Page 30 of 401 FirstFirst ... 2028293031324080130 ... LastLast
Results 291 to 300 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #291
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில், திருச்சி ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரெங்கநாத பெருமாள் ஆலய அன்னதான கூடத்தில், கடந்த 17-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சங்க நிர்வாகி கள் வெங்கடேச பெருமாள், செல்வகுமார், பாபு, ஹயாத், நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள் நாகராஜன், ராமச்சந்திரன், திருப் பூர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மலரவன், மதுரை மா.சோ.நாராய ணன், சரவணன், தாராபுரம் குருநா தன் முதலானோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஒத்துழைத்த டைமண்ட் திருப்பதி, முத்துகிருஷ்ணன், சிந்தாமணி கிருஷ்ணன், ஆட்டோ சரவணன் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    சென்னையிலும் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் விழாவில், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆரூர் தாஸ் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. விழாவில் ஏழுமலை மற்றும் சங்க துணைத்தலைவர் எஸ்.எம்.மனோ கரன், வி. ஆர். செல்வகுமார், சர வணன், கணபதி, மற்றும் உறுப் பினர்கள் சுரேந்திர பாபு, வெங்க டேசன், ரவிசங்கர், கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #292
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் வகையில் தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    சினிமாவில் நடித்தபோதும், தீவிர அரசியலில் ஈடுபட்டபோதும் மக்களை சந்திப்பதற்காக தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தை எம்ஜிஆர் பயன்படுத்தினார்.

    எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்து மந்திர சொல்லுக்கு தமிழக மக்கள் கட்டுண்டு கிடந்தார்கள் என்பது கடந்த கால வரலாறு என்று முடித்து விடமுடியாது. எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனாலும் அவரது பெயரை உச்சரிக்கும் போது இளைய சந்ததியினரும் உற்சாகம் அடைகின்றனர்.

    அதற்கு காரணம் சினிமாவில் அவரது துடிப்பான நடிப்பும் மட்டுமல்ல. அரசியலில் ஏழை மக்களுக்கு அவர் ஆற்றிய பணியும் தான். 1970ம் ஆண்டுகளிலிருந்து தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் தான் சினிமா தொடர்பான முடிவுகளையும் அரசியலில் முக்கிய முடிவுகளையும் எடுத்து இருக்கிறார்.

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள் அத்தனையும் இந்த இல்லத்தில் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    மனதிடத்துடன் உடல் திடத்துடன் இருக்க வேண்டும், தீய பழக்கங்களை ஒரு போதும் அண்ட விடக் கூடாது என்று உறுதியுடன் வாழ்ந்த எம்.ஜி.ஆர், தமது படங்களில் அது போன்ற காட்சியில் ஒருபோதும் நடித்தது இல்லை..தம்மை பின்பற்றும் ரசிகர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார். அவர் தினமும் உடற்பயிற்சிக்கு பயன்படுத்திய கருளா கட்டை, தம்ப்ல்ஸ் என அனைத்தும் அப்படியே இந்த இல்லத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    கொடி நாள் நிதிக்காக 25,000 ரூபாய் அளித்ததற்கு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம், ராஜீவ்காந்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் எழுதிய கடிதத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெகிழ்ச்சியுடன் ராஜீவ்காந்தி எழுதிய கடிதம், எம்.ஜி.ஆர் வாங்கிய பல்வேறு பட்டங்கள், பாரத ரத்னா விருதுகள் என அனைத்தும் இந்த இல்லத்தில் கால பெட்டகங்களாக இருக்கின்றது என்கின்றனர் பார்வையாளர்கள்.

    கால சக்கரங்கள் சுழன்றாலும் கால தேவனை விஞ்சி நிற்கும் எம்.ஜி.ஆரின் புகழ் நூற்றாண்டு கடந்தாலும் நிலைத்து நிற்கும் என்பதே அவரது அபிமானிகளின் திடமான நம்பிக்கையாகும்.

  4. #293
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    ஜனவரி 17. புரட்சித் தலை வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது பிறந்த நாள். இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன. எம்.ஜி.ஆர் அவர்கள் ‘சதிலீலாவதி’ படத்தில் துணை நடிகராக நடிக்க ஆரம் பித்து பட்டினியோடும், வறுமையோடும் வளர்ந்து புரட்சித் தலைவராக, தமிழக முதலமைச்சராக, சிறந்த அரசியல் வாதியாக, மக்கள் தொண்டராக, வள்ளலாக மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்தவர்.

    அவர் இறந்து 29 ஆண்டுகள் ஆன பிறகும், அவர் பெயரை பயன் படுத்தித்தான் ஓட்டு கேட்க வேண்டிய நிலை சிலருக்கு. அவர் நடித்து ஏவி.எம். தயாரித்த ‘அன்பே வா’ படத்தை இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள் இயக் கும்போது, அதில் நான் உதவி இயக்கு நர். அந்நினைவுகள் என்றும் மறக்கவே முடியாதவை. ஏவி.எம்.சரவணன் சாருக்கு இரண்டு முறை ‘செரீஃப்’ பதவி கொடுத்து பெருமைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். எனக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. அது, புரட்சித் தலைவரை வைத்து என்னால் படம் இயக்க முடிய வில்லை என்பதுதான். அதற்குக் காரணம், நான் இயக்குநராக ஆனபோது அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார்.

    கவியரசு கண்ணதாசன் அவர்கள், ‘‘நான் நிரந்தரமானவன்; எந்த நிலையிலும் அழிவில்லை!’’ என்று சொல்லியதைப் போல், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என் றைக்கும் மரணமில்லை. அவரது 100-வது பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அவரைப் பின்பற்றுவோம்!

  5. #294
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    ‘தி இந்து’ செய்தி எதிரொலியாக தாம்பரத்தில் 22 ஆண்டுகளாக மூடிக்கிடந்த எம்.ஜி.ஆர் சிலை, அவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று திறக்கப்பட்டது.

    சென்னை அடுத்த தாம்பரத்தில் சண்முகம் சாலை - ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கலச் சிலை கடந்த 1995-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தாம்பரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான மறைந்த எல்ல.ராஜமாணிக்கம் முயற்சியால் இந்த சிலை அமைக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்கு காரணமாக சிலை திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருந்தது. பிறகு நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வந்தும் கோஷ்டிப் பூசல் காரண மாக சிலை திறக்கப்படவில்லை.

    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அவரது சிலை திறக்கப்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள், ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இதுகுறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.

    இந்நிலையில், தாம்பரம் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் சிலை வர்ணம் பூசி சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, நகர செயலாளர் கூத்தன் தலைமையில் நேற்று சிலை திறப்பு விழா நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் சிலையை எல்ல.ராஜமாணிக்கத்தின் மகனும், காஞ்சி கிழக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளருமான எல்.ஆர். செழியன் திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

    பிறகு காஞ்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லப் பாக்கம் ச.ராஜேந்திரன் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி னார். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மகிழ்ந்து வரவேற்றனர்.

  6. #295
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு நேற்று செவ்வாய்க்கிழமைதமிழகத்தில் உள்ள சில திரைஅரங்குகளில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது.
    மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்புபடத்தின் காப்புரிமைPADMINI PICTURES
    Image caption
    மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு
    எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாள் தொடக்க விழாவையொட்டி, சென்னையில் சில திரையரங்களிலும் மற்றும் கோவையில் சில திரையரங்குகளிலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது மறு பதிப்பு செவ்வாயன்று வெளியாகியுள்ளது.
    எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில், 1965-இல், பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான மிகப் பெரிய வெற்றித் திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.

  7. #296
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன் னிட்டு அவரது படத்துக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணனின் தம்பி என். எஸ்.திரவியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

    ஒருதாய் மக்கள்

    மறைந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனை நாடகத்திலும் திரையுலகிலும் எம்.ஜி.ஆர். தனது வழிகாட்டியாகக் கொண்டிருந் தார். என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் என்.எஸ்.திரவியம்(96). எம்.ஜி.ஆர். நடித்த ‘ஒரு தாய் மக்கள்’ திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் எம். ஜி. ஆருடன் ஜெயலலிதா, முத்துராமன், அசோகன், பண்டரிபாய், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை என். எஸ். திரவியம் மற்றும் அவரது மைத்துனர் டி. ஏ. துரைராஜ் ஆகியோர் தயாரித்தனர்.

    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட என். எஸ். திரவியம் (96) எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அனகாபுத்தூர் நகராட்சி முன் னாள் தலைவர் பாரதிகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மறக்க முடியாத மனிதர்

    எம்.ஜி.ஆரை வைத்து ‘ஒருதாய் மக்கள்’ படம் தயாரித்தது குறித்து ‘தி இந்து’விடம் என். எஸ். திரவியம் நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது, “படம் தயாரிக்க இருப்பதாக எம்.ஜி.ஆரிடம் விருப்பத்தை தெரிவித்தேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த சமயங்களில் ஏராளமான படங்களில் நடித்தாலும் எங் களுக்கு கால்ஷீட் ஒதுக்கினார். படத்தை சரியான காலத்துக்குள் முடித்து கொடுத்தார். படம் முடிந்த பிறகே சம்பளத்தை பெற்றுக்கொண்டார். எனது அண்ணன் என்.எஸ்.கிருஷ்ணன் மீது எம்.ஜி.ஆர். மிகவும் பாசமாக இருந்தார். எனது அண்ணன் மீது அவருக்கு இருந்த பாசத்தால் எம்.ஜி.ஆர். படத்தை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு, எங்கள் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். என்னால் மறக்கமுடியாத மனிதர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர்’’ என்றார்.

  8. #297
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    -பெரு துளசிபழனிவேல்

    தமிழ்த் திரையுலகில் துணை நடிகராக நுழைந்து 'சதிலீலாவதி' (1936) முதல் ஸ்ரீமுருகன், சுலோச்சனாவரை சுமார் 15 படங்களில் சிறிய வேடங்களில் தோன்றி வளர்ந்து வந்த எம்.ஜி.ஆர், 'ராஜகுமாரி' (1947) படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் புரட்சி நடிகரானார்... மக்கள் திலகமானார். அவர் புரட்சித் தலைவராக புகழ்பெற்று, கடைசியாக நடித்த படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)'. அந்தப் படம் வெளியாவதற்குள் தமிழகத்தின் முதல்வராகிவிட்டார் (1977).

    115 படங்கள்வரை கதாநாயகனாக நடித்து தமிழ்த் திரையுலகில் வெற்றி நாயகனாக உலாவந்தவர் எம்.ஜி.ஆர். அவர் கதாநாயகனாக நடித்த பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்களாகவும், வசூலை வாரிக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன. 100 நாட்கள் ஓடாத அவரது சில படங்களும் கூட தோல்விப் பட லிஸ்டில் சேர்ந்ததில்லை. வசூலில் பெரிய குறை வைக்காத படங்கள். எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகில் 42 ஆண்டுகள் வெற்றிகரமாக உலாவந்தாலும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் பலசோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தார். அப்படிப்பட்ட சோதனைகளும், வேதனைகளும் எம்.ஜி.ஆரை நெருங்கி நிலைகுலைய வைத்த போது திரையுலகைச் சேர்ந்தவர்களில் சிலர் 'எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் இத்தோடு முடிந்தது இனி அவரால் கதாநாயகனாக வெற்றி பெற முடியாது. மக்களும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்று அவரது காதுபடவே கேலியும், கிண்டலுமாக பேசினார்கள்.

    ஆனால் அதையெல்லாம் மீறி அவர் நடித்த சிலப டங்கள் அவருக்கு சோதனையான காலகட்டத்திலும் மக்களைக் கவரும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து அவரது திரையுலக வாழ்க்கைகே திருப்பு முனையாகத் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரை நம்பி படம் எடுக்கவந்தவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தன. சோதனையான வேதனையான காலகட்டத்தில் அவரது சினிமா மார்க்கெட் வீழ்ந்து விடாமல் தூக்கி நிறுத்தி வெற்றி நாயகனாக அவரை வலம் வர வைத்த சில படங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

  9. #298
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜகுமாரி (1947) எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடங்களில் நடிப்பதற்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்த காலம் அது. கதாநாயனாக நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவை, இலட்சியத்தை 1947ஆம் ஆண்டு வெளிவந்த ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ராஜகுமாரி' படம் தான் நிறைவேற்றிக் கொடுத்தது. மாலதி என்ற நடிகை ஜோடியாக நடித்தார். ஏ.எஸ்.ஏ.சாமி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் உதவி வசனம் என்று மு.கருணாநிதி பெயர் போடப்பட்டது. துணை நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்த ‘ராஜகுமாரி' படம்தான்.

  10. #299
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    மருதநாட்டு இளவரசி (1950) கோவிந்தன் கம்பெனி மூலம் தயாரிக்கபட்ட படம் ‘மருதநாட்டு இளவரசி'. ஏ.காசிலிங்கம் இயக்கிய இந்தப் படத்திற்கு வசனம் மு.கருணாநிதி என்று முதல் முதலில் டைட்டிலில் பெயர் வந்தது. கதாநாயகியாக எம்.ஜி.ஆருடன் முதன்முறையாக இணைந்து நடித்தார் வி.என். ஜானகி. 133 நாட்கள் ஓடி அதிக வசூலை கொடுத்ததால் இந்தப்படத்திற்கு பிறகு எம்.ஜி.அரை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க வைத்து படங்களை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது ‘மருதநாட்டு இளவரசி' படம். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கையிலும் திருப்பத்தைத் தந்த படம் இது.

  11. #300
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    மர்மயோகி (1951) ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் கே.ராம்நாத் இயக்கத்தில் தயாரித்த படம் ‘மர்மயோகி' 151 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மாதுரி தேவி நடித்தார். வசனத்தை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதினார். எம்.ஜி.ஆரை அன்றிருந்த கதாநாயகர்களின் வரிசையில் முதல் வரிசையில் கொண்டுபொய் உட்கார வைத்த படம் ‘மர்மயோகி'. ஏழை எளியவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக போராடுகின்ற நாயகன் எம்.ஜி.ஆர்தான் நல்ல என்ற நல்ல பெயரை மக்களிடம் பெறுகின்ற அளவிற்கு அமைந்தது ‘மர்மயோகி'.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •