Page 5 of 11 FirstFirst ... 34567 ... LastLast
Results 41 to 50 of 108

Thread: IRAIVI - A flim by Karthik Subbaraj

  1. #41
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'இறைவி' சர்ச்சை: செயற்குழுவில் தயாரிப்பாளர்கள் காட்டம் - TAMIL THE HINDU

    'இறைவி' படத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்ததாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவில் காட்டமாக விவாதிக்கப்பட்டது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'இறைவி'. சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

    ஒரு தயாரிப்பாளருடான ஈகோ யுத்தத்தின் விளைவாக முடக்கப்படும் ஒரு திரைப்படத்தின் இயக்குநரை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு, அதையொட்டி நகரும் வகையில் இறைவி கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் காட்டப்பட்ட தயாரிப்பாளர் கதாபாத்திரம் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்களையும் அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பல தயாரிப்பாளர்கள் படம் வெளியான அன்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

    இதனால் ஜூன் 4ம் தேதி மாலை சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் 'இறைவி' படத்தின் காட்சி தயாரிப்பாளர் சங்கத்திற்காக திரையிடப்பட்டது. இதில் சுமார் 100 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு பார்த்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கார்த்திக் சுப்பராஜூக்கு ரெட் போட்டாக வேண்டும் என்ற குரல் மேலோங்கி இருக்கிறது.

    செயற்குழுவில் தயாரிப்பாளர்கள் காட்டம்
    'இறைவி' படத்துக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எதிர்ப்புகள் வலுக்கவே தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று (ஜூன் 6) மாலை நடைபெற்றது.
    அதில் பல தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்பராஜூக்கு 'ரெட்' போட வேண்டும் என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள். மேலும் சிலர் இப்படத்தின் கதையை ஞானவேல்ராஜா மற்றும் சி.வி.குமார் இருவருமே முழுமையாக தெரியாமல் தயாரித்திருக்க மாட்டார்கள். ஆகவே, அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.
    செயற்குழு கூட்டத்தின் இறுதியாக, இயக்குநர் சங்கத்திற்கு புகார் தெரிவித்து அவர்களை கார்த்திக் சுப்பராஜை அழைத்து விசாரிக்க சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். அந்த முடிவு வரும் வரை கார்த்திக் சுப்பராஜூக்கு யாரும் ஒத்துழைக்க வேண்டாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எந்த ஒரு படத்துக்கோ, இயக்குநருக்கோ ரெட் போட முடியாது என்று சொல்லப்படுகிறது.

    ஏன் ரெட் போட முடியாது?
    'விஸ்வரூபம்' படத்துக்கு ரெட் போடப்பட்ட போது, டெல்லியில் உள்ள CCI -ல்(Compatision Commission of India) புகார் அளித்தார்கள். அப்போது அவர்கள் விசாரித்து, படத்துக்கு தடை குறித்து பேசியவர்கள் அனைவரையும் அழைத்து விசாரித்தார்கள். அந்த சர்ச்சை இன்னும் முடிவடையாத சூழலில் மீண்டும் ரெட் போட்டு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    என்ன சொல்கிறார் கார்த்திக் சுப்பராஜ்?
    கார்த்திக் சுப்பராஜ் தரப்பில் விசாரித்த போது, "இதுவரை புகார் உள்ளிட்ட எந்த ஒரு விஷயம் தொடர்பாகவும் அவருக்கு வரவில்லை. அவ்வாறு வந்தவுடன் மட்டுமே அவர் பேசுவார்" என்று தெரிவித்தார்கள்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    முதல் பார்வை: இறைவி - நிறைவற்ற செதுக்கல்! - tamil hindu

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மூன்றாவது படம், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி இணைந்து நடிக்கும் படம், டைட்டில் ஏற்படுத்திய ஈர்ப்பு என்ற இந்த காரணங்களே 'இறைவி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான முந்தைய படங்களான 'பீட்சா', 'ஜிகர்தண்டா' ஆகிய இரு படங்களும் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தன. தமிழ் சினிமாவில் புது அலைகளை ஏற்படுத்திய இயக்குநர்களில் முக்கியமானவரான கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படம் இன்னும் சில எல்லைகளைத் தொடும் என்ற நம்பிக்கையில் 'இறைவி' பார்க்கும் ஆவலுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
    தியேட்டர் நோட்டீஸ் போர்டில் வைக்கப்பட்டிருந்த சென்சார் சான்றிதழில் யு/ஏ குறிப்பைப் பார்த்து ரசிகர்கள் இத்தனை கட்ஸ் கொடுத்திருங்காடா என பேசியபடி உள்ளே நுழைந்தனர்.

    'இறைவி' படம் எப்படி?

    'இறைவி' கதை: தயாரிப்பாளருடன் ஏற்பட்ட தகராறால் தன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. அண்ணனின் அழுகையைக் கண்டு அவரது தம்பி சிம்ஹா கோபப்படுகிறார். அவரது குடும்ப நண்பர் விஜய் சேதுபதி அதற்கும் மேலே தயாரிப்பாளரிடம் கொந்தளிக்க பிரச்சினை வெடிக்கிறது. அதற்குப் பிறகு யார் யார் என்ன ஆகிறார்கள்? எஸ்.ஜே. சூர்யாவின் படம் ரிலீஸ் ஆனதா? இந்த ஆண்களின் பின்னால் இயங்கும் பெண்கள் உலகின் நிலை என்ன? என்பது மீதிக் கதை.

    முதல் இரண்டு படங்களின் சாயல் துளியும் இருக்கக்கூடாது என்பதற்காக முற்றிலும் வேறு ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்ட விதத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கவனம் பெறுகிறார். ஆனால், சினிமாவுக்கு மிக முக்கியமான திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தத் தவறி இருக்கிறார் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.

    படத்தின் நாயகனாக ஆளுமை செலுத்தி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சொன்ன வார்த்தைகளை ரிப்பீட் அடிப்பது, இரட்டை அர்த்த வசனம் பேசுவது, ஹை டெசிபலில் கத்தி அட்ராசிட்டி பண்ணுவது என வழக்கமான இமேஜே இதில் உடைத்திருக்கிறார். ரிலீஸ் ஆகாத படத்தை எண்ணி வருந்துவது, விரக்தியில் புலம்புவது, ஏக்கப் பெருமூச்சில் விம்முவது, தயாரிப்பாளரிடம் பொங்குவது, ஒரே படத்தில் ஓவராகப் பேசும் இயக்குநருக்கு அட்வைஸ் செய்வது, கோபம்- ஆவேசம்- ஆதங்கம் என எல்லா உணர்வுகளிலும் ஸ்கோர் செய்கிறார். இன்னும் சொல்லப்போனால் எஸ்.ஜே.சூர்யா ஒரு நடிகனாக இறைவியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

    விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்குரிய தேர்ந்த நடிப்பை ஆத்மார்த்தமாக வழங்கியிருக்கிறார். விஜய் சேதுபதியின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளிலும், அன்பான நடவடிக்கைகளிலும் சில நெகிழ்வான இயல்பான தருணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    சிம்ஹா தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். இன்னும் உச்சரிப்பில் தான் அவர் தடுமாறுகிறார். அதை இனி வரும் காலங்களிலாவது சரி செய்தாக வேண்டும்.

    அஞ்சலியின் நடிப்பு நிறைவை அளிக்கிறது. விஜய் சேதுபதியின் கேள்விக்கு, 'எப்ப கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்' என்ற அஞ்சலியின் உறுதி அவர் பாத்திரப் படைப்புக்கு கம்பீரம் சேர்க்கிறது.

    சீனுமோகன் நடிப்பு யதார்த்தப் பதிவு. ராதாரவி, கருணாகரன், கமாலினி முகர்ஜி, பூஜா தேவ்ரியா, ஆர்.கே.விஜய் முருகன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

    ஆர்.கே.விஜய் முருகனின் கலை இயக்கமும், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும் படத்துக்குக் கூடுதல் பலம். மழை, மதுபானக் கடைகள், இருட்டு, கோயில், வண்ணங்கள் என்று எல்லாவற்றிலும் சிவகுமார் விஜயனின் கேமரா ஆட்சி செலுத்தியிருக்கிறது.

    சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. எடுத்த எடுப்பில் எட்டு ரவுண்டு போகப் போறேன் பாரு, துஷ்டா, 'மனிதி' மான்டேஜ் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. கடற்கரைப் பாடலை கண்ணை மூடிக்கொண்டு கட் செய்திருக்கலாம்.

    'எப்பவும் நாம பேசக் கூடாது. நம்ம எடுத்த படம் பேசணும்', 'ஒரு கலைஞனை சிதைச்சிடாதீங்க. அது தப்பு', 'உன் எக்ஸ் வுட்பியோட கரன்ட் ஹஸ்பெண்ட்' போன்ற கார்த்திக் சுப்புராஜின் வசனங்கள் கூர்மை.

    பார்த்துப் பார்த்து கதாபாத்திரங்களைத் தேர்வு செய்த கார்த்திக் சுப்புராஜ் பாத்திரப் படைப்பில் சொதப்பி இருக்கிறார். பூஜா தேவ்ரியா, சேதுபதியிடம், சித்தப்பா சீனுமோகனிடமும் அப்படி ஒரு தெளிவான விளக்கம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு சேதுபதியை ஜன்னலோரம் பார்த்து அழுவது ஏன்? அஞ்சலி ஏன் இன்னொரு நபர் மீதான காதலை கணவனிடம் சொல்ல வேண்டும்? அதற்குப் பிறகும் கணவனே வேண்டும் என முடிவெடுக்க வேண்டும்? சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யாவின் பாத்திரப் படைப்பிலும் இப்படி விரிசல்கள் நிறைந்துள்ளன.

    கோவலன் - கண்ணகி - மாதவி கதாபாத்திரங்களை நவீனமய மறுவடிவமாக்க முயற்சி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், அது முழுமை அடையாமலும், ஆழமான பாத்திர வார்ப்பு இல்லாததும் நீர்த்துப் போக வைக்கிறது.
    படம் ரிலீஸ் நோக்கிய பயணம் இரண்டாம் பாதியில் தடம் மாறும் போது திரைக்கதையும் தடுமாறுகிறது. டிராமாத்தனம் கூடுவதால் படம் வலுவிழக்கிறது.

    பெண்களை பெருமைப்படுத்த வேண்டும், போற்ற வேண்டும் என்பது வரவேற்க வேண்டியது தான். ஆனால், அதற்காக ஒட்டுமொத்த ஆண் சமூகமே கெட்டவர்கள். திமிர் பிடித்தவர்கள். ஆண் என்ற கர்வத்தில் தவறை மட்டுமே அடுக்கடுக்காக செய்வார்கள் என்று காட்சிப்படுத்தி இருப்பது படத்தில் இருக்கும் வன்முறையைக் காட்டிலும் அதிக ஆபத்துடன் தெறிக்கிறது.
    மொத்தமாகப் பார்த்தால் 'இறைவி' நிறைவாக செதுக்கப்படவில்லை என்பதை உணரமுடிகிறது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #43
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ‘Iraivi’ film review - http://gulfnews.com

    S.J. Suryah brilliantly carries the film on his shoulders



    Iraivi, a Tamil film out now in the UAE, delves into the lives of four women — Ponni, the lower-middle-class woman; Malar, a widow; Yazhini, the urban woman; and last, but not least, a grandmother lying in coma.
    While Ponni (Anjali) dreams of a life of love with Michael (Vijay Sethupathi) after their marriage, she faces the bitter truth early on when he tells her that he was forced into the wedding.
    Malar (Pooja Devaria), an artist in a relationship with Michael, treats their bond as a mere physical necessity and refuses to marry him.

    Yazhini (Kamalini Mukherjee), a working woman and mother to a little girl, is a loving wife and caring daughter-in-law, but has to deal with an alcoholic husband, Arul, a filmmaker. Arul (S.J. Suryah) resorts to drinking after his producer refused to release his film — solely to settle old scores with him. Arul’s mother, lying in a coma, finally gets her husband’s attention — after having been neglected by him all her life.

    Directed by Karthik Subbaraj, Iraivi is different from his earlier films, Pizza and Jigarthanda. But his signature is evident in the characterization and depth of the story. Each character is well fleshed-out and clearly not stereotyped.

    What happens to these women whose lives are messed up by the impulsive behaviour of their men? The story picks up after the interval when the women decide to take charge of their lives. Does Yazhini’s solution lie in a divorce? Will Ponni return to Michael with their little daughter?
    If ‘Pizza’ belonged to Vijay Sethupathi and ‘Jigarthanda’ is synonymous with Bobby Simha, Iraivi is S.J. Suryah’s film. The director of hits such as Vaali and Kushi is a natural and slips effortlessly into the skin of Arul.
    Another remarkable performance is delivered by Anjali. Her Ponni wins your heart. Mukherjee brings out Yazhini’s dilemma well. Torn between her husband and the chance of a better life, she is a victim of circumstances.
    Malar may be the other woman in Michael’s life but she is the sole woman in the story who is practical and in control of her life. Newcomer Devaria portrays Malar beautifully and with dignity.
    Give Simha any role and he will deliver it to perfection. His Jagan, an impulsive college student, reveals a heart that is sensitive to the pain women go through. Subbaraj’s characters don’t fall in the regular mould, and the actor springs surprises now and then as the story unspools.

    However, Iraivi does get a tad too long.
    Santosh Narayanan’s music is wonderful and not easily forgotten.

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #44
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சினிமா விமரிசனம் - இறைவி: பொறுப்பற்ற ஆண்களும் இறைவிகளும்! - www.dinamani.com

    கணவன் எவ்வளவு தவறுகளைச் செய்தாலும் விட்டு விலக முடியாத, உதறமுடியாத பெண்களின் மனப்போராட்டங்களின் வடிவம், இறைவி. ஆண்களின் பொறுப்பற்ற செயல்களின் வழியே இந்தத் தலைமுறைப் பெண்களின் அவஸ்தைகளை உணர்வுபூர்வமாகவும் அப்பட்டமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

    எடுத்த படத்தை வெளியிடமுடியாமல் போராடும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, அதனால் உண்டாகும் விளைவுகள் என இந்த ஒருவரிக்கதையில்தான் எத்தனை எத்தனை முடிச்சுகள்! எத்தனை எத்தனை அலைக்கழிப்புக்கள்!
    படம் வெளிவராததால் குடித்தே சீரழியும் எஸ்.ஜே. சூர்யா, அவரைச் சரியான வழிக்குக் கொண்டுவர பாடுபடும் அவருடைய மனைவி கமலினி ஒரு பக்கம்.

    எஸ்.ஜே. சூர்யாவின் தம்பி பாபி சிம்ஹா. இருவருக்கும் நண்பர் விஜய் சேதுபதி. பாபி சிம்ஹாவுடன் இணைந்து கோயில் சிலைகள் தொடர்புடைய திருட்டுகளிலும் ஈடுபடுகிறார். எஸ்.ஜே. சூர்யாவைக் கொலை செய்ய முயல்கிற படத்தயாரிப்பாளரைக் கோபத்தின் விளைவால் கொலை செய்துவிடுகிறார் விஜய் சேதுபதி. அதனால் சிறைக்குச் செல்கிறார். இந்த நெருக்கடிகளால் குடும்ப வாழ்வில் படாதபாடு படும் அவருடைய மனைவி அஞ்சலி. (இந்த இரு பெண்களுக்கு இடையே இன்னொரு பெண், கணவனை இழந்தபிறகு, விஜய் சேதுபதியுடன் உறவு வைத்துக்கொள்ளும் பூஜா தேவரியா.)

    மூன்று ஆண்களின் செயல்களால் கமலினியும் அஞ்சலியும் படுகிற அவஸ்தைகளை செண்டிமெண்ட் பாணியில் கதை சொல்லாமல் ஆக்*ஷன் படப்பின்னணியில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர்.
    உண்மையில் எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி என இந்த நடிப்புத் தூண்கள் தான் படத்தை வலுவாகத் தாங்குகின்றன. எஸ்.ஜே. சூர்யாவை இயக்குநர் வேடத்துக்குத் தேர்ந்தெடுத்ததில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பெரும்பாலான காட்சிகளில் குடிகாரன் போல நடிப்பதென்பது சவாலான காரியம்தான். அதை எஸ்.ஜே. சூர்யா நேர்த்தியாகச் செய்துள்ளார்.

    விஜய் சேதுபதிக்கு வழக்கமான அடியாள் வேடம் (கொஞ்சமாச்சும் மாறுங்க ப்ரோ). நண்பருக்காகக் கொலை செய்வது, தொடர்ந்து திருட்டில் ஈடுபடுவது என்று குடும்பத்தின் மீது அக்கறை இன்றி சுற்றும் கதாபாத்திரம். கடைசிக் காட்சிகளில் தன் முத்திரையை பதித்துவிடுகிறார்.

    பாபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம். நண்பனுக்குத் துரோகம் செய்வது, நண்பனின் மனைவியைக் கவர நினைப்பது என படம் முழுக்க கெட்டக் காரியங்களில் ஈடுபடுகிறார். நடிப்பில் அவரும் நிறைவாகவே செய்துள்ளார். ஆனால் வசன உச்சரிப்பில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.

    பெண்களின் தீராத் துயரங்களுடன் ஆண்களின் நட்புகளில் உண்டாகும் சிக்கல்கள், துரோகங்கள் என திரைக்கதை மனித வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தையும் காண்பிக்கிறது.

    மீண்டும் அஞ்சலி. கனவுகளுடன் திருமணப் பந்தத்தில் நுழைகிறவர் பிறகு படிப்படியாக எப்படியெல்லாம் சோகங்களுடன் வாழ நேர்கிறார் என்பதை நடிப்பில் துல்லியமாக நிரூபித்துள்ளார். கணவன் ஜெயிலில் இருந்து வந்தபிறகு அவனிடம் உரிமையாக கோபிக்கும் காட்சிகளில் அஞ்சலி பிரமாதப்படுத்தியுள்ளார். ஒரு சினிமா இயக்குநரின் மனைவி படும் பாடு கமலினியுடையது. அஞ்சலிக்கு நிகரான மனப்போராட்டங்கள். நல்வரவு, புதுமுகம் பூஜா தேவரியா. பெண் கேட்டு வருகிற காட்சியில் தன்னை வெளிப்படுத்தும் விதமும் தன்னைச் சந்தேகப்படும் விஜய் சேதுபதியை எதிர்கொள்ளும் முறையும் இந்த நடிப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
    சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் வழக்கம்போல இனிமை. முக்கியமான காட்சிகளில் அழுத்தம் தருகிறது பின்னணி இசை. பல பகுதிகளில் பயணிக்கும் கதைக்கு ஒளிப்பதிவு கூடுதல் பலம். பல கிளைக்கதைகள் கொண்ட ஒரு படத்துக்கு எடிட்டிங் நிச்சயம் சவால்தான். ஆனால் படத்தின் நீளத்தைப் பார்க்கும்போது எடிட்டிங் இன்னும் கறாராக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

    காமெடிக்கும் டூயட் பாடல்களுக்கும் வாய்ப்பில்லாத படம். பொழுதுபோக்கு அம்சம் என்கிற வழக்கமான தமிழ்சினிமாவுக்கே உரிய காட்சிகளையும் இணைக்கமுடியாது. அதேசமயம் காத்திரமான காட்சிகளுக்கு நடுவே பாடல்கள், சின்னச் சின்ன அழகான வசனங்கள் என படம் அதற்கே உரிய வேகத்தில், சுவாரசியத்தில் நகர்கிறது. கடைசி அரை மணி நேரத்தில் திருப்பமோ திருப்பம்... அதிலும் கட்டக்கடைசி காட்சியில் உண்டாகும் அதிர்ச்சியில் திரையரங்கம் உறைந்துவிடுகிறது. அஞ்சலி மீது ஏற்படும் பரிதாபம் கதையின் வெற்றி.

    உறுத்தல்களும் இல்லாமல் இல்லை. ஏற்கெனவே ஒருமுறை இன்னொருவருக்காக ஜெயிலுக்குப் போனவன் மீண்டும் அதே நபருக்காக தவறான காரியங்களில் ஈடுபட வாய்ப்புண்டா? வடிவுக்கரசி கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நானும் உன் நண்பனைக் காதலித்தேன் என அஞ்சலி விஜய் சேதுபதியிடம் சொல்லவேண்டிய அவசியம் என்ன? அது வெறும் சினிமா வசனமாகவே தனித்து நிற்கிறது. எஸ்.ஜே. சூர்யா சினிமா இயக்குநர் என்றாலும் அவருக்கு திரைத்துறையின் வேறு நபர்களுடன் தொடர்பே இல்லையா? அவருக்கு உதவவோ அல்லது அவர் பிரச்னை குறித்து விவாதிக்கவோ ஒரு கோடம்பாக்கத்து நபரும் படத்தில் தென்படவில்லையே. என்னதான் கணவன் பொறுப்பற்றவன் என்றாலும் அவன் இறந்தால் அப்படியே எந்த மனைவி விட்டுப் போய்விடுவாள்? கிளைமாக்ஸில் எஸ்.ஜே. சூர்யா மனைவிக்கு போன் பேசும்போதே அவர் உணர்த்துவது என்ன என்பது புரிந்துவிடுகிறது. அந்தக் காட்சிக்கு நீளமான வசனம் தேவையா?

    சமூகத்தைப் பிரதிபலிக்கும் கதை, அட்டகாசமான நடிப்பு, தனித்துவமான மேக்கிங் என இம்முறையும் தனது முயற்சிக்காகப் பாராட்டுகளைப் பெறுகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #45
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ’இறைவி’ – சில தவறுகள்…சில தருணங்கள் - www.dinamani.com

    ‘எவன்டா பெண்ணை முழுசா நேசிச்சு இருக்கீங்க?’ இப்படி சட்டைக் காலரைப் பிடித்து கேட்கும் ஒற்றை வரிக் கேள்வியை திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் அந்த கேள்விக்கு பதில் கண்டடைய முடிந்ததா இல்லையா என்றால் இல்லை என்று தான் சொல்ல முடிகிறது. எந்தத் திசையில் பயணிக்க வேண்டுமோ அதற்கு நேர் எதிர் திசையில் ஒரு பயணம் மேற்கொண்டால் எங்கு போய்ச் சேர முடியும்? அப்படித்தான் அமைந்துவிட்டது இறைவியின் நோக்கமும் சென்றடைந்த இடமும். குழப்பமாக உள்ளதா? திரைப்படமும் இத்தகைய குழப்பங்களை உள்ளடக்கியுள்ளதால் அதைச் சற்று அலசினால் தெளிவு பெறலாம்.
    கதா பாத்திரங்கள்
    நான்கு ஆண்கள் – பெரியவர் (ராதாரவி) அவர் மகன்களான இயக்குநர் அருள் (எஸ்.ஜே.சூர்யா), கல்லூரியில் படிக்கும் அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) மற்றும் அருளிடம் வேலைப் பார்ப்பவனாக இருந்தாலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே கருதப்படும் மைக்கேல் (விஜய் சேதுபதி) இவர்கள் தான் கதையின் நாயகர்கள்.
    நான்கு பெண்கள் - அருளின் அம்மா (வடிவுக்கரசி), மனைவி யாழினி (கமலினி முகர்ஜி), மைக்கேலின் காதலி மலர்விழி (பூஜா), மனைவி பொன்னி (அஞ்சலி).
    இந்த ஆண்களுக்கும் அவர்களுடைய பெண்களுக்கும் இடையே நடக்கும் உறவுப் பிணைப்புகளும், பிணக்குகளும், சிக்கல்களுமே ‘இறைவி’.

    கதை
    அருள் ஒரு சினிமா இயக்குனர். பெரும் போராடத்துடன் அவன் இயக்கிய இரண்டாம் படத்தின் வெளியீடு தடுக்கப்படுகிறது. காரணம் அவனுக்கும் அப்படத்தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்படும் பிரச்னை. அருள் அதனால் முழு நேர குடிகாரனாக மாறிவிட அவனுக்கும் யாழினிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவனுக்கும் தயாரிப்பாளருக்கும் ஒரு மழை இரவில் சண்டை வலுக்க, அது கொலை வரை கொண்டு போய்விடுகிறது. அருளுக்காக கொலை செய்யும் மைக்கேலின் கதி என்ன, இவர்களால் வதைபடும் யாழினி மற்றும் பொன்னியின் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதே மீதிக் கதை.
    திரைக்கதை

    பெண்களின் பிரச்னை பெரும்பாலும் வாழ்க்கை துணையால் மட்டும் என்று சொல்லிவிட முடியாது. அவர்களுடைய பல பிரச்னைகளுள் முக்கியமானது இது என்று சொல்லலாம். தவிர எல்லா ஆண்களும் சதா சர்வ காலம் குடித்துக் கொண்டும், மனைவியைத் துன்புறுத்திக் கொண்டும் இருப்பதில்லை. இந்தத் திரைப்படத்தில் வரும் ஆண்கள் குடிக்கிறார்கள், கொள்ளை அடிக்கிறார்கள், சத்தமாகப் பேசி சண்டை போடுகிறார்கள், கொலை செய்கிறார்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதில்லை. படம் ஒரு கொலைகாரனைப் பற்றியோ அடியாள் பற்றியோ என்றிருந்தால் அதன் கோணம் வேறு. பெண்களின் பிரச்னையை மையப்படுத்தும் படமெனில் அதை ஒரு பெண்ணின் பார்வையில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். பெண்களைப் பற்றிய முழுமையான பார்வையோ சரியான புரிதலோ படத்தில் இல்லாதது பெரும் குறை. தவிர சிலைக் கடத்தல், கொலை என்று கதை மையத்தைத் தாண்டி வேறிடத்திற்கு அலைக்கழிக்கப்படுகிறது.

    சில தருணங்கள்
    மைக்கேல் கடுமையான சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு மனைவியைத் தேடி குக்கிராமத்திற்கு வருவதும், அவனை எதிர்கொள்ளும் பொன்னியின் இயல்பான கோபமும், அதன் பின்னான சமாதானமும் நேர்த்தியாக காட்சியமைக்கப்படுகிறது. தன்னுடைய மகள் அங்கிள் என்று தன்னை அழைப்பதைக் கேட்டு வருந்தும் மைக்கேல் அவள் கடைசியில் அப்பா என்று அழைத்து சாக்லெட் கேட்கையில் அவனால் ஒரு போதும் அந்த சின்னஞ்சிறிய குழந்தையின் ஆசையை நிறைவு செய்ய முடியாமல் கொல்லப்படுவது சோகம்.
    மழை…. இந்தப் படம் மழையில் தொடங்கி மழையில் முடிவது கவித்துவம். மழையை சுதந்திரத்தின் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பதும் காட்சிரூபமான அழகான படிமம். யாழினி தன் தோழியுடன் ஒரு காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது மழை வர, மழையில் நனையலாமா என்று கேட்பாள். அதற்குத் தோழி உடை நனைந்துவிடும் என மறுப்பாள். யாழினி அதனால் என்ன என்று சொல்வாள். அவள் மழையில் நனைய நினைத்தால் நனைந்துவிடும் இயல்புடையவள். மழை பற்றிய கனவுடன் மட்டுமே ஒதுங்கி இருப்பதில் பயனில்லை என்பதை அறிந்தவள். நனைய நினைத்து நனையாமல் இருப்பதை விட, நனைதலே சுகம் என்ற நிலைப்பாட்டில் இருப்பவள் அவள். தன் வாழ்க்கை, தன் முடிவு என்று சுயம் சார்ந்து சிந்திக்கும் பெண் யாழினி. அழகும் அறிவும் இணையும் போது ஒரு பெண் பேரழியாகிகிறாள். உள்ளும் புறமும் மலர்ந்த ஒரு பெண்ணால் தான் இறைவியாக முடியும். ஆனால் இந்தப் படத்தில் அது நிகழவில்லை.

    சில குழப்பங்கள்
    படத்துக்குத் தேவையான காட்சிகள் எடுக்கப்படாமலும் தேவையற்ற காட்சிகள் திணிக்கப்பட்டதுமாக இருப்பதால் இறைவி ஒரு முழுமையான திரையனுபவத்தை தர மறுக்கிறது. உதாரணமாக, கலைஞன், பரம்பரையான படைப்பாளி என்று ராதாரவியைப் பற்றி அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்களே தவிர அவர்களின் நடவடிக்கைகள், அவர்களுடைய கலையைப் பற்றிய நம்பகத்தன்மையை சொல்லும் அழுத்தமான காட்சி எதுவும் படத்தில் காண்பிக்கப்படவில்லை. பழம் பெருமை பேசியும், செட் ப்ராபர்ட்டி போல ஆங்காங்கே வெங்கல சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன அவ்வளவே. கலைஞர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள், உணர்வு நிலைப் பிறழ்வார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அதன் எல்லை எதுவென்று அறிந்தவர்கள். ஒரு உண்மையான கலைஞன் உயிரே போனாலும் தான் படைத்த சிலைகளை திருட உடன் பட மாட்டான். பிள்ளைகள், குடும்பம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு கலையை தன் வாழ்வையும் அர்ப்பணித்த பாரம்பரியமான கலைஞர்களைப் பற்றித் தான் நாம் கண்டும் கேட்டும் படித்தும் உள்ளோம். கலைஞனின் அடிப்படை குணங்களையே தவறாகச் சித்திரத்துள்ளபடியால் கதை நகர்வு நம்பகத்தன்மையை இழக்கிறது. சரி காலக் கொடுமை ஒரு கலைஞன் சிதைந்து போய், குணம் மாறிவிடுகிறான் என்றே வைத்துக் கொண்டாலும் எது அவனை இப்படியாக்கியது என்பதற்கான காரணம் எதுவுமே படத்தில் சொல்லப்படவில்லை. ஒரு கலைக் குடும்பத்தை குடிகார குடும்பமாகக் காண்பித்ததோடு அல்லாமல் சிலைக் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகக் காண்பித்திருப்பது சரியில்லை. ஒருசில குணநலன்களோடு இருப்பவர்கள் அதிலிருந்து மாறுவது சாத்தியம் தானா? எனில் அதற்கான அகர்னம் என்ன? வெறும் பணத் தேவை கலைஞனை கிரிமினலாக மாற்றிவிடுமா?
    எந்த ஒரு பெண்ணும் கணவன் இறந்து கிடக்க, அடுத்த சில மணித்துளிகளில் தெளிவு பெற்று மழையில் நனைய மாட்டாள். அதே போல் முறையாக விவாகரத்துக் கூட பெறுமுன் யாழினி மறுமணத்திற்கு எப்படி தயாராக முடியும்? பெண் மனம் என்ன அவ்வளவு எளிதாக மாறும் இயல்புடையதா என்ன?முன்பு யாழினி மழையில் நனைய விரும்பும் பெண்ணாக காண்பிக்கப்பட்டு கடைசியில் அவளுடைய மகள் நனையலாம் எனும் போது வேண்டாம் ஆடை நடைந்துவிடும் என்று சொல்வது அவளுடைய கதாபாத்திரத்தின் சரிவாகவே உள்ளது. ஒரு பெண் தன் மிச்ச வாழ்க்கைக்காக எடுக்க வேண்டிய முடிவில் அவளுக்கு சில குழப்பங்கள் ஏற்படலாம். ஆனால் பழைய கணவன் புதுக் காதலன் இருவரையும் சூழ்நிலை மாற, மாற்றி மாற்றி நேசிப்பது இருவருக்குமே செய்யும் துரோகம். உண்மையில் ஆண்களால் பாதிக்கப்பட்ட சுயம் சார்ந்து இயங்கும் பெண் ஆண்களே வேண்டாம் என்று தான் முடிவெடுப்பாள். கசந்து போன அவள் மனம் உடனடியாக இன்னுமொரு திருமண உறவுக்குள் நுழைய விரும்பாது. தவிர குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது என்று படித்து சுயமாக வேலை செய்யும் யாழினி போன்ற பெண்களுக்குத் தெரியாதா என்ன?
    கடைசியாக ஒரு அரைவேக்காட்டு பாத்திர அமைப்பான ஜெகன் பற்றி சொல்லியே ஆகவேண்டும். பெண்கள் ஆண்களால் பாடுபடுவதைக் கண்டு வெறுப்படையும் ஜெகன் பெண்களின் மீது அதீத இரக்கம் கொள்வதாகச் சொல்கிறான். ஆனால் சொல்லில் இருக்கும் கரிசனம் செயலில் இருப்பதை. அண்ணனைப் போல பழகும் ஒருவனின் மனைவி மீது மோகம் கொள்வது மனப் பிறழ்வன்றி வேறென்ன? மைக்கேலை சிறைக்கு அனுப்பி அவன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ள அவன் நினைப்பது சரி தவறு என்பதைத் தாண்டி அவன் பெண்களின் மீது என்ன மரியாதை வைத்திருக்கிறான் என்று அவன் அடிப்படை குணத்தை சந்தேகிக்க வைக்கிறது. தவிர மைக்கேல் பிடிபட்டால் நிச்சயம் அவன் அருள் மற்றும் ஜகனின் ஆள் என்று தெரிந்து போலீஸ் அவர்களையும் பிடித்து விடும் தானே? இது போன்ற நிறைய லாஜிக் மீறல்கள் படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
    இந்தத் திரைப்படத்தில் லாஜிக் மீறல்கள் அதிக உள்ளது. ஒரு முறை தவறு செய்தவன் அதற்கான தண்டனையையும் அனுபவித்துவிட்டவன் என்ன தான் எஜமான விசுவாசம் இருந்தாலும் தன் உயிரையும் வாழ்க்கையையும் தான் காப்பாற்றிக் கொள்ள நினைப்பான். பட்டுத் தெரிந்த பின்பு மீண்டும் அடி படத் துணிவதெல்லாம் அசாத்தியம். மைக்கேல் அப்படி அருளின் அன்புக்கு அடிமையாக இருக்கிறான் என்பதை நாம் நம்பினாலும் கடைசியில் அருள் தனக்காக இரண்டு முறை தவறு செய்தவனை தன் தம்பியைக் கொன்றான் என்ற காரணத்தால் அதுவும் அவன் உலகமகா உத்தம தம்பி எல்லாம் இல்லை, இன்னொருவனின் மனைவியை அடைய ஆசைப்பட்டவன், ஒரு கணவனாக ஒரு அறச்சீற்றத்தில் தான் ஜெகனை அவன் கொல்கிறான் அதற்கான மன்னிப்பையும் அவன் ரயில் நிலையத்தில் அருளிடம் கேட்கிறான். ஆனால் துளியும் இரக்கமற்று அவன் தனக்கு முன்னர் செய்த நன்மைகளை மறந்துவிட்டு மைக்கேலை கொன்றுவிடுகிறான் அருள். அவன் ஆண்களைப் பற்றியோ பெண்களைப் பற்றியோ அல்லது எதைப் பற்றியோ கருத்து கூற அருகதையற்றவனாகிவிடுகிறான். ஆண் நெடில் பெண் குறில் என்று வசனம் பேசி திரையரங்கில் கைதட்டல் வாங்கிவிடலாம் ஆனால் இப்படிப்பட்ட பல அடிப்படை கேள்விளுக்கான பதிலோ அதன் நியாயங்களோ படத்தில் எங்கேயும் காண முடியவில்லை.
    வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என எதுவென்றாலும் அதனை குடித்து கொண்டாடுவோம் என்று வலியுறுத்தும் காட்சிகளை திரைவழியே சித்தரிப்பது பெரும் சமூகக் கேடு. தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு வேண்டுமென்று போராடி உயிர் விட்டவர்கள் இந்த மண்ணில் இன்னும் இருக்க, இப்படி குடித்துச் சீரழவதை கொண்டாடமாகக் காண்பித்திருப்பது எவ்வகையில் சரியாகும்? அதுவும் குடும்பத் தலைவரான தந்தையே மகன்களுக்கு ஊற்றிக் கொடுக்கும் காட்சிகளை எடுத்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
    பெண்ணியம் என்றால் என்ன, சுதந்திரம் என்றால் என்ன, சுயம் சார்ந்த தேடல் உள்ள பெண் இது போன்ற வாழ்நிலைகளில் என்ன செய்வாள் என்பதையெல்லாம் மெனக்கிட்டு ஹோம் வொர்க் செய்து படம் இயக்கியிருக்கலாம். அல்லது அந்த கருத்தை தொடாமலாவது இருந்திருக்கலாம். வங்கால இயக்குனர் ரிது பர்னோ கோஷின் கிட்டத்தட்ட அனைத்துத் திரைப்படங்கள் பெண்களின் சுதந்திரத்தையும் வலியையும் வாழ்க்கையையும் பேசுபவை. அவை நேரடியாகவும் உண்மைத்தன்மையுடன் எடுக்கப்பட்டிருப்பதால் தான் இன்றளவும் உலக சினிமா வரிசையில் பேசப்படுகிறது. பெண்ணின் வலி, பிரச்னை என்பதை இத்தனை மேலோட்டமாக சொல்லிவிட முடியாது.

    நடிப்பும் இசையும்
    படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் அருமை. அஞ்சலி, புது முகம் பூஜா, கமலினி முகர்ஜி ஆகியோர் அனைவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர். அருளின் சித்தப்பாவாக வரும் அனுமோகன் அதீத உணர்ச்சிப் பிடியில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரங்களுக்கிடையே சற்று சாந்தமாக வெள்ளந்தியாக இருப்பவர். எஸ்.ஜே.சூர்யா சில இடங்களில் மிகை நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இப்படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. விஜய் சேதுபதியை சந்திக்க நேரிட்டால் நிச்சயம் நமக்கே சந்தேகம் வந்துவிடும், உண்மையில் அவர் நடிகரா அல்லது அடியாளா என்று. மனிதர் அலுக்காமல் இத்தகைய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் நமக்கு அலுப்பு ஏற்படுவது நிஜம். ஆனால் அவர் ஒரு காட்சியில் பொன்னியிடம் தயங்கி அவனுடன் எந்த அளவுக்குப் பழக்கம் என்று கேட்கும் கணத்தில் ஒரு கையறு நிலைக் கணவனை கண் முன்னே நிறுத்துகிறார். பின்ணனி இசை சொல்லும்படி இருந்தாலும் படத்தில் பாடல்கள் ஒட்டாமலும் அதிக கவனம் பெறாமல் இருப்பதும் உண்மை.

    இறுதியாக….
    நம்மிடைய எப்போதும் இரண்டு வகைப் படங்களே உள்ளன. ஒன்று நல்ல படம் மற்றது கெட்ட படம். இறைவியைப் பொறுத்தவரை ஒரு இரண்டும் கெட்டான் தனம் உள்ளது. அதாவது ஏதோ ஒரு நல்லதைச் சொல்ல நினைத்து, தீயவற்றை ஆழப் பதிய வைத்துவிடுகிறார் இயக்கிய்னர். இது பார்வையாளர்களை பெரும் குழப்ப நிலைக்குள் இட்டுச் செல்கிறது. வெள்ளையா இருக்கறங்க எல்லாம் நல்லவங்க, கறுப்பர்கள் கெட்டவர்கள் என்ற முட்டாள்தனமான சிலரின் நம்பிக்கையின் நீட்சியாக ஆண்கள் தவறு செய்பவர்கள் பெண்கள் துன்பப்படுபவர்கள் என்று இக்கதையில் சொல்லப்பட்டிருப்பது வேடிக்கை.
    புதிய முயற்சி, பரீட்சார்த்தப் படம் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், படத்தின் நோக்கம் மிகச் சரியானதாகவே இருந்தாலும், அதைக் கையாண்ட விதம கோணலாக இருப்பதால், இறைவி மனிதியாகக் கூட இல்லாமல் போனது பெரும் சோகம்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #46
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    "Making of Iraivi" - Web Series Episode 1

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #47
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    "Making of Iraivi" - Web Series Episode 2

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #48
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    "Making of Iraivi" - Web Series Final Episode
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #49
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    How to Create Funny Blooper

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #50
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    The making of 'Iraivi'

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Page 5 of 11 FirstFirst ... 34567 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •