர் மட்டும் இல்ல. விவரம் இல்லாத ஆள் என்பதும் தெரிகிறது. அந்த கட்டுரையில் அவர்கள் நடிகருடன் விளையாட்டுப் பிள்ளை படத்தில் பத்மினி இடம் பெற்ற ச்டில்லை போட்டு உடன் இருப்பவர் வாணி ஸ்ரீ என்று போட்டுள்ளான். இதிலிருந்தே அந்த ஆள் ஞானம் தெரியும்.
அவர்கள் திரியில் இந்த பதிவை போட்டவர் அதே சிவா என்பவர்தான்.
உண்மை உண்மை என்று பேசுகிறீர்களே? உங்கள் திரியில் வந்த இந்த 2 செய்தியும் (மனோகர வசூல், பிராப்தம் மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டார் என்பது) உண்மையா? நெஞ்சத் தொட்டு சொல்லுங்கள். பிராப்தம் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு சாவித்ரி வீட்டுக்கு மக்கள் திலகம் சென்றரா? அதுவும் பிராப்தம் படத்தில் நடிக்கவாம்.
பரவால்ல. நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். தர்மசங்கடம். நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், இனிமேல்பட்டாவது பார்த்து பதிவிடுங்கள்.
ரகசிய போலீஸ் 115 படம் 100 நாள் ஓடியது என்று ஒப்புக் கொன்டதற்கு நன்றி.
Bookmarks