Page 264 of 401 FirstFirst ... 164214254262263264265266274314364 ... LastLast
Results 2,631 to 2,640 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #2631
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    வசீகரம் மிக்க ஆளுமைகள் பற்றிச்சில வார்த்தைகள்.

    ஒருவரைப்பார்த்த மாத்திரத்தில் இதயத்தின் ஆழத்தே சென்று தங்கிவிடும் வசீகரம் மிக்க ஆளுமை மிக்கவராக எம்ஜிஆரைக்கூறலாம். இவ்விதமான ஆளுமைகள் பார்த்த மாத்திரத்திலேயே பார்ப்பவர்களைக்கவர்ந்து விடுவார்கள். அவர்களைப்பற்றி எதுவுமே அறியாத நிலையிலேயே அவர்களது முக வசீகரம் பார்ப்பவர்களை ஆகர்சித்து விடுகின்றது. அதனால்தான் அத்தகையவர்களை அவர்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள் அவர்களது நேர்மறையான மற்றும் எதிர்மறையான அம்சங்களுடன் ஏற்றுக்கொண்டு விடுகின்றார்கள். இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்கள் ஏன் இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்களாக இருக்கின்றார்களென்று நினைத்துப்பார்ப்பதுண்டு. இவர்களது அந்த வசீகரம் மிக்க ஆளுமை அவர்களது ஆழ்மனதிலிருந்து வெளிப்படுவதென்று நினைக்கின்றேன். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். '


    இவ்விதமான ஆளுமை மிக்கவர்களில் இன்னுமொருவராக நான் 43 வயதில் அமெரிக்க ஜனாதிபதியாகப்பதவியேறற ஜான்.ஃப்.கென்னடியைக்குறிப்பிடுவேன். இவரது சிரித்த முகமும், பார்ப்பவர் இதயங்களைச்சுண்டி இழுத்துவிடும் வசீகரம் மிக்கது. இவ்விதமான ஆளுமை மிக்கவர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் ஒன்றினை அவதானிக்கலாம். இவர்கள் அனைவரும் வாழ்க்கையில் நன்கு அடிபட்டிருப்பார்கள். சுழல்கள் நிறைந்த வாழ்க்கைக்கடலில் எதிர் நீச்சலடித்தே தப்பிப்பிழைத்திருப்பார்கள். அதன் காரணமாக அவர்களது வார்த்தைகளெல்லாம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் காரணமாக வெளிப்படும் தன்மை மிக்கவையாக விளங்குகின்றன என்பதென் கருத்து. அதனால்தான் அவை கேட்பவர்கள் இதயங்களைச்சென்று உலுப்பி விடுகின்றன.


    .கென்னடியின் 'நாடென்ன செய்தது உனக்கு. எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு?' என்னும் அர்த்தத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் மிகவும் புகழடைந்த வார்த்தைகள். அவற்றைக்கேட்டவுடனேயே அந்த வார்த்தைகள் கேட்பவர்கள் இதயங்களின் ஆழத்தை அசைத்து அங்கேயே நிரந்தரமாகத்தங்கி விடுகின்றன. அதே வார்த்தைகளை இன்னுமொருவர் கூறியிருந்தால் இதுபோல் புகழடைந்திருக்குமா என்பது சந்தேகமே. கென்னடியென்றதும் எனக்குச்சிறு வயது நிகழ்ச்சியொன்று ஞாபகத்துக்கு வருகின்றது. கென்னடியின் வாழ்க்கை வரலாற்றை அழகிய புகைப்படங்களுடன், அழகான தாள்களில் நூலாக ஆனந்தவிகடன் வெளியிட்டிருந்தது. அந்த நூலை யாழ்ப்பாணப்புகையிரத நிலையத்திலிருந்த புத்தகக்கடையில் கட்டித்தூக்கியிருந்தார்கள். அவ்விதம் தொங்கிக்கொண்டிருந்த அந்த நூலின் அட்டைப்படத்தில் கென்னடியின் வசீகரம் முகம் சிரித்துக்கொண்டிருந்தது. அதன் காரணமாகவே அந்த நூலை வாங்கித்தரும்படி அம்மாவை வற்புறுத்தி வாங்கிக்கொண்டேன். அந்த நூலை வாங்கியபொழுது எனக்குக் கென்னடியைப்பற்றி எதுவுமே தெரியாது. அவரது அரசியல் கொள்கைகளோ அல்லது அந்தரங்க நடவடிக்கைகளோ எதுவுமே தெரியாது. பின்னர் அந்த நூலின் மூலம்தான் இரண்டாம் உலக யுத்தக்காலத்தில் போர் வீரராக அவர் பயணித்துக்கொண்டிருந்த ஆயுதப்படகு வெடித்துக்கடலில் சிதற, கடலில் தூக்கியெறியப்பட்ட கென்னடி நீந்தித்தப்பிப்பிழைத்த விபரமே தெரிய வந்தது. தம் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துப்போராடியதால்தான் கென்னடியின் 'நாடென்ன செய்தது எனக்கு? எனக்கேள்விகள் கேட்பது எதற்கு?' என்னும் அர்த்தத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் அவ்வளவு வலிமையாகக்கேட்பவர் உள்ளங்களை அசைத்துவிடுகின்றன.

    இது போன்றதுதான் எம்ஜிஆரின் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற சொற்தொடரும். அந்தச் சொற்தொடருக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைதான் அவ்வார்த்தைகளைக்கேட்டதும் கேட்பவர்களின் இதயங்களை ஒருகணம் உலுப்பிவிடக்காரணம். எம்ஜிஆர் குண்டடிபட்டிருந்த சமயம் அவருக்குத் தமிழகமக்கள் பலரின் இரத்தம் வழங்கப்பட்டதாம். அதற்காகத்தான் அவர் அவ்விதம் கூறுவதாக அவரே அதுபற்றி விபரித்திருந்ததை எங்கேயோ படித்திருக்கின்றேன். அவரது வாழ்க்கை அனுபவத்தின்வாயிலாக வெளிப்பட்டதால்தான் அவ்வார்த்தைகள் இவ்வளவுதூரம் மக்களை ஆகர்சிக்கக்காரணம். இதே வசனங்களை இன்னுமொரு நடிப்பில் சிறந்த நடிகர் கூறியிருந்தாலும் எடுபட்டிருக்கப்போவதில்லை.

    இவ்வித வசீகர ஆளுமை மிக்கவர்களாக இன்னும் பலரைக்கூறலாம். பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், மாசேதுங், ஐன்ஸ்டைன்.. இவ்விதம் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவர்களைப்போன்ற வசீகர ஆளுமைகளுக்குள்ள பொதுவான அம்சம் இவர்களைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட , இவர்களைப்பார்த்த மாத்திரத்திலேயே இவர்கள்பால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். பின்னர் இவர்களைப்பற்றி அறிய அறிய மேலும் மேலும் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள்.

    வசீகர ஆளுமை மிக்க கென்னடியின் கூற்றினை மையமாக வைத்து வசீகர ஆளுமை மிக்க எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறதேன்? என்னும் திரைப்படத்திலொரு பாடல் வருகின்றது. அதுதான் 'நான் ஏன் பிறந்தேன்? நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்?'


    courtesy - net

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2632
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Emperor of Emperors Makkalthilagam MGR's "Rahasiya Police 115" Digital now showing @ Bangalore- Nataraj DTS... Message by Mr.Vinoth

  4. #2633
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின்

    மாட்டுக்கார வேலன்

    கோவை ராயலில்

    இரண்டாவது வாரம்

  5. #2634
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Our thread writers - Mr.Masthan & also members writes about Makkal Thilagam's fame, proudness... We are likes so...

  6. #2635
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like


    எப்போது #எம்ஜியார் அவர்களை நினைத்தாலும், அவர் ஜிப்பாவில் வீசிய நறுமனம் என் பக்கத்தில் வீசும்"
    "அப்போது நான் +1 படிக்கும் மாணவன்.
    கோவை ஒண்டிப்புதூரில் காமராஜர் சிலை புத்தம் புதிதாக உருவாகி பிரசித்தப்பட்டிருந்தது.
    மொரார்ஜி ஆட்சியில் ஜனதா கட்சியினர் அமைத்த சிலை. பெரிய மேடை அமைத்தவர்கள் ஏனோ அதற்கு ஏறிச் செல்ல படிக்கட்டு அமைக்கவில்லை.
    விசேஷ தினங்களில் சிலைக்கு மாலையிட, அலங்கரிக்க, அதில் ஏற ஸ்டூலோ, ஏணியோதான் கொண்டு வருவார்கள்.
    ஒண்டிப்புதூருக்கு எம்.ஜி.ஆர் எப்போது பிரச்சாரத்திற்கு வந்தாலும் ஒரு கூட்டம் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டேன்ட் அருகே மறித்துவிடும்.
    இன்னொரு கூட்டம் அங்கிருந்து ஒரு பர்லாங் தொலைவில் உள்ள ரயில்வே கேட்டில் நிற்கும். ரயில் வந்தால் கேட் போடப்பட்டிருக்கும். இல்லாவிட்டாலும் என்ன? கேட் கீப்பரை கரெக்ட் பண்ணி கேட் போடவைப்பர் சிலர். எம்ஜிஆர் அங்கே மக்களால் தடுக்கப்பட்டிருப்பார். மக்கள் கூட்டம் அவரை தொட்டுப் பார்க்க அலைமோதும்.
    இந்த முறை தமிழக முதல்வராகி வந்த எம்.ஜி.ஆர் ஏதோ ஓர் அரசு நிகழ்ச்சியில் கலந்துவிட்டு இவ்வழியே வந்தார். சாலையில் 1 கிமீ தொலைவிற்கு மூன்றடிக்கு ஒன்றாக தடி தாங்கிய போலீஸார் நிறுத்தப் பட்டிருந்தனர். அதையும் மீறி மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் ஆங்காங்கே சாலைத் தடுப்புகள் ஏற்படுத்தியிருந்தார்கள்.
    பொதுமக்கள் எம்.ஜி.ஆரை தடுத்துப்பார்க்க முடியுமா? தடுத்தாலும் அவர் நிற்பாரா? போலீஸின் குண்டாந்தடி பதில் பேசாதா? ஒருவித பயத்தோடுதான் கூட்டம் நின்றிருந்தது. அவரின் வெள்ளை நிற அம்பாஸிடர் கார் நெருங்கியதும், அதன் முன் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    அதோ மறித்தும் விட்டது. காரை மொய்க்கிறது கூட்டம். போலீஸின் குண்டாந்தடி அடி சிலருக்கு விழுகிறது. காருக்குள் இருந்த எம்.ஜி.ஆரின் முகம் சூரியன் போல் சிவந்துவிட்டது. காரை விட்டு இறங்குகிறார்.
    தடி ஓங்கிய போலீஸாரை அதட்டுகிறார். அடுத்து அவர் பார்த்த பார்வை. தெறித்து ஓடுகிறார்கள் அதிகாரிகள்.
    திமிலோகப்பட்ட கூட்டத்தில் எப்படியோ சிக்கி கசங்கி நான் எம்.ஜி.ஆரின் முதுகுப் பக்கத்தை முகர்ந்து நிற்கிறேன். சிலு,சிலுக்கும் சில்க் ஜிப்பாவில் சந்தன நறுமணம்.
    கட்சியின் வட்டச் செயலாளரோ, கிளைச்செயலாளரோ தலைவருக்கு மாலையிட்டார். எம்.ஜி.ஆரோ தனக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு பூங்கிழவியை அரவணைத்தார்.
    ‘எங்கிருந்து பாட்டி வர்றீங்க?’ கரகரக்கும் குரல்.
    கிழவியின் உடல் நடுங்குகிறது. அந்த பாட்டி எனக்கு பக்கத்து வீடுதான். என் வகுப்புத்தோழன் ‘ஆட்டி என்கிற ஆறுமுகத்தின் பாட்டி! பாட்டியிடம் வெடவெடக்கும் நடுக்கமே பதிலாக இருக்கிறது.
    எம்.ஜி.ஆர் முகத்திலோ முறுவல். இந்த வயசான பாட்டியெல்லாம் இத்தனை கூட்டத்தில் தன்னை காண பாசத்தோடு வருகிறதே என்ற மலர்ச்சி.
    எம்ஜிஆர் தாயுள்ளத்தோடு,
    ‘இந்த பாட்டிக்கு என்ன வேணும். விசாரிச்சு கொடுங்க!’
    அதிகாரிகளுக்கு ஆணையிடுகிறார்.
    அவரின் இடது கைப்பக்கம் காமராஜர் சிலை. பாரக்கிறார். கைகூப்பி அங்கிருந்தபடியே கும்பிடுகிறார். அதை நிர்மாணித்த சுதந்திரப்போராட்ட தியாகிகள் சிலர் சிலைக்கு மாலையிட எம்.ஜி.ஆரை கோருகிறார்கள். உடனே தலையசைக்கிறார்.
    மாலையெங்கே?’ கேட்டபடி மேடையை நோக்கி துரு, துருவென நடக்கிறார்.
    கூட்டமும் அவருடனே அலைகிறது. அதிகபட்சம் 30 அடி தூரம்தான். மேடையேற படிக்கட்டு இல்லை. அந்த மேடையில் கையூன்றிபடியே நிற்கிறார்.
    யாரோ அப்போதுதான் மாலை வாங்க ஓடினார்கள். மேடையில் ஏற ஸ்டூல் எடுத்து வர பறந்தார்கள்.
    ‘எங்கே மாலை?’
    திரும்ப எம்ஜிஆர் குரல்.
    அதிகாரிகளா? கட்சிக்காரர்களா? தெரியவில்லை. வியர்த்துப் போய் பதட்டமாய் திரும்பித்திரும்பி பார்க்கிறார்கள். நிற்கிறார்கள்.
    'மாலை வாங்கப் போயிருக்கிறார்கள்!’
    ‘ஸ்டூல் எடுக்கப்போயிருக்கிறார்கள்!’
    யாரோ சொல்வது கேட்கிறது.
    எம்ஜிஆருக்கு சுர்ரென்று முகம் சிவக்கிறது.
    தன் கார் டிரைவரை அழைக்கிறார்.
    ‘காருக்குள்ளே சந்தன மாலை இருக்கும். எடுத்து வா!’
    விநாடிகள்தான் கரைந்தன. சந்தன குண்டுகளால் ஜொலிக்கும் சரிகை வேலைப்பாடுகள் அமைந்த மாலை. அதை டிரைவர் எடுத்து வந்ததுதான் மாயம். ஸ்டூலை எதிர்பாராமலே ஒரே ஜம்ப். தாவினார்.
    மேடை மேலே எம்.ஜி.ஆர். காமராஜர் சிலைக்கு மாலையிட்டார். கும்பிட்டார். அதே வேகத்தில் மேடையிலிருந்து குதித்தார்.
    அசத்தலான அவரின் செயல்பாடுகளை பார்த்து வியந்து நின்ற கூட்டத்தில் ஆரவாரம்.
    கார் புறப்படுகிறது. பின்தொடருகிறது மற்றவாகனங்கள். எம்ஜிஆர் விட்டுச் சென்ற அந்த சில்க் ஜிப்பா, அதில் புதைந்திருந்த உயர்ரக சந்தன நறுமணம். கிட்டத்தில் நடுங்கிய பாட்டி. அதைவிடகிட்டத்தில் ஒட்டி நின்ற நான்.
    எத்தனையோ முறை என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் சொல்லி, சொல்லி மாய்ந்த விஷயம். இப்போது நினைத்தாலும் என் கிட்டத்தில் எம்ஜிஆரின் நறுமணம்"
    -கா.சுவேலாயுதம் அவர்களின் நினைவுகள்.

    நன்றி எம்ஜிஆர் பக்கம் முகநூல்

  7. #2636
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like


    தொப்பி கண்ணாடி இல்லாமல் காவலர்களுடன் புரட்சித் தலைவர் எடுத்துக் கொண்ட அபூர்வமான புகைப்படம்.

    நன்றி முகநூல்

  8. #2637
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    கொங்கு மண்டலத்தில்

    வேங்கையன்

    வருகை அறிவிப்பு இன்றைய தினத்தந்தி

    நாளிதழில்.

  9. #2638
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115
    பெங்களுர் நகரில் நடராஜ் , லட்சுமி , அம்ருத் 3 திரை அரங்குகளில் 7.7.2017 முதல் நடைபெற்று வருகிறது .

  10. #2639
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    Book looks at MGR the man, actor and administrator




    CHENNAI:
    MGR was the first Indian superstar to conquer politics, according to noted writer and politician Shashi Tharoor. "So nothing is more refreshing than chronicling the life of this actor-politician in an objective way," he said, after releasing R Kannan's book "MGR: A Life" at Kalaivanar Arangam on Saturday. There were compromises and setbacks but MGR made history, said Tharoor. "No one had the charisma and willpower MGR had. Actor N T Rama Rao (NTR), of course, showed great talent. While NTR was known for his roles of mythical and epic characters, MGR always remained the hero of the common man. Unlike NTR, MGR died as a hero and that makes him different from others," he said.

  11. #2640
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Daily Thanthi - Puducherry edition

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •