-
29th July 2017, 11:42 PM
#3001
Junior Member
Platinum Hubber
-
29th July 2017 11:42 PM
# ADS
Circuit advertisement
-
30th July 2017, 01:28 AM
#3002
Junior Member
Devoted Hubber
R Kannan R Kannan
July 28 at 3:09pm
🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷
============================
எல்லா புகழும் தலைவனுக்கே-74
🌷 🌷 🌷 🌷 🌷 🌷- 🌷 🌷 🌷 🌷 🌷 🌷
ஒரே நாளில் (அரச கட்டளை) ஷூட்டிங் முடிவதற்குள் ஒரு செக் புக்கையே எம்.ஜி.ஆர் தர்மம் செய்து தீர்த்ததை என் கண்ணால் பார்த்தேன் என்று கவிஞர் வாலியிடம் சொன்னவர் நடிகர் அசோகன்..எவ்வளவு கொடுத்தார் என்ற கணக்கே தெரியாமல் கொடுத்தார் எம்.ஜி.ஆர் என்றார் நடிகர் அசோகன்..
-------
வாலி பதிலுக்கு சொன்னார் எம்.ஜி.ஆர் தர்மம் செய்ய எண்ணினால் உடனே செய்து விடுவார்..ஒரு நிமிடம் கூட தாமதிக்க மாட்டார்..கேட்டால் தாமதித்தால் மனம் இவருக்கு கொடுப்போமா?வேண்டாமா? என்று எண்ண தோன்றும்..ஒருவேளை வேண்டாம் அப்புறம் பார்த்து கொள்வோம் என்று எண்ண தோன்றிவிடும்..பசியும், கஷ்டமும் கேட்டுக் கொண்டா வரும்? கஷ்டத்தில் உடனே உதவாமல் கஷ்டம் தீர்ந்த பின் கொடுப்பது நல்லதல்ல என்பார் எம்.ஜி.ஆர்..அதனால் நீங்கள் சொல்வது எனக்கு புதிதல்ல..கணக்கு பார்த்து, ஆள் பார்த்து,நேரம் பார்த்து எம்.ஜி.ஆர் தர்மம் கொடுத்தே இல்லை..இதை மனதில் வைத்துதான் " என்னை பாட வைத்தவன் ஒருவன்"பாடலையே எழுதினேன்..
" அவன் கொடுத்தது எத்தனை கோடி? அந்த கோமகன் திருமுகம் வாழி" என்ற வரி எம்.ஜி.ஆரை பற்றிய என் உள்ளத்து பிரதிபலிப்பு என்றார் கவிஞர் வாலி..
தர்மம் வாங்கினால் நல்ல உள்ளம் உள்ளவரிடம்தான் வாங்கவேண்டும்..இதை தமிழ் மூதாட்டி ஔவையே கூறியிருக்கிறார் என்று திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி சொல்வார்..அவர் பல கோவில்களுக்கு திருப்பணி செய்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று..
அவர் எந்த கோவில் திருப்பணி என்றாலும் திருப்பணி கொடைக்கு முதலில் அணுகுபவர் எம்.ஜி.ஆர் தான்..இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் தன்னை ஒரு ஆன்மிகவாதி என்று பறை சாற்றிக்கொண்டதில்லை..அவர் வளர்ந்த பாசறை ஆன்மிகத்திற்கு ஆதரவு அளிக்கூடியதல்ல என்பதை திருமுருக கிருபானந்த வாரியாரும் அறிவார்..
======
பின் ஏன் எம்.ஜி.ஆரை "'முதலில் "'
அணுகுகிறீர்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியாரை கேட்டதற்கு அவர் உள்ளத்தில் உயர்ந்தவர் "உ" சுழி(பிள்ளையார் சுழி.. ஒரு காரியம்ஆரம்பிக்க போடும் மங்கள குறி) போடுவது உசிதம்(நன்று) என்று தோன்றுவதால் என்றார்..
எல்லோருக்கும் தெரியும் எம்.ஜி.ஆருக்கு " பொன்மன செம்மல் " என்ற பட்டம் வழங்கியவரே திருமுருக கிருபானந்த வாரியார்தான்.
======
-
30th July 2017, 01:38 AM
#3003
Junior Member
Devoted Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ .மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஸ்டால் பற்றிய
புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
ஒரு புத்தகக் கண்காட்சிசாலையிலே நடிகராக இருந்து தலைவராக உயர்ந்தவருக்காக தனியாக கடைபோட்டு வியாபாரம் நடக்கிறது என்றால் அது மக்கள் திலகத்துக்கு மட்டும்தான். இப்போது இருக்கின்ற நடிகர்கள் உள்பட வேறு எந்த நடிகருக்கும் இதுமாதரி இருக்காது.
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
-
30th July 2017, 01:47 AM
#3004
Junior Member
Devoted Hubber
-
30th July 2017, 04:31 AM
#3005
Junior Member
Diamond Hubber
நன்றி - திரு கோவை சந்தானம் - முகநூல் பதிவு
-
30th July 2017, 04:37 AM
#3006
Junior Member
Diamond Hubber
நெல்லையில்
இன்று
வேங்கையனின்
தொடர்
வெற்றி
முழக்கத்தின்
வெற்றிகரமான
25-வது நாள்.
விழா
வெற்றி பெற
வாழ்த்துவோம்.
நேற்று நெல்லை ஆறுமுகம்
அவர்களிடம்
அலைபேசியில்
வாழ்த்துக்களைச் சொன்னேன்.
மகிழ்ச்சி
அடைந்தார்.
-
30th July 2017, 09:25 AM
#3007
Junior Member
Veteran Hubber
முகநூல் மற்றும் சில ஊடகங்களில், வி.சி. கணேசன் ரசிகர்கள் சிலர் (பாராட்டுக்குரிய பலர் தங்களின் அபிமான நடிகரை பற்றி மட்டும் செய்திகள் பதிவிட்டு வருகின்றனர்) வேண்டுமென்றே, நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றி தவறான செய்திகளையும், மகத்தான வெற்றிக் காவியம் "அடிமைப்பெண்" பற்றி சில தகவல்களையும் பதிவிட்டு, அற்ப சந்தோஷம் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கான பதில் தான் இது : "அடிமைப்பெண்" காவியம் திரையிடப்பட்ட அந்த வார ஞாயிற்று கிழமை அன்று அதாவது (16.7.17) அன்று சென்னையில் சுமார் 875 இருக்கைகள் கொண்ட பெரிய அரங்கான தேவி மற்றும், தி. நகர். ஏ.ஜி.எஸ். மற்றும், வில்லிவாக்கம் ஏ.ஜி. எஸ். ஆகிய அரங்குகள் நிறைந்தன. நாகர்கோவில் நகரில் "ராஜபார்ட் ரங்கதுரை" திரையிடப்பட்ட அரங்கில் எண்ணி 13 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அரங்க மேலாளரிடம் இது பற்றி குறிப்பிட்டு கேட்ட பொழுது, தங்களுக்கு முறையாக வாடகை பணம் வரும் பொழுது, கூட்டம் இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன ? என்று கூறியதாகவும் நம்பகத் தகவல். சராசரியாக 5௦ நாட்களில் ராஜபார்ட் ரங்கதுரையை கண்டவர்கள். 3 நாட்களில் அடிமைப்பெண் காவியத்தை ரசித்தவர்களில் 25 சதவிகித்தனர் இருப்பார்களா என்பது சந்தேகமே ! கடந்த ஆண்டுகளில், புதிய பரிமாணத்தில் வெளியிடப்பட்ட, வெள்ளி விழா படம் என்று கூறப்பட்ட "வசந்த மாளிகை" எந்த லட்சணத்தில் ஓடியது என்பது தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு தெரியும். அது மட்டுமா ! மற்றொரு வெள்ளி விழா படம் என்று மார் தட்டி கொண்ட வி. சி. கணேசனின் " பாச மலரின் பரிதாப கதை ஊரறிந்த உண்மை. சொர்க்கம் படம் நிலையம் இதுவே ! உட்லண்ட்ஸ் அரங்கில் "திருவிளையாடல்' படத்தை இரண்டே நாட்களில் தூக்கி விட, ஞாயிற்று கிழமை மட்டும் மாலைக் காட்சியாவது திரையிடவேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்திடம், கெஞ்சி கூத்தாடியதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்புகின்றேன்.
எனவே அந்த குறிப்பிட்ட சில வி.சி. கணேசன் ரசிகர்கள் வீணான விவாதத்திலும், சர்ச்சயை ஏற்படுத்தும் விதத்திலும் நடந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறாம்.
Last edited by makkal thilagam mgr; 30th July 2017 at 09:28 AM.
-
30th July 2017, 04:55 PM
#3008
Junior Member
Diamond Hubber
பொதிகை தொலைக்காட்சியில் பொன்மனச்செம்மலின் நினைத்ததை முடிப்பவன் தற்பொழுது ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது
-
30th July 2017, 05:08 PM
#3009
Junior Member
Seasoned Hubber
தீபத் திருநகரில் திருவிழா கண்ட எம்.ஜி.ஆர்
தீபத் திருநகராம் திருவண்ணாமலையில் நேற்று மாலை மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், அண்ணாவின் இதயக்கனி, ஏழைப்பங்காளர், வாரிக்கொடுக்கும் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல், சத்தியத்தாய் பெற்றெடுத்த சத்தியத்தின் மறுவடிவம், மனிதாபிமானத்தின் மனிதஉருவம் , மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நிரந்தரத் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள், பக்தர்கள், ரசிகர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கம் நிறைந்து லட்சக்கணக்கானோர் வெளியே அரங்கத்தில் நுழைய இயலாமல் நின்று கொண்டிருந்தனர். தெருவெங்கும் சிறு சிறு மேடைகள் அமைக்கப்பட்டு அவைகளிலெல்லாம் மக்கள் திலகத்தின் தத்துவப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு அவரைப் போல் வேடமணிந்த பலர் அவற்றிற்கு ஆடியும் பாடியும் நடித்துக் கொண்டிருந்தனர். காணும் இடமெல்லாம் மக்கள் திலகத்தின் பல்வேறு டிஜிட்டல் பேனர்கள் அழகழகாய் ஜொலித்துக் கொண்டிருந்தன. மண்ணுலகை நீத்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த மாசில்லா தலைவனின் நினைவினை நாமும் போற்றுவோம்.
-
30th July 2017, 05:19 PM
#3010
Junior Member
Seasoned Hubber
அடிமைப்பெண்
48 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்து வெளிவந்து வெள்ளி விழா கண்ட காவியம். தற்போது மிக மிகத் துல்லியமான டிஜிட்டல் வடிவில் 7.1 ஒலியமைப்பில் அற்புதமான முறையில் ரிஷி மூவிஸ் திரு.சாய் நாகராஜன் அவர்களது சீரிய முறையில் வெளிவந்துள்ளது. வேலூர் ராஜா திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மனதிற்கு சற்றும் திருப்தி அளிக்கவில்லை. பின்னர் சேலம் ARRS Multiplex திரையரங்கில் பார்த்த போது தான் திரு.சாய் நாகராஜன் அவர்களின் உழைப்பையும் தற்போது வெளிவந்த படத்தின் தரத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. Restored version ஆகத் தெரியவில்லை 2017 ஆம் ஆண்டு புதிதாக எடுத்த படம் போல அதி அற்புதமாக உள்ளது. அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வார்த்தைகளே கிடைக்கவில்லை. நெல்லையில் 25 ஆம் நாள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நெல்லை ரசிகர்களுக்குப் பாராட்டுக்கள்.
Bookmarks