-
8th June 2016, 02:54 PM
#631
Junior Member
Platinum Hubber
222
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா நடை பெற இன்னும் 222 நாட்களே உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பதிவாளர்கள் மக்கள் திலகத்தின் சிறப்பு பதிவுகளை புதிய பார்வையில் தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து .
இனிய நண்பர்கள்
திரு ரவிசந்திரன்
திரு ஜெய்சங்கர்
திரு கலிய பெருமாள்
திரு ரூப் குமார்
திரு வேலூர் ராமமூர்த்தி
திரு லோகநாதன்
திரு செல்வகுமார்
திரு தெனாலி ராஜன்
திரு யுகேஷ் பாபு
திரு கலைவேந்தன்
திரு சி..எஸ். குமார்
திரு முத்தையன் அம்மு
திரு சத்யா
திரு சுஹராம்
திரு சைலேஷ் பாசு
உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - மையம் திரியில் சிறப்பானதொரு இடம் பெற வேண்டுகிறேன் .நீங்கள் அனைவரும் திரியில் தொடர்ந்து
பதிவுகளை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் .
Last edited by esvee; 8th June 2016 at 02:57 PM.
-
8th June 2016 02:54 PM
# ADS
Circuit advertisement
-
8th June 2016, 03:20 PM
#632
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர்
விடிவெள்ளியின் உதயம், வெற்றி நாயகன், தடைகள் துகள்களாக, இப்படியும் இருப்பாரா, வெற்றி முழக்கம், சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்..
காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர்
சிறப்புக் குணங்கள், மக்கள் மனத்தில் விதைத்த நம்பகத்தன்மை, 1967, 1971, 1972, 1977, 1980 1984கள் முக்கிய அரசியல் நிகழ்வுகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம் ‘வாக்கு வங்கிகளாக’ நிலைப்பெற்றது
மக்கள் திலகம் எம்ஜிஆர்
திரையுலகைத் தாண்டி அரசியலிலும் மக்கள் மனங்களிலும் ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப்புயல் நிலைகொண்டுள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர்
ஏழைப் பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துக் கொண்டார்கள். தாய்க்குலம் என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்து, அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும் தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை! தாய்மைப் பண்புக்கு உதாரணம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர்
எம்.ஜி.ஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டுக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஒரு யுகபுருஷனாக வாழ்ந்து இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர்
எட்டு வயதில் மலைக்கள்ன பார்த்த அனுபவத்துடன் – ‘அன்று என் மனத்தைக் கவர்ந்துபோன அந்தக் கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை
மக்கள் திலகம் எம்ஜிஆர்
தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப் பிம்பம் ஆழப் பதிகிறது. வாடிய முகத்தைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தைப் போக்குகின்றவராகவும் எம்.ஜி.யார் வாழ்ந்தார்!
மக்கள் திலகம் எம்ஜிஆர்
இறந்த பின்னும் வாழும் வாழ்க்கையைத்தான் சிறந்தது என்றாரு பொன்மொழியுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்”! இனிய தொடக்கம்!
ஈகை அவரது மிகப் பெரிய பலம் என்பதும் தன்னைச் சுட்டவரையும் மன்னித்த பெரும் பண்பினால் பரமபிதா, மெய்ப்பொருள் நாயனார் செயலோடு ஒப்பிடும் சிறப்பு, காவிரிநீர் தமிழகம் வரச் செய்த சாகஸம், பெற்றால்தான்பிள்ளையா என வாரியணைத்த கனிவு என்று பலப்பல!
மக்கள் திலகம் எம்ஜிஆர்
தனியொரு மனிதன் பிறப்பது முதல் இறப்பதுவரை நம் கையில் இல்லை என்னும்பட்சத்தில்.. வாழுகின்ற வாழ்க்கையிலே மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழுகின்ற மனிதர்கள் ஒரு சிலரே!
மக்கள் திலகம் எம்ஜிஆர்
இலங்கையிலே பிறந்து.. தமிழகத்தில் குடிபுகுந்து.. தாயின் அன்பால்.. அரவணைப்பால்.. முழுமையாக வார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!
வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!
எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. கிராமத்து மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த எம்ஜி.ஆரை.. மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும் மக்கள் திலகம் எம்ஜிஆர்
நன்றி - வல்லமை இணையத்தளம்
Last edited by esvee; 8th June 2016 at 03:23 PM.
-
9th June 2016, 08:47 AM
#633
Junior Member
Platinum Hubber
-
9th June 2016, 08:50 AM
#634
Junior Member
Platinum Hubber
-
9th June 2016, 08:56 AM
#635
Junior Member
Platinum Hubber
9.6.1980
37th ANNIVERSARY.
-
9th June 2016, 09:01 AM
#636
Junior Member
Platinum Hubber
தினகரன் -09/06/2016
-
9th June 2016, 09:04 AM
#637
Junior Member
Platinum Hubber
(09/06/2016) இன்று மெகா டிவியில், பிற்பகல் 3 மணிக்கு நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.
நடித்த "சக்கரவர்த்தி திருமகள் " ஒளிபரப்பாகிறது
-
9th June 2016, 09:05 AM
#638
Junior Member
Platinum Hubber
இன்று (09/06/2015) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்
தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115" ஒளிபரப்பாகிறது .
-
9th June 2016, 10:34 AM
#639
Junior Member
Platinum Hubber
36 years before ..our celebration
-
9th June 2016, 10:36 AM
#640
Junior Member
Platinum Hubber
[IMG]
Last edited by esvee; 9th June 2016 at 10:42 AM.
Bookmarks