-
21st February 2017, 05:36 PM
#1001
Junior Member
Platinum Hubber
ஈ.வி.சரோஜா செவ்வியல் நடனத்தோடு, பலவித நடனங்களையும் ஆடுவதில் வல்லவர் .குலேபகாவலி, புதுமைப்பித்தன் போன்ற படங்களில் அவரது ஆட்டம் ரசிகர்களை விசிலடிக்க வைக்கும் .
ஆட வைத்தார்கள் .
-
21st February 2017 05:36 PM
# ADS
Circuit advertisement
-
21st February 2017, 05:42 PM
#1002
Junior Member
Platinum Hubber
-
21st February 2017, 05:50 PM
#1003
Junior Member
Platinum Hubber
தமிழ் நாட்டார் வழக்கியலின் " பொய்க்கால் குதிரை " ஆட்டங்கள் சினிமாவில் வந்திருக்கின்றன . "தாயைக் காத்த தனயன் " படத்தில் , எம்.ஆர். ஆர். வாசுவும், ஜி.சகுந்தலாவும் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடுவார்கள் ."தாயின் மடியில்" படத்தில் ராஜாத்தி காத்திருந்தா , ரோஜா போலே பூத்திருந்தா பாடலுக்கு
மக்கள் திலகம் எம்.ஜி.. ஆரும் , சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடுவார்கள் .எம்.ஜி..ஆர். சிறப்பாக செய்திருப்பார் .
-
21st February 2017, 05:56 PM
#1004
Junior Member
Platinum Hubber
எனது 14000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் கூறி , பாராட்டுக்களும் தெரிவித்த
அருமை நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு பசுமையான நன்றி.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் 14000 பதிவுகள் முடித்து தொடருவதை
கேள்விப்பட்டு , மதுரை நண்பர் திரு. எஸ். குமார். வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் தெரிவித்துள்ளார் .
அவருக்கும் எனது கனிவான நன்றி.
-
21st February 2017, 06:01 PM
#1005
Junior Member
Platinum Hubber
-
21st February 2017, 06:04 PM
#1006
Junior Member
Platinum Hubber
-
21st February 2017, 06:06 PM
#1007
Junior Member
Platinum Hubber
-
21st February 2017, 07:20 PM
#1008
Junior Member
Platinum Hubber
வசீகரம் மிக்க ஆளுமைகள் பற்றிச்சில வார்த்தைகள்.
ஒருவரைப்பார்த்த மாத்திரத்தில் இதயத்தின் ஆழத்தே சென்று தங்கிவிடும் வசீகரம் மிக்க ஆளுமை மிக்கவராக எம்ஜிஆரைக்கூறலாம். இவ்விதமான ஆளுமைகள் பார்த்த மாத்திரத்திலேயே பார்ப்பவர்களைக்கவர்ந்து விடுவார்கள். அவர்களைப்பற்றி எதுவுமே அறியாத நிலையிலேயே அவர்களது முக வசீகரம் பார்ப்பவர்களை ஆகர்சித்து விடுகின்றது. அதனால்தான் அத்தகையவர்களை அவர்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள் அவர்களது நேர்மறையான மற்றும் எதிர்மறையான அம்சங்களுடன் ஏற்றுக்கொண்டு விடுகின்றார்கள். இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்கள் ஏன் இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்களாக இருக்கின்றார்களென்று நினைத்துப்பார்ப்பதுண்டு. இவர்களது அந்த வசீகரம் மிக்க ஆளுமை அவர்களது ஆழ்மனதிலிருந்து வெளிப்படுவதென்று நினைக்கின்றேன். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். '
எம்ஜிஆரின் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற சொற்தொடரும். அந்தச் சொற்தொடருக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைதான் அவ்வார்த்தைகளைக்கேட்டதும் கேட்பவர்களின் இதயங்களை ஒருகணம் உலுப்பிவிடக்காரணம். எம்ஜிஆர் குண்டடிபட்டிருந்த சமயம் அவருக்குத் தமிழகமக்கள் பலரின் இரத்தம் வழங்கப்பட்டதாம். அதற்காகத்தான் அவர் அவ்விதம் கூறுவதாக அவரே அதுபற்றி விபரித்திருந்ததை எங்கேயோ படித்திருக்கின்றேன். அவரது வாழ்க்கை அனுபவத்தின்வாயிலாக வெளிப்பட்டதால்தான் அவ்வார்த்தைகள் இவ்வளவுதூரம் மக்களை ஆகர்சிக்கக்காரணம். இதே வசனங்களை இன்னுமொரு நடிப்பில் சிறந்த நடிகர் கூறியிருந்தாலும் எடுபட்டிருக்கப்போவதில்லை.
இவ்வித வசீகர ஆளுமை மிக்கவர்களாக இன்னும் பலரைக்கூறலாம். பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், மாசேதுங், ஐன்ஸ்டைன்.. இவ்விதம் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவர்களைப்போன்ற வசீகர ஆளுமைகளுக்குள்ள பொதுவான அம்சம் இவர்களைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட , இவர்களைப்பார்த்த மாத்திரத்திலேயே இவர்கள்பால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். பின்னர் இவர்களைப்பற்றி அறிய அறிய மேலும் மேலும் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள்.
வசீகர ஆளுமை மிக்க கென்னடியின் கூற்றினை மையமாக வைத்து வசீகர ஆளுமை மிக்க எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறதேன்? என்னும் திரைப்படத்திலொரு பாடல் வருகின்றது. அதுதான் 'நான் ஏன் பிறந்தேன்? நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்?'
courtesy - net
-
21st February 2017, 09:23 PM
#1009
Junior Member
Diamond Hubber
நமது மக்கள் திலகம் திரியில்
14000 பதிவுகளைக்கடந்து
பயணிக்கும்
அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு
நமது திரியில் பதிவிடுவோர் & பார்வையிடுவோர்
சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
- எஸ் ரவிச்சந்திரன்
-
21st February 2017, 10:25 PM
#1010
Junior Member
Platinum Hubber
இன்று இரவு 7 மணி முதல் ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "பட்டிக்காட்டு பொன்னையா " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
Bookmarks